Wednesday, February 8, 2012

புற்றை வெல்வோம் வருமுன் காப்போம் - பெண்களுக்கு மட்டும்


நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் கேன்சர் விழிப்புணர்வு கட்டுரை பெண்களுக்காக 





புற்றுநோயை வருமுன் காக்க பெண்களுக்கான சில குறிப்புகள்.

நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் விழிப்புணர்வு கட்டுரை.

புற்றை வெல்வோம் - வருமுன் காப்போம் -  பெண்களுக்கு மட்டும்

சமையல் மற்றும் உணவில் பெண்கள் கவனம் கொள்ளவேண்டியது
எந்த நோயிக்குமே உணவே மருந்தாகும். அளவுக்கு அதிகமான உணவும் நல்லதில்லை. அது நஞ்சே ஆகும்.அந்தகாலம் போல் எந்த உணவும் இப்போது சத்தானது கிடையாது. பாஸ்புட் மோகம் அதிகமாக இருக்கு. சில உணவு பொருட்களில் கெமிக்கல் அதிகமாக கலந்து தான் விற்பனையாகிறது.

பெரும்பாலும் 80 % பெண்கள் தான் சமைக்கிறார்கள்இப்ப காலம் மாறி போய் ஆண்களும்  சமையல் உலகில் சிறந்து விளங்குகின்றனர்.

பெரும்பாலும் உணவு பொருட்களில் யாரும் காலவாதி தேதியை பார்ப்பதில்லை.
ஒரு பிரட் வாங்கினால் கூட காலவாதி தேதியை பார்க்காமல் காலவாதி தேதி முடிந்த பிறகும்  அப்படியே சாப்பிடுகின்றனர். .சாப்பிடும் போது நுனுக்கமாக  பிரட்டை பார்த்தால் அதனுள்  பூஞ்சை இருப்பதை நாம் அறியலாம்.

அதே போல் மீன் வறுவல்மட்டன் வறுவல்சிக்கன் வறுவல்,கட்லெட்அப்பளம்வத்தல்சுட்ட கிரில் அயிட்டங்கள் இதேல்லாம் சமைக்கும் போது கண்டிப்பாக சற்று அதிகம் கவனம் கொள்ள வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும்கவனக்குறைவாக இருந்தாலும் உடனே கரிந்து போய்விடும்.
எண்ணையை அதிக சூட்டில்  அப்பளத்தை போடும் போது கூட உடனே கரிந்து விடும் அதை தூக்கி எறிய மனமின்றி வீட்டில் இருக்கும் பெண்கள் அதை சாப்பிடுவதை தவிர்க்கவும்.மற்றும் சிக்கன், மீன், மட்டன் வறுவல்கள் செய்யும் போது கருகாமல் செய்வது நல்லது.அதிக தீயை வைத்து பொரிக்காதீர்கள்.

அதே போல் ரசம் தாளிக்கும் போது எண்ணையை சூடாக்கியதும் அதிக சூடாக இருந்தால் கடுகை போட்டதுமே ஒரு நிமிடத்துக்குள் கரிந்து விடும்ஆனால் அதையும் வேஸ்ட் பண்ண மனமில்லாமல் அப்படியே தாளித்து கொட்டுகின்றனர்.(இது சமையலில் சிலர் செய்து வரும் மிகப்பெரிய தவறு)
இதெல்லாம் சாப்பிடுவதால் சாப்பிடும் போது நல்ல தான் இருக்கும். ஆனால் நிறைய பேருக்கு நெஞ்சு கரிக்கும். கருகிய உணவை சாப்பிட்டால் என்ன ஆகும்.அடுத்து வாயு தொல்லை ஆரம்பிக்கும்.

கரிஞ்ச தீஞ்ச உணவும் கேன்ஸர் வருவதற்கு ஒரு காரணமாம்அதிக வெப்பத்தில் (க்ரில்பார்பெக்யூஎண்ணெயை கொதிக்கவைத்து பொரிப்பதுஅடுப்பு எப்பவும் பெரிய தீயில் வைத்துச் சமைப்பது...போன்றதும் கேன்ஸருக்குக் காரணமாம்...

கவனமாக தீயின் தனலை சமையலுக்கு ஏற்றவாறு வைத்து சமைக்கவும்.சமைக்கும் போது அதிக புகை போக அதை நுகர்ந்துகொண்டு சமைக்காதீர்கள் காற்றோட்டமாக ஜன்னலை திறந்து வைத்துகொள்ளுங்கள் அல்லது எக்ஜாஸ்ட் பேன் போட்டு கொள்ளுங்கள். 

ஜாம் ,தயிர்ஊறுகாய் பாட்டில்களில் எல்லாம் சரியாக காய்ந்த கரண்டி பயன் படுத்த வேண்டும்.அப்படி பயன் படுத்தாமல் விட்டால் மேலே பூஞ்சை படிந்த்து விடும். அதை சரியாக கவனிக்காமல் மேலோடு வழித்து போட்டு விட்டு பயன்படுத்துவோரும் இருக்கினறனர். அப்படி பயன்படுத்தாதீர்கள்.பெண்கள் குடும்பத்தில் உடல் நலம் கருதி சமையலில் கொஞ்சம் கூடுதல் கவனம் கொள்ளுங்கள்.

காய்கறிகளில் கொத்துமல்லி கீரை, காலிப்ளவர், புரோக்கோலி,கீரை வகைகள் அதில் நிறைய மணல் மற்றும் பூச்சி புழுக்கள் இருக்கும், முறையாக வென்னீரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கழுவி பயன் படுத்தவும்.

ஆரோக்கியமான சமையலே நோய்க்கு நல்ல மருந்தாகும்.

 கர்பவாய்மார்பகபுற்றுநோயில் இருந்து பாதுகாப்பு பெற

 பெண்கள் ஆடைகள் விஷியத்தில் விலையுயர்ந்த  பட்டு புடவைகள் , சுடிதார் எனறு துணிகளை விலை அதிகமாக கொடுத்து வாங்குகின்றனர். ஆனால் யாரும்  உள்ளாடையில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நல்ல தரமான பருத்தி  (காட்டன்) உள்ளாடைகள் பார்த்து வாங்க வேண்டும். உள்ளாடையை ஆறு மாதம் ஒரு  முறை மாற்றுவது நல்லது. புதிய உள்ளாடைகள் வாங்கினாலும் ஒரு முறை  அலசி பயன்படுத்துவது நல்லது. (இதை யாரும் செய்வதில்லை).துவைக்கும் போது கொஞ்சம தண்ணீரில் சோப்பு போடு அதில் கொதிக்கிற வெண்ணீரை ஊற்றி அதில் ஊறவைத்து அலசவும். இப்படி செய்வதால்  அதில் உள்ள தொற்று  கிருமிகள் அழிந்துவிடும். கருப்பு நிற உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும்.இறுக்கமான உள்ளாடைகள் வாங்குவதையும் தவிர்க்கவும். இதனால் கூட தோல்பாதிப்பு நாள்பட ஆறாத புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 பெண்கள் மாதவிலக்கின் போதும் உள்ளடைகளை துப்பரவாக வெண்ணீரில் அலசி பயன் படுத்தவும். வாஙகும் சானிடரி பேட் களும் எக்ஸ்பேரி டேட் பார்த்து வாங்கி பயன்படுத்தவும். இல்லை என்றால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் அப்படி அலர்ஜிக்கு  தேங்காய் எண்ணை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

 கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் போது அதையும் மருத்துவரிடம் சரியாக பரிசோதித்து கொள்ளுங்கள்ஒரு முறை எழுதி கொடுத்தால் மறுபடி போய் செக் பண்ணி கொள்ளவோ அதை பற்றி மருத்துவரிடம் விவாதிக்கவோ வெட்கப்பட்டு கொண்டு அதையே 10 வருடத்துக்கும் மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்

 ஒரு வருடம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று சாப்பிடும் மாத்திரைகளை கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.

காப்பர்டி கருத்தடை சாதனம்  பயன் படுத்தினால் கூட கேரண்டி 3 முன்று வருடம் அல்லது 5 வருடம் என்று டாக்டர் சொன்னதும் அதை பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதையும் சரியாக ஆறுமாதம் ஒரு முறை அல்லது வருடம் ஒருமுறை செக்அப்  செய்து கொள்ளுங்கள். முன்று வருடம் ஒரு முறை கண்டிப்பாக காப்பர்டியை மாற்றி விடுங்கள். இல்லை என்றால் (அ) அதிக உதிர போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கு. கர்ப்ப பை புண்ணாகிடும்  தற்போது புடவை கட்டினாலும் கேன்சர் வருகின்றது என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரொம்ப இருக்கமாக அழுத்தி டைட்டாக பெட்டிகோட் அணிவதை தவிர்த்து கொள்ளுங்கள். புண்ணாகி அதுவே கேன்சர் கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கு. சிலவிடயங்கள் முறையாக பின்பற்றினாலே தொற்று கிருமிகள் அண்டாமல் கர்பவாய் புற்றுநோயில் இருந்துபாதுகாப்பு பெறலாம்.


பல் வலி வந்தால் இரண்டு நாட்கள் அதிக வலி இருக்கும் பிறகு வலி நின்று விடும்திரும்பவும் வந்து வந்து சரியாகும்அதான் சரியாகி விட்டதே என்று விட்டு விடாமல் உடனே  உரிய மருத்துவரை அனுகுங்கள். அதே போல் வாயில் பிளந்து பிளந்து கொப்புளங்கள். இருந்தாலும் கவனம் கொள்ளவேண்டும். வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் கொப்புளம் வரும். அதுவும் நாளடைவில் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு.

தலை வலியோவயிற்று புண்வயிற்று வலி நெஞ்ரிச்சல்வாயு பிரச்சனை இதுபோல் இரண்டு முன்று மாதத்துக்கு மேல் சரியாகாமல் தொடர்ந்தால் உடனடியாக  மருத்துவரை சந்திக்கவும். ஏதும் தீராத வயிற்று வலி , வாய் புண் கொப்புளங்கள், நீண்ட நாள் வலியில்லாமல் ஆறாத கட்டி மற்றும் புண்கள் இருந்தால் அடிக்கடி மயக்கமாக இருந்தாலும்  என்ஸ்கோபி மற்றும் மெமோகிராம்  டெஸ்ட்போன்ற மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளை முறையாக எடுத்து கொள்ளுங்கள்.

நான் சரியான டயட்டில் தான் இருக்கிறேன் எனக்கு ஏன் கேன்சர் வருது என்று கூட நினைக்கலாம்அனைவருக்கும் கேன்சர் நோயை உண்டாக்கும் செல்கள் இருக்கதான் செய்யுமாம். அது சிலரை இல்ல இப்ப பலரை நிறையவே தாக்கி கொண்டு இருக்கிறது. அனைவருமே இதில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
40 வயதை கடக்கும் போது புற்றுநோய்க்கான முழு பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒருவரை புற்றுதாக்கிவிட்டால் பரம்பரை பரம்பரையாக வரவும் வாய்ப்பிருக்கு. ஆகையால் கூடுதல் கனவம் கொள்ளுங்கள்

புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் கவலை படாதீர்கள் அப்படியே இப்ப கீமோ, ரேடியேஷன், ஆப்ரேஷன் என செய்து இருந்தால் பொலியுஷன் நிறைந்த இடத்துக்கு போகாதீர்கள், அது உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கும். அதே போல் சமைக்கும் போது அதிக புகையில் நிற்காதீர்கள். நிறைய ஆட்கள் இருக்கும் இடத்திற்கு போகாதீர்கள்.ஊதுபத்தி, சாம்ராணி புகை இருக்கும் இடத்தில் அந்த புகையை நுகர்ந்து கொண்டு இருக்காதீர்கள். தன்னம்பிக்கையோடு தைரியமாக முறையாக சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள்.
.

. 

வாழ்வேமாயம் படத்தில் தான் கேன்சர் பற்றியே தெரியும். அதற்கு பிறகு ஆங்காங்கே சினிமா நடிகைகளுக்கு கேன்சர் என்பது ,தெரிய வந்தது.
 ஆனால் இப்போதுஎங்கு யாரை பார்த்தாலும் என்னன்னு கேட்டாலே கேன்சர் தான்.
 கடந்த ஆறு ஏழு வருடங்களாக சந்திக்கும் நிறைய பேர் (எப்படியும் 20 பேருக்கு மேல்) கேன்சர் இதில் பலர் இறந்திருக்கிறார்கள் சிலர் புற்றை வென்றும் இருக்கிறார்கள்.

ஆகையால் சிந்தியுங்கள் பெண்களே உயிர்வாழ உணவு மிகவும் முக்கியம் அதை சரியான முறையில் சமைப்பது உங்கள் கடமை சிறிது கவனக்குறையால் என்றுமே தீராத பெரிய வியாதி, அதிக செலவு,மன உலைச்சல், மற்றவர்களுக்கு  தொந்தரவு, சந்தோஷமின்மை இதெல்லாம் தேவையா???
இதேல்லாம் மேற்கண்ட விளைவுகளால் புற்று நோய் ஏற்பட்டவர்களை  நேரில் கண்ட்தை வைத்து தொகுத்து அளித்துள்ளேன்.


 இந்த புற்றுநோய் விழிப்புணர்வு செய்தியை முடிந்த வரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள்.

ஆக்கம்

ஜலீலாகமால்



கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை

பதிவுலக தோழ தோழியர்களை இந்த முன்று பதிவுக்கும் உடான்ஸில் ஓட்டு போடுமாறு(விருப்பம் இருந்தால்) கேட்டு கொள்ளுங்கள்

35 கருத்துகள்:

குறையொன்றுமில்லை. said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. ஒவ்வொருவரும் படித்து உணரவேண்டும்.

ராமலக்ஷ்மி said...

அக்கறையுடன் தந்திருக்கும் அனைத்து குறிப்புகளும் நன்று ஜலீலா. நன்றியும் வாழ்த்துகளும்.

Aruna Manikandan said...

superb post akka :)

நட்புடன் ஜமால் said...

ரைட்டோ! சுட்டிய அனுப்பிடறேன் ...

ஹுஸைனம்மா said...

நல்ல அறிவுரைகள் அக்கா. எல்லாமே பின்பற்றப்படவேண்டியவை.

//அடுப்பு எப்பவும் பெரிய தீயில் வைத்துச் சமைப்பது...//
சிலரின் கிச்சனையும், பாத்திரங்களையும் பார்த்தாலே தெரியும், எப்படி தீயை எரிய விட்டுச் சமைப்பார்கள் என்று. பாத்திரஙக்ளின் ப்ளாஸ்டிக் கைப்பிடிகூட உருகிப் போய் இருக்கும்.

ஆடைகள் விஷயமும்: புறத்தோற்றத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம், அகத்தோற்றத்திற்கு - ஆரோக்கியத்திற்குக் காரணமான உள்ளாடைகளுக்கும் கொடுக்க வேண்டும். பல பெண்கள் அஜாக்கிரதையாக இருப்பது இதில்தான்.

Asiya Omar said...

மிக நல்ல விழிப்புணர்வு பகிர்வு.

ஸாதிகா said...

மிகவு அக்கறையுடன் தந்திருக்கும் அருமையானதொரு விழிப்புணர்வு பகிர்வு.வெற்றிகிட்ட வாழ்த்துக்கள்!

Unknown said...

நல்ல சொல்லியிருக்கிங்க அக்கா.. அனைவருக்கும் தேவையான பகிர்வு

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

விழிப்புணர்வு பதிவு. வெற்றி பெற வாழ்த்துக்கள்

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

மாஷா அல்லாஹ்..அருமையான பதிவு..தெளிவான விளக்கங்கள். ஒவ்வொரு பெண்ணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.
நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோதரி..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு சகோதரி !

ஷஹி said...

அஸ்ஸலாம் அலைக்கும் ஜலீலா ..உங்களைத் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ..ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க . பல விஷயங்கள் புதியவை எனக்குமே ..நன்றி . ஆசைநிலாவில் நான் என்னுடைய ஒரு சில பதிவுகளை மட்டுமே இட்டு வைத்திருக்கிறேன். www.moonramkonam.com இல் தான் தொடர்ந்து எழுதுவது .ஜஜகல்லாஹ் ஹைர் .

ஹேமா said...

மிகவும் உபயோகமான தகவல்களுடன் பதிவு அமைந்திருக்கிறது.வாழ்த்துகள் ஜலீலா !

தளிகா said...

நல்லதொரு பகிர்வு யதார்த்தமாக எழுதியிருக்கீங்க.எதிரிக்கும் கூட இந்த நோய் வரக் கூடாது அவ்வளவு வேதனையான நோய்.கண்டிப்பா இது அனைவருக்கும் பயன்படும்

Jaleela Kamal said...

நன்றி லஷ்மி அக்கா

Jaleela Kamal said...

ஆம் ராமலக்‌ஷ்மி,ஏதோ இப்படி வலை பூ மூலமாகவாவது நல்ல விஷியங்கள் மற்றும் விழிப்புணர்வுகளை பகிரமுடியுதே அது வரை சந்தோஷம்

Jaleela Kamal said...

நன்றி அருனா

Jaleela Kamal said...

ஜமால் உங்கள் தங்கமனிக்கு அனுப்பியச்சா நல்லது

Jaleela Kamal said...

ஆமாம் ஹுஸைம்மா அதிக தீயை வைத்து அந்த கைப்பிடி ஒடஞ்சி தொங்குவத பார்த்தாலே எனக்கு பிடிக்க்காது

சில பேர் நான்ஸ்டி பாத்திரத்தில் அபப்டியே கரண்டிய சட்டியிலேயே போட்டு அது உருகி கொண்டு வேர இருக்கும்..

Jaleela Kamal said...

...//ஆடைகள் விஷயமும்: புறத்தோற்றத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம், அகத்தோற்றத்திற்கு - ஆரோக்கியத்திற்குக் காரணமான உள்ளாடைகளுக்கும் கொடுக்க வேண்டும். பல பெண்கள் அஜாக்கிரதையாக இருப்பது இதில்தான்.//

கண்டிப்பாக நீங்க சொல்வது 100 % உண்மை

புறத்தோற்றத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அகத்தோற்றத்துக்கு கொடுப்பதில்லை

இந்த விஷியத்தில் பெண்கள் கொஞ்சம் அதிக கவனம் கொள்ள வேண்டும்

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி ஆசியா

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா

வெற்றி கிடைக்குது கிடைக்காம போகுது அதை பற்றி இல்லை

இதன் மூலம் பல பெண்க்ள் விழிப்புணர்வு அடைந்தால் அது போதும்

நான் இந்த புற்றுநோய் பற்றி கேள்வி பட்டதில் இருந்து சொல்லி கொண்டே தான் இருக்கிறேன்

Jaleela Kamal said...

ஆமாம் பாயிஜா

கண்ணுக்கு தெரிந்து இதனால் தான் என்று தெரியும் போது அதை உடனே மற்றவர்களுக்கு சொல்வது நல்லது .. இல்லையா ?

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம்
ஆயிஷா அபுல் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க ஆயிஷா பேகம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

ஆமாம் அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டியது

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் ஷஹி உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

நானும் உங்களை ட்தொடர்ந்து கொள்கிறேன்
உஙக்ள் நட்பு கிடைத்ததும் எனக்கு மிக்க சந்தோஷம்

Jaleela Kamal said...

திண்டுக்கல் தனபால உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வருகைக்கு நன்றி ஹேமா

Jaleela Kamal said...

ஆமாம் தளிகா இது பாதிகக் பட்டவங்கள நேரில் கண்டதால் ரொம்பவே அதை பற்றி எழுத முடியுது யாருக்கும் இந்த் நோய் வரக்கூடாது,

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி சித்ரா

வை.கோபாலகிருஷ்ணன் said...

கட்டுரைப் போட்டியில் பரிசினை வெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள்!

http://nesampeople.blogspot.com/2012/03/blog-post_28.html

விச்சு said...

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற தங்களுக்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.

HOTLINKSIN.COM திரட்டி said...

சமுதாயத்திற்கு அவசியமான விழிப்புணர்வு கட்டுரை... பகிர்வுக்கு நன்றி...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா