Showing posts with label யுத்ஃபுல் விகடனுக்கு நன்றி. Show all posts
Showing posts with label யுத்ஃபுல் விகடனுக்கு நன்றி. Show all posts

Saturday, June 5, 2010

புதுசா பிளாக் ஆரம்பிக்க போறீங்களா?


புதுசா பிளாக் ஆரம்பிக்க போறீங்களா? எல்லோருடைய பதிவையும் படிக்கும் போது சிலருக்கு நாமும் எழுதலாமுன்னு தோனும்,

இப்ப ஹே ஹே நானும் ஒரு வீடு வாங்கிட்டேன், கார் வாங்கிட்டேன் என்பது போல் ஹே ஹே நானும் ஒரு பிளாக் ஆரம்பித்துவிட்டேன். என்று சொல்லி கொள்வதும் எல்லோருக்கும் சந்தோஷம்
உங்கள் எண்ணங்கள், மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அட்வைஸ், டிப்ஸ்கள், எல்லாம் நேர உட்காத்தி வைத்து சொன்னா கேட்பாங்களா?


இப்படி எழுதுவதன் மூலம் எல்லோருக்கும் சொல்லலாம்.


இன்னும் சமையல் கலை, தையற்கலை, ஆர்ட், கிராப்ட் வொர்க்கள்,

/முதலில் பிளாக் ஆரம்பிக்கும் முன் இதுவரை பயன்படுத்தி கொண்டு இருக்கும் ஜீமெயில் ஐடியில் ஆரம்பிக்காதீர்கள்.

பிளாக்குக்கு என்று தனியாக ஜீமெயில் ஐடி கிரியேட் செய்து அதையே பிளாக்குக்கும் பயன் படுத்துங்கள்.//

முதலே பிளாக் பெயர், தலைப்பு எல்லாம் யோசித்து தேர்ந்தெடுத்து கொண்டு பிறகு ஆரம்பிக்கவும்.

அப்போது தான் கமெண்ட் மாட்ரேட்டுக்கும் இதை தனியாக பயன் படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்.

எப்போதும் பயன் படுத்தும் மெயில் ஐடியில் ஆரம்பித்தால் இதில் வரும் கமெண்டுகள் உங்களுக்கு வரும் நண்பர்கள், சொந்தங்களின் மெயில்கள் எல்லாம் ஒன்றாக வந்து குமிந்து முக்கியமான மெயில்களை பார்க்க தவறி விடுவீர்கள்.

கவிதை, கதை, கட்டுரைகள் மட்டும் பதிவல்ல, தெரிந்த அனைத்து நல்ல விஷியங்களை பகிர்தலும் நல்ல பதிவுகள் தான். இப்படி எழுதுவதால் தேவைபடுபவர்கள் கண்டிப்பாக பயனடைவார்கள்.
கூட்டம் சேரவில்லையே என்று கவலை வேண்டாம் அதோடு எழுதுவதை நிறுத்தி விடவேண்டாம். சில நல்ல பதிவுகள் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்.

இப்ப ஹே ஹே நானும் ஒரு வீடு வாங்கிட்டேன், கார் வாங்கிட்டேன் என்பது போல் ஹே ஹே நானும் ஒரு பிளாக் ஆரம்பித்துவிட்டேன். என்று சொல்லி கொள்வதும் எல்லோருக்கும் சந்தோஷம்.




நான் பிளாக் ஆரம்பித்ததே, பல வலை தளங்களில் சிதறலாக உள்ள பதிவுகள் ஒன்றாக சேர்க்கனும் என்று தான் போட்டேன். ஆரம்பித்து 9 மாதம் ஆகியும் 20 பாலோவர்ஸ்கள் தான், பிறகு தமிலிஷில், தமிழ்மணத்தில் இனைந்த பிறகு தான் இப்போது 200 க்கு மேல் பாலோவர்கள் இத்தனை பேருக்கு என் பதிவுகள் உபயோகப்படுகிறதே என்று ரொம்ப சந்தோஷம்.




இது போல் எத்தனை பிளாக் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.

//edit user profile லில் show my blogs என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்கள் பிளாக் பெயர்கள் இருக்கும் அதில் இருக்கும் tick கை எடுத்து விட்டு விட்டு நீங்கள் போட்ட பதிவுகளை சரி பார்த்து விட்டு பிறகு பிளாக் ஐடியை டிக் செய்யவும். இனி அடுத்து அடுத்து போடும் பதிவுகளுக்கு இப்படி சரிபார்க்க தேவையில்லல். முதல் முதல் ஆரம்பிக்கும் போது மட்டும் செய்தால் போதும். //


உங்கள் பெயரில் நேரிடையாக பதிவுகள் போடுவதில் ஏதும் பிரச்சனை என்றால் கண்டிப்பாக ஏதாவது அழகான புனைப்பெயரில் போடுங்கள்.


பின்னூட்டங்கள்:

பின்னூட்டங்கள் கொடுப்பவர்களுக்கு தகுந்தவாறு பதில் யார் மனதையும் நோகடிக்காமல் அழகிய முறையில் பின்னூட்டம் இடுங்கள்.

பின்னூட்டம் இடுபவர்களின் வலைபூக்களுக்கு சென்று தவறாமல் பின்னூட்டம் இடுங்கள். நீங்கள் போடும் பின்னூட்டமும் பிறர் மனம் நோகாத வண்ணம் நல்ல முறையில் போடுங்கள். எந்த இடத்தில் நல்ல பதிவுகள் இருந்தாலும் அதை வாழ்த்த தவறாதீர்கள்.





தமிலிஷ், தமிழ்மணம் ஆகியவற்றில் இனைவதின் மூலம் எல்லோருக்கும் உங்கள் பதிவுகள் தெரியவந்து பிரபலபதிவர்கள் ஆகலாம்.

பதிவுகளை எந்த தலத்திலிருந்து எடுத்து காப்பி செய்து போடாதீர்கள். எல்லோரும் வலை உலகில் எல்லா தளங்களையும் பார்க்கின்றனர். காப்பி பதிவுகளுக்கு நிறைய எதிர் மறை கமெண்டுகள் வரும்.


(என் பதிவுகள் தினகரனில் நான் பதிவு போட போட 3 மாதம் கழித்து என் பதிவுகள் அங்கும் இருக்கு ஆனால் கீழே என் பெயர் இல்லாமல் இது மிகவும் மனவருத்தம் எனக்கு.)



அப்படி ரொம்ப பிடித்து மற்றவர்கள் பதிவுகளை, மற்ற தலத்திலிருது பதிவுகளை எடுத்து போட்டால் கண்டிப்பாக கீழே அவர்கள் பெயரை குறிப்பிடுங்கள்.

மெயிலில் வரும் தகவல்களை எடுத்து போடும் போதும் மெயில் தகவல் என்று குறிப்பிடுங்கள்.

பல நீதிக்கதைகளை பகிர்ந்து கொண்டால் அதையும் எந்த புத்தகத்திலிருது எடுத்து போட்டீர்கள் என்பதை தவறாமல் போடவும்.

ஆன்மீக தகவல்களை எடுத்து போடும் போது கண்டிப்பாக நூல் பெயரை குறிப்பிடுஙக்ள்.இல்லை என்றால் பல இன்னல்கள் வரும்.

அதே போல் ஹிந்தி மற்றும் ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்து போடும் போதும் கண்டிப்பாக தெரியபடுத்தவும்.சொந்த பதிவு போல் போடாதீர்கள்.


நேரில் பார்க்கும் அசம்பாவிதஙக்ள், அனியாயங்கள், மன வேதனையான சம்பவங்கள் எவ்வளவோ இருக்கு அதை கூட நல்ல முறையில் அடுத்து யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற நல்ல கருத்துகளாக பகிர்ந்து கொள்ளலாம்.

குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க பலருக்கும் ஓவ்வொரு விதமான டிப்ஸ்கள் , டிரிக்ஸ் கள் தெரிந்து இருக்கலாம் அதையும் அழகான முறையில் எடுத்து சொல்லலாம்.

//நான் பிளாக் ஆரம்பித்ததே, பல வலை தளங்களில் என் சொந்த பதிவுகள் சிதறலாக உள்ள பதிவுகள் ஒன்றாக சேர்க்கனும் என்று தான் போட்டேன். ஆரம்பித்து 9 மாதம் ஆகியும் 20 பாலோவர்ஸ்கள் தான், பிறகு தமிலிஷில், தமிழ்மணத்தில் இனைந்த பிறகு தான் இப்போது 200 க்கு மேல் பாலோவர்கள் இத்தனை பேருக்கு என் பதிவுகள் உபயோகப்படுகிறதே என்று ரொம்ப சந்தோஷம். //



இதில் மெயினாக சொல்ல வந்ததே இரண்டு விஷியம் 1. வேறு ஐடி கிரியேட் செய்து அதன் மூலம் ஆரப்பிப்பது நல்லது. 2. மனதை நோகடிக்காத பின்னூட்டஙக்ள்/

இந்த் பதிவு பிளாக் உலகில் சகல கலா வல்லி வல்லர்களுக்கு இந்த டிப்ஸ் இல்லை, புதுசா ஆரம்பிப்பவர்களுக்கு இது கண்டிப்பாக பயன் படும்.
எல் கேவின் பதிவுலகம் ஒரு பார்வை இந்த பதிவையும் பாருங்கள்


பதிவுலகில் எல்லோரும் நல்ல படியாக பிளாக்கர் டிப்ஸ் போட்டு வருகிறார்கள் .

(இதில் சூரியாகண்ணன் சார், வேலன் சார், பாண்டி அண்ணாத்தே, இலவச சுந்ததிர மென்பொருள், தங்கை சுஹைனா, சகோ.ஜெய்லாணி, தம்பி சசிகுமார்) எல்லோரும் ரொம்ப தெளிவாக போட்டு வருகிறார்கள்.

இது ஏதோ எனக்கு தெரிந்த ஒரு சின்ன பிளாக்கர் டிப்ஸ் பதிவு/




இந்த பதிவு யுத்ஃபுல் விகடன் குட் பிளாக்ஸில் வந்துள்ளது ரொம்ப சந்தோஷம். யுத் ஃபுல் விகடனுக்கு மிக்க நன்றி.




Wednesday, May 12, 2010

துபாயில் பேச்சுலர்களின் வாழ்க்கை பாகம்-2

வாங்க எல்லோரும், இந்தங்க பிடிங்க இந்த பூங்கொத்தை ,


எடுத்துக்கங்க இந்த பிரெட் ஹல்வாவை.ஏன்ன்னு கேட்கிறீங்களா?

இதன் செய்முறையை பிறகு போடுகிறேன்.



இது என் 400 வது பதிவு. இது வரை ஆதரவு த்ந்துபதிவுகளுக்கு தவறாமல் பதில் அளித்து ஓட்டு போட்டு ஊக்கமளித்து கொண்டு இருக்கும் அனைத்து பதிவாளர்களுக்கும் மிக்க நன்றி, இன்னும் எனக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்.
















துபாயில் பேச்சுலர்களின் வாழ்க்கை பாகம் - 2

பேச்சுலர் வாழ்க்கைய பற்றி ஏற்கனவே பாகம் - 1 எழுதி இருந்தேன்.அதை இங்கு சென்று படித்து கொள்ளலாம்.




ஒரு ரூமில் எட்டு பத்து பேர் தங்கி இருக்கும் அறையில் எல்லோருக்கும் பெட்ட்டு போட இடம் இருக்காது, ஆகையா பங்க் பெட்டு போட்டு கொள்வார்கள், பங்க் பெட் என்றால் இரண்டு அடுக்கு இருப்பது போல் பெட். அப்படி பங்க் பெட்டில் கீழே படுப்பவகளுக்கு பிரச்சனை இல்லை மேலே படுப்பவர்கள் தான் பிரச்சனை, ரொம்ப ஜாக்கிரதையாக படுக்கனும், தூக்கத்தில் இரவில் டாய்லெட் போக இரங்கும் போது பார்த்து இரங்கனும். தூக்க கலக்கத்தில் கவனிக்காமல் எழுந்து மேலே பேன் ஓடி கொண்டிருக்கும். தெரியமகைய, தலைய நீட்டிடாதீங்க இப்படி தான் ஒருவருக்கு தலையில் பேன் அடித்து 8 தையல் சமீபத்தில் போட்டு இருக்கிறார்.









Executive பேச்சுலர்களுக்கு பிரச்சனை இல்லை ஒரு அறையில் இரண்டு பேர் தான் தங்குவார்கள். வசதிகளும் அதிகமாக இருக்கும்.




அனைத்து பேச்சுலர்களும் வாரம் ஒரு முறை கிடைக்கும் லீவில் டேரா பஜாரில் , பர்துபாய் , கராமா ஏரியாக்களில் வியாழன் இரவும், வெள்ளியும் பேச்சுலர்கள் கூட்டம் கூட்டமாய் நின்று சொந்தங்களை சந்திப்பதும், கடிதஙக்ளை பகிர்ந்து கொள்வதும், மனைவி , பிள்ளைகள், உம்மா , அக்கா தங்கைகளுக்கு துணிமனிகள் வாங்குவதற்காகவும் பஜாரில் கூடுவார்கள், தப்பி தவறி பேமிலியுடன் போய் விட்டால் ஒரு சந்துக்கூட ஃபிரியாக இருக்காது ஜே ஜேன்னு இருக்கும்.
ஊருக்கு போக சாமான்கள் வாங்க எல்லாம் ஒன்று கூடி போவதும்.
பிரண்டு வாங்கினானேன்னு கூட போனவர்களும் சேர்ந்து பர்சேஸ், பர்ஸ் காலி.
ஒரு நபருக்கு 30 கிலோ தான் எடுத்து செல்ல அனுமதி, கையில் 7 கிலோ
ஷாப்பிங் பண்ணி கொடுக்கிற பிரண்டுமார்களும் அவர் வாங்குவது போல வே வாங்கி செல்பவர் தலையில் கட்டுவார்கள். இப்படி ஒரு ஆள் என்றால் பரவாயில்லை, ஊர்கார்கள், ஆளுக்கொன்று, அவஙக் அவங்க பிள்லைகளுக்கு டய்ஸ், மனைவிக்கு புடவை, நன்பர்களுக்கு செண்ட், மொபைல் என்று , போய் ரூமுக்கு போய் பேக்கிங் ஆரம்பிப்பார், வைகக் வைக்க பெட்டியில் மற்றவர்கள் பொருளே நிறைந்துவிடும், தன் பொருளை வைக்க முடியாமல் பேந்த பேந்த முழித்து கொண்டு பேக்கிங்கை மாற்றி மாற்றி கட்டி இவர்கள் சாமனை பாதி பிரித்து எடுத்து காசு கொடுத்து பார்சலில் போடுவார்கள்.


சரி பேக் பண்ணியாச்சேன்னு நிம்மதியா இருந்தால், அப்ப தான் கிள்ம்பும் போது மச்சான் எப்படியாவது இந்த் பார்சல உள்ள வச்சுக்கோன்னு ஒரு அரை கிலோ வரும், அடுத்து வழி அனுப்ப வரும் நபர் மாப்ளே டூட்டி ஃபிரியில சாமான் வாங்கும் போது எனக்கு ஒரு அரை கிலோ பாதம், என் பிரெண்டுக்கு ஒரு சிக்ரேட் பாக்கெட் வாங்கிட்டு போய்விடு என்று சொல்வார்கள்.

ஊருக்கு போய் சாமான்களை நண்பர்கள் வீட்டுக்கு போய் கொடுக்க சென்றால் உடனே எப்ப கிளம்புவீங்க. போன ஆள் டென்ஷன் ஆகிடுவார் இப்ப தாஙக் வந்து இருக்கேன். இல்ல்லங்க திருப்பி இங்கிருந்து சாமான் கொடுத்தனுப்ப தான் கேட்கிறேன் என்பார்கள்.

கஷ்டபட்டு சம்பாதித்து ஊருக்கும் போய் வருவது நண்பர்களுக்க்காவே போல் இருக்கும், உதவி செய்யும் நண்பனுக்கு செய்ய வேண்டியது தான் . அதுக்குன்னு ஓவரா ஒருத்தரை போட்டு தாளிப்பது சரியில்லை.

அதிலும் சில பேர் ரொம்ப உஷாரு, ஏற்போட்டில் நின்று கொண்டு மச்சான் இப்ப தான் திடீருன்னு முடிவெடுத்தேன் ஊருக்கு போறேன் மச்சான் என்பார்கள்.இப்படி சொல்லி பிழைத்துக்கொள்பவர்களும் உண்டு.

இது போல் இதுவரை கொடுத்திருந்தால் இனிமேலாவது, கொஞ்சம் அதை மாற்றி கொள்ளுங்கள். மீதியை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்

பேச்சுலர் சமையலும் ஊருக்கு போதலும்
இதையும் படிங்க. (கண்ணாவின் இடுகை)

இன்னும் பல பகிர்வுகள் நேரம் கிடைக்கும் போது போடுகிறேன். பேச்சுலர்கள் படங்கள் கூகிலில் இருந்து எடுத்தது. இப்ப பதிவு போட நேரம் இல்லை, இந்த பதிவு முன்பே எழுதிவைத்தது.

எல்லோருக்கும் மீண்டும் நன்றி.

http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

போன மாதம் நான் போட்ட பதிவு பருவமே 16 குட்பிளாக்கில் வ்ந்துள்ளது, இரண்டு நாள் முன் தேனக்கா பதிவுக்கு பின்னூட்டம் போடும் போது குட் பிளாக்கில் அவஙக் கவிதை வந்துள்ளதை பார்க்கும் போது தான் தெரிந்தது.

400 வது பதிவு,

யுத் ஃபுல் விகடனுக்கு நன்றி.



Monday, April 26, 2010

பருவமே 16



பதின்ம பருவ கொசுவத்தி (வயிற்றில் நெருப்பு) (அந்த காலத்து அம்மா மார்கள் பிள்ளை வெளியில் சென்று விட்டு விளக்கு வைப்பதற்குள்வீட்டுக்கு வரவில்லை என்றால், வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் என்பார்கள். ஆனால் இந்த காலத்து அம்மாமார்களே வயிற்றில் மட்டும் நெருப்பு இல்லை, கண்ணிலும் விளக்கெண்ணைய ஊற்றி கொண்டு விழித்திருங்கள்.)


