Showing posts with label ஆக்ரா. Show all posts
Showing posts with label ஆக்ரா. Show all posts

Thursday, October 14, 2010

மசாலா மிக்ஸ் -2

ஜனவரி பையன் லீவுக்கு வந்த பையன் ஊருக்கு போய் விட்டான் கொஞ்சம் நாள் சந்தோஷம் ,பிறகு ரொம்ப சோகமாகிவிட்ட்து.




மார்ச் அடுத்து மாமனார் மாமியார் வருகை, பிஸியாகிவிட்டேன்.முடிந்த வரை வெளியில் கூப்பிட்டு போனோம். நல்ல சமைத்து கொடுத்து பாராட்டும் கிடைத்த்து




ஹனீஃப் குர் ஆன் ஓத ஆரம்பித்து சரியாக ஆலிம்சா கிடைக்கத்தால் பாதியில் பாதியில் விட்டு போய்விடும். இல்லை எக்ஸ்ட்ரா கிளாஸ் என்று மாலை ஓத முடியாமல் போய் விடும், இப்படியே பிடிச்ச பிடியா தொடர்ந்து ஓதி உம்மா வாப்பா( மாமனார் மாமியார் வந்திருந்த போது அவர்கள் ஊருக்கு செல்லும் முன் முடித்தே தீருவேன் என்று ஆலிம்ஷாவை மாலை இருமுறை அழைத்து மறுநாள் மேக்ஸ் எக்சாமையும் வைத்து கொண்டு முடித்தான்,.
மாமனார் மாமியாருக்கு ரொம்ப சந்தோஷம்.நினைத்த காரியத்தை முடிப்பதில் என்னை போலவே, குர் ஆன் அவன் ஓத கேட்பது ரொம்ப நல்ல இருக்கு என்றார்கள்





ஏப்ரல் மாதம்: தோழிகளின் சந்திப்பு ஏற்கனவே இங்கு போட்டு இருக்கேன்.


அதோடு மே மாதம் தேர்வு முடிந்து ஊரிலிருந்து பையனும் வந்தாச்சு ரொம்ப சந்தோஷம். நல்ல விரும்பியதை செய்து கொடுத்து எல்லோரும் ஊருக்கு ஒன்றாக போனோம்,
ஜுலை ஆகஸ்ட் நிறைய கல்யாணங்கள் .எல்லா சொந்தங்களையும் சந்தித்தோம். அருமையான நாட்கள். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக வெளியில் போனோம்.
அங்கு ஒரு ஹோட்டலில் பூண்டு சட்னி ரொம்ப நல்ல இருந்ந்தது போட்டோவும் எடுத்து ரெசிபியும் கேட்டு வந்துள்ளேன், செய்தால் ரெசிபி போடுகிறேன்.எல்லோரும் ஒன்றாக போனது ஒரே ஜாலி தான்.


அறுசுவை பாபு, ஸாதிகா அக்கா,மர்லி ,ஜே மாமி,சுஹைனா,பாயிஜா, செல்வி அக்கா, சீதா லக்‌ஷிமி அக்கா எல்லோரிமும் போனில் பேசியது ரொம்ப சந்தோஷம்ஸாதிகா அக்கா, மர்லி வீட்டுக்கு வந்தே ஆகனும் என்று ஓவ்வொரு நாளும் அம்மா வீடு மாமியார் வீடு, தங்கைகள் வீடு, கல்யாணங்களுக்கு போக்வே நேரம் சரியாக இருந்த்து,

பிறகு பையன்காலேஜில் கொண்டு போய் விட அப்படியே சின்ன டூர். .
எல்லாம் டூர் அனுபவத்தையும் எழுதனும் என்று தான் ஆனால் நேரமில்லை முடிந்த போது படங்களாவது இனைக்கிறேன்.






முதல் முதல் டெல்லி எங்கும் தமிழ் கிடையாது ஒரே ஹிந்தி மயம் பாஷ தெரிந்த்தால் ஒகே






டீவியில பட்த்துல பார்த்த தாஜ் மாஹால் நேரில் பார்க்கும் போது ஆனந்தம்.நிறைய போட்டோக்கள் எடுத்தேன் பிறகு பகிர்ந்து கொள்கிறேன்






ஜெய்ப்பூர் ரொம்ப நல்ல இருந்த்து சூப்பர்
வண்டியில் எங்களை கூப்பிட்டு வந்த சுபிஷ் சில இடங்களை அருமையாக விளக்கி கொண்டேவந்தார்.
தங்க போன ஹோட்டலில் எல்லாம் நுழையும் போது பயங்கர செக்கிங்.+ நல்ல கவனிப்பு, எல்லா ஹோட்டலிலும் டிபன் ஃபிரி,எல்லாமே அருமை ஒரு பிடி தான்


அங்கு யானை சவாரி போனோம் ரொம்ப அருமை

மந்த மந்தையாக யானைகள் எல்ல்லோரையும் எம்பர்ர் போர்டில் யானை சாவாரி இங்கு நடந்த் இரண்டு நகைச்சுவைய சொல்லியே ஆகனும்.
ஒன்று யானை மேலே எல்லோரும் இரண்டு இரண்டு பேரா ஏறி உட்கார்ந்தாங்க எங்க டேன்னும் வ்ந்ந்த்து, அண்ணனும் தம்பியும் ஒன்றாக ஏறி கொண்டார்கள். நானும் என் ஹஸும் ஒரு யாணையில். ரொம்ப பயந்து பயந்து ஏறினேன்.கேமராவ கையில் எடுக்க கூட பயமா இருக்கு, எங்களுக்கு முன் ஒரு வெள்ளைகார பாட்டி தாத்தா ரொம்ப தைரியமா ஏறி உட்கார்ந்து போய் கொண்டு இருந்தார்கள், எவ்வள்வு பேர் போறாங்க நீ ஏன் இப்படி பயப்ப்படுரே என்றார் , நாம ஏறின நேரம் அதுக்கு மதம்பிடிச்சிட்டுதுன்னா,

அதுக்கு ஏற்றர் போல யாணைய ஓட்டி செல்பவர் காலால் அதை உதைத்து தள்ளினார். எல்லோரும் ஏறியதும் கட கடன்னு யாணைகள் நகர்ந்த்து ஆனால் நாங்க ஏறியதும் இரண்டு அடி கூட் எடுத்து வைக்கல அப்படியே நின்னுடுச்சி பின்னாடி வர யாணை எல்லாம் முன்னே போய் கொண்டு இருக்கு. எனக்கு ஒரே பயம் சொன்னா மாதிரி ஏதும் நடக்குமா இல்லை வெயிட் தாஙக் முடியாம நின்னுடுச்சா, சும்ம இரு என்றார், கீழே இரங்கி ஓடவும் முடியாது.
பார்த்தா யாணைக்கு உச்சா வந்துடுச்சாம், போவுது போவுது போயிக்கிட்டே இருக்கு அப்படியே குடம் குடமா...... போய் கொண்டே இருக்கு,
அப்பரம் மின்னல் வேகத்தில் நடந்த்து மலை மேலே (ரோடு பக்கம்) ஏறியது போக போக ரொம்ப நல்ல இருந்த்து, இன்னும் நாலு ரவுண்டு போகனும் போல இருந்த்து., ஜெய்பூர் போனா எம்பர்ர் போர்ட்டில் உள்ள யானை சவாரிய மிஸ் பண்ணிடாதீங்க.

அடுத்து போய் மேலேசுற்றி பார்த்துட்டு காரில் கீழே வந்தோம் வந்த களைப்பில் கோன் ஐஸ் வாங்கி சாப்பிட்டோம், சாப்பிட்டோம் இல்ல, நான் மட்டும் சாப்பிடல, வாங்கி வாயில் வைக்க்க போனேன் எங்கிருந்து தான் வந்துச்சுன்னு தெரியல ஒரு குரங்கு கண் இமைக்கும் நேரத்தில் லபக்குன்னு பிடிங்கி கொண்டு போய் விட்டது.என் பையனுக்கு ஒரே சிரிப்பு.நான் ஐஸ் போனது போகட்டும் மறுப்டி என்னை தொரத்த கூடாதே பே பே பே.... திரும்பி பார்த்தா நிறைய குரங்கு எங்க வந்து தலை பிடிச்சி இழுத்துடு உட்கார்ந்துடுமோன்னு...







இன்னும் ஒன்று ஹவ்வா மஹால் இத சுற்றியுள்ள நாலு ரோடு பிரிவுகள் அங்கு தான் முழுவதும் பஜார் போல லைனா கடைகள்.
ஜெய்பூரில் பிக் பஜார் பக்கத்தில் தான் ஹோட்டல் பையனுக்கு தேவையான பொருட்கள் அங்கேயே வாங்கி கொண்டோம். போனதுக்கு அங்கு பாந்தினி சேலை சுடி எல்லாம் பேமஸாம் வளையல்கள் ஆகா என்ன அருமை அருமை, எனக்கும் ஊரில் எல்லோருக்கு வாங்கினேன், பசங்க நான் வளையல் கடையில் நின்னு வாங்கியதில் வெருத்து போய் விட்டார்கள்





பிறகு அங்கிருந்து அலஹாபாத் ட்ரெயினில் போய் முன்று நாள் பையன் கூடவே இருந்து ஹாஸ்டல் கூட இருக்கிற பையனை எல்லாம் பார்த்து அம்மாக்களுக்கே உரித்த்தான கண்ணீரை வடித்து கொண்டு வந்தேன்.


பையனை விட்டுட்டு திரும்ப வந்த ட்ரெயின் + பிளைட் அனுபவம் அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்த்து இது வரை லைபில் மறக்க முடியாது. முடிந்த போது பதிவிடுகிறேன்






வந்த்தும் ஸாதிகா அக்கா, விடல வரனும் என்ற அன்பு தொல்லை.

அடுத்து சீதாலக்‌ஷ்மி அக்கா ஏற்போட்டிலாவது வந்து உங்களை பார்க்கீறேன் என்றார்கள்.

ஜேமாமி பையனுக்கு கல்யாணம் முடிந்த்து , அவஙக்ளை போய் பார்க்க்லாம் என்றால் ஞாயிற்று கிழமைதான் பிரி ஆகையால் பார்க்க முடியல.

கடைசியில் ஸாதிகா அக்காவை பார்க்க மர்லிய கூப்பிட்டு கொண்டு போய் பார்க்க போனேன், தனியா எங்கேயும் போனதில்லை, போகனும் என்று டிசைட் செய்து சொல்லியாச்சு மாலை 5 மணியிலிருந்து கிளமபவே முடியல,
ஒரு வழியா நான் என் பையனையும் , மர்லி மரியத்தையும் கூப்பிட்டு வந்தாங்க, ஒரே ஆனந்தம் தான், ஸாதிகா அக்கா தங்கைகள், தம்பி மனைவி, அம்மா எல்லோரையும் பார்த்து பேசினோம், பெட்டிஸ், நான் செய்யும் முர்தபா போல வேறு சுவையில் இருந்த்து.

வீட்டிலேயே செய்த மிக்சர் சூப்பர், இனிப்பு பணியாரம் கொஞ்சம் டென்ஷனில் கிளம்பி போனதால் பேர சரியா கேட்கல . கொஞ்சம் நேரம் இருந்துட்டு முதலே சொல்லி இருந்தா விருந்து ஏற்பாடு செய்து இருப்ப்பேன் ஜலீ இப்படி திடீருன்னு வந்து இருக்கீங்களே என்றார்கள் நேரமில்லத்தால் அப்படி போக வேண்டியதா போச்சு, இரவு கிளம்ப சொல்லி வைத்திருந்த ஆட்டோ லேட் ஆனதால் தீடீர் மொரு மொரு தோசை, பொட்டுகடலை சட்னி, மிளகாய் பொடி, அருமையா இருந்த்து.பிறகு நானும் மர்லியும் அங்கிருந்து கிளம்பி விட்டோம்.








மறுநாள் மாமானார் வீட்டில் எல்லா நாத்தனார்கள், அவர்கள் பிள்ளைகள் பேரன் பேத்திகள் எல்லோரும் ஒன்றாக அரட்டை அடித்து விட்டு பீச் போயே ஆகனும் என்று எல்லா பிள்ளைகளும், அடம் சரி மொத்தமா அனைவரும் பீச் போய் ஒரு மணி நேரம் உட்கார்ந்து அரட்டை , பிள்ளைகளும் நல்ல விளையாடினார்கள்,
கொஞ்ச நேரத்தில் ஜோன்னு மழை எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நனைந்து கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் ரொம்ப வருடம் கழித்து மழையில் நனைந்து நடந்து வந்தோம் பீச்சில் எங்கும் போய் ஒதுங்க முடியாது.அப்படியே மறு நாள் கிளம்பி இங்கு வந்து சேர்ந்தாச்சு.
அடுத்த பையன் வருகைக்க்காக வெயிட்டிங்... .....