Tuesday, September 15, 2009

வஞ்சிரம் மீன் குழம்பு / Fish salna





//மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்,
மீன் குழம்பா புளிப்பா காரசாரமா சுல்லுன்னுவைக்கனும் என்பார்கள்.
இது புளிப்பா கார சாரமா கர்பிணி பெண்களுக்கு, ஜுரம் வந்து வாய் கசந்தவர்கள், எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும், மீன் உணவு ஒன்று தான் வெயிட் போடாதது, எவ்வளவு வேண்டுமானாலும், எந்த ஊர் போனாலும் சாப்பிடலாம்.//


தேவையான பொருட்கள்




வஞ்சரம் மீன் = அரை கிலோ

அரைக்க‌
========

வெங்காயம் = இரண்டு
தக்காளி = நான்கு
பூண்டு = இர‌ண்டு ப‌ல்

ம‌சாலாக்க‌ள்
===========

மிள‌காய் தூள் (காஷ்மீரி சில்லி) = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
த‌னியாத்தூள் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு தூள் = தேவைக்கு

புளி = ஒன்ன‌றை லெம‌ன் சைஸ்

தேங்காய் ப‌வுட‌ர் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி


தாளிக்க‌
=======

எண்ணை = ஐந்து தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = ஒரு தேக்க‌ர‌ண்டி
சீர‌க‌ம் = அரை தேக்க‌ர‌ண்டி
வெந்த‌ய‌ம் = கால் தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = ஒரு ஆர்க்
பூண்டு = முன்று ப‌ல் (த‌ட்டி கொள்ள‌வும்)
சின்ன வெங்காயம் = ஐந்து
கொத்து ம‌ல்லி த‌ழை சிறிது மேலே தூவ‌

செய்முறை
==========


1. மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

2. அரைக்க கொடுத்துள்ளவைகளை நன்கு மையாக அரைத்தெடுக்கவும்.

3. புளியை அரை டம்ளர் வெண்ணீரில் போட்டு கரைத்து கொள்ளவும்.

4. தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவேண்டிய மசாலா தூள்வகைகளை சேர்க்கவும்.


5. மசாலா வதங்கியதும் அரைத்த வெங்காயம்,தக்காளி கலவையை சேர்த்து நன்கு கால் மணி நேரம் தீயின் அளவை குறைத்து வைத்து மசாலா வாடை அடங்கும் வரை கொதிக்கவிடவும்.

6. புளியைக்கரைத்து சேர்த்து மீண்டும் கொதிக்க ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.


7. புளி வாடை அடங்கியதும் மீன் + தேங்காய் பவுடரை கொஞ்சமா வெண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.

8. கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.

9. சுவையான வஞ்சரம் மீன் குழம்பு ரெடி.


குறிப்பு
======

மீன் குழம்பை பல வகையாக செய்யலாம் அதில் இது ஒரு ஈசியான முறை.

மீனை கடைசியில் தான் போடனும் இல்லை என்றால் குழைந்து விடும்.

தேங்காய் பவுடர் இல்லாதவர்கள், தேங்காய் பத்தை நான்கு பத்தை அரைத்து பால் எடுத்து ஊற்றவும்.

மீன் குழம்பிற்கு பிளெயின் சாதம், இடியாப்பம், ரொட்டி,ஆப்பம், தோசை, மைதா அடை , பருப்படை எல்லாம் பொருந்தும்.

காஷ்மீரி சில்லி சேர்ப்பதால் காரம் இல்லாமல்,அதே நேரம் நல்ல சிவப்பு கலராகவும் இருக்கும்.

இரண்டு நாள் வைத்து சாப்பிட்டால் இதன் சுவையே தனி தான்.

1 கருத்துகள்:

Anonymous said...

patikum pothe nakkil s..................

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா