Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, February 8, 2016

உன் உயிரிலேயே உறவானவள்



//உன் உயிரிலேயே உறவானவள்//

அன்பே என் இதயமே
என்றும் சந்தோஷமாய்
ஒருவருக்கு ஒருவர்
அன்பை பரிமாறும் தருணம் இது

இறைவன் நாடினால்
என் உயிர் உள்ள காலம்
வரை உனக்காக
நான் என்னால்
இயன்ற அளவு
கை கொடுப்பேன்.

  உன் சந்தோஷம் உன் மன நிம்மதி
இது தான் எனக்கு முக்கியம்

ஓவ்வொரு கனமும்
நீ என் மீதும்
நம் பிள்ளைகள்
மீதும் அக்கறை
காண்பிப்பதை நினைத்து
பிரமித்து போயிருக்கிறேன்.!

உன்னுடைய பொறுமையை
கண்டு பூமி கூட பிரமித்து போயிருக்கும்!!

நான் பெரும் பாக்கியசாலி
இத்தனை அன்புள்ளம்
படைத்த உன்னை கணவனாக
அடைந்ததற்கு அனுதினமும்
வல்ல நாயனுக்கு நன்றி
செலுத்தி கொண்டு இருக்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்

ஆக்கம்
-ஜலீலாகமால்


 07.02.16

என் டாடியை பற்றி எழுதிய கவிதை 2 பிரிவின் துயரால் - 19.07.2011

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, June 19, 2011

பிரிவின் துயரால்



//என் தந்தையே
இத்தனை வருடம்
எங்களோடு ஒன்றாக இருந்து
இன்று எங்களோடு இல்லாத 
உன் பிரிவின் துயரால் 
நாங்கள் வாடுகிறோம்




உன் நற்குணத்தை
சொல்ல வார்த்தைகள் இல்லை
தாய் சொல்லை தட்டாத
மகனாய்
உடன் பிறப்புகளுக்கு
அன்பான தந்தையாய்
மைத்துனிகளுக்கு பாசமான
சகோதரராய் இருந்தாய்

என் அன்னையை பூவினும்
மேலாக பாதுகாத்தாய்
ஐந்து வைரங்களையும்
ஒரு வைடூரியத்தையும்
அழகாய் பெற்றெடுத்தாய்
மிகவும் கண்ணியமான
முறையில் அனைவரையும்
கரைசேத்தாய்

தனக்கென எதையும்
பதுக்கவில்லை
பல  ஜோடிகளை
அன்பாக பேசி சேர்த்து வைத்தாய்
உற்ற நண்பர்களை
அன்பாய் நேசிப்பாய்

 நான் சோகமாக இருக்கும்
போது குரான் வசனத்தை
எடுத்துரைத்து தெளிவு
படுத்துவாய்
என் மகனுக்கு நல்ல
உபதேசம் செய்தாய்



பொறுமையின் சிகரமாய்
திகழ்ந்தாய்
அதிர்ந்து கூட ஒரு வார்த்தை
பேசியதில்லை
உற்றார் உறவினரை
கண்ணியப்படுத்துவாய்
அப்படி பட்ட என்
தந்தையை பிரிந்து
வாடுகிறோம்//


//என் தந்தையே
இத்தனை வருடம்
எங்களோடு ஒன்றாக இருந்து
இன்று எங்களோடு இல்லாத 
உன் பிரிவின் துயரால் 
நாங்கள் வாடுகிறோம்//


--ஆக்கம்
ஜலீலாகமால்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டாடி:ஜலீ ஜலீ ஜலீ ஜலீம்ம்மா ,

நான்:என்னங்டாடி , என்னங்டாடி

இனி யார் என்னை இப்படி கூப்பிடுவாங்க./

எப்போதும், முன்பெல்லாம் சிறு வயதில் வல வல ந்னு பேசிகொண்டே இருப்பேன், சிரித்து கொண்டே எல்லாத்தையும் கேட்டுட்டு கொஞ்சம் நேரம் தேய்ந்து போன ரெக்கார்ட ஆஃப் பண்ணு என்று கிண்டல் பண்ணுவார்கள்.
போனவருடம் இதே நாள் என் டாடியிடன் பேசினேன்,   ஜலீ ஜலீ நல்ல இருக்கீயா , அப்படி கேட்டதுமே ரொம்ப நல்ல இருக்கிறேன் என்ற தெம்பு வந்துடும்.ரொம்ப நேரம் பழைய கதைகளை பேசி கொண்டு இருந்தோம்.

எவ்வளவு தான் மனதை கட்டு படுத்தினால் நினைவுகள் டாடிய சுற்றி யே தான் இருக்கு.
ஒரு வேலையும் ஓட மாட்டுங்கிறது.

நான் சோகமா இருக்கும் போது போன் செய்தால் கீழே உள்ள வசனத்தை நினைவு கூறுவார்கள். இப்போதைக்கு என் டாடி சொன்ன இந்த துஆவை ஓதிக்கொள்கிறேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
////லா -யுகல்லி ஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா உஸ் அஹா லஹா மாகஸபத், வ அலைஹா மக்தஸபத், ரப்பனா லா துஆகிதனா இந்நஸீனா, அவ் அக்தஃனா , ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹூ அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாகதலனா பிஹி, வ வஃ ஃபு அன்னா, வஃக் ஃபிர்லனா, வர் ஹம்னா அன் த்த மவ்லானா ஃப்ன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்..///

///அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்பந்திப்பதில்லை. அது தேடிக்கொண்ட நன்மை அதற்கே-( பயனளிக்கும் அவ்வாறே) அது தேடிக்கொண்ட தீமை அதற்கே ( கேடு விளைவிக்கும்)


எங்கள் இறைவனே! நாங்கள் ( எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும், அல்லது ( அதில்) தவறிழைத்து விட்டாலும், ( அதைப் பற்றி) நீ எங்களை (க் குற்றம் ) பிடிககதே!
 எங்கள் இறைவனே ! நீ, எங்கள் மீது ( கடினமான கட்டளைகலை விதித்துப் ) பளுவான சுவையைச் சுமத்திவிடாதே!..
எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது ( கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு - ( சுமத்தாதே !)
எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத கஷ்டங்களை எங்கள் மீதுசுமத்திவிடாதே!எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக!
எங்களை பொறுப்பாயாக!எங்கள் மீது கருனை புரிவாயாக! நீ தான் எங்கள் இரட்சகன்! ஆகவே. ( என்னை) நிராகரிகும் ஜனங்கள் மீது (வெற்றி பெற ) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று பிராத்திப்பீர்களாக!)
 குர் ஆன் , 2: 286/////

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
”அன்று நீ “ அஸ்மாவின் இடுகையையும், சகோதரர ஆஷிக்கின்  வல்லையில், ஹாஜாவின் இடுகை // மரணம் முதல் மண்ணறை வரை என்ற இடுகையையும்  படித்தேன் என்னை நான் தேற்றி கொண்டேன்/இருந்தாலும் எங்களால் முடியல .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நீங்கள் முன் சென்றவர்களாக இருக்கீறீர்கள் நாங்கள் பின்வருகிறவர்களாக இருக்கிறோம், ஆண்டவன் அனை வரின் பாவத்தையும் மன்னிப்பானாக ஆமீன்!


இதெல்லாம் படித்து தேற்றினாலும் மறுபடி நினைவெல்லாம் வாப்பாவையே தான் என்னுது,

.உலகில் உள்ள அனைத்து தந்தைமார்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்



Sunday, May 8, 2011

அம்மா அம்மா


படம் நன்றி கூகுள் அக்கா

என்ன அன்னையர் தினம் வைத்தால் தான் அன்னையை போற்றுவீர்களா? இல்லை யாரும் அன்னையை நினைப்பதிலை என்று நினைத்து விட்டார்களா?



அப்படி எழுதினேன், கவிதை போல் தோன்றியது , இது என் முதல் கவிதை, கவிதை தானா? சொல்லுங்களே?

அம்மா அம்மா


//பத்து மாதம் சுமந்து
பெற்று எடுத்தவள்

நிலாவை காட்டி சோறூட்டி
 நம்மை வளர்த்தெடுப்பவள்
உலகத்தில அப்பா முதல் மற்ற
அனைவரையும்
அடையாளம் காண்பிப்பவள்,

நம் முகம் வாடினாள்
 நொந்து போவாள்

நம் முகம் மலர்ந்தால்
 சந்தோஷமடைபவள்

நம் தேவைகளை
பார்த்து பார்த்து செய்பவள்

வாய்க்கு ருசியாக
சமைத்து கொடுப்பவள்.

எந்நாளும் நம் முன்னேற்றத்தை
 மனதில் வைத்திருப்பவள்.

என்றும் நம்
நலனுக்காகவே பிரத்திப்பவள்.//


@@@@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%%%%%%@@@@@@@@@@@@


அம்மா = உங்களையே உற்று நோக்கி கொண்டு இருக்கும் அம்மாவுக்காக ஏதாவது செய்தீங்களா?

உங்கள் குழந்தைக்கு ஒரு சாக்லேட் வாங்கிகொடுத்தால், ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தால் அம்மாவுக்கு வாங்கிகொடுங்க, அம்ம்மா தனக்கு வாங்கி சாப்பிடுவதில்லை.எனக்கு சாப்பிடனும் போல் இருக்கு என்று யாரிடமும் கேட்பதில்லை.

அம்மாவுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்று கேட்டு செய்தோ அல்லது வாங்கியோ கொடுங்கள்,
இப்ப எல்லாம் வெளிநாடுகளில் அம்மா என்ன செய்கிறாஙக் ஏது செய்கிறாஙக்ன்னு யாராவது கேட்கிறீஙக்ளா?
இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது போன் செய்து விசாரியுங்கள்.
போன் செய்கிறேன் என்று கண்ட நேரத்தில் போன் செய்து அவர்கள் அக்காடான்னு தூங்கும் நேரம் கிளப்பி விடாதீஙக்
இரவு மாத்திரை மருந்துகளை சாப்பிட்டு விட்டு காலையில் எழுதிருக்கும் வேலையிலும் போன் செய்யாதீர்கள்.இரவு தூக்ககலக்கதில் இருக்கும் போதும் போன் செய்யாதீர்கள்.

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகா காலை 11 மணிக்கோ அல்லது மாலை 5 லிருந்து 7 மணி அளவிலோ போன் செய்து நலம் விசாரியுங்கள்.


///கண் பார்த்தால் கை செய்யனும்.
 இது சின்ன வயதில்  என் அம்மா சொன்னது,

அதே போல் கூப்பிட்ட சத்ததுக்கு உடனே ஏன்ன்னு கேட்கனும்.
அதான் இது வரை கடை பிடித்து வருவது.
 இத பற்றி நேற்று என் பையனிடம் மதியம் லுஹர் தொழுதுட்டு பேசிய போது, மம்மிய சந்தோஷப்படுத்துவதா இருந்தா , ஒரே கத்த வைக்க கூடாது கூப்பிட்ட சