Friday, February 21, 2014

புற்றைக்கொள்ளும் செந்நிற பானம்

இதை முன்பு நேசம் மற்றும் உடான்ஸ் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள் வைத்து விழிப்புணர்வு செய்தார்கள், இன்னும் அதிக அளவில் கேன்சர் நோய் சிறியவர்கள் பெரியவர்கள் என்றில்லாமல் அனைவரையும் ஆட்டி படைத்து கொண்டு தான் இருக்கிறது.. இது போல் உண்ணும் உணவிலாவதுகவனம் செலுத்தி ஓரளவுக்கு நாம் தடுத்து கொள்ளலாம்.

இதற்கு முன் நான் போட்டுள்ள சில பதிவுகளின் லின்குகள் கீழே உள்ள சுட்டியை சொடுகி பார்க்கவும்.

கேன்சர் நோயாளிகளுக்கான உணவு வகைகள்

புற்றை வெல்வோம் வருமுன் காப்போம் பெண்களுக்காக

ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை - கதை

சிலருக்கு கேரட் ஆப்பிள், பீட்ரூட் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்க பிடிக்க வில்லை என்றால் சூப் போல செய்து குடிக்கலாம்.


-- புற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்

//இது முன்பு  எல்லாருக்கும் மெயிலில் வந்தது, இதை மறுபடி ஞாபகபடுத்துகிறேன்.//


முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள்காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட்பீட்ரூட்ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிசய சிவப்பு
தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

1) 
உடம்பில் உள்ள புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தி புற்றுநோய்க்கான எதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது.

2) 
கல்லீரல்கணையம்சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடுஅல்சர் நோயை குணப்படுத்துகிறது.

3) 
நுரையீரலை பாதுகாப்பதோடுஉயர் ரத்த அழுத்தம்ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

4) 
மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

5) 
கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது.

6) 
தசை தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது

7) 
முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.

8) 
சீரணமண்டலம்தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

9) 
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.

10) 
காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.


எப்படி தயாரிப்பது :

இந்த பானத்தை தயாரிப்பது எளிது


காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1



மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். சுவைக்கு எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம்.



காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகவேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து 

பருகுவது முக்கியம்.

தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துறைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம்.







இது 2 வருடம் முன்பு செய்த ஜூஸ், படங்கள் சரியாக இல்லாததால் போஸ்ட் பண்ணவில்லை. படம் சரியாக இல்லை என்றாலும் இந்த பதிவையாவது சிலர் படித்து விழிப்புணர்வு பெறவேண்டும் என்று தான் இந்த பகிர்வு.

என்னுடைய டிப்ஸ் 

இதில் பீட்ரூட்டில் பச்சை வாடை அடித்தால் சிறிது வேக வைத்து கொள்ளலாம். இல்லை இதையே பீட்ரூட், கேரட், ஆப்பிள் சேர்த்து சூப்பாக வைத்து குடிக்கலாம்.

கேக் வகைகள் செய்யும் போது கூட கலர் பொடிக்கு பதில்  பீட்ரூட்டை சாறெடுத்து ஊற்றி செய்யலாம்.

காய் கறி குருமா, பிரியாணி, சாம்பார் செய்யும் போது நான் எப்போதும் பீட்ரூட்டையும் சேர்த்து கொள்வேன். கலந்த சாதம் செய்வதற்கு பதிலாக பீட்ரூட் சாதமும் செய்து சாப்பிடலாம்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய, பயனுள்ள குறிப்பு சகோதரி... நன்றி...

சிறந்த விழிப்புணர்வு பகிர்வு... வாழ்த்துக்கள்...

IlayaDhasan said...

//இது 2 வருடம் முன்பு செய்த ஜூஸ்,

OMG, me escape....

'பரிவை' சே.குமார் said...

மிகச் சிறந்த விழிப்புணர்வுப் பகிர்வு அக்கா...

ADHI VENKAT said...

அருமையான பானம். முடிந்த அளவு கடைபிடிக்க முயற்சி செய்கிறேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா