Showing posts with label தோழிகளின்சமையல். Show all posts
Showing posts with label தோழிகளின்சமையல். Show all posts

Saturday, September 14, 2013

ஃபலூடா-Falooda








  • பாலுதா அனைவருக்கும் பிடிக்கும் ஒரு டெசர்ட் , இங்குள்ள பாக்கிஸ்தானி , இந்தியன்  ரெஸ்டாரண்ட்களில் உணவு பட்டியலுல் முதன்மையான லிஸ்டில் இருப்பது பாலூதா..

  • நான் வெயில் காலங்களிலும், நோன்புகாலங்களிலும் அடிக்கடி செய்வதுண்டு. இதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல விதங்களில் தயாரிக்கலாம்.நல்லதொரு பில்லிங், காலை டிபனை தவிர்த்து கூட இது போல ஒரு டம்ளர் தயாரித்து சாப்பிடலாம்.
  •  ரொம்ப ஈசியாக தயாரிக்கலாம் பிள்ளைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் அருமையான டெசர்ட்.என் சுலபமான பாலுதா குறிப்பை இங்கு சென்று பார்க்கவும்.

  • இது அறுசுவை தோழி மாலதி அக்காவின் குறிப்பு


    How to make Falooda?
  • பாலூடா செய்வது எப்படி??

  • கிழே உள்ளது அறுசுவை தோழி மாலதி அக்காவின் ஃப்லூடா
  • ஐஸ்க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்:
  • (அல்லது கடையில் விற்கும் ஐஸ்க்ரீம் 2 கப் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்)
  • பால் - அரை லிட்டர்
    ஓரம் நீக்கப்பட்ட ப்ரெட் ஸ்லைஸ் - 2
    சர்க்கரை - அரை கப்
    எசன்ஸ் - அரை தேக்கரண்டி


  • ஃபலூடாவிற்கு தேவையான பொருட்கள்:


  • ஊற வைத்த சேமியா - ஒரு கப்
  • ஜெல்லி - ஒரு கப் (ஜெல்லி செய்முறை அதன் டப்பாவிலேயே எழுதி இருக்கும்)
    நறுக்கிய மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழை, திராட்சை - 2 கப்
    ட்ரை ஃப்ரூட்ஸ் - கால் கப்
    செர்ரி பழம் - 5







  • ஐஸ்கிரீம் செய்முறை:
  • பாலை சுண்ட காய்ச்சவும். சூடான பாலில் ப்ரெட் ஸ்லைஸை போட்டு அப்படியே மூடி ஆற விடவும்.
    பால் ஆறியதும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
    இந்த கலவைவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி மூடி ஃப்ரீஸரில் 5 மணி நேரம் வைக்கவும்.
    இப்போது ஐஸ்க்ரீமை எடுத்து எசன்ஸை கலந்து மறுபடியும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.



  • நன்றாக கலந்து மிருதுவானதும் கிண்ணத்தில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து விடவும்.
  • 5 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். இப்போது ஐஸ்க்ரீம் ரெடியாகி விட்டது.
    ஒரு நீளமான கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள்.
    அதில் முதலில் ஒரு கரண்டி ஊற வைத்த சேமியாவை போடவும்.
    அடுத்து கருப்பு திராட்சை, அதன்மேல் மாம்பழம், அடுத்து சிகப்பு கலர் ஜெல்லி, இப்ப கொஞ்சம் ஐஸ்க்ரிம், அதன் மேல் மற்ற பழ வகைகள் போடவும்.
    கடைசியாக சிறிது ஐஸ்க்ரீமை வைத்து அதன் மேல் ட்ரை ஃப்ரூட்ஸை தூவி மேலே ஒரு செர்ரி பழத்தை வைத்து அலங்கரித்து கொடுங்கள்.

 இது என் குறிப்பு சுட்டியை கிளிக்கி பார்க்கவும்  - ரிச் ஃப்ரூட் பாலூதா  - Rich Fruit Falooda சமையல் அட்டகாசங்கள்




பாலுதா /ஃபலூடா/Falooda - cookbookjaleela



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Wednesday, November 9, 2011

கர்நாடகா ஸ்டைல் நெல்லிக்காய் சாதம்




கர்நாடகா ஸ்டைல் நெல்லிக்காய் சாதம்.
தேவையான பொருட்கள்
அரிசி - ஒரு டம்ளர்
லெமன் ஜூஸ்  - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி  -கால் தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
அரைக்க
பெரிய நெல்லிக்காய் - இரண்டு
கொத்துமல்லி கீரை – இரண்டு மேசை கரண்டி பொடியாக அரிந்தது
பச்சமிளகாய் – ஒன்று (அ) காரத்திற்கு ஏற்ப
இஞ்சி – அரை இஞ்ச் அளவு
தாளிக்க
எண்ணை – ஒரு மேசைகரண்டி
கடுகு ¼ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு –ஒரு மேசைகரண்டி
வேர்கடலை – ஒரு மேசைகரண்டி
கருவேப்பிலை – 8 இதழ்
பூண்டு – ஒரு பல் 


செய்முறை
சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும். ஆறவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை மையாக அரைக்காமல் மிக்சியில் கர கரப்பாக திரித்து கொள்ளவும்.
தாளிகக் கொடுத்துள்ளவைகளை தாளித்து திரித்த கலவையை சேர்த்து வதக்கி எலுமிச்சைசாறு பிழியவும். தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.
கலவையை சாதத்தில் கொட்டி நன்கு கிளறவும்.
சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் ரெடி.
தொட்டுக்கொள்ள பாப்கார்ன் சிக்கன், மற்றும் 

 உருளை வறுவலுடன் சாப்பிட யம்மியாக இருக்கும்.

இது மகியின் கர்நாடக ஸ்டைல் எலுமிச்சை சாதத்தை செய்து பார்த்து மேலும் அதே ஸ்டைலில் சிறிது மாற்றத்துடன் என் சுவைக்கு ஏற்ப நெல்லிக்காய் சாதமாக செய்துள்ளேன்.



Monday, October 31, 2011

மார்பிள் கேக் - Marble Cake

கலர் ஃபுல் மார்பிள் கேக்


தேவையானவை

மைதா - 150 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
பட்டர் - 150 கிராம்
முட்டை - 3
பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்ஆரஞ்சு கலர்  – 1 ட்ராப்
கோக்கோ - 25 கிராம்
சாக்லேட் எசனஸ் - 1 ட்ராப்
பச்சை(பிஸ்தா) எசன்ஸ் - 1 டிராப்
உப்பு – ஒரு சிட்டிக்கை

Tuesday, October 25, 2011

சாஃப்ரான் நட்ஸ் ரவா கேசரி - Safron Nuts Rava Kesari


 சாஃப்ரான் நட்ஸ் ரவா கேசரி 

கேசரி பல விதம் , ஓவ்வொரு ஊரிலும் ஓவ்வொரு விதம் , அதில் இது ஒரு விதம், கலர் எதுவும் கலககமல் நெய் மற்றும் சாப்ரான் மணத்துடன் ஓவ்வொரு கடியிலும் நட்ஸ், இது என் தோழி கீதா செய்தது.

Sunday, August 14, 2011

சுதந்திர தின ஊத்தாப்பம்





தேவையானவை

தோசை மாவு - இரண்டு பெரிய குழிகரண்டி

கேரட் துருவியது - தேவைக்கு

வெங்காயம் - தேவைக்கு

கொத்துமல்லிகால் கப்,பச்சமிளகாய்-1 கொட மிளகாய் கால் கப்

எண்ணை + நெய் - சிறிது



//சுந்தந்திர தின ஊத்தாப்பம் அருசுவை மற்றும் தமிழ் குடும்ப , பிலாக் தோழி விஜி செய்தது பார்த்து முன்பு செய்தது.இப்ப தான் போஸ்ட் பண்ண முடிந்தது. என் முறைப்படி செய்துள்ளேன்.//



செய்முறை

தோசை தவ்வாவை காயவைத்து தோசைமாவை ஒரு குழிகரண்டி எடுத்து தடிமனாக ஊற்ற்வும், பாதி வேகும் போது துருவிய கேரட், அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள கொத்துமல்லி, பச்சமிளகாய், கொடமிளகாயை வரிசையாக தூவி  சுற்றிலும் எண்ணை + நெய் சிறிது ஊற்றி முடி போட்டு வேகவிடவும்.
வெந்ததும் தோசையை திருப்பி போட்டு இரண்டு நிமிடத்தில் எடுத்து விடவும், திருப்பி போடமலும் எடுக்கலாம்/.


சுதந்திர தின கடல் பாசி

பதிவுலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள். அகிம்சை முறையில் போராடிய காந்திஜீயை நினைவு கூறுங்கள்..