இப்ப ஹே ஹே நானும் ஒரு வீடு வாங்கிட்டேன், கார் வாங்கிட்டேன் என்பது போல் ஹே ஹே நானும் ஒரு பிளாக் ஆரம்பித்துவிட்டேன். என்று சொல்லி கொள்வதும் எல்லோருக்கும் சந்தோஷம்
உங்கள் எண்ணங்கள், மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அட்வைஸ், டிப்ஸ்கள், எல்லாம் நேர உட்காத்தி வைத்து சொன்னா கேட்பாங்களா?
இப்படி எழுதுவதன் மூலம் எல்லோருக்கும் சொல்லலாம்.
இன்னும் சமையல் கலை, தையற்கலை, ஆர்ட், கிராப்ட் வொர்க்கள்,
/முதலில் பிளாக் ஆரம்பிக்கும் முன் இதுவரை பயன்படுத்தி கொண்டு இருக்கும் ஜீமெயில் ஐடியில் ஆரம்பிக்காதீர்கள்.
பிளாக்குக்கு என்று தனியாக ஜீமெயில் ஐடி கிரியேட் செய்து அதையே பிளாக்குக்கும் பயன் படுத்துங்கள்.//
முதலே பிளாக் பெயர், தலைப்பு எல்லாம் யோசித்து தேர்ந்தெடுத்து கொண்டு பிறகு ஆரம்பிக்கவும்.
அப்போது தான் கமெண்ட் மாட்ரேட்டுக்கும் இதை தனியாக பயன் படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்.
எப்போதும் பயன் படுத்தும் மெயில் ஐடியில் ஆரம்பித்தால் இதில் வரும் கமெண்டுகள் உங்களுக்கு வரும் நண்பர்கள், சொந்தங்களின் மெயில்கள் எல்லாம் ஒன்றாக வந்து குமிந்து முக்கியமான மெயில்களை பார்க்க தவறி விடுவீர்கள்.
கவிதை, கதை, கட்டுரைகள் மட்டும் பதிவல்ல, தெரிந்த அனைத்து நல்ல விஷியங்களை பகிர்தலும் நல்ல பதிவுகள் தான். இப்படி எழுதுவதால் தேவைபடுபவர்கள் கண்டிப்பாக பயனடைவார்கள்.
கூட்டம் சேரவில்லையே என்று கவலை வேண்டாம் அதோடு எழுதுவதை நிறுத்தி விடவேண்டாம். சில நல்ல பதிவுகள் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்.
இப்ப ஹே ஹே நானும் ஒரு வீடு வாங்கிட்டேன், கார் வாங்கிட்டேன் என்பது போல் ஹே ஹே நானும் ஒரு பிளாக் ஆரம்பித்துவிட்டேன். என்று சொல்லி கொள்வதும் எல்லோருக்கும் சந்தோஷம்.

நான் பிளாக் ஆரம்பித்ததே, பல வலை தளங்களில் சிதறலாக உள்ள பதிவுகள் ஒன்றாக சேர்க்கனும் என்று தான் போட்டேன். ஆரம்பித்து 9 மாதம் ஆகியும் 20 பாலோவர்ஸ்கள் தான், பிறகு தமிலிஷில், தமிழ்மணத்தில் இனைந்த பிறகு தான் இப்போது 200 க்கு மேல் பாலோவர்கள் இத்தனை பேருக்கு என் பதிவுகள் உபயோகப்படுகிறதே என்று ரொம்ப சந்தோஷம்.

இது போல் எத்தனை பிளாக் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.
//edit user profile லில் show my blogs என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்கள் பிளாக் பெயர்கள் இருக்கும் அதில் இருக்கும் tick கை எடுத்து விட்டு விட்டு நீங்கள் போட்ட பதிவுகளை சரி பார்த்து விட்டு பிறகு பிளாக் ஐடியை டிக் செய்யவும். இனி அடுத்து அடுத்து போடும் பதிவுகளுக்கு இப்படி சரிபார்க்க தேவையில்லல். முதல் முதல் ஆரம்பிக்கும் போது மட்டும் செய்தால் போதும். //
உங்கள் பெயரில் நேரிடையாக பதிவுகள் போடுவதில் ஏதும் பிரச்சனை என்றால் கண்டிப்பாக ஏதாவது அழகான புனைப்பெயரில் போடுங்கள்.
பின்னூட்டங்கள்:
பின்னூட்டங்கள் கொடுப்பவர்களுக்கு தகுந்தவாறு பதில் யார் மனதையும் நோகடிக்காமல் அழகிய முறையில் பின்னூட்டம் இடுங்கள்.
பின்னூட்டம் இடுபவர்களின் வலைபூக்களுக்கு சென்று தவறாமல் பின்னூட்டம் இடுங்கள். நீங்கள் போடும் பின்னூட்டமும் பிறர் மனம் நோகாத வண்ணம் நல்ல முறையில் போடுங்கள். எந்த இடத்தில் நல்ல பதிவுகள் இருந்தாலும் அதை வாழ்த்த தவறாதீர்கள்.
தமிலிஷ், தமிழ்மணம் ஆகியவற்றில் இனைவதின் மூலம் எல்லோருக்கும் உங்கள் பதிவுகள் தெரியவந்து பிரபலபதிவர்கள் ஆகலாம்.
பதிவுகளை எந்த தலத்திலிருந்து எடுத்து காப்பி செய்து போடாதீர்கள். எல்லோரும் வலை உலகில் எல்லா தளங்களையும் பார்க்கின்றனர். காப்பி பதிவுகளுக்கு நிறைய எதிர் மறை கமெண்டுகள் வரும்.
(என் பதிவுகள் தினகரனில் நான் பதிவு போட போட 3 மாதம் கழித்து என் பதிவுகள் அங்கும் இருக்கு ஆனால் கீழே என் பெயர் இல்லாமல் இது மிகவும் மனவருத்தம் எனக்கு.)
அப்படி ரொம்ப பிடித்து மற்றவர்கள் பதிவுகளை, மற்ற தலத்திலிருது பதிவுகளை எடுத்து போட்டால் கண்டிப்பாக கீழே அவர்கள் பெயரை குறிப்பிடுங்கள்.
மெயிலில் வரும் தகவல்களை எடுத்து போடும் போதும் மெயில் தகவல் என்று குறிப்பிடுங்கள்.
பல நீதிக்கதைகளை பகிர்ந்து கொண்டால் அதையும் எந்த புத்தகத்திலிருது எடுத்து போட்டீர்கள் என்பதை தவறாமல் போடவும்.
ஆன்மீக தகவல்களை எடுத்து போடும் போது கண்டிப்பாக நூல் பெயரை குறிப்பிடுஙக்ள்.இல்லை என்றால் பல இன்னல்கள் வரும்.
அதே போல் ஹிந்தி மற்றும் ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்து போடும் போதும் கண்டிப்பாக தெரியபடுத்தவும்.சொந்த பதிவு போல் போடாதீர்கள்.
நேரில் பார்க்கும் அசம்பாவிதஙக்ள், அனியாயங்கள், மன வேதனையான சம்பவங்கள் எவ்வளவோ இருக்கு அதை கூட நல்ல முறையில் அடுத்து யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற நல்ல கருத்துகளாக பகிர்ந்து கொள்ளலாம்.
குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க பலருக்கும் ஓவ்வொரு விதமான டிப்ஸ்கள் , டிரிக்ஸ் கள் தெரிந்து இருக்கலாம் அதையும் அழகான முறையில் எடுத்து சொல்லலாம்.
//நான் பிளாக் ஆரம்பித்ததே, பல வலை தளங்களில் என் சொந்த பதிவுகள் சிதறலாக உள்ள பதிவுகள் ஒன்றாக சேர்க்கனும் என்று தான் போட்டேன். ஆரம்பித்து 9 மாதம் ஆகியும் 20 பாலோவர்ஸ்கள் தான், பிறகு தமிலிஷில், தமிழ்மணத்தில் இனைந்த பிறகு தான் இப்போது 200 க்கு மேல் பாலோவர்கள் இத்தனை பேருக்கு என் பதிவுகள் உபயோகப்படுகிறதே என்று ரொம்ப சந்தோஷம். //
இதில் மெயினாக சொல்ல வந்ததே இரண்டு விஷியம் 1. வேறு ஐடி கிரியேட் செய்து அதன் மூலம் ஆரப்பிப்பது நல்லது. 2. மனதை நோகடிக்காத பின்னூட்டஙக்ள்/
இந்த் பதிவு பிளாக் உலகில் சகல கலா வல்லி வல்லர்களுக்கு இந்த டிப்ஸ் இல்லை, புதுசா ஆரம்பிப்பவர்களுக்கு இது கண்டிப்பாக பயன் படும்.
எல் கேவின் பதிவுலகம் ஒரு பார்வை இந்த பதிவையும் பாருங்கள்
பதிவுலகில் எல்லோரும் நல்ல படியாக பிளாக்கர் டிப்ஸ் போட்டு வருகிறார்கள் .

இந்த பதிவு யுத்ஃபுல் விகடன் குட் பிளாக்ஸில் வந்துள்ளது ரொம்ப சந்தோஷம். யுத் ஃபுல் விகடனுக்கு மிக்க நன்றி.
| Tweet | ||||||



