தங்கை நாஸியா பதின்ம பருவ கொசுவத்திக்கு தொடர் பதிவுக்கு என்னை அழைத்து அவஙக் போட்ட பிரியாணி ஆறி போன மாதிரி இந்த விஷியமும் ஆறிவிட்டது, இத என்னால் இப்ப தான் எழுத நேரம் கிடைத்தது.
பொதுவாக ஆண், பெண் பதின்ம பருவம் பற்றி பார்க்கலாம்.



இங்க பாருங்க இத்துனூண்டு வாண்டுக்கு கூட கம்பியுட்டர் கேட்குது.


வாழ்க்கையில் ஓவ்வொருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் பிறந்து அவர்களின் குழந்தை பருவம் ஓவ்வொரு வருடமும் அருமையாக போகும். பள்ளியில் சேர்ப்பீர்கள்.பள்ளி பருவமும் நாட்கள் வெகு வேகமாக நகரும். இப்படி வருடம் போக போக 12 வயதை கடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டிய வயது. ஆனால் 13 லிருந்து 18 ற்குள் அவர்களை நல் வழி நடத்துவதான் பெற்றோர்களுக்கு பெரிய சிரமம் இந்த வயதை கடக்கும் போது தான் எல்லா பெற்றோர்களுக்கும் வயிற்றில் நெருப்பை கட்டியது போல் இருக்கும். நிறைய அம்மாமார்கள் கோபம் அதிகமாவதே , பிரஷர் ஆரம்ப்பமாவது எல்லாம் இப்பதான், பிள்ளைகள் செயல் எல்லாமே ஏறுக்கு மாறாக இருக்கும்.இந்த வயதில் ஏற்படும் மாற்றங்களை கண்டிப்பாக எடுத்து சொல்லவேண்டும்




இந்த வயது தான் மனசு தடம் புரளும் வயது. ஆண் பிள்ளைகள் ஆட்டம் ஜாஸ்தியாக வே இருக்கும் எது சொன்னாலும் அதற்கு எதிர் வாதம் செய்வது. சில பிள்ளைகள் சிக்ரெட், திருடுவது , பொண்ணுங்க பிண்ணாடி சுத்துவது, ஊர் சுற்றுவது, படம் பார்ப்பது என்று சொல்லி கொண்டே போகலாம்.

சில பிள்ளைகள், கார்டூன், கேம்ஸ் என்று அதிலேயே கிடப்பார்கள்.
இதை ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் போது மார்க் கம்மியானாலே கண்டி பிடித்து விடலாம்.


அப்பாமார்களுக்கு இதை கவனிக்க முடியாது, சில அப்பாமார்கள் வெளிநாடுகளில் பிழைப்பைத்தேடி சென்று விடுவதால் அவர்களால் இரண்டு வருட்த்துக்கு ஒரு முறை வந்து போகும் கொஞ்சம் நாளில் ஒன்றும் கண் காணிக்க முடியாது , அம்மாக்கள், கொஞ்சம் உஷாராக கவனம் எடுத்து அவர்களுக்கு தெரியாமல் கண்காணிப்ப்து நல்லது.எந்த வேலை செய்தாலும் அவர்கள் மேலும் ஒரு கண்ணாய் இருப்பது நல்லது.

அப்படியே டியுஷன் அனுப்பினாலும் இப்ப ஆண்,பெண் இருவரும் ஒன்றாக ஒரே டீச்சரிடம் போகிறார்கள். அங்கு சேர்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.

பாய் பிரண்ட் , கேர்ள் பிரண்ட் வைத்து கொள்வது, ஒரு பெண்ணுக்கோ , ஆணுக்கோ பாய் பிரண்டோ, கேர்ள் பிரண்டோ இல்லை என்றால் அவர்கள் ஒரு பெரிய தகுதிய இழந்த்து போல் சிலர் கிண்டல் பண்ணுவதும். ஒரு நாளைக்கு ஒரு கேர்ள் பிரண்ட், பாய் பிரண்ட் என்று மாற்றி, சிலரை ஏளனப்படுத்துவதுமாக இருக்க்கிறார்கள்.






உங்கள் வீடு சிட்டியில் இருந்து ஊரை தாண்டி வெளியில் தனியாக வசிப்பவர்கள் அதுவும் பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்கள். பெண்களை தனியாக வீட்டில் விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அப்படி செல்லும் விட்டிலேயே டியுஷன் வைத்தால் நல்லது என்று வீட்டில், டியுஷனுக்கு வெளியில் வந்து சொல்லி கொடுப்ப்து ஆண்கள் தான், தனியாக பிள்ளைகள் இருக்கும் போது வர சொல்லாதீர்கள். இப்படி செய்வதால் திடுக்கிடும் பல நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.நீங்கள் யாராவது ஒருவர் வீட்டில் இருக்கும் போது பாடம் சொல்லி கொடுக்கும் வாத்திகளை வரவழைத்து கொள்ளுங்கள்.ஆண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான் பெண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான் இது கண்டிப்பாக பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்

இப்ப பேஸ் புக்கில், மற்றும் சாட்டிங்கில் பெரியவர்களை விட சிறியவர்கள் தான் மிகுந்த ஆர்வர் காட்டி வருகிறார்கள். வரம்புக்கு மீறி பேசி கொள்வதும் போட்டோக்களை பகிர்ந்து கொள்வதும், ஆண்பிள்ளைகளுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் பெண்பிள்ளைகளுக்கு இது கண்டிப்பாக பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

சமீபத்தில் கேள்வி பட்ட ஒரு சம்பவம்.(அட கொடுமையே)

ஒரு ஆண் பெண் ரொம்ப் மாத காலமாக சாட்டிங்கில் ரொம்ப அந்தரஙக்மாய் பேசும் அளவிற்கு போய், ஒரு நாள் பேசி கொண்டு இருக்கும் போது,வெப் கேமிரா மூலம் போட்டுள்ள் துணி கிழிந்து இருப்பதை பற்றி கூட பேசி இருக்கிறார்கள். அப்படியே எழுந்து அந்த ஆண் சாப்பிட போனதும் உள்ளே பக்கத்து ரூமில் இருந்து அவன் தங்கை வந்துள்ளாள் அதே கிழிந்தை துணியுடன் சாட்டிங்கில் இருப்பதை பார்த்து திடுக்கிட்டாளாம், ஏன் என்றால் அந்த கிழிந்த துணி போட்டுருந்த்தும் வெப்பில் இருந்த போட்டோவும் அவள் தான் , கடைசியில் அவமானத்தை வெளியேமுடியாமல் தவித்து போனாளாம், அதே அவ அண்ணனும் இத்தனை நாள் தன் தங்கையுடனா இப்ப்டி எல்லாம் பேசி இருக்கோம் என்று துடித்து போனானாம்,(அட கொடுமையே) ரொம்ப ஆடம்பரம் ஆளுக்கொரு தனி அறை தனி லாப்டாப் இப்படி வாங்கி கொடுத்து கடைசியில் இப்படி சீரழிந்து போகிறார்கள்.

(ஆனால் கல்யாணமானவர்களும் ரொம்ப சீரழிகின்றனர் அதை பிறகு வேறு பதிவில் பார்க்கலாம்)

பெற்றோர்களே இனி உஷாராக இருங்கள்.

ஆண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான் பெண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான்
இது கண்டிப்பாக பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.



பாஸ்ஃபுட் உலகமாக இருக்கு, அதற்கு காசு தேவை, வெளியூரில் இருந்து அப்பா மார்கள் காசு அனுப்புவதும் அதை பிள்ளைகள் கரியாக்குவதுமாகவும் சில இடங்களில் உள்ளது. இதே காசு கிடைக்காத நடுத்தர வர்க்கத்தில் உள்ள பிள்ளைகள் எப்படியும் படம் பார்த்தே தீரனும், எப்படியும் நண்பர்களுடன் பிட்சா கார்னர் போயே ஆகனும் என்று கடைசியில் திருட ஆரம்பித்து விடுகிறார்கள். வீட்டிலும் வெளியில் கை வைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். கடைசியில் உங்களால் நினைத்தே பார்க்க முடியாத பிள்ளை இவனா திருடினான் நல்ல குடும்பத்தில் உள்ள பையனாச்சே என்றும் ஆச்சரிய படும் அளவிற்கு இருக்கும்.
மற்ற பிள்ளைகளை கம்பார் செய்து அவர்கள் முன் பேசாதீர்கள்.
தண்டம் எதுக்குமே லாயக்கில்லன்னு மற்றவர்கள் எதிரில் வைத்து சொல்லாதீர்கள்.
கம்மியான மார்க்குகள் எடுத்தாலும் அவர்களை எல்லார் முன்னாடியும் வைத்து அசிங்கப்படுத்ட்தாதீர்கள்.


இதனால் நீங்கள் அவர்களிட்த்தில் வெறுப்பை தான் சம்பாதிக்க முடியும்
.

சில இடங்களில் பெற்றோர் என்று கூட பாராமல் பிள்ளைகள் அடி தடி சண்டை, கை கலப்பு என்று மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

இதில் வீட்டுக்குள்ளேயே அம்மாவின் காலடியில் அம்மா முந்தனைய பிடித்து கொண்டு இருக்கும் பிள்ளைகளும் உண்டு.

இப்படியே எல்லா பிள்ளைகளையும் இப்படிதான் என்று குறை கூற முடியாது.

பல நல்ல முத்தான தங்கமான பிள்ளைகளும் சுய சிந்தனையுடன் செயல் பட்டு, உள்ள பிள்ளைகளும் உண்டு.

இதற்கு தீர்வு தான் என்ன?இதற்கு தீர்வு தான் என்ன?

எனக்கு தெரிந்து பிள்ளைகளை ஒரு போதும் பிரியா விடக்கூடாது. அவர்களை பிஸி ஷெடுலில் வைப்பது நல்லது.

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் படிப்பு தவிர நல்ல சரியான தெரிந்த செண்டர்களில் டியுஷனும், இறை வழிபாடுகள்,மார்க்க போதனைகள் (தொழுகை, ஓதல்)பாட்டு , அவர்களுக்கு பிடித்த விளையாட்டு , நீந்துதல், டான்ஸ், தையல், கை வேலைப்பாடு, விளையாட்டுகளில் ஈடுபடவைப்பது நல்லது.

பிள்ளைகளுக்கு நல்ல தட்டி கொடுத்து எதில் ஊக்கமாக இருக்கிறார்களோ அதில் அவர்களுக்கு சப்போட் செய்து வழி நட்த்துவது நல்லது.

வீட்டிலும் சின்ன சின்ன வேலைகளை அவர்கள் பொருப்பில் விடலாம்.

பிள்ளைகளுக்கு 18 வய்து வரை நல்ல முறையில் ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கவேண்டும். அதற்கு பிறகு காலேஜ், ஹாஸ்டல் , வேலை, கல்யாணம் என்று பிரிவு ஏற்பட்டு விடுகிறது. ரொம்ப செல்லங்கொஞ்சி நொல்லி பாப்பாவாகவும் ஆக்கிடாதீர்கள், அதாவது கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்து, தேவைக்கு அதிகமா அதிக விலையில் டிரெஸ் எடுத்து கொடுத்து கழ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்க்க்க்கூடாது.

கஷ்டம், தேல்விய பற்றி தெரியாம வளந்த பிள்ளைகளுக்கு , பெருசானா ஒரு சின்ன துயரம், சின்ன தோல்விய கூட தாங்கிக்கொள்ள மன பலம் இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். இதனால் அவர்கள் எடுக்கும் தீர்வு தற்கொலையாக கூட மாறலாம்.








அவர்களுக்கு முதலே நல்லது கெட்ட்து எடுத்து சொல்லி வழிநட்த்துவது நல்லது.

உதாரணத்துக்கு: மார்க் 80 மார்க் எடுத்து 75 மார்க் வாங்கினால் மேலே மேலே நீங்களும் போட்டு திட்டி தீர்க்க்காதீர்கள், ஏற்கனவே 75 ஆகி விட்ட்தே என்று அவர்கள் நொந்து தான் இருப்பார்கள், அடுத்தமுறை இன்னும் நல்ல கவனமாக படித்து முயற்சி செய் என்று சொல்லி தட்டு கொடுக்கலாம்.

அதே போல் பரிட்சை சமயத்தில் அவர்களுக்கு ஃப்ரி மைண்டுடன் படிக்க தோதுவான நிலையையும் ஏற்படுத்தி கொடுக்கனும். நல்ல ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கவேண்டும். ஜூஸ் வகைகள், பழங்கள்,லைட்டான உணவுகள் இப்படி கொடுப்பது நல்லது.
ஆகையால் ஓவ்வொரு ஸ்டேஜிலும் மிகவும் கண்ணும் கருத்துமாய், பிள்ளைகளை வளர்ப்பதில் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.



டிஸ்கி: இந்த பதிவு யுத்ஃபுல் விகடனில் குட்பிளாக் பகுதியில் வந்துள்ளது , ரொம்ப சந்தோஷம்.


Tuesday, March 2, 2010

மழை வெள்ளத்தில் ஷார்ஜா

ஒரு நாள் மழை பெய்தால் நாறிடும் ஒரு நாள் மழை பெய்தால் நாறிடும் துபாய், எங்க‌ பார்த்தாலும் நீர்தேக்க‌ம். காரெல்லாம் மித‌க்கிற‌து.
பாலைவ‌ன‌ம் என்ப‌தால் ம‌ழையே வ‌ராது என்று யாரும் டிரெயினேஜை ப‌ற்றி யோசிக்க‌ல‌ போல/ மழை பெய்தாலே ஒரு பைப்ப கொண்டு வந்து தான் இந்த தேங்கியுள்ள தண்ணீரை எடுப்பார்கள்






இந்த‌ ப‌ட‌ங்க‌ள் எல்லாம் ஷார்ர்ஜா(ஜார்ஜா) இந்த‌ அள‌விற்கு துபாய் இல்லை.
ஷார்ஜாவில் வீடு ரெண்ட் குறைவு என்று துபாயில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ள் அங்கு த‌ங்கி இருக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ இர‌ண்டு நாள் ம‌ழையில் எல்லாம் வெறுத்தே போய் விட்டார்க‌ள்.ஆபிஸ் முடிந்து வீடு போய் சேர‌ குறைந்த‌து 2 லிருந்து 3 ம‌ணி நேர‌ம் ஆகுது என்றார்க‌ள்.







இந்த‌ ப‌ட‌ங்க‌ள் எல்லாம் ஷார்ர்ஜா




(வடிவேலு: ஐய்யோ ஐய்யோ அடி ஆத்தி ஜார்ஜாவுலய இம்புட்டு மல பெய்து) அங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களா நம்மூரு பயலுவ‌ அவ்வ்வ்வ்வ்வ்






அப்ப இனிமே சிலுக்கு ஜிப்பா போட முடியாதா ஜார்ஜாவுல‌?











ரோடெல்லாம் குளம் காரு படகு போல தான் மிதந்து கொண்டு வருது திடீருன்னு வண்டி வழியில நின்னுச்சி அவ்வளவு தான் உள்ளே கிடந்து பே முழி முழிக்க வேண்டியது தான். கார திறந்தாலும் தண்ணீ உள்ளே வந்துடும்


வெயில் அடிச்சாலும் தாஙக் முடியாது அனல் காற்று பிரியாணி ஆக்கி வெளியில் கொண்டு வந்து வைத்தால் தானே தம் ஆகிடும்.
மழை அடித்தாலும் அவ்வளவு தான் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடருமா இது இரண்டு நாளிலேயே எப்பா தாங்க முடியல.






//சிங்கப்பூரில் தினம் திடீர் திடீர் என மழை வரும் வந்த கொஞ்ச நேரத்தில் அந்த மழை பெய்த சுவடே தெரியாமல் அவ்வளவு கிளீன் கழுவி துடைத்து விட்டார் போல, அங்கு டிரெயினேஜ் சிஸ்டம் பக்காவா இருக்கு.சூப்பர் இடம் சிங்கப்பூர்//



சில சமயம் துபாயில் பேய் காத்து, ஐஸ் கட்டி மழையும் கூட‌ பெய்யும்.
இப்படி தான் துபாய் வந்த புதிதில் ஒரு ஊரு வெளிய ஒரு ஒரு வீடு என்பது போல் ஒரு இடத்தில் வீடு, காலை ஆபிஸ் போனால் இரவு தான் வருவர் ஆத்துகாரர், வந்து ஒரு மாதத்தில் மண்ணு காத்து உஸ்ஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு அடிக்குது மண்ணெல்லாம் ஜன்னல் வழியா வருது ஒரே பயம் ( கண்ணாடி கதவு தட தடன்னு ஆடுது) நெஜமாவே பேய் தான் தட்டுதா எல்லா கதவையும் மூடிட்டு டிவிய ஜோரா வைத்து கொண்டு ஒரு நாள் முழுவது பயந்து கொண்டு இருந்தேன். கதவ திறந்ததும் ஹால் அங்கேயே உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.

இரவு 9.30 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தததும் தான் உயிரே வந்தது.
ஆனால் இப்ப அடிக்கிற பேய் காத்தும், மண்ணு காத்தும் என்ன பார்த்து தான் பயந்து ஓடும்...

டிஸ்கி: ஏன் மழை பெய்கிறது, நல்லவங்க நாங்கெல்லாம் (ஜெய்லாணி, கோபிசென்ஷி, நாஞ்சிலார், ஹுஸைனனம்மா, நாஸியா ,மலர் எல்லாம் இருப்பதாலா?
இல்லை நீரோடை மலிக்கா கவிதை எழுதி எழுதி நீரோடையா ஒட விட்டுட்டாஙகளா?
இந்த பதிவு யுத் ஃபுல் விகடன் குட் பிளாக்கில் வந்துள்ளது.