Wednesday, June 24, 2009

துன்பங்களை நீக்கும் ஏழு ஆயத்துகள்.

பிஸ்மில்லாஹிரஹ்மான்னிர்ரஹீம்.

1. குல் லன் யுஸிஃபனா இல்லா மா கதபல்லாஹு லன ஹுவ மௌலானா வ அலல்லாஹி ஃபல்யதவக்கலில் முமினூன்.

1 . அருள் மிக்கவன், அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால் நபியே! நீர் கூறுவீராக. அல்லாஹ் எங்களுக்கு எதனை விதியாக்கினானோ அதனைத் தவிர வேறொன்றும் எங்களைப் பற்றி விட மாடா. அவன் எங்களின் எஜமானன். அந்த அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உடையவர்கள் தம் காரியங்களை ஒப்படைத்து விடட்டும். (9.51)

2.வ இன் யம்ஸஸ்கல்லாஹு பிலுர்ரின் ஃபலா காஸ்ஷிபஃப லகு இல்லாஹுவ யுரித்க பிகைரின் ராஆத்த லிஃபல்லிஹி யுஸிபுன் பிஹி மன் யஷாஉ மின் இபாதிஹி வஹுவல் கஃபுருர்ரஹீம்.

2. அருள்மிக்கவன், அன்பு மிக்கவன், அல்லாஹ்வின் பெயரால் நபியே! அல்லாஹ் உமக்கு ஓர் இடரைப் பற்றச் செய்வானாயின் அதனை அவனைத் தவிர வேறு எவராலும் அகற்றிவிட முடியாது. இன்னும் உமக்கு ஒரு நன்மைய அவன் நாடிவிடுவாயின் அந்த நன்மையை எவரும் தடுத்துவிடமுடியாது. இன்னும் அவன் தன்னுடைய அடியார்களிடமிருந்து தான் நாடியவருக்கு அந்த நன்மையைக் கிடைக்கும்படிச் செய்வான். மேலும் அவன் மிக்க மன்னிப்பவனும், மிக்க அன்புள்லவனுமாயிருக்கிறான். (10:37)

3..அருள் மிக்கவன், அன்பு மிக்கவன், அல்லாவின் பெயரால் இப்பூமியிலுள்ள எந்தப் பிராணிக்கும் அதற்குரிய உணவு அல்லாஹ்விடத்தே தவிர வேறெருவரிடத்திலும் இல்லை. அவன் தங்குமிடத்தையும் அது போய்ச் சேருமிடத்தையும் நன்கறிவான். அனைத்துக் காரியங்களும் பகிங்கரமான பட்டோலையில் பதிவு செய்ய பட்டுள்ளன.(11:6)

4. அருள் மிக்கவன், அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால் திண்ணமாக என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமாகிய அல்லாஹ்விடத்தே என்னுடைய காரியங்கள் அனைத்தையும் நான் ஒப்படைத்துவிட்டேன். இத்தரணியிலுள்ள ஓவ்வொரு பிராணியினுடைய முன் நெற்றி உரோமமும் அல்லஹ்வினுடைய பிடியில் மட்டும் உள்ளது. திண்ணமாக என்னுடைய இரட்சகன் நேரிய வழியின் மீது இருக்கிறான். (11.56)

5.அருள் மிக்கவன் அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால் எந்தப் பிராணியும் தனக்குள்ள அப்பிராணிகளுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான் அவன் மிக்க செவியுறுபவனும் மிக்க அறிபவனுமாயிருக்கிறான். (29:60)

6. அருள் மிக்கவன், அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால்.அல்லாஹ் மனிதர்களுக்கு ஓர் அருளை வழங்கிவிடுவானாயின் அதனைத் தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லை. அப்படி ஓர் அருளைத் தடுத்து நிறுத்தி விடுவானாயின் அதன் பிறகு அதனைக் கொண்டு தருபவர் எவருமில்லை. அவன் மிக்க மிகைத்தவனும், மிக்க ஞானமுள்ளவனுமாயிருக்கிறான்.

7. அருள் மிக்கவன், அன்பு மிக்கவன்! அல்லாஹ்வின் பெயரால்.வானங்கள், பூமியைப் படைத்தவன் யார்? என்று நபியே! நீர் அவர்களிடத்தில் கேட்பீராயின் திண்ணமாக அவர்கள் 'அல்லாஹ்' என்றே பதிலுரைப்பார்கள். இன்னும் அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்குகின்ற தெய்வங்கள், எனக்கு ஓர் இடரை அல்லாஹ் நாடிவிட்டானாயின் அவ்விடரை அவைகள் நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ஓர் அருளை நாடி விட்டானாயின் அவ்வருளை அவைகள் தடுத்து விட முடியுமா? என்ன கூறுகின்றீர்கள்? எனறு நபியே நீர் கேட்பீராக. இன்னும் நபியே! அவர்களுக்கு நீர் கூறுவீராக! எனக்கு அல்லாஹ் போதும். அல்லாஹ்விடம் தம் காரியத்தை ஒப்படைப்பவர்கள் அவனிடமே ஒப்படைத்து விடுவார்கள். ( 39:38)

3 கருத்துகள்:

ஷ‌ஃபிக்ஸ் said...

மாஷா அல்லாஹ், மிக அருமையான தொகுப்பு!!

Jaleela said...

நன்றி ஷபி

Tamil Dubbed Movies said...

Super

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா