Showing posts with label சுட்ட கவிதை. Show all posts
Showing posts with label சுட்ட கவிதை. Show all posts

Sunday, April 4, 2010

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா!!!!...




//ரொம்ப உருக்கமா இருக்க இதேல்லாம் நான் எழுதியது கிடையாது.மெயிலில் வந்தது, கணவனை பிரிந்து வாழும், மனைவிமாரின் கவிதை, மெயிலில் வந்தது. நீங்களும் பிரிந்து வாழும் கணவர் மார்களும் நாம தான் காச அனுப்புறோமே சொகுசா தானே இருக்கிறாள் என்று நினைக்காதீர்கள்.//


வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!ٌ
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!ٌ

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...அழுவதும்... அணைப்பதும்...கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...இடைகிள்ளி... நகை சொல்லி...அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?


12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...

5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...
2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ இது வரமா ..? சாபமா..?


அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்ٌ விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!


உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?ٌ


விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!


திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

********************##############*****************

பேச்சுலரின் வாழ்க்கை
இரண்டாம் பாகத்தை தான் எழுத என் சொந்த வார்த்தைகளை மனதில் கோர்ந்து கொண்டிருந்தேன்,

இந்த மெயில் வரவே அது எழுத முடியல பிறகு போடுகிறேன்.

பிளாக்கில் வரும் கவிதைகள் ஏதும் என் சொந்த படைப்பில்லை, தினம் நிறைய பார்வேட் மெயில்கள் வருகின்றன அதில் இப்படி மனதை உருக்கும் கவிதைய படிச்சிட்டு அத டெலிட் பண்ண மனசு வரல.

//ஏதோ வேலை பார்த்தோம் நானும் ஒன்னாந்தேதி ஆச்சா காச டிராஃப்ட் எடுத்து அனுப்பிட்டு, நிறைய இளைஞர்கள், பேஸ் புக்கில் சாட்டிங், பிலிப்பைனிகளுடன் உல்லாசம் இப்படி திரிகின்றனர். ஆனால் நான் எல்லோரையும் குறை சொல்லவில்லை.
ஆனால் இன்னும் உத்தம புருஷர்கள், 25 வருட காலமாக பிரிந்து தன் குடும்பத்துக்க்காக வாழ்ந்து அவரவர் அன்பு மனைவியை பிரிந்து தான் வாழ்கின்றனர்.
ஆகையால் ஊரில் ஒருத்தியா நின்று எல்லாத்தையும் சமாளிக்கிறாள். உங்களுக்கென்று ஒரு ஜீவன் என்றென்றும் காத்து இருப்பதை ஒரு கனமும் மறவாதீர்கள்.
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதல. ஆனால் இன்று இது தான் நடக்கிறது.//

நிறைய மனைவிமார்கள், இப்படி சாம்பாதித்து வாழனுமா கூழோ கஞ்சியோ ஒன்றாக குடிக்க்கலாம் வாங்க என்பார்கள்.


Wednesday, March 24, 2010

துபாயில் பேச்சுலர்களின் வாழ்க்கை. - 1







பேச்சுலர்ஸ் வாழ்க்கை மிக கொடுமையானது,மிகவும் சுமையானது, ஆங்காங்கே பிலிப்பைனி பிகருங்க இருப்பதால் கொஞ்சம் சுவையாக இருக்கு.
பிள்ளைகள் படித்து முடித்து விட்டு அடுத்த கட்டம் வேலை தேடல் அதுவும் புதுசா வெளியூர் வந்து வேலை தேடுவது போல் ஒரு கஷ்டம் வேறெதுவும் இல்லை.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் பேச்சுலர்கள் பற்றி எழுதனும் என்றால் அதற்கு ஒரு பதிவு போதாதாது.
ஊரிலிந்து தாய் தந்தையர்கள், உறவுகள் எல்லாத்தையும் விட்டுவிட்டு தனியே இங்கு வந்து வேலை பார்க்க வருகிறார்கள்.

வந்ததும் முதலில் நல்ல ரூம் கிடைக்கனும், சாப்பாடு,நல்ல நண்பர் கிடைக்கனும். இதுவரை அம்மா கையால் சாப்பிட்டு விட்டு இங்கு ஓவ்வொன்றிற்கும் நாமா தேடி போய் சாப்பிடனும்.மனதளவில் பெரும் சோகம்.
இப்ப தான் தோனும் ஆகா அம்மா கையில் வைத்து கொண்டு தாங்கினார்களே. என்ன ஆட்டம் போட்டோம். அப்படி எல்லாம் நினைக்க தோனும்.

இங்கு வரும் பேச்சுலர்களுக்கு முதலில் ஏற்படுவது அல்சர் தான் உணவு ஒத்துக்கொள்ளாமல்.ச‌மைக்க‌ தெரியாத‌வ‌ர்க‌ள் ஹோட்ட‌லில் சாப்பிடுப‌வ‌ர்க‌ளுக்கு தான் முத‌லில் இந்த‌ பிராப்ள‌ம் வ‌ரும்.

நல்ல சமைக்க தெரிந்தவர்களுக்கு கவலை இல்லை. 
 அதுவும் ரூமில் எட்டு பத்து பேர் அதில் ஒரு சமையல் ராஜா இருந்தால் அவர்க்க்கு கொண்டாட்டம் தான் ஒன்லி குக்கிங் , மற்றவர்கள் ரெடியா வைப்பார்கள் இவர் ஒரு கறி மட்டும் செய்து விட்டு போவார்.

அதோடு மீதி பேர் எல்லாம் வேலைய பிரித்து காய்கறி , மார்கெட் போக ஒருவர், கட்டிங்க்ஸ் புட்டிங்க்ஸ் ஒருவர், அலிச்சாட்டம் செய்து போட்ட கிச்சன கிளீன் செய்து சாமான் கழுவ ஒருவர் என்று பிரித்து கொள்வார்கள்.
அப்படியே வயசு வாரி பெரியாப்பா,மாமா, மச்சான், தம்பி, மாப்ளே, மருமவன் என்று அவர்களுக்குள்ளே உறவுவாக இருப்பார்கள். வெவ்வேறு ஊரிலிருந்து வந்து ஒரு குடும்பமாய் வாழ்கிறார்கள்.

இதுக்கு தான் பெண்குழந்தைகளுக்கு சமையல பழக்குவதை விட ஆண்குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது நல்லது போல.
காலையில் எழுந்ததும் பாத்ரூமுக்கு கியு.. ஓவ்வொருத்தருக்கும் ஓவ்வோரு டைம் வேலைக்கு போகும் நேரத்தை பொருத்து போகனும்.
இப்பவாவது பரவாயில்லை 20 வருடங்களுக்கு முன் எல்லாம் போனில் தொடர்பு கொள்வது, கடிதம் வரவு எதிர் பார்ப்பு எல்லாம் உண்டு. போன் பேச பூத்துக்கு செல்லனும். கடிதம் போட்டாலும் ஊரிலிருந்து வரவும் எப்படியும் சவுதி என்றால் 10 , 15 நாட்கள் ஆகும், துபாய் என்றால் ஒரு வாரம் ஆகும்.
இப்ப நல்ல வசதிகள் ஈமெயில், சாட்டிங், செல் போன் என்று மணிகனக்கா பேசினாலும், பத்த மாட்டுங்கிறது. ஆனால் சம்பாதிக்கும் காசை போனில் தான் நிறைய பேச்சுலர்கள் செலவிடுகின்றனர்.





துபாயில் மட்டும் இல்லை உலகத்தில் எல்லா இடங்களிலும் வெளியில் தங்கி படிக்கும் அனைத்து பேச்சுலர் ,வேலை பார்க்கும் பேச்சுலர்கள் லைஃபும் இப்படி தான்.

அதான் பாட்டிலேயே பாடினார்களே'' புறா கூண்டு போல 30 ரூமு.'' என்று பாட்டும் உண்டு.



வெளி நாட்டு வாழ்வில் நொந்தவர்கள் எழுதிய கவிதையை படிங்க ,இது என் கவிதை இல்லை, எனக்கு கரண்டிய தவிர ஒன்னும் தெரியாது





இது நான் எழுதிய கவிதை கிடையாது, யார் எழுதியதுன்னு தெரியல



ஒட்டுமொத்த உறவுகளையும்
சுருக்கி நினைவுகளாக இதயத்தில்
சுமந்து பாலைவனத்திற்கு வந்துவிட்டேன்
சிறைவா சியாக!




இறுக்கிப் பிடித்த
இதயம் மட்டும்
இரவினில் கொப்பளிக்கும் உறவுகளை எண்ணி!!
தனிமையில்
தல ையணை மட்டுமே துணையாக!
ஈரம் காத்துக் கொண்டிருக்கும் கண்கள்
தூரத்தில் உள்ள உறவுகளை எண்ணி!!
ஆறுதலாக என்
அழுகை சப்தம் மட்டும்
சப்தமே இல்லாமல்!!
குரல்களில ் மட்டுமே
குடும்பம் நடத்தும் கொடுமை!!
கட்டிய மனைவியும்
தொட்டிலில் குழந்தையும்!
நடக்க ஆரம்பித்துவிட்டான் என்பதையே
நடுவில் ஒருவர் கூற;
நனைந்த கண்களை துடைத்துவிட்டு
சிரிக ்க மட்டுமே முடிந்தது!!


மெல்லிய உதடுகளை
ஈரம் கொண்டிருக்கும் எச்சிலின் உதறலோடு
தட்டிய கைகளோடு ஒரு முறை சொன்னான் Daddy என்று! அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!!!


(தொடரும்)