Thursday, July 30, 2009

ப‌ட்டு புட‌வை துவைப்ப‌த‌ற்கான‌ விதிமுறைக‌ள்






1. கைத்தறி, மெஷின் மூலம் நெய்யப்பட்ட பிரிண்டட் செய்யப்பட்ட அல்லது கிரேப் ஆகிய அனைத்து வகைப் பட்டுப் புடவைகளின்நீண்ட ஆயுட்காலத்திற்கு அவற்றைத் தரமான உலர் சலவைக் கடைகளில் (டிரை கீனர்) கொடுத்துச் சலவை செய்வதே சிறந்தது.

2.பட்டுப் புடவையின் சாயம் போகாமல் அல்லது வண்ணம் குழம்பாமல் (புடவையின் பார்டர் சாயம் ,புடவையின் உடலில் படியாமல் ) இருக்க உலர் சலவை மட்டுமே சிறந்தது.

3.தவிர்க்க முடியாத காரணத்தால் பட்டுப் புடவைகளை உலர்சலவை செய்ய முடியவில்லையெனில், வீட்டிலேயே துவைக்கலாம். ஆனால் இதற்குப் பிரத்தியேக கவனம் தேவை.

4.முதலில் இரண்டு அல்லது முன்று முறை வீட்டில் துவைக்கும் போது சாதாரண சுத்தமான நீரிலேயே துவைக்க வேண்டும்.

5.சாதாரண நீரில் இரண்டு அல்லது மூன்று முறை துவைத்த பிறகு தரமான டிடர்ஜெண்ட் பவுடரை நீரில் நன்றாகக் கரைத்த பின் புடவையை அதில் நனைக்க வேண்டும்.






6.பட்டு புடவையை அதிக நேரம் தண்ணீரில் ஊறவைக்கக் கூடாது. பல புடவைகளைச் சேர்த்துச் சுருட்டியும் நீரில் நனைக்கக் கூடாது.

7. ப‌ட்டுப் புட‌வைக‌ளை வீட்டில் துவைக்கும் போது அடித்து துவைக்க‌க் கூடாது.

8. ப‌ட்டுபுட‌வைக‌ளை வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க‌ கூடாது.

9. ப‌ட்டு புட‌வைக‌ளை நிழ‌லில் காய‌வைத்து மித‌மான‌ சூட்டில் இஸ்திரி செய்ய‌ வேண்டும்.

மேலே உள்ள‌ டிப்ஸ்க‌ள் போத்தீஸில் ப‌ட்டு புட‌வை எடுத்த‌ போது அந்த‌ அட்டையில் இந்த‌ டிப்ஸ்க‌ள் இருந்த‌து எல்லோருக்கும் ப‌ய‌ன்ப‌டும், ஏற்க‌ன‌வே ப‌ட்டு புட‌வை ப‌ற்றி டிப்ஸ் போட்டுள்ளேன்.





இது என்னுடைய டிப்ஸ்:


பட்டு புடவையை கட்டி கொண்டு போய் வீட்டுக்கு வந்ததும் நல்ல வேர்வை போகும் அளவிற்கு காய போட வேண்டும்.

வேர்வை ஈரத்தோடு உள்ளே அப்படியே வைத்தால் மடிப்பில் கறை படிந்து அடுத்த முறை கட்டும் போது திட்டு திட்டாக அந்த இடத்தில் மட்டும் கலர் மாறி விடும்.

முன்று முறை போட்டு விட்டு பிறகு நாம் வீட்டில் வாஷ் பண்ணுவதோ டிரை கிளீங்கோ கொடுக்கலாம்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் அப்படியே பீரோவில் பட்டு புடவையை அடிக்கி வைத்து விட்டு வரவேண்டாம். அதில் துரு ஏறிவிடும்.அதை துணிபையில் போட்டு வைத்தால் அப்படியே இருக்கும்.

முன்று அல்லது ஆறு மாதம் ஒரு முறை எடுத்து உதரி மறுபடி மடித்து வைப்பது நல்லது.

2 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

நல்ல விஷயம்தான். செய்முறைப் பயிற்சிக்கு வேண்டி புது் பட்டுப் புடவை கேட்காம இருந்தா சரி.

Anonymous said...

nalla tips

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா