Sunday, July 28, 2013

சிக்கன் ஹரீஸ் ( அரபிக் நோன்பு கஞ்சி /சூப்)

சிக்கன் ஹரீஸ்  ( அரபிக் நோன்பு கஞ்சி /சூப்)



HOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE CHICKEN HAREES

அரேபியர்களின் பாரம்பரிய நோன்பு கஞ்சி. இங்குள்ள பெரிய பெரிய பள்ளிவாசல்களில் இந்த ஹரீஸும் வைப்பார்கள். இதை ஒரு கப் குடித்தாலும் உடலுக்கு அதிக  தாக்கத்து, மசாலா இல்லாத லைட்டான கஞ்சி /சூப்.

இது துபாய் வந்த புதிதில் எங்க வீட்டு கிழே இருக்கும் அரபி வீட்டிலிருந்து நோன்பு நேரத்தில் அடிக்கடி கொடுத்து அனுப்புவார்கள். என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடிக்கும். அவனுக்ககவே அடிக்கடி செய்வது.

Harees with Saffron



ஓவ்வொரு வருடமும் நோன்பு மாதங்களில் பல ஊர்களில் அவரவர் பாரம்பரிய உணவு வகைகளை மாலை நேரம் நோன்பு திறக்க தயார் செய்வோம்.
அதில் நோன்பு என்றாலே முதல் முதல் சமைக்கும் உணவு நோன்பு கஞ்சி தான்.
நம் ஊர்களில் அரிசியை உடைத்து அதில் சிறிதுகடலை பருப்பு,பாசிபருப்பு சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து , சில மசாலா வகைகளும் சேர்த்துநோன்பு கஞ்சி தயார் செய்வோம் . 

ஆனால் அரபு நாடுகளில் காரமிலாமல், மசாலா அதிகம் இல்லாமல் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகைகளில் கஞ்சி/ சூப் என்ற இந்த ஹரீஸும் ஒன்றாகும்.
 இது உடைத்த வெள்ளை கோதுமையுடன் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து செய்வார்கள்.இது குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். டயட் செய்பவர்களுக்கும் எண்ணை அதிகம் சேர்க்காத நோன்பு கஞ்சியாக குடிக்கலாம்.




தேவையானவை

சிக்கன் எலும்பில்லாதது  - 200 கிராம்
உடைத்த வெள்ளை கோதுமை - 100 கிராம்
பட்டை தூள்  - அரை தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் -தேவைக்கு 
பட்டர்  - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 
பூண்டு - 3 பல்
தண்ணீர் - 800 மில்லி ( தேவைக்கு)


HOW TO MAKE ARABIC HAREES/HOW TO MAKE CHICKEN HAREES
செய்முறை

1.கோதுமையை 8 லிருந்து 10 மணி நேரம் ஊறவைக்கவும்.

2.குக்கரில் சிறிது பட்டர், வெங்காயம், பூண்டு சேர்த்து தாளித்து சிக்கன் துண்டுகளையும், ஊறவைத்த கோதுமையையும் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.

3.நான்கு  டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி மிதமான தீயின் நான்கு ஐந்து விசில் விட்டு , தீயின் தனலை குறைத்து வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.

4.குக்கர் ஆவி வெளியானதும் குக்கர் வெயிட்டை நிக்கிவிட்டு, நன்கு மசிக்கவும். ( பிளண்டரில் அல்லது மிக்சியில் முக்கால் பாகம் அரையும் வரை மசிக்கவும்)

5.பிறகு சிறிது பட்டரில் சீரகதூளும், பட்டை தூளும் சேர்த்து தாளித்து மசித்த ஹரீஸ் கஞ்சியில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பரிமாறும் பவுலில் ஊற்றி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வைக்கவும்.


Harees with Dates


6.சுவையான அரபிக் கஞ்சி ஹரீஸ் தாயார்.


Harees with chicken Nuggets


ஆயத்த நேரம் : 20 நிமிடம்
ஊறவைக்கும் நேரம் : 8 லிருந்து 10 மணி நேரம்
சமைக்கும் நேரம்: 40 நிமிடம்


டயட் செய்பவர்கள் இதில் பட்டரை தவிர்த்து ஆலிவ் ஆயில் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.இதை பர்கல் மற்றும் ஓட்ஸிலும் செய்யலாம்.
படங்கள் சரியாக வரவில்லை. பிறகு செய்யும் போது சேர்க்கிறேன், இதே மட்டன் கீமாவில் செய்த படம் நன்றாக வந்துள்ளது அடுத்த குறிப்பில் போடுகிறேன்/


Friday, July 26, 2013

அவகோடா மாம்பழ ஜூஸ் - Mango Avacoda Smoothie


அவகோடா மேங்கோ ஜீஸ் வித் ஹனி டேட்ஸ் சிரப்


தேவையானவை
பழுத்த அவகோடா பழம் – 1
பழுத்த மாம்பழம் – 1
ஹனி டேட்ஸ் சிரப் – 1 மேசை கரண்டி
பால் – அரை டம்ளர்.
அலங்க்ரிக்க
பிஸ்தா பிளேக்ஸ்

செய்முறை
அவகோட மற்றும் மாம்பழத்தின் கொட்டை மற்றும் தோலை நீக்கி பழங்களை அரிந்து கொள்ளவும்.
மிக்சியில் அரிந்த பழங்களுடன் டேட்ஸ் ஹனி சிரப் மற்றும் பால் சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடிக்கவும்
. பிஸ்தா பிளேக்ஸ் தூவி பரிமாறவும்.

சுவையான ஹெல்தியான பானம் தயார்..சுவைத்து மகிழுங்கள்

Monday, July 15, 2013

தயிர் வடை - Curd Vadai


உளுந்து வடை தமிழ் நாட்டின் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டியும் காலை நேரம் டிபனும் ஆகும். இதை தயிர் வடை, சாம்பார் வடை, மோர் குழம்பு வடை, ரசம் வடை,கீரை வடை என பல வகைகளாக தயாரிக்கலாம்.

இந்த வருடம் நோன்பில் இங்கு துபாயில் சரியான வெயில், வெளியில் சென்றால் குற்றலத்தில் குளித்து விட்டு வந்தது போல் வேர்வையில் நனைந்து வரலாம்.
பிரியாணி தாளித்து வெயிலில் வைத்தால் கூட தானே தம் ஆகிடும் அந்த அளவுக்கு கோடை வெயில்இங்கு கொளுத்துகிறது.
 இந்த நோன்பு நேரத்தில் நோன்பு திறக்க கஞ்சியுடன்  பல சிற்றுண்டிகள் செய்வோம். அடிக்கிற இந்த வெயில் நேரத்தில் குளு குளுன்னு இந்த தயிர் வடை செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.


தயிர் வடை
தேவையான பொருட்கள்
 வடைக்கு

உளுந்து பருப்பு =‍  ஒரு  டம்ளர் (200கிராம்)
உப்பு = முக்கால்  தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறியதுண்டு பொடியாக அரிந்தது
ச்சமிளகாய் = இரண்டு பொடியாக அரிந்தது
ஆலிவ் ஆயில் ‍ = அரை தேக்கண்டி
கருவேப்பிலை பொடியாக அரிந்தது - சிறிது
வெங்காயம் (பொடியாக அரிந்தது 4 மேசைகரண்டி)





யிர் தாளிக்க



யிர்  300 கிராம்
பால் ‍ =  அரை டம்ளர்
எண்ணைஅரை தேக்கண்டி
டுகு = அரை தேக்கண்டி
ருவேப்பிலை = சிறிது
பெருங்காயம் = ஒரு பின்ச்
மோர் = டை தோய்க்க
அலங்கரிக்க

ஓம பொடி ,காராபூந்தி


 செய்முறை

1. உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து அதில் உப்பு, ஆலிவ் ஆயில், சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்.
இஞ்சி பச்சமிளகாய் கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

3.
எண்ணையை காயவைத்து அரைத்த உளுந்து மாவை வடைகளாக தட்டி பொரிக்கவும்


4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.



5.
சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.(வெண்ணீரிலும் நனைத்து எடுக்கலாம்)






6.ஒரு சிறிய கிடாயில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து உடனே அடுப்பில் இருந்து இரக்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் னைத்தடைகளை தாளித்தயிர் வையில் சேர்க்கவும்.10 நிமிடம் ஊறவைக்கவும்.

பவுளில் இரண்டு இரண்டு வகைகளாக வைத்து தேவைக்கு சிறிது தயிர் கலவையும் சேர்த்து ஓமபொடி ,கொத்துமல்லி தழை,காரா பூந்தி தூவி பரிமாறவும்.
சுவையான தயிர் வடை ரெடி
கொளுத்தும் வெயிலுக்கு இதமான உணவு. உடலுக்கு குளிர்ச்சி தர கூடியது.
நீங்களும் சுவைத்து மகிழுங்கள்



சென்னை ப்ளாசா பேஸ் புக் பேஜ் லைக் பண்ணுங்கோ... 




Friday, July 12, 2013

காக்டெயில் ஜூஸ் கடல் பாசி - Cocktail Juice Agar Agar

காக்டெயில் ஜூஸ் கடல் பாசி

இது ஒரு வெஜ்டேரிய‌ன் உண‌வு தான் . நோன்பினால் வரும் வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும் . உடல் சூடுக்குக்கும் நல்லது.

ஏற்கனவே நிறைய கடல் பாசிவகைகள் இங்கு போஸ்ட் செய்துள்ளேன்.

இது என் தங்கையின் சின்ன மாமியார் செய்தது.



தேவையான பொருட்கள்



க‌ட‌ற்பாசி - ஒரு கை பிடி அளவு
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசைக‌ர‌ண்டி அள‌வு
ரெடி மேட் காக்டெயில் ஜூஸ் – ஒரு டம்ளர்


தண்ணீர் – ஒன்னறை டம்ளர்

செய்முறை
1.
க‌ட‌ற்பாசியை ஒன்ன‌றை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ரைத்து ஊற‌வைத்து ச‌ர்க‌க்ரை சேர்த்து ந‌ன்கு காய்ச்ச‌வும்.
2.
ந‌ன்கு க‌ரைந்து வ‌ரும் போது ரெடி மேட் காக்டெயில் ஜூஸை கலக்கவும் . காய்ச்சிய கடல் பாசியை ஒரு  டிரேயில் ஊற்றி தேவையான
3.
ஆறிய‌தும் பிரிட்ஜில் வைத்து குளிற‌ வைத்து  வேண்டிய வடிவில் கட் செய்து சாப்பிட‌வும்.

கடற்பாசி என்னும் சைனா கிராஸ் இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உனவு களில் இதுவும் ஒரு வகையாகும்.

கடற்பாசியை ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பால் சேர்த்தும் செய்யலாம்.
இன்னும் பல ப்லேவர்களில் செய்யலாம்.







Sunday, July 7, 2013

இனிய ரமலான் வாழ்த்துக்கள்







புனித மிக்க ரமலானை வரவேற்க்க நபிகளாரின் வழிமுறை
நம் புனித மிக்க ரமலான் மாதத்தை வரவேற்க்க மிக ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம்
அறிந்து கொள்ளவேண்டிய சில முக்கிய செய்திகள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:   

நீங்கள் பிறை பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள், பிறை பார்த்து நோன்பை முடித்துக்கொள்ளுங்கள் மேகம்
(பிறையை மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 
 (ஹதீஸ் – புஹாரி)
இது போன்று பல ஹதீஸ் காணப்படுகின்றன.   
நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானில் பிறை தேடினார்கள் ஸஹாபாக்களையும் தேட  துண்டிக்கொண்டிருந்தார்கள்.
ரமலானின் பிறையை பார்ப்பது பிக்ஹ் அடிப்படையில் சில  பேர் மட்டும் செய்தால் போதுமானது என்ற – கிபாயா-
சட்டமாக இருந்தாலும், நபி வழியில் பிறையை அனைவரும் பார்க்க முயற்சிப்பது அவசியமாகும். அப்படி பிறை
காண கிடைத்தால் அந்நேரம் கீழ்கண்ட துஆ ஓதுவது ஸுன்னாவாகும்

الله اكبر ، اللهم اهله علينا بالامن و الايمان و السلامة و الاسلام و التوفيق لما تحب و ترضى ربنا و ربك الله  
அல்லாஹ் அக்பர்,  அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் அம்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ்ல்
இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பு வ‌த‌ர்ளா ரப்பி வ ரப்புகல்லாஹ். 
அல்லாஹ் நீ தான் உயர்ந்தவன்
யா அல்லாஹ்! இந்த‌ பிறையை நிம்மதி உள்ள‌தாக‌வும்ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ
விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும்பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க்
கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும்உன‌து ர‌ப்பும் அல்லாஹ் தான்!


 -       ஹஸனி


**************************************


1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் தூஆ

"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".

அல்லாவே! கிருபையாளர் களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.


2. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ

"அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வக‌ஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்".

அல்லாவே!ஆலத்தார்களின் இரட்சகனே!எங்கலுடைய பாவங்களையும் எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.

3. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ


அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்.


அல்லாவே!ஆலத்தார்க்ளின் இரடகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!

குறிப்பு

மேற்கண்ட முன்று தூஆக்களையும் எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்தது. மற்ற தூஆக்களுடனும் சேர்த்தும் ஓதலாம்.

ஏக வல்ல இறைவனில் அருளால் நாம் ரமலான் மாதத்தை உடல் ஆரோக்கியத்தோடு அடைவதற்க்கு அல்லாஹ் உதவிபுரிவான்.