Thursday, October 9, 2014

புற்றுநோய்க்கு (Blood Cancer) மருந்து கண்டுபிடிப்பு




புற்றுநோய் இன்னும் பெரிய உயிர்கொல்லியாய் பல பேரை தாக்கி கொண்டு தான் இருக்கிறது, நிறைய பேர் மறந்து போயிருப்பீர்கள்.

அடிக்கடி இது போன்ற பதிவுகள் போடுவதன் மூலம் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்


சரியான மருத்துவம் மூலம் சிலருக்கு சரியாகி நல்லபடியாக வாழ்ந்துகொண்டி இருக்கிறார்கள்.சிலருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இறந்து கொண்டும் இருக்கிறார்கள்.

உண்ணும் உணவை சரி படுத்தி கொண்டாலே பல நோய் களும் புற்று நோயும் வராமல் நம்மை பாதுகாத்துகொள்ளலாம்.

கண்டிப்பாக ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் வருடம் ஒரு முறை உடம்பை முழுவதும் பரிசோதனை செய்து கொளவது நல்லது.

நாள்பட உள்ள இருமல் தலை வலி போன்றவைகளை கண்டுக்காமல் விடாமல் உடனே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஏற்கனவே இந்த புற்றுநோய்க்கு பல பதிவுகள் போட்டுள்ளேன்.
இதற்காக கட்டுரை மற்றும் டிப்ஸ் எழுதி  , டாக்டர்களால் தேர்வு செய்ய பட்டு பரிசும் பெற்றுள்ளேன்.

ஆறுதல் பரிசாக ருபாய் 1000 க்கு உரிய புத்தகங்களும் உடுமலை டாட் காம் முலமாக .கிடைக்க பெற்றேன்.

அந்த பதிவுகளை மீண்டும் உங்கள் அனைவருக்கும் நினை படுத்து கிறேன்.


  1. கேன்சர் நோயிக்கான உணவுவகைகள்.
  2. ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை
  3. புற்றைவெல்வோம் வருமுன் காப்போம். (பெண்களுக்கு மட்டும்)
  4. புற்றை கொள்ளும் செந்நிற பானம்
  5. கேன்சர் அபாயம் - லேடிஸ் ஸ்பெஷல் மாத பத்திரிக்கையில் என் பதிவு.

இது என் அனுபவத்தில் சந்தித்தவர்களை பற்றி எழுதிய சொந்த ஆக்கங்கள். படித்து பயனடைந்து கொள்ளுங்கள்.


=======================
புற்றுநோய்க்கு (Blood Cancer) மருந்து கண்டுபிடிப்பு!******
Medicine has been found for blood cancer. 


அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் நிலவட்டும்மாகுக.

இதுவரை கொடிய நோயாக


இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை 


முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து 

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....


தேவையுள்ளவர்கள் தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



அணுக வேண்டிய முகவரி :----


Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.
PHONE:---------
044 -24910754
044 -24911526
044 -22350241



மேலே உள்ள தகவல் எனக்கு மெயில் மூலம் வந்தது,

பலருக்கு இந்த அட்ரஸ் உதவும் என்று தான் பகிர்ந்துள்ளேன்.


 இதில் சொல்லப்பட்டிருந்த மருந்தின் பெயரை மட்டும் நீக்கி விட்டேன். 

என்ன மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை படி கேட்டு சாப்பிடுங்கள்.


======================

கேன்சர் நோயாளிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவு.

1. அவித்த முட்டை வெள்ளை கரு மட்டும்  மூன்று

2. ஆப்பில் அல்லது ஆப்பிள் ஜூஸ்

3. சிக்கன் எலும்பு சூப்

4. காய்கறி சூப்

5. ராகி கஞ்சி


Cancer Awareness


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

6 கருத்துகள்:

Angel said...

மிகவும் பயனுள்ள தகவல் ஜலீலா ..குறிப்பாக கீமோ செய்தபின் வாய் சுவை ஏதும் தெரியாதாம்

நீங்க குறிப்பிட்ட உணவுகள் மற்றும் குறிப்புகள் மிக உதவியா இருக்கும் .

ZAKIR HUSSAIN said...

இந்த செய்தியில் உண்மை இல்லை. நான் இது பற்றி அறிய அடையாறு கேன்சர் மருத்துவமனையில் தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர்கள் சொன்ன விஷயம். "ஒரு குறிப்பிட்ட மருந்து மட்டும் குணப்படுத்தி விட முடியாது" என்பதே.

மனோ சாமிநாதன் said...

அனைவரும் பயன்பெறக்கூடிய நல்ல விஷயத்தை எழுதியிருக்கிறீர்கள் ஜலீலா! இனிய பாராட்டுக்கள்!!

Jaleela Kamal said...

அஞ்சு ஆமாம், கீமோ தரபிக்கு பிறகு வாய் சுவை இல்லாமல் ரொம்ப கொமட்டும். அதற்கு இது கண்டிப்பாக உதவியாக இருக்கும்
இதன் வலியை பட்டவர்கள் பற்றி நமக்கு நன்றாக தெரியும் இல்லையா?

Jaleela Kamal said...

ஜாகிர் அவர்களே, பதிவில் டாக்டர்கள் அறிவுரை படி மருந்துகளை உட்கொள்ளவும் என்று மாற்றி விடுகிறேன்.
தகலுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

மனோ அக்கா வாங்க எப்படி இருக்கீங்கள் துபாய் வந்தாச்சா?

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா