Tuesday, July 22, 2014

ஹைதராபாதி நிஜாமி பிரியாணி - Hyderabadi Nijami Biriyani




ஹைதராபாத் தம் பிரியாணி என்றாலே அனைவருக்கும் நாவில் நீர் ஊறும் அதிக மசாலா இல்லாத தக்காளி சேர்க்காமல் 40, 45 நிமிடங்கள் வரை தம்மில் குறைந்த தீயில் வேக வைப்பது. பப்பாளிகாய் சேர்ப்பதால் மட்டன் சீக்கிரம் வேகும்.






தேவையான பொருட்கள்

-- மட்டனுடன் ஊறவைக்க‌



மட்டன் எலும்புடன்  ‍ 600 கிராம் 
தயிர் ‍ 200 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் ‍ 2 தேக்கரண்டி
கரம் மசாலா பவுடர் ‍ 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ‍ 1/4 தேக்க்ரண்டி
வறுத்த வெங்காயம் ‍ 100 கிராம்(Fried Onion)
இஞ்சி பூண்டு விழுது ‍ 50 கிராம்
முந்திரி ( அரைத்தது) 50 கிராம்
பப்பாளி காய் அரைத்தது ‍ 25 கிராம்
எண்ணை ‍ 4 மேசைகரண்டி




சாதம் வேக வைக்க‌

தண்ணீர் ஓன்னறை லிட்டர்

தரமான பாசுமதி அரிசி ‍ 500 கிராம்
பட்டை , லவஙகம் , ஏலம் ‍ சிறிது
கருப்பு சீரகம் ( ஷாஹீரா)
கொத்துமல்லி தழை ‍ ஒரு கட்டு
புதினா  ‍ஒரு கட்டு

பொடியாக அரிந்த பச்சை மிளகாய்

குங்குமபூ ஒரு பின்ச் 5 மேசைகரண்டி சூடான பாலில் ஊறவைத்தது
எலுமிச்சை சாறு ‍ இரண்டு தேக்கரண்டி

சப்பாத்தி மாவு ‍ 100 கிராம்
அவித்த முட்டை ‍ 2 (4 ஆக கீறியது)




செய்முறை

முதலில் வறுத்த வெங்காயம் தயார் செய்து வைத்து கொள்ளவும்,



வெறும் தவ்வாவில் கொஞ்சமாம எண்ணை விட்டு வெங்காயத்தை வறுத்து வைத்துகொள்ளவும்.
மட்டனை சுத்தம் செய்து வைக்கவும்.



ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மட்டன், தயிர், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு, கரம்மசலா, வறுத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பப்பாளி விழுது, அரைத்த முந்திரி விழுது எல்லாவற்றையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.



ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் எண்ணை + உப்பு சேர்த்து , அரிசியை களைந்து சேர்த்து பட்டை லவங்கம் ஏலம், ஷாஜீரா, சிறிது கொத்து மல்லி புதினா சேர்த்து அரை வேக்காடாக வடித்து வைக்கவும்.வடித்த சாதத்தை முன்று பாகங்களாக பிரிககவும்


.
ஊறவைத்த மட்டனை இரண்டு அல்லது முன்று பாகமாக பிரித்து வைக்கவும்

அடிகனமான பாத்திரத்தில்  முதலில் ஊறவைத்த  மட்டன்  கலவை, அடுத்து முக்கால் பாகம் வேகவைத்த அரிசி , அடுத்து வறுத்த வெங்காயம் அடுத்து கொத்துமல்லி, புதினா தழை போட்டு சமப்படுத்தவும்.

(இதே போல் மீதி உள்ள அரிசி மற்றும் மட்டன், மற்ற பொருட்களையும் அதே போல் லேயராக வைத்து சமப்படுத்தவும்). ( நான் இதில் இரண்டு லேயர்கள் மட்டும் போட்டுள்ளேன்.

மேலும் அடுத்த  பகுதி அரிசியை சேர்த்து சமப்படுத்தி அதன் மேல் கொஞ்சம் ஊறவைத்த மட்டனை வைக்கவும், அதன் மேல் சிறிது சாப்ரான் பால், கொத்துமல்லி புதினா தழை, அரிந்த பச்சை மிளகாய், வறுத்த வெங்காயம் அனைத்தையும் தூவவும்..





சப்பாத்தி மாவை கயிறு போல் திரித்து பாத்திரத்தின்  விளிம்பின் வாய் பகுதியில் சுற்றிலும்  ஒட்டவும். பாத்திரத்தை மூடி 30 நிமிடம் சிறு தீயில் தம் போடவும்.




அரை மணி நேரம் தம்மில் விடவும். பிறகு தம் போடும் கருவியை கேஸ் அடுப்பின் மேல் சட்டிக்கு கீழ் வைத்து சிம்மில் 20 நிமிடம் வைக்கவும்.

சப்பாத்தி மாவு இல்லாமலும் தம் போடலாம். பிரியாணி சட்டி நன்கு இறுகலாக முடி இருக்கனும் அவ்வளவுதான்.

தம் போடுவதை  முன்று முறைகளாக செய்யலாம்.

1. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி கணமான ஈரடவலை வைத்துமேலே மூடி போட்டு சூடானா கஞ்சி அல்லது, நெருப்பு கங்குகள் வைத்து தம் போடலாம்.

2. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி பாயில் பேப்பரை போட்டு மூடி போட்டு அதன்மேல் சூடானா கஞ்சி வைத்து தம் போடலாம்.

3. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி மூடி போட்டு மூடிக்கு பேப்பர் கிளிப் கள் பொருத்தி அதன் மேல் வடித்த சூடான கஞ்சியை ஏற்றி தம் போடலாம்.





சும்மா சும்மா இடையில் திறந்து கிளற கூடாது.
தம் போட்டு முடிந்ததும் எடுத்து லேசாக கிளறி விட்டு பரிமாறும் தட்டில் வைத்து சிறிது வறுத்த வெங்காயம், அவித்த முட்டை , கொத்துமல்லி தழை அல்லது புதினா தழை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான ஹைதராபாதி நிஜாமி பிரியாணி ரெடி.






மற்றொரு வகை ஹைதராபாத் பிரியாணியை இங்கு சென்று காணலாம்.

மிக சுலபமாக செய்யகூடிய பிரியாணி. மட்டன் ஊறவைக்கனும், சோறு வடித்து தட்டனும் ,தம் போடனும் , அவ்வளவு தான் கொஞ்சம் நிதானம் + பக்குவம் வேண்டும், இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை. சுவையான தம் பிரியாணி ரெடி.
என் மகனுக்காக செய்தது.

இப்தார் மெனு
ஹைதராபாதி நிஜாமி பிரியாணி 
பூந்தி ரெய்தா
சிக்கன் டிக்கா போன்லெஸ்
அகர் அகர் , கடல் பாசி

Hyderabad Chicken Biriyani 

அரபிக் பாரம்பரிய இனிப்பு வகை பஸ்பூசா/ Basbausa  இங்கு சென்று பார்க்கவும்



Samaiyail attakaasam facebook page

ஊருக்கு போகிறேன், பிறகு சந்திப்போம். இங்கு ஒரு நாளைக்கு 1300 பேர் என் தளத்தை பார்வையிடுகிறீர்கள்,. இங்கு கமென்ட் பண்ண சோம்பல் படுபவர்கள்
என் முக நூல் பேஜில் கருத்து தெரிவிக்கலாமே? என் குறீப்பு மூலம் பயனடைந்தவர்கள் எனக்கு மெயில் செய்தமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்


அப்படியே சென்னை ப்ளாசா இங்கு புது மாடல் , ஷால் கள் நிறைய இருக்கு தேவைபடுபவர்கள் அதில் கொடுத்துள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இது வரை கேட்ட வர்களுக்கு எல்லாம் அவரவர் விருப்பப்ப்படி அனுப்பி வைத்துள்ளேன் எல்லாருக்கும் மிக திருப்தி,. அது போல் இதைபார்வையிடுபவர்கள் மற்றும் உங்கள் சொந்தங்களுக்கு எங்க கடையை அறிமுகப்படுத்தி வையுங்கள்

சென்னை ப்ளாசா முக நூல் பேஜ் , லைக் செய்து ஷேர் பண்ணுங்கள்


என் தளத்தில் உள்ள குறிப்புகளை என் அனுமதி இல்லாமல் வேறு எந்த தளத்துக்கு அனுப்பாதீர்கள் வேண்டுமானல் என் லிங்க் மற்றும் பெயருடன் ஷேர் பண்ணுங்கள்..




சென்னை ப்ளாசா வெப்சைட் - 1

சென்னை ப்ளாசா வெப்சைட் - 2



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

பப்பாளிகாய் சேர்ப்பது இன்று தான் தெரியும்...!

பயணம் இனியதாகட்டும்...

ராஜி said...

தக்காளி சேர்க்காம பிரியாணியா!? இப்ப விக்கும் விலைவாசில இதான் சரிப்பட்டு வரும்.
பயணம் இனிதாகுக!

அப்புறம் ஒரு வேண்டுக்கோள். எங்க வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு ஆம்பூர்ல இருந்து சமையல்காரரை சமைக்க வைத்தோம். அவர் மதிய விருந்துக்கு ”பீர்ணி”ன்றதை சமைச்சார், அம்புட்டு டேஸ்ட். அது முஸ்லீம் சகோதரர்கள் வீட்டு ஸ்பெஷல்ன்னு சொன்னார். அது எப்படி செய்யுறதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்! அது பாஸ்மதி அரில செஞ்சதுன்றது மட்டும் தெரியும். கிரகப்பிரவேசம் அலைச்சலில் இருந்ததால செய்முறையை கவனிக்கல.

Jaleela Kamal said...

ஆமாம் தலனபாலன் சார் , சில மட்டன் வேக ரொம்ப நேரம் எடுக்கும், அதுக்கு பப்பாளி காய் சேர்த்து வேக வைத்தால் எளிதாக வெந்துடும், அதே போல் கபாப் வகைகளுக்கும் பப்பாளி காய் அரைத்து சேர்த்தால் நல்ல இருக்கும்

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ராஜி வாங்க வருகைக்கு ரொம்ப நன்றி + சந்தோஷம்

ஆமாம் பீர்னி என்பது பல வகைகள் எங்க கல்யாண விருந்துகளில் , கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை தஸ்தர் என்று வைப்பார்கள், மஞ்சள் பீர்னி , வெள்ளை பீர்னி இது இல்லாமல் தஸ்தர் இருக்காது.

கண்டிப்பாக ரெசிபி போடுகிறேன்.,

இரண்டு வகை பீர்னி உண்டு ஒன்று ரவையில் செய்வது, மற்றொன்று பாஸ்மதி அரிசியில் செய்வது.

Jaleela Kamal said...

http://cookbookjaleela.blogspot.com/2013/04/rice-badam-kheer-with-watermelon.html

ராஜி இந்த லின்க் ல இருக்கு இதில் தர்பூஸ் சேர்த்து செய்துள்ளேன்,

தர்பூஸனி இல்லாமல் செய்து பாருங்கள்

பிறகு இங்கு நான் போஸ்ட் பண்றேன்.

Thenammai Lakshmanan said...

ஜலீலா அந்த காரட், காய் எல்லாம் எடுத்துட்டு எனக்கு அரை ப்ளேட் பிரியாணியும் பூந்தி ரெய்த்தாவும் போதும்.. கி கி கி ;0

மாதேவி said...

பெருநாள் வாழ்த்துகள்!.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா