Friday, May 18, 2012

குழந்தைகளுக்கு டயப்பருக்கு பதில்

குழந்தைகளுக்கு டயப்பர் போட்டு அப்படியே அடைத்து வைபப்தால் தேவையற்ற ரேஷ், புண்கள் , எரிச்சல், அலர்ஜி ஏற்படுகின்றன.

அதை தவிர்க்க தேவையான நேரம் மட்டும் டயப்பர் பயன் படுத்தி கொண்டு மற்ற நேரங்களில் கீழே படத்தில் காட்டியுள்ளவாரு செய்து பயன் படுத்தலாம்.

2 மணி நேரத்துக்கு ஒரு முறை துணி நனைந்து இருக்குதான்னு செக் பண்ணனும்.

பிறந்த குழந்தைகளுக்கு  3 மாதம் வரை இருக்கும் இடம் விட்டு அசைய வாய்ப்பில்லை கை காலை ஆட்டி கொண்டு இருப்பார்கள்.

அப்போது கீழே ரப்பர் ஷீட் விரித்து நியுஸ் பேப்பர் கொஞ்சம் திக்காக வைத்து விட்டு சின்ன மெல்லிய துணியை கட்டினால் போதும். ஈரம் ஆனதும் பேப்பரை எடுத்து விட்டு வேர பேப்பர் மாற்றி கொள்ளலாம்.

வெது வெதுப்பான வெண்ணீரில் பஞ்சை நனைத்து துடைத்து விட்டு வேற துணி மாற்றி விட்டு கீழே மறுபடி பேப்பரை மாற்றி விடுங்கள்

துணியை அதிகம் துவைக்க தேவையில்லை, பேம்பரும் செலவாகாது,

குழந்தைகள் இரவில் தூங்கும் போது டயப்பர் தேவைதான் பேம்பர் போடும் போது தேஙகாய் என்னை அல்லது ஆலிவ் ஆயில் தடவி போட்டு விடுங்கள்.


1. குழந்தைகளுக்கு டயப்பருக்கு பதில் நாமே நேப்கின் செய்து  பயன் படுத்துங்கள்.

2. அது வெள்ளை கலர் பெரிய சதுர வடிவ நாப்கீனை மடித்து வைத்து பிளாஸ்கிட் அதன் மேல் போடு ஜட்டியும் இருக்கிறது அதை பயன் படுத்தலாம்.




3. இதனால் தேவையில்லாத ரேஷிலிருந்து பாது காத்து கொள்ளலாம்.


4. ஒரு நாளைக்கு நான்கு இருந்தால் கூட போதும், மொத்தமா ஊறவைத்து துவைத்து கொள்ளலாம்.

5. அம்மா பாட்டிகளின் ஷாஃப்டான காட்டன் சேலை யும் இது போல் நாப்கின்கள் நிறைய கிழித்துவைத்து பயன் படுத்தலாம்.

ஒரு சேலையை கிழித்தால் இரண்டுமாதத்துக்கு தேவையான் நாப்கின் துண்டுகள் கிடைக்கும்




6. அதே போல் ஆண்களின் காட்டன் லுங்கியை நன்கு அலசி கிழித்து பயன் படுத்தலாம்.

7.. படத்தில் காட்டியுள்ளபடி செய்து பயன் படுத்தவும்.

ஆக்கம்

ஜலீலாகமால்
(தொடர்ரும்)

Tuesday, May 15, 2012

கேழ்வரகு இட்லி - Ragi Idli






கேழ்வரகு (ராகி)இட்லி
தேவையானவை
கேழ்வரகு மாவு -  100 கிராம்
இட்லி மாவு – ஒரு குழிகரண்டி
உளுந்து – 25 கிராம்
வெந்தயம் – கால் தேக்கரண்டி
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
உப்பு – தேவைக்கு

செய்முறை
ராகி மாவை லேசாக வறுத்து கொள்ளவும். உளுந்தையும் வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து மை போல் அரைத்து கொள்ளவும்.
அரைத்த உளுந்துடன் இட்லி மாவு, ராகிமாவையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி (இட்லிமாவு பத்த்தில்)கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
புளித்த மாவில் இட்லி சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லிகளாக வார்க்கவும்.
டயட்டுக்கு ஏற்ற சுவையான டிபன். தக்காளி பூண்டு சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். சர்க்கரை வியாதிகார்களுக்கு ஏற்ற டிபன்.

குறிப்பு: வெளிநாடுகளில் சமைக்கும் பேச்சுலர்கள் மிகச்சுலபமாக செய்து விடலாம். ராகி மாவு எல்லா  தமிழ்க்டைகள், ஆதில் சூப்பர் மார்கெட்களில்  கிடைக்கின்றன. உளுந்து வெந்தயம் ஊறவைப்பதற்கு பதிலாக மிக்சியில் பொடித்தும் மாவுடன் ஊறவைத்துகொள்ளலாம்.இட்லிமாவுக்கு பதில் அரிசிமாவும் சேர்த்து கொள்ளலாம். ரெடி மிக்ஸ் போல மிக்ஸ் செய்தே புளிக்கவைத்து செய்யலாம். ரொம்ப ஈசியான இட்லி, நல்ல் சாஃப்டாக வரும்.
.







Friday, May 11, 2012

சந்தோஷமான அவார்டு

Token of appreciation from the Healthy Morsels Team





கர்பிணி பெண்களுக்கான ஆரோக்கிய சமையலுக்கு ஈவண்ட் 


முன்று பேர் சேர்ந்து நடத்தியதில்என்னுடைய இந்த மட்டன் சூப்பும் தேர்வாகி உள்ளது. மிகவும் சந்தோஷம் 





மட்டன் எலும்பு சூப்



அருசுவையில் முதல் முதல் குறிப்பு கொடுக்க ஆரம்பித்ததில் எனக்கு தெரிந்து நான் தான் தனித்தனியாக தலைப்பில் இது கர்பிணி பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, இது சர்கக்ரை வியாதி உள்ளவர்களுக்கு ,டயட் செய்பவர்களுக்கு என்று பிரித்து பிரித்து சுட்டி காட்டி போட்டதாக ஞாபகம். .. அதற்கு பிறகு எல்லோரும் அப்படி போட ஆரம்பித்தனர்.



கர்பிணிபெண்களுக்கு பிள்ளை பெற்றவர்களுக்கு என்று கொடுத்த போது நிறைய பேருக்கு எல்லா குறிப்பும் உதவி இருக்கும். 

ஆனால் பயனடைந்தவர்கள் பலர் நன்றி சொல்லி மெயில் அனுப்பி இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு மனமில்லை..கேட்பதோடு சரி.
யாருக்காக இருந்தாலும் நேரம் ஒதுக்கி எனக்கு தெரிந்ததை சொல்வேன்.

இப்ப அதற்கு தகுந்த மாதிரி இந்த ஈவண்டில் கர்பிணி பெண்களுக்காக நான் நான் கொடுத்த குறிப்பு இடம் பெற்றிருக்கு என்று நினைக்கும் போது ரொம்ப  ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.




உங்கள் சப்போர்ட் இல்லன்னா  இவ்வளவு குறிப்பு கொடுத்து இருக்கமுடியாது
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, 

இன்னும் கர்பிணி பெண்களுக்கான சத்தான சமையல் மற்றும் மினிமீல்ஸ் கள் போட இருக்கிறேன்.
 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் கருத்தும் ஓட்டுக்களும் மிகவும் உற்சாகத்தை தரும்.


Tuesday, May 8, 2012

கருனை கிழங்கு சிப்ஸ் - Yam Chips





கரக்கு மொருக்குன்னு சாப்பிட சூப்பாராக இருக்கும். இதை ருசி பார்ர்த்து விட்டால்  விடவே மாட்டீங்க.. 
கருனை கிழங்குன்னு நான் சொல்வது மண்டை சைஸுக்கு பெரிசா இருக்கும். சிலருக்கு இதை அரியும் போது கை அரிக்கும் ஆகையால் புளி தண்ணீரில் கையை நனைத்து கொள்ளனும் என்பார்கள்.



கருனை கிழங்கு சிப்ஸ்

இது எனக்கு ரொம்ப பிடித்த சிப்ஸ்.அம்மா வீட்டில் இருந்து கிரான்மா வீட்டுக்கு போகும் வழியில் பேங்க் வாசலில் தள்ளு வண்டியில் இதை நிறைய பொரித்து கொண்டு இருப்பார். எனக்கும் கிரான்மாவுக்கும்,  இரண்டு பொட்டலம் வாங்கி சொல்வேன், ஆனால் அது சற்று தடிமனாக இருக்கும்






தேவையானவை
கருனை கிழங்கு  - கால் கிலோ
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு தூள் – ½ தேக்கரண்டி (தேவைக்கு)



செய்முறை
கருனைகிழங்கை மேல் தோல் சீவி கழுவு தடிமனாக முன்று இன்ச் அளவுக்கு கட் பண்ணி கொள்ளவும்.
நீளவாக்கில் முன்று இன்ச், அகலம் முக்கால் இஞ்ச் இருக்குமாறு கட் பண்ணி கொள்ளவும்.


எண்ணையை காயவைத்து மிதமான தியில் மொருகலகாக பொரித்து எடுத்து ஆறவைக்கவும். 

ஆறியதும் உப்பு, மிளகாய் தூள் தூவி நன்கு குலுக்கி விடவும்

மிளகாய் தூளுக்குபதில் மிளகுதூள் மற்றும் அவரவர் விருப்ப்படி சாட் மசாலா, ஆம்சூர் மசாலா இப்படி தூவிக்கொள்ளலாம்.

சிப்ஸ் தயிர் சாதம், புளிசாதம், லெமன் ரைஸ் பண்ணும் போது கண்டிப்பாக செய்வேன். ஆனால் ஓவ்வொருத்தருக்கு ஓவ்வோரு சிப்ஸ் பிடிக்கும். எனக்கு கருனை கிழங்கு சிப்ஸ், என் பெரிய பையனுக்கு வாழைக்காய் சிப்ஸ், சின்ன பையனுக்கு உருளை சிப்ஸ்.
இதில் உள்ள அளவு இரண்டு பேர் சாப்பிடலாம்.
போன பதில் கேட்டு கொண்டபடி சிப்ஸ் செய்து போட்டாச்சு. செய்து பார்த்து உங்கள் பொன்னான கருத்துக்களை தெரிவிக்கவும்.

கருனை கிழங்கு தால்சா
கருனை கிழங்கு வடை


Tuesday, May 1, 2012

சேனைகிழங்கு வடை - Yam Tikki - சேனையா?? கருனையா??



(சேனை ) இதை நான் கருனை கிழங்கு என்று தான் சொல்வேன், இதற்ககா கருனையா? சேனையா ? 
முன்பு அருசுவையில் ஒரு ஆர்கியுமெண்டே நடந்தது 
ஆங்கிலத்தில் Elephant foot,  என் பையன் கிட்ட அவன் சின்ன வயதில் சொல்லும் போது அப்ப தான் கே.ஜி 1. என்ன mummy  elephant foot fry aaa என்பான்.

 பைல்ஸ் பிராப்ளம் உள்ளவர்கள் இந்த சேனைகிழங்கை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது  மிகவும் நல்லது.

இதை மட்டனுடன் சேர்த்து குருமா வைத்தால் சுவை அபாரமாக இருக்கும்.அதே போல் தால்சாவிலும் சேர்ர்த்து செய்வோம்.மோர்குழம்பு, தயிர்சாதம்  ரசம் மோர் சாதத்துக்கு உருளை வறுவல் போல் கருனை கிழங்கு வறுவல் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் .வெஜ் குருமாவில் கூட நான் சிறிது கருனை கிழங்கு சேர்த்து தான் செய்வேன். புளிகுழம்புக்கு இந்த கருனை கிழங்கை சேர்த்தால் சுவை அபாராமாக இருக்கும்.

பிங்கர் சிப்ஸ் கூட உருளைக்கு பதில் கருனையில் சேர்த்தால் நல்ல கிரிஸ்பி கிடைக்கும்.

உருளை சிப்ஸ் போல ருனை கிழங்கு சிப்ஸ்  முன்பு அடிக்கடி செய்வேன், சூப்பராக மொரு மொருப்பு குறையாமல் இருக்கும்.

கருனை கிழங்கு சிப்ஸ் முன்பு பள்ளி சென்று வரும் வழியில், பேங்க் வாசலில் தள்ளு வண்டியில் சுட சுட சுட்டு விற்பார்கள், பார்தால் ஒரு பொட்டலம் வாங்காம வரமாட்டேன். அதிலிருந்து இந்த சிப்ஸ் மேல் அபார பிரியம் .
 அடுத்த குறிப்பில் போடுகிறேன்.





தேவையானவை  
கருனை கிழங்கு - கால் கிலோ
பச்சமிளகாய் - ஒன்று
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி(தேவைக்கு)
வெங்காயம் - ஒன்று (பொடியாக அரிந்தது)
தேங்காய் துருவல் - ஒரு மேசை கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி துருவல் - கால் தேக்கரண்டி
மைதா,சோளமாவு, அரிசி மாவு - ஒரு மேசை கரண்டி
பொட்டு கடலை மாவு - ஒரு மேசை கரண்டி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு




செய்முறை


கருனை கிழங்கை தோலெடுத்து மண்ணிலாமல் கழுவி பெரிய துண்டுகளாக நருக்கி கால் தேக்கரண்டி உப்பு போட்டு வேகவைத்து ஆறியது தண்னீரை வடித்து மசித்து கொள்ள வேண்டும்.
சோம்பு,பச்சமிளகாய், தேங்காய் துருவல் கொத்துமல்லி கீரையை அரைத்து கொள்ளவேன்டும்.
மசித்த கிழஙகில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,அரைத்த விழுது,வெங்காயம், மைதா, சோள,அரிசி, பொட்டு கடலை மாவுகள் அனைத்தையும் போட்டு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
தோசை தவ்வாவில் எண்ணையை ஊற்றி வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.