
தோக்ளா இது குஜாரத்தி அயிட்டம்,வெரும் கடலைமாவில் தயிர் சேர்த்து செய்வது ஒரு விதம், மற்றொன்று ரவை அரிசி மாவில் தயிர் சேர்க்காமல் செய்வது மற்றொரு விதம், ரொம்ப நாளா இத செய்து பார்க்கனும் என்று செய்து பார்த்தாச்சு.
இது இட்லி தோசை , பூரி கிழங்கு,பொங்கல் வடை சாப்பிடுவர்கள் வாய்க்கு இது பிடிக்காது.
மோர்களி, மோர் ரசம், தயிர் சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடுபவகளுக்கு இது ரொம்ப பிடிக்கும்.
இது நம்மூர் இட்லி, அல்லது உப்புமா போல் தான்.
தேவையான பொருட்கள்
ஊறவைக்க
ஜோவர் ஆட்டா + கோதுமை மாவு = முன்று மேசைகரண்டி
கடலைமாவு = இரண்டு தேக்கரண்டி
ரவை = இரண்டு தேக்கரண்டி
உப்பு = சிறிது
மஞ்சள் பொடி = இரண்டு சிட்டிக்கை
தயிர் = இரண்டு மேசை கரண்டி
தண்ணீர் = இரண்டு மேசை கரண்டி
மாவில் கலக்க
இஞ்சி துருவல் = அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் = ஒன்று
எலுமிச்சை சாறு = அரை தேக்கரண்டி
வெங்காயம் = அரை
கொத்து மல்லி தழை பொடியாக அரிந்தது = ஒரு தேக்கரண்டி
எண்ணை (நல்லெண்ணை) = ஒரு தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை = ஒரு தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை
கருவேப்பிலை = 5 ஆர்க்

ஜோவர் ஆட்டா+கோதுமை மாவு,கடலை மாவு,ரவை,உப்பு, மஞ்சள் பொடி, தயிர், தண்ணீர் எல்லாவற்றையும் கலக்கி ஊறவைக்கவும். ( நான் இதை இரவே ஊறவைத்து விட்டேன்).
காலையில் லெமன் சாறு, கொத்துமல்லி தழை,வெங்காயம்,இஞ்சி துருவல் , எண்ணை சேர்த்து கலக்கி ஒரு சதுர வடிவ டிபனில் வைத்து இட்லி பானையில் வைத்து அவிக்கவும்.
சிறிது துண்டு போட வரும் போது கியுபுகளாக கட் செய்யவும்.
தனியாக வானலியில் எண்ணை,கடுகு,பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து இந்த தோக்ளாக்களை போட்டு பிரட்டி எடுக்கவும்.
தொட்டு கொள்ள கெட்சப் நல்ல இருக்கும், புதினா துவையலும் சூப்பராக இருக்கும்.
குறிப்பு
//டயட்டில் உள்ளவர்களுக்கு நல்ல டிஷ் இது, டயட்டில் இல்லாதவர்கள், இதில் எண்ணைக்கு பதில் நெய் விட்டு கொள்ளலாம், ஒரு மேசை கரண்டி தேங்காய் துருவல் சேர்த்தாலும் சுவை அமோகமாக இருக்கும்.//
| Tweet | ||||||
