Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Sunday, October 23, 2016

மிராக்கல் புட்டிங் (ABC Agar Agar)





கேன்சர் விழிப்புணர்வு பிங்க் மாதம்

மிராக்கல் புட்டிங்  (ABC Agar Agar)
தேவையான பொருட்கள் 
ஒரு டம்ளர் மிக்ஸ்ட் (பீட்ரூட் கேரட் ஆப்பில்) ஜூஸ்
5 கிராம் அகர் அகர்  பொடித்து கொள்ளவும்
சர்க்கரை (அ) வெல்லம் தேவைக்கு
தண்ணீர் – அரை கப்



செய்முறை
அகர் அகரை பொடித்து தண்ணீரில் ஊறவைத்து ஜூஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.அகர் அகர் கரைந்து அரைகப் வற்றியதும் சிறிது ரூ ஆப் ஷா எசன்ஸ் ஊற்றி ஒரு வாயகன்ற தாம்பாளதட்டில் ஊற்றீ ஆர வைத்து குளிரூட்டியில் குளிரவைத்து செட்டானதும் வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.


கேன்சர் நோய் வராமல் தடுக்க பீட்ரூட் ஆப்பில் கேரட் சேர்ந்த ஜூஸ் (அ) சூப் (அ) மேலே சொன்னது போல கடல் பாசி செய்து சாப்பிடலாம்





Breast Cancer awareness Month


உலகில் உள்ள அனைத்துபெண்களும் வருடம் ஒரு முறை கேன்சர் டெஸ்ட் எடுத்துகொள்வது நல்லது.

இந்த மாதம் பின்க் மாதம் கேன்சர் விழிப்புணர்வு


சத்தான ஆகரங்களில்சமையல் செய்து உண்டு நீங்க ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்கள் குடும்பம் முழுவதும் ஆரோக்கியம் பெறும்.






Beetroot Peanut Raitha


Beetroot Fish Cutlet


Pome Cooler

கேன்சர் நோய் வராமல் தடுக்க கூடிய உண்வுவகைகளை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நாம் உடல் நலத்தை நல்ல முறையில் பார்த்து கொள்ளலாம்.

எலுமிச்சை சாறு சூடான வெண்ணீரிலோ அல்லது பிளாக் டீயிலோ அல்லது சாலடிலோ அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, October 9, 2014

புற்றுநோய்க்கு (Blood Cancer) மருந்து கண்டுபிடிப்பு




புற்றுநோய் இன்னும் பெரிய உயிர்கொல்லியாய் பல பேரை தாக்கி கொண்டு தான் இருக்கிறது, நிறைய பேர் மறந்து போயிருப்பீர்கள்.

அடிக்கடி இது போன்ற பதிவுகள் போடுவதன் மூலம் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்


சரியான மருத்துவம் மூலம் சிலருக்கு சரியாகி நல்லபடியாக வாழ்ந்துகொண்டி இருக்கிறார்கள்.சிலருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இறந்து கொண்டும் இருக்கிறார்கள்.

உண்ணும் உணவை சரி படுத்தி கொண்டாலே பல நோய் களும் புற்று நோயும் வராமல் நம்மை பாதுகாத்துகொள்ளலாம்.

கண்டிப்பாக ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் வருடம் ஒரு முறை உடம்பை முழுவதும் பரிசோதனை செய்து கொளவது நல்லது.

நாள்பட உள்ள இருமல் தலை வலி போன்றவைகளை கண்டுக்காமல் விடாமல் உடனே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஏற்கனவே இந்த புற்றுநோய்க்கு பல பதிவுகள் போட்டுள்ளேன்.
இதற்காக கட்டுரை மற்றும் டிப்ஸ் எழுதி  , டாக்டர்களால் தேர்வு செய்ய பட்டு பரிசும் பெற்றுள்ளேன்.

ஆறுதல் பரிசாக ருபாய் 1000 க்கு உரிய புத்தகங்களும் உடுமலை டாட் காம் முலமாக .கிடைக்க பெற்றேன்.

அந்த பதிவுகளை மீண்டும் உங்கள் அனைவருக்கும் நினை படுத்து கிறேன்.


  1. கேன்சர் நோயிக்கான உணவுவகைகள்.
  2. ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை
  3. புற்றைவெல்வோம் வருமுன் காப்போம். (பெண்களுக்கு மட்டும்)
  4. புற்றை கொள்ளும் செந்நிற பானம்
  5. கேன்சர் அபாயம் - லேடிஸ் ஸ்பெஷல் மாத பத்திரிக்கையில் என் பதிவு.

இது என் அனுபவத்தில் சந்தித்தவர்களை பற்றி எழுதிய சொந்த ஆக்கங்கள். படித்து பயனடைந்து கொள்ளுங்கள்.


=======================
புற்றுநோய்க்கு (Blood Cancer) மருந்து கண்டுபிடிப்பு!******
Medicine has been found for blood cancer. 


அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் நிலவட்டும்மாகுக.

இதுவரை கொடிய நோயாக


இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை 


முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து 

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....


தேவையுள்ளவர்கள் தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



அணுக வேண்டிய முகவரி :----


Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.
PHONE:---------
044 -24910754
044 -24911526
044 -22350241



மேலே உள்ள தகவல் எனக்கு மெயில் மூலம் வந்தது,

பலருக்கு இந்த அட்ரஸ் உதவும் என்று தான் பகிர்ந்துள்ளேன்.


 இதில் சொல்லப்பட்டிருந்த மருந்தின் பெயரை மட்டும் நீக்கி விட்டேன். 

என்ன மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை படி கேட்டு சாப்பிடுங்கள்.


======================

கேன்சர் நோயாளிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவு.

1. அவித்த முட்டை வெள்ளை கரு மட்டும்  மூன்று

2. ஆப்பில் அல்லது ஆப்பிள் ஜூஸ்

3. சிக்கன் எலும்பு சூப்

4. காய்கறி சூப்

5. ராகி கஞ்சி


Cancer Awareness


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, February 8, 2012

புற்றை வெல்வோம் வருமுன் காப்போம் - பெண்களுக்கு மட்டும்


நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் கேன்சர் விழிப்புணர்வு கட்டுரை பெண்களுக்காக 





புற்றுநோயை வருமுன் காக்க பெண்களுக்கான சில குறிப்புகள்.

நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் விழிப்புணர்வு கட்டுரை.

புற்றை வெல்வோம் - வருமுன் காப்போம் -  பெண்களுக்கு மட்டும்

சமையல் மற்றும் உணவில் பெண்கள் கவனம் கொள்ளவேண்டியது
எந்த நோயிக்குமே உணவே மருந்தாகும். அளவுக்கு அதிகமான உணவும் நல்லதில்லை. அது நஞ்சே ஆகும்.அந்தகாலம் போல் எந்த உணவும் இப்போது சத்தானது கிடையாது. பாஸ்புட் மோகம் அதிகமாக இருக்கு. சில உணவு பொருட்களில் கெமிக்கல் அதிகமாக கலந்து தான் விற்பனையாகிறது.

பெரும்பாலும் 80 % பெண்கள் தான் சமைக்கிறார்கள்இப்ப காலம் மாறி போய் ஆண்களும்  சமையல் உலகில் சிறந்து விளங்குகின்றனர்.

பெரும்பாலும் உணவு பொருட்களில் யாரும் காலவாதி தேதியை பார்ப்பதில்லை.
ஒரு பிரட் வாங்கினால் கூட காலவாதி தேதியை பார்க்காமல் காலவாதி தேதி முடிந்த பிறகும்  அப்படியே சாப்பிடுகின்றனர். .சாப்பிடும் போது நுனுக்கமாக  பிரட்டை பார்த்தால் அதனுள்  பூஞ்சை இருப்பதை நாம் அறியலாம்.

அதே போல் மீன் வறுவல்மட்டன் வறுவல்சிக்கன் வறுவல்,கட்லெட்அப்பளம்வத்தல்சுட்ட கிரில் அயிட்டங்கள் இதேல்லாம் சமைக்கும் போது கண்டிப்பாக சற்று அதிகம் கவனம் கொள்ள வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும்கவனக்குறைவாக இருந்தாலும் உடனே கரிந்து போய்விடும்.
எண்ணையை அதிக சூட்டில்  அப்பளத்தை போடும் போது கூட உடனே கரிந்து விடும் அதை தூக்கி எறிய மனமின்றி வீட்டில் இருக்கும் பெண்கள் அதை சாப்பிடுவதை தவிர்க்கவும்.மற்றும் சிக்கன், மீன், மட்டன் வறுவல்கள் செய்யும் போது கருகாமல் செய்வது நல்லது.அதிக தீயை வைத்து பொரிக்காதீர்கள்.

அதே போல் ரசம் தாளிக்கும் போது எண்ணையை சூடாக்கியதும் அதிக சூடாக இருந்தால் கடுகை போட்டதுமே ஒரு நிமிடத்துக்குள் கரிந்து விடும்ஆனால் அதையும் வேஸ்ட் பண்ண மனமில்லாமல் அப்படியே தாளித்து கொட்டுகின்றனர்.(இது சமையலில் சிலர் செய்து வரும் மிகப்பெரிய தவறு)
இதெல்லாம் சாப்பிடுவதால் சாப்பிடும் போது நல்ல தான் இருக்கும். ஆனால் நிறைய பேருக்கு நெஞ்சு கரிக்கும். கருகிய உணவை சாப்பிட்டால் என்ன ஆகும்.அடுத்து வாயு தொல்லை ஆரம்பிக்கும்.

கரிஞ்ச தீஞ்ச உணவும் கேன்ஸர் வருவதற்கு ஒரு காரணமாம்அதிக வெப்பத்தில் (க்ரில்பார்பெக்யூஎண்ணெயை கொதிக்கவைத்து பொரிப்பதுஅடுப்பு எப்பவும் பெரிய தீயில் வைத்துச் சமைப்பது...போன்றதும் கேன்ஸருக்குக் காரணமாம்...

கவனமாக தீயின் தனலை சமையலுக்கு ஏற்றவாறு வைத்து சமைக்கவும்.சமைக்கும் போது அதிக புகை போக அதை நுகர்ந்துகொண்டு சமைக்காதீர்கள் காற்றோட்டமாக ஜன்னலை திறந்து வைத்துகொள்ளுங்கள் அல்லது எக்ஜாஸ்ட் பேன் போட்டு கொள்ளுங்கள். 

ஜாம் ,தயிர்ஊறுகாய் பாட்டில்களில் எல்லாம் சரியாக காய்ந்த கரண்டி பயன் படுத்த வேண்டும்.அப்படி பயன் படுத்தாமல் விட்டால் மேலே பூஞ்சை படிந்த்து விடும். அதை சரியாக கவனிக்காமல் மேலோடு வழித்து போட்டு விட்டு பயன்படுத்துவோரும் இருக்கினறனர். அப்படி பயன்படுத்தாதீர்கள்.பெண்கள் குடும்பத்தில் உடல் நலம் கருதி சமையலில் கொஞ்சம் கூடுதல் கவனம் கொள்ளுங்கள்.

காய்கறிகளில் கொத்துமல்லி கீரை, காலிப்ளவர், புரோக்கோலி,கீரை வகைகள் அதில் நிறைய மணல் மற்றும் பூச்சி புழுக்கள் இருக்கும், முறையாக வென்னீரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கழுவி பயன் படுத்தவும்.

ஆரோக்கியமான சமையலே நோய்க்கு நல்ல மருந்தாகும்.

 கர்பவாய்மார்பகபுற்றுநோயில் இருந்து பாதுகாப்பு பெற

 பெண்கள் ஆடைகள் விஷியத்தில் விலையுயர்ந்த  பட்டு புடவைகள் , சுடிதார் எனறு துணிகளை விலை அதிகமாக கொடுத்து வாங்குகின்றனர். ஆனால் யாரும்  உள்ளாடையில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நல்ல தரமான பருத்தி  (காட்டன்) உள்ளாடைகள் பார்த்து வாங்க வேண்டும். உள்ளாடையை ஆறு மாதம் ஒரு  முறை மாற்றுவது நல்லது. புதிய உள்ளாடைகள் வாங்கினாலும் ஒரு முறை  அலசி பயன்படுத்துவது நல்லது. (இதை யாரும் செய்வதில்லை).துவைக்கும் போது கொஞ்சம தண்ணீரில் சோப்பு போடு அதில் கொதிக்கிற வெண்ணீரை ஊற்றி அதில் ஊறவைத்து அலசவும். இப்படி செய்வதால்  அதில் உள்ள தொற்று  கிருமிகள் அழிந்துவிடும். கருப்பு நிற உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும்.இறுக்கமான உள்ளாடைகள் வாங்குவதையும் தவிர்க்கவும். இதனால் கூட தோல்பாதிப்பு நாள்பட ஆறாத புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 பெண்கள் மாதவிலக்கின் போதும் உள்ளடைகளை துப்பரவாக வெண்ணீரில் அலசி பயன் படுத்தவும். வாஙகும் சானிடரி பேட் களும் எக்ஸ்பேரி டேட் பார்த்து வாங்கி பயன்படுத்தவும். இல்லை என்றால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் அப்படி அலர்ஜிக்கு  தேங்காய் எண்ணை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

 கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் போது அதையும் மருத்துவரிடம் சரியாக பரிசோதித்து கொள்ளுங்கள்ஒரு முறை எழுதி கொடுத்தால் மறுபடி போய் செக் பண்ணி கொள்ளவோ அதை பற்றி மருத்துவரிடம் விவாதிக்கவோ வெட்கப்பட்டு கொண்டு அதையே 10 வருடத்துக்கும் மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்

 ஒரு வருடம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று சாப்பிடும் மாத்திரைகளை கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.

காப்பர்டி கருத்தடை சாதனம்  பயன் படுத்தினால் கூட கேரண்டி 3 முன்று வருடம் அல்லது 5 வருடம் என்று டாக்டர் சொன்னதும் அதை பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதையும் சரியாக ஆறுமாதம் ஒரு முறை அல்லது வருடம் ஒருமுறை செக்அப்  செய்து கொள்ளுங்கள். முன்று வருடம் ஒரு முறை கண்டிப்பாக காப்பர்டியை மாற்றி விடுங்கள். இல்லை என்றால் (அ) அதிக உதிர போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கு. கர்ப்ப பை புண்ணாகிடும்  தற்போது புடவை கட்டினாலும் கேன்சர் வருகின்றது என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரொம்ப இருக்கமாக அழுத்தி டைட்டாக பெட்டிகோட் அணிவதை தவிர்த்து கொள்ளுங்கள். புண்ணாகி அதுவே கேன்சர் கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கு. சிலவிடயங்கள் முறையாக பின்பற்றினாலே தொற்று கிருமிகள் அண்டாமல் கர்பவாய் புற்றுநோயில் இருந்துபாதுகாப்பு பெறலாம்.


பல் வலி வந்தால் இரண்டு நாட்கள் அதிக வலி இருக்கும் பிறகு வலி நின்று விடும்திரும்பவும் வந்து வந்து சரியாகும்அதான் சரியாகி விட்டதே என்று விட்டு விடாமல் உடனே  உரிய மருத்துவரை அனுகுங்கள். அதே போல் வாயில் பிளந்து பிளந்து கொப்புளங்கள். இருந்தாலும் கவனம் கொள்ளவேண்டும். வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் கொப்புளம் வரும். அதுவும் நாளடைவில் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு.

தலை வலியோவயிற்று புண்வயிற்று வலி நெஞ்ரிச்சல்வாயு பிரச்சனை இதுபோல் இரண்டு முன்று மாதத்துக்கு மேல் சரியாகாமல் தொடர்ந்தால் உடனடியாக  மருத்துவரை சந்திக்கவும். ஏதும் தீராத வயிற்று வலி , வாய் புண் கொப்புளங்கள், நீண்ட நாள் வலியில்லாமல் ஆறாத கட்டி மற்றும் புண்கள் இருந்தால் அடிக்கடி மயக்கமாக இருந்தாலும்  என்ஸ்கோபி மற்றும் மெமோகிராம்  டெஸ்ட்போன்ற மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளை முறையாக எடுத்து கொள்ளுங்கள்.

நான் சரியான டயட்டில் தான் இருக்கிறேன் எனக்கு ஏன் கேன்சர் வருது என்று கூட நினைக்கலாம்அனைவருக்கும் கேன்சர் நோயை உண்டாக்கும் செல்கள் இருக்கதான் செய்யுமாம். அது சிலரை இல்ல இப்ப பலரை நிறையவே தாக்கி கொண்டு இருக்கிறது. அனைவருமே இதில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
40 வயதை கடக்கும் போது புற்றுநோய்க்கான முழு பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒருவரை புற்றுதாக்கிவிட்டால் பரம்பரை பரம்பரையாக வரவும் வாய்ப்பிருக்கு. ஆகையால் கூடுதல் கனவம் கொள்ளுங்கள்

புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் கவலை படாதீர்கள் அப்படியே இப்ப கீமோ, ரேடியேஷன், ஆப்ரேஷன் என செய்து இருந்தால் பொலியுஷன் நிறைந்த இடத்துக்கு போகாதீர்கள், அது உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கும். அதே போல் சமைக்கும் போது அதிக புகையில் நிற்காதீர்கள். நிறைய ஆட்கள் இருக்கும் இடத்திற்கு போகாதீர்கள்.ஊதுபத்தி, சாம்ராணி புகை இருக்கும் இடத்தில் அந்த புகையை நுகர்ந்து கொண்டு இருக்காதீர்கள். தன்னம்பிக்கையோடு தைரியமாக முறையாக சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள்.
.

. 

வாழ்வேமாயம் படத்தில் தான் கேன்சர் பற்றியே தெரியும். அதற்கு பிறகு ஆங்காங்கே சினிமா நடிகைகளுக்கு கேன்சர் என்பது ,தெரிய வந்தது.
 ஆனால் இப்போதுஎங்கு யாரை பார்த்தாலும் என்னன்னு கேட்டாலே கேன்சர் தான்.
 கடந்த ஆறு ஏழு வருடங்களாக சந்திக்கும் நிறைய பேர் (எப்படியும் 20 பேருக்கு மேல்) கேன்சர் இதில் பலர் இறந்திருக்கிறார்கள் சிலர் புற்றை வென்றும் இருக்கிறார்கள்.

ஆகையால் சிந்தியுங்கள் பெண்களே உயிர்வாழ உணவு மிகவும் முக்கியம் அதை சரியான முறையில் சமைப்பது உங்கள் கடமை சிறிது கவனக்குறையால் என்றுமே தீராத பெரிய வியாதி, அதிக செலவு,மன உலைச்சல், மற்றவர்களுக்கு  தொந்தரவு, சந்தோஷமின்மை இதெல்லாம் தேவையா???
இதேல்லாம் மேற்கண்ட விளைவுகளால் புற்று நோய் ஏற்பட்டவர்களை  நேரில் கண்ட்தை வைத்து தொகுத்து அளித்துள்ளேன்.


 இந்த புற்றுநோய் விழிப்புணர்வு செய்தியை முடிந்த வரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள்.

ஆக்கம்

ஜலீலாகமால்



கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை

பதிவுலக தோழ தோழியர்களை இந்த முன்று பதிவுக்கும் உடான்ஸில் ஓட்டு போடுமாறு(விருப்பம் இருந்தால்) கேட்டு கொள்ளுங்கள்

Monday, February 6, 2012

கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை



கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை

1..ராகி (கேழ்வரகு ) பானம் அதில் பாதம் மற்றும் வால்நட் பொடித்து சிறிது சேர்த்து காய்ச்சி குடிக்கவும். இது மிகச்சிறந்த பானம், ராகி பானம் .புட்டு ,சேமியா


இதே ரொட்டி, கொழுக்கட்டை, புட்டு , சேமியா, ஸ்னாக்ஸ் என்றால்

   ராகி தட்டை முருக்கு போலும் செய்து சாப்பிடலாம்.


2.. அனைத்து காய்கறிகளையும் சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்து சூப் போல செய்து குடிக்கவும்.இல்லை கீரை சூப்   பச்சை வெஜ் குருமா போன்றவை குடிக்கலாம் நல்ல எனர்ஜியாக இருக்கும்.



3. சிக்கன் சின்ன கோழியை வாங்கி சூப்பாக சமைத்து சாப்பிடவும்.

4. முட்டை வெள்ளை கரு காலை முன்று , மாலை முன்று. ( சாப்பிட முடியாது தான்) மருந்து மாத்திரைகள் போல நினைத்து கொண்டு சாப்பிடலாமே.



5.கொத்துமல்லி எலுமிச்சை சேர்த்து துவையல் இது ரத்தத்தை சுத்த படுத்தி கொண்டே இருக்கும்.நாக்கு மறத்து போய் இருப்பதற்கு ருசி தரும்.

6.ஆப்பிள் பழம் சாப்பிடால் ரொம்ப நல்லது நல்ல எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிடலாம்.  ஜூஸாக தினம் காலை மாலை குடிப்பது நல்லது.

7.கீரை வகைகள் முருங்க்கீரை பொரியல், மேத்தி சப்பாத்தி, மேத்தி ரொட்டி அதிகமாக சேர்த்து கொள்ளவும்.


8. இட்லி, இடியாப்பம், ஆப்பம் , கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகள் உட்கொள்ளலாம்.


9. சுண்டல் வகைகள் , சாலட் வகைகள் போன்றவை.

10. உள்ளே உள்ள புண்கள் ஆற ஜவ்வரிசி சேர்த்து காய்ச்சிய பால், கடல் பாசி, இளநீர் கடல் பாசி , ஜவ்வரிசி ரூ ஆப்ஷா ஜிகர்தண்டா போன்றவை சாப்பிடலாம்.


11 காய்கறிகளில் புரோக்கோலி பாஸ்தா ,பொரியல், புரோக்கோலி மட்டன். 

முட்டைகோஸ் பொரியல் ,கூட்டு, கொஃப்தா , ஃப்ரைட் ரைஸ் 

பீட்ரூட் ,பொரியல்,  கூட்டு, ஜூஸ், கட்லெட் 

கேரட் ஜூஸ், பொரியல், சாலட் போன்றவை மிகவும் நல்லது.



12. கருப்பு திராட்சை இது ரொம்ப நல்லது. இத்துடன் வால்நட் சேர்த்து சாப்பிடலாம்.

13.நெல்லிக்காய் இனிப்பு மற்றும் உப்பில் ஊறியது, நெல்லிக்காய் சாதம் போன்றவை நல்லது.



கவனிக்க:  புற்று ஆப்ரேஷன் செய்து கொண்டவர்கள் மேற்கொண்ட உணவு வ்கைகள் எடுத்துகொண்டால் கண்டிப்பாக மீண்டும் பழைய நிலைக்கு வரலாம். மருத்துவரையும் கலந்தாலோசித்து கொள்ளுங்கள். இதெல்லாம் எந்த பக்கவிளைவும் தராதா இயற்கையான உணவு முறை தான் கேன்சர் என்றில்லை அனைவருக்குமே பொருந்தும்.

நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் கேன்சர் விழிப்புணர்வுக்கான பதிவு.