Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Sunday, February 27, 2011

அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய விழா, புத்தக வெளியிட்டு விழா





அமீரக பண்ணாட்டு இஸ்லாமிய கழகம் நடத்திய இலக்கிய விழா மற்றும் நடந்து முடிந்த இஸ்லாமிய இலக்கியத்தைப் பற்றிய கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா, கொழும்பு தமிழ்சங்க தலைவர் திரு.ஜின்னா சர்புதீன் அவர்களின் “தீரன் திப்பு சுல்தான் காவியம்” மற்றும் நம் (என் அன்பு வலை உலக ) தோழி”நீரோடை மலிக்காவின் உணர்வுகளின் ஓசை “ புத்தக வெளியீடு மற்றும் கீழை சீனா தானா அவர்களின் “நான் விரும்பும் துரு குர் ஆன்” விளக்கமும் நீதியும் கேசட் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.








நுழைந்ததும் எங்க ஆபிஸ் பேனர், ஒரே சந்தோஷம் தான்

மலிக்கா கண்டிப்பாக வரனும் என்று முதலே மெயில் மூலமாகவும், போனிலும் சொன்னார்கள்,இது வரை எந்த மன்றத்துக்கோ , சங்கத்துக்கோ நான் சென்றதில்லை, காரணம் நானும் பெரிய ஆணி சின்ன ஆணியெல்லாம் பிடிங்கி கொண்டுதான் இருக்கேன். பிள்ளைகள் படிப்பு, விருந்தினர் வருகை வெள்ளி ஒரு நாள் தான் எனக்கு விடுமுறை அதிலும் வெளியில் செல்ல அவ்வளவாக விரும்புவதில்லை.


கடைசியில் யாருடன் போவது எல்லாம் நம் தோழிகள் எல்லாம் வருகிறார்களா என்று கேட்டேன் ஹுஸைனாம்மா வருவாஙக் இன்னும் சில தோழிகள் என்றார்கள்,  அப்சாரா இல்லம் என்னும் வலை பூவை எழுதும் தோழி தான் என்னையும் மலிக்காவையும் எப்படியாவது சந்திக்கனும் என்று விரும்பினார்கள் , உடனே அப்சாராவிற்கு போன் செய்து வரும் படி சொன்னேன் அவர்களுக்கு மிகவும் ஆசையாக இருந்தாலும், பையனுக்கு மறுநாள் தேர்வு இருக்கு அதுக்கு அவனை ரெடி பண்ணனும் , வேண்டுமானால் 10 நிமிடம் வந்து உங்கள் இருவரையும் பார்த்து விட்டு செல்கீறேன் என்றார்கள், சரி , மதியம் சாப்பாட்டு வேலை முடிந்தது,


 ஆசியா உடைய பரங்கி பேட்டை பிரியாணி, என் கிரிஸ்பி சிக்கன் பிரை, தயிர் பச்சடி செய்து சாப்பிட்டாச்சு.அப்படியே மலிக்காவுக்கு ஒரு பார்சல் எடுத்து கொண்டேன்.
அடுத்து கிளம்பலாம் என்று இருந்தால் தீடீர் விருந்தாளியாக ஊரிலிருந்து வந்த என் சாச்சி சாச்சா வந்துட்டாங்க , சரி இவர்கள் தான் முக்கியம் அவர்களை கவனித்து விட்டு டீ கடை போண்டா கேசரி, இஞ்சி டீ போட்டு அவர்களுக்கு கொடுத்து வழியனுப்ப மணி 7 ஆகிவிட்டது.கடைசி நேரத்தில்அப்சாராவும் வர இயலவில்லை என்று சொல்லிவிட்டார்கள் இவரும் வர மாட்டேன் சொல்லிட்டார்,யார்கூட போவது, இவர் சொன்னார் சரி வா உன்னை வாசலியே விட்டுட்டு வரேன் , ஒகே உடனே மக்ரீப் தொழுதுட்டு கிளம்பியாச்சு அப்பாடா ,10 நிமிடத்தில் அங்கு போய் சேர்ந்தாச்சு ,மலிக்காவிற்கு போன் அடித்தேன் ஒரே சந்தோஷம், பஸ்ட் புலோருக்கு வாஙக் என்றார்கள், போய் நுழைந்ததும் எங்க ஆபிஸ் பேனர் ஓ இங்க தான் உள்ளே போனோம் பின்னாடியே வரமாட்டேன்னு சொன்ன ஹஸ்ஸும் வந்து விட்டார், அப்பாடா திரும்பி போகும் போது யாரையும் தேடதேவையில்லை..போனதும் மலிக்கா பக்கத்தில் சீட்ட போட்டு வரவேற்று உட்கார வைத்தார்கள். 



ஈடிஏ எம் டி சலாவுதின் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.அவரும் அருமையான முறையில் சிறப்புறை ஆற்றினார்
நிகழ்சிகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தன 

,காவிய திலகம் ஜின்னா சர்புதீன் அவர்களின் தீரன் திப்பு சுல்தான் புத்தகத்தை வெளியிட்டார்கள், அடுத்து  கீழை சீனா தானா அவர்களின் “நான் விரும்பும் துரு குர் ஆன்” விளக்கமும் நீதியும் கேசட் வெளியிட்டார்கள். 
இடையில் பிஸ்கேட், சமோசா, டீ வந்தது, எல்லாம் சாப்பிட்டாச்சு, அடுத்து 9 மணிக்கு மலிக்காவின் புத்தக வெளியிடு பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது, 



இது நம் மலிக்க்காவின் புத்தகம் உடனே புரட்டி பார்த்தேன் ஆஹா தலைப்பே பிரமாதம், “உணர்வுகளின் ஓசை”  மிக அருமையான முறையில் தொகுத்து எழுதி இருகிறங்க நம் தோழி மலிக்கா.
கடைசியாக இலக்கிய போட்டி பரிசளிப்பு விழா அதை தான் பார்க்க முடியவில்லை. 
ஆண்கள் பதிவர்கள் நிறைய பேர் வந்திருப்பதாக சொன்னார்கள் யார் யார் வந்தார்கள் என்று தெரியல, மீதி போட்டோக்கள் பதிவுகள் மலிக்கா விபரமாக போடுவார்கள் பாருங்கள்.


அன்று மாலை இனிமையாக கழிந்தது, விழா முடிய 11 மணிக்கு மேல ஆகியதாம் , நான் பையன் வீட்டில் தனியாக இருப்பதால் 9.30 க்கெல்லாம் கிளம்பி விட்டேன்.



.





.

டாக்டர். ஜின்னாஹ் ஷரீபுத்தீன் துணைத் தலைவர், கொழும்புத் தமிழ்சங்கம்
டாக்டர்.சேமுமு. முகமதலி
பொதுச் செயலாளர், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் தலைமையகம் - சென்னை
கவிச்சித்தர்.மு.மேத்தா
கலாபூஷணம்.மானா மக்கீன் எழுத்தாளர்-இலங்கை

இசையரசி. நூர்ஜஹான் இஸ்லாமியப் பாடகி -இலங்கை



இஸ்லாமிய பாடகி இலங்கை இசை அரசி நூர்ஜஹான் அவர்களின் பாடல் காதுக்கு இனிமையாக இருந்தது.

இந்த விழாசிறப்பாக நடக்க உதவிய பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டக்கள். 


.

நிற்பவர்களில் இரண்டாவதாக நிற்பவர் அதிரை சர்புதீன் அவர்கள், 5 வருடம் முன் நான் வலை உலகில் குறிப்பு கொடுக்க ஆரம்பிக்கும் முன் துபாயில் வெளி வந்த தென்றல் புத்தகத்துக்கு ஏதாவது கட்டுரை எழுதி கொடுக்குமாறு கேட்ட போது எனக்கு சமையல் குறிப்பு தான் கொடுக்க தோன்றியது பூண்டு கோழியும் , பீட்ரூட் ஹல்வாவும் 2005 தென்றல் மாத இதழுக்கு எழுதி கொடுத்தேன்.
ஐந்து வருடம் முன் பார்த்தது, அதோடு இப்ப தான் அவரை பார்த்தேன், அவரால் தான் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தேன், பயந்து பயந்து நலல் வரனுமேன்னு ஒரு பேப்பரில் தான் எழுதி கொடுத்தேன்.இதில் என்னை பற்றி குறிப்பிடனும் நினைக்கல அங்கு அதிரை சர்புதீன் அவர்களை கண்டதால் அவருக்கு நன்றி சொல்லும் வீதம் இங்கு பகிர்ந்து கொண்டேன்.


தென்றல் இதழில் குறிப்பு கொடுக்க ஆரம்பித்த பிறகு தான் அறுசுவைடாட்காம்யில் சமையல் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தேன் .அதன் பிறகு தமிழ்குடும்பம்டாட்காம்,சமையலறைடாட்காம்,என் பிலாக்  சமையல் அட்டகாங்கள் அடுத்து கீழக்கரை அஞ்சல், விகடன் தீபாவளி மலர், லேடீஸ் ஸ்பெஷல் .எல்லாத்துலேயும் என் பதிவுகள். இன்னும் நிறைய பிலாக்குகள், மலேஷியா, அதிரை,இலங்கை போன்ற பிலாக்குகளிலும் என் சம்மதத்துடன் லின்க் கொடுத்து இருக்கிறார்கள். சில இடங்களில் காப்பி அடித்தும் அவர்கள் பதிவு போல் போட்டு வருகிறார்கள், என் பதிவுகள் எல்லோருக்கும் பயனளிப்பதில் மிகுந்த சந்தோஷம்.

எனக்கு முதலாவதாக ஊக்கமளித்த சர்புதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.











Monday, May 3, 2010

இனிய மாலை பொழுதினிலே ஒரு குதுகல சந்திப்பு




இனிய மாலை பொழுதினிலே, அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள், பிளாக் தோழிகள் சந்திப்பு. ரொம்ப சந்தோஷம் 7.30 மணியிலிருந்து 11 மணி வரை நேரம் போனதும் தெரியல சந்தோஷத்துக்கும் அளவே இல்லை.





இது இரண்டாவ்து பதிவர் சந்திப்பு. முதலில் நானும் மலிக்காவும், இப்போது பல தோழிகள் சேர்ந்து அறட்டை அடித்தது, பள்ளி நாட்களை ஞாபகபடுத்தியது.



ஸாதிகா அக்கா இந்தியாவில் இருந்து கத்தார் சென்று அங்கிருந்து போன வாரம் ஷார்ஜா வந்திருந்தார்கள். எப்படி சந்திப்பது எங்கு சந்திப்பது. எல்லாம் ஓவ்வொரு மூலையில் உள்ளோம். நான்கு நாட்களாக தோழிகள் மெயில் மூலம் பேசி ஒரு வழியா துபாயிலேயே சந்திக்கலாம் என முடிவு செய்தோம்.




ஸாதிகா அக்கா(எல்லா புகழும் இறைவனுக்கே) முன்பு பத்திரிக்கைகளுக்கு கதை எழுதுபவர், அறுசுவையில் பல சுவையான குறிப்பு கொடுத்தவங்க, இப்ப பிளாக்கில் அறிய தகவல் களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.




டிரெங்கு பெட்டிய இந்த டிரெங்கு பெட்டிய திறந்தா பொக்கிஷம் வராது ஆனால் நிறைய பழங்கால அனுபவ மேட்டர் வரும். இப்ப தெரிந்து இருக்குமே யாருன்னு ஜீன்ஸ், இப்ப ஹீரோ பேனா வ பற்றி எழுதும் ஹுஸைனாம்மா தான் சரியாக எல்லோரையும் இனைக்க பெரும் பாடு பட்டு விட்டார்கள்.





மனோ அக்காவின் முத்து சிதறல், இதில் பல பயனுள்ள முத்துக்கள் கிடைக்கும். 35 வருட அனுபவம் , என்ன ஒரு சாந்தம் பொருமை, அவர்கள் பொருமையின் சிகரம் என்பதற்கு மேலே அவர்கள் வரைந்துள்ள இந்த படமே ஒரு எடுத்து காட்டு. அவ்வளவு தத்ரூபமாக வரைந்து இருக்கீறார்கள்.









ஆசியா சமைத்து அசத்தலாம் செம்மையாக சுவையான நெல்லை கிச்சனை படைத்து வரும் ஆசியா அல் அயினில் இருந்து எப்படியும் தோழிகளை சந்தித்தே ஆகனும் , இத விட்டா நல்ல சான்ஸ் எப்போதும் கிடைக்காது என்று அவங்களும் எப்படியே வந்து கலந்த்து கொண்டார்கள்.



அநன்யாவின் எண்ண அலைகள், அநன்யாவின் பிராமன ஆத்து பேச்சு நடையில் பதிவு ரொம்ப நல்ல இருக்கும். ஹா ஹா இவர்களின் பேச்சு கல்யாணத்துக்கு முன் உள்ள ஜலீலாவை பார்த்த மாதிரி இருந்தது.






பிரியாணி நாஸியா, ஹா ஹா எல்லோரும் அவரவர்களை அறிமுகப்படுத்திய போது நாஸியா பிரியாணி என்றார்கள். மனோ அக்கா விற்கும் அநன்யாவிற்கும் ஒன்றும் புரியல, அபப்ரம் ஹுஸைனாம்மா அவர்கள் பிளாக் பேரு பிரியாணி என்றார்கள்.



மலர் பதிவில் பழக்கம் நேரில் பார்த்ததும் ஒரு ஷாக் அடிக்கடி நிறைய இடத்தில் சந்தித்துள்ளோம்.பதிவு அவ்வளவா போட வில்லை என்றாலும் எல்லா பிளாக்குக்கும் தவறாமல் கருத்து தெரிவித்து ஊக்கமளிபார்கள்.
ஆனால் வந்ததும் சீக்கிரம் போய் விட்டாஙக், பிறகு மனசு கேட்காம ஹி ஹி திரும்ப வந்தாங்க.




அடுத்து நீரோடை மலிக்கா இவர்களை தெரியாதவர்கள் வலை உலகில் யாரும் இல்லை. கவிதையரசி, பல புத்தகங்களில் இவங்க கவிதை இடம் பெற்றுள்ளது. எல்லாம் சந்திக்கலாமுன்னு முடிவானது ஒரு குண்ட தூக்கி போட்டாங்க மக்ரூஃப் க்கு ரொம்ப ஜுரமா இருக்குன்னு. ஹாஸ்பிட்டல் போகிறேன் என்று. ஹாஸ்பிட்டல்போய் மருந்து சாப்பிட்டு மாலைக்குள் சரியாகி விட்டது.


மற்ற் படி வல்லியம்மா, சுந்தரா, ரேணு, அப்சாரா இவர்களால் சந்திக்க வரமுடியவில்லை.
அதோடு சேர்த்து இந்த அட்டகாச ராணியையும் சேர்த்து கொள்ளுஙக்ள்.

எல்லோரும் லூ லூவில் சேர்ந்து பிறகு வேறு இடத்துக்கு போய் விடலாம் என்று முடிவெடுத்து, 7.30 லிருந்து எட்டு என சொல்லி வைத்திருந்தோம் , மலிக்கா பெரிய சாப்பாடு மூட்டைய தூக்கி வந்ததால் மஹ்ரூஃப்க்கு உடம்பு சரியில்லை என்றதாலும் நேரகா பார்க்கிற்கு போய் விட்டு அங்கிருந்து போன் செய்தார்கள். நானும் 7.25 க்கு லூ லூவில் ஆஜர், யாரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை.
முதலில் ஹுஸைன்னாம்மா வர அவர்களின் இரண்டு வாண்டுகளை பார்த்ததும் கண்டுபிடித்து விட்டேன். அடுத்து மலர் வந்தாங்க அவர்கள் நுழைந்ததுமே அடிக்கடி பார்த்த முகம் நிறைய இடத்தில் யாருன்னு தெரியாமலே சந்தித்துள்ளோம், ஒகே அடுத்து ஆசியா அவஙக் மகள் ருமானா வை பார்த்ததும் ஆசியா வந்தாச்சு,, ஆசியா தேடி கொண்டே வந்தார்கள், கை அசைத்து கூப்பிட்டோம். அடுத்து ஸாதிகா அக்காவும் அவங்க தங்கையும் வந்தார்கள். ஒரே எல்லோருக்கும் கலகலப்பு தான் கிக்கி கிக்கி தான்,

மனோ அக்கா, பிரியாணி ,அநன்யா வர லேட்டாச்சு, . எவ்வள்வு நேரம் நிற்பது உடனே நானும் ஹுசைனாம்மாவும் வெயிட் செய்து கூப்பிட்டு வரோம் என்று மற்றவர்களை மலர் கூட் அனுப்பினோம்.


எனக்கு கிடைத்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது செய்யலாம் என்று பார்த்தால் எல்லோருக்கும் இரவு வெளியில் பார்டி, ஆனால் தூரம் தொலைவில் இருந்து வருகிறவர்களுக்கு ஏதாவது கொண்டு போகனும் என்று, முர்தபா, வேக வைத்த வேர் கடலை, மசால் வடை, எடுத்து பேக் செய்து பையனை கொண்டு வர சொல்லிட்டு வந்துட்டேன்.

எல்லோரும் ஒன்று கூடினோம் சரியான கும்மி தான் ஹா ஹா அதிரா புகை விட படாது. இப்படி ஒரு சந்திப்பை எதிர் பார்க்கவே இல்லை.உடனே ஜெய்லானிக்கு காது கிர்ருன்னும், என்ன பேசிக்கிடிட்டாங்க..

ஸாதிகா அக்காவின் தங்கை ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள்.
எல்லோருடனும் நல்ல பேசி கொண்டார்கள்

ஆஹா அப்ப தான் மலிக்கா ஹொலோ எக்சுசுமி தள்ளுங்க சூப்பரா கோதுமை ஸடஃப்டு எக் நூடுல்ஸ் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தார்கள், முதலில் அதை வெட்டியாச்சு, உடனே நான் முதலில் என் பையனை கூப்பிட்டு டேஸ்ட் பார்க்க சொன்னேன், சூப்பர் என்றான், பையன் சொல்லிட்டானான்னா அதுக்கு அப்பீலே இல்லை, (என் கணவர் அங்கிருந்து எல்லோரையும் ஹோல்டலுக்கு கூப்பிட்டு போய் விடு என்றார் ஆனால் அல் அயின், ஜார்ஜா, அபுதாபியில் இருந்து எல்லோரும் துபாய் வரும் போது நாமளே ஏதாவது செய்து கொண்டு போய் விடுவோம் என்று முடிந்ததை செய்து கொண்டு வந்துட்டேன்) நானும் கொண்டு வந்ததை எடுத்து வைத்தேன். முதலில் குழந்தைய சாப்பிட சொன்னோம், பிறகு எல்லொரும் சாப்பிட்டோம்.

மனோ அக்கா பல வேலைகளுக்கிடையில் வந்தது ரொம்ப சந்தோஷ்மாக இருந்தது. நான் சிம்பிளாக எழுதி விட்டேன், யாராவது தித்திப்பான சண்ட்திபபி போடுவார்கள் என்று பார்ர்த்தேன்.
மலிக்கா வந்து விபரமா போடுவார்கள்.மீதியை சந்தித்த மற்ற தோழிகளின் பதிவில் பார்க்கலாம்.
ஆசியா அல் , அநன்யா, மனோ அக்கா கிளம்பியாச்சு, அடுத்து பிரியாணியும் கிளம்பியாச்சு, நான், ஸாதிகா அக்கா, ஹுஸைனாம்மா மலிக்கா கடைசியாக சென்றோம்.
11 மணி வரை என் பையன் எனக்கு துணையாக இருந்து, என்ன மம்மி ஜாலியா இருண்ட்தீங்களா? என்றான், ஆமாம் ரொம்ப ரொம்ப ஜாலி ஹே ஹே என்றேன்.

ஏதோ ஹுஸைனாம்மாவை கொண்டு எல்லோரும் அன்று சந்தித்தோம். எழுத இன்னும் நிறைய இருக்கு 4 நாட்கள் ஆகியும் யாரும் போடததால் சிம்பிளா முடித்துட்டேன். அடுத்து வரும் தோழிகள் ம்ம்ம்ம்ம் (ஸ்டாட் மியுசிக்) உங்கள் சந்திப்பு சுவரசியத்தையும் போடுங்கள்.










Sunday, April 11, 2010

பதிவர் சந்திப்பும் அவார்டும்

எல்லா தோழிகளுமே வலை வழி பழக்கம் தான் ஆனால் யாரையும் நேரில் சந்தித்தது கிடையாது. ஆனால் அருசுவை தோழி மர்லியை மட்டும் நேரில் போய் பார்த்து இருகிறேன். தமிழ் குடும்ப தோழி , தமிழ் குடும்பத்தில் பிளாக் ஆரம்ப்க்கும் முன் அக்கா உங்கள் கிட்ட பேசனுமே எப்படி பொதுவான இடத்தில் என் மெயில் ஐடியோ,போன் நம்பரோ எப்படி கொடுப்பது. அது எங்க வீட்டிலும் விருப்பம் கிடையாது. ஆகையால் என்ன விஷியம் என்றேன். அதற்கு பிறகு ஒன்றும் பதிலிலலை, அதோடு நின்றது. அடுத்து பிளாக் மூலமாக ரொம்ப நல்ல தோழியாகிட்டாங்க
ஓவ்வொரு முறையும் சந்திக்காதது காதல் கோட்டை அஜீத், தேவையானை போல ஆகிவிட்டது, நான் ஒகே சொல்ல அவர்களால் வரமுடியாமல், அவர்கள் ஒகே சொல்ல நான் வரமுடியாமல் போனது.
ரொம்ப‌ நாளா உங்க‌ளை பார்க்க‌னும் அக்கா, என்று சொல்லி கொண்டே இருந்தார்க‌ள், நாங்க‌ளும் ஓவ்வொரு முறை அவ‌ங்க‌ துபாய் வ‌ரும் போதும் ஏதாவ‌து ஒரு கார‌ணத்தால் ச‌ந்திக்க‌ முடியாம‌ல் போய் விடும்.

ஒரு வ‌ழியா வெள்ளி கிழ‌மை காலையில் டூட்டி ஃப்ரூட்டி பான் கேக் செய்து முடித்து விட்டு, ம‌திய‌ சாப்பாடுக்கு மீன் சால்னா, ஓம‌ம் ஃபிஷ் பிரை, க‌ட்டி ப‌ருப்பு, ரெடி ப‌ண்ணி கொண்டு இருந்தேன்,அவசர அவசரமா வேலைகளை முடித்தேன், பையனுக்கு விடுமுறை முடிந்து பள்ளி ஆரம்பம் ஆக போவதால் நோட், புக்ஸ் எல்லாம் அட்டை போடனும். யுனிபார்ம் ரெடி பண்ணனும். அதுக்குதான் .ம‌திய‌ம் 11.30 ம‌ணி இருக்கும், தீடீருன்னு போன் அக்கா
உங்கள் வீட்டு வாச‌லில் நிற்கிறேன். நான் போய் கையில் போன‌ துக்கி கொண்டே ஒரு எட்டு எங்கே? அவ‌ங்க‌ அட‌ உங்க‌க்க‌மக்கா, நான் வ‌ரேன் துபாயிக்கு ஃபிரைடே மார்கெட்டுக்கு வ‌ந்துடுங்க‌. நானும் ச‌ரி என்று சொல்லிவிட்டு ஃபிரைடே மார்கெட் என்றால் ஒரு ஆள் கூப்பிட்டு போக‌னும் இங்கு ப‌க்க‌தில் என்றால் ந‌ட‌ந்து போய்விடலாமே. என்று யோசிக்க‌ உட‌னே லு லு வே வ‌ந்துடட்ரேங்கா, அஸ‌ர் தொழுதுட்டு 4 ம‌ணிக்கு மேல‌ பாப்போம்.. ஓகே


உட‌னே அப்ப‌வே நோட்டு புக்குக்கு அட்டையும் போட்டு முடித்து, ம‌திய‌ம் சாப்பாடு வேலையும் முடிந்து அஸ‌ர் தொழுது இஞ்சி டீயும் குடிச்சாச்சு ம‌ணி 4.30 போன் வ‌ரல.
(இந்த் சந்திப்புக்கு ரெடியானது எப்படி இருந்தது என்றால் ஹிந்தி படம் பார்க்க ரொம்ப பிடிக்கும் சின்ன வயதில் சனிக்கிழமை ஆன மாலை டீவியில் ஹிந்தி படம் அதற்காகா அம்மா சொல்லும் வேலை எல்லாம் பரந்து பரந்து முடிப்பேன். படம் புரியுதோ இல்லையோ பார்க்கும் போது யாரும் டிஸ்ரப் பண்ண கூடாது என்று, அந்த ஞாபகம் இன்று வேலைய முடித்தது)
கடைசியில அண்ண வீட்டுக்கு போரேன்க்கா, ஆஹா இனும் பர்க்க முடியாதா என்று நினைத்தேன், 5.30 க்கு வந்துட்டு கால் பன்றேன் அப்ப வாங்க.உடனே மலிக்கா கேட்ட கொழுக்கட்டை ஞாபகம் வந்தது அதையும் செய்து எடுத்து கொண்டு பையன கூட்ட்பிட்டு கொண்டு நேரா லூ லூ க்கு 5.15 க்கு எல்லாம் போயாச்சு


அப்படி ஒரு ரவுண்டு அடித்து மீதி உள்ள கால் மணி நேரத்தையும் ஓட்டியாச்சு.வந்தாங்க பெட்சீட் பக்கம் இரண்டு பெண்கள் என்னை நோக்கி ஆனால் வருகிறவர்கள் என்னை நோக்கி வரும் போதே அவஙக் தான் ஆனா ஒரு சந்தேகத்தில் அப்படியே நின்றேன். பின்னாடி வந்து எக்கா எக்கா... ஒரே ஹி ஹி ஹி தான்.
உட்னே பின்னாடி இருக்கும் பார்க்கில் உட்கார்ந்து கொஞ்சம் நேரம் தான் பேசியது போல் இருந்தது, போன் வருது ஹஸுக்கிட்ட இருந்து மணிய பார்த்தா 2 மணி நேரம் மேல ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் நட்புக்கு எண்ணங்க்ளை பறிமாறிக்கொள்ளும் நட்புக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது.
சந்திக்க போன ஆள் யாருன்னு கேட்கிறீங்களா அவங்க கவிதையால கொஞ்ச நாள் முன்பு ஜார்ஜாவுல மழை வெள்ளம் கூட் வந்துடுச்சின்னா பாருங்கள்//
இந்த வலை உலகில் நிறைய தோழிகள் முகம் தெரியாத பல தோழிகள் என்னை அக்கா அக்கா என்று உரிமையோடு கூப்பிடும் போது , ரொம்ப சந்தோஷமாய் இருக்கு அதோடு அக்கா அக்கான்னு சொல்லி நிறைய கிரீடம் வேறு கொடுத்து விடுகிறார்கள், அதுவும் வைர கிரீடம்.


இது பதிவுலகில் ஜெய்லானி வழங்கியது இத அவரே ராப்பகலா வடிவமைத்து ரொம்ப பெரியய்ய்ய்ய்ய் மனசோடு பதிவுலக தோழ தோழியர்களை வலையில் வலை போட்டு தேடி எல்ல்லோருக்கும் கொடுத்து இருக்கிறார், அதில் எனக்கும் இந்த வைர கிரீடம் பச்சை ரோசா முத்திரையுடன். மிக்க நன்றி ஜெய்லானி




பதிவுலகில் அருசுவை தோழி, இப்ப பதிவுலகிலும் மிக அருமையான தோழி எனக்கு ராணி கிரீடம் கொடுத்துள்ளார்க்ள் , மிக்க நன்றி ஸாதிகா அக்கா.
நல்ல புது புது தகவலுடன் பதிவுகளை தந்து அசத்திக்கொண்டிருக்கும் ஸாதிகா அக்கா கொடுத்தது.



இது சைவ கொத்து பரோட்டா கொடுத்தது இவர் தினம் பதிவுகளை வித விதமான கொத்து பரோட்டா போல கொத்தி போடுவார், பரோட்டாவை பத்து விதவா செய்வாராம் ஆனால் இவர் பதிவுலகில் இவர் ஒரு குழந்தையாம்
தம்பி சசிகுமாரும் இந்த விருதை கொடுத்து இருக்கிறால், பிளாக் ஆரம்பிப்பவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும் இவர் பதிவு. அதோடு கீழே போடும் லொள்ளு படங்களும் நல்ல இருக்கும்
இருவருக்கும் மிக்க நன்றி

இந்த விருதுகளை நான் யாருக்கும் இப்போதைக்கு கொடுக்க போவதில்லை. ஏனென்றால் இது விருது மாதம் போல யார் பிளாக் ஓப்பன் செய்தாலும் ராஜா , ராணி , வைர கிரீடமா இருக்கு. இன்னும் எவ்வளவோ பதிவர்கள் அவர்களை தேர்ந்தெடுத்து பிறகு கொடுத்து கொள்ளலாம்.
//இது நான் இப்போதைக்கு கொடுக்க நினைத்தது, வலை உலகில் எல்லோரும் ஓருவ்ருக்கு ஒருவர் விருது பரிமாறிக்கொள்கிறோம், ஆனால் பல 100 (தோழிகள்)குறிப்புகளில் எனக்கு முதல் முதலா 2 வருடம் முன் 300 குறிப்பு முடித்ததற்கு எனக்கு வலை உலகில் முதல் முதல் பரிசு கிடைத்தது தமிழ் குடும்பத்தில் தான், ஆகையால் இந்த ராஜா ராணி கிரீடத்தை, இப்போதைக்கு தமிழ் குடும்பத்தின் தூண் தமிழ் நேசன் அவர்களுக்கும் அதை செம்மையாக நடத்தும் அவருடைய மனைவிக்கும் இதை கொடுக்கிறேன்//

ஒரு வழியா பெண் பதிவர் சந்திப்பு நல்ல படியாக முடிந்தது,ரொம்ப சந்தோஷம், சந்தித்த தோழி யாருன்னு தெரியவேண்டாமா மீதிய இங்கு சென்று படித்து கொள்ளவும்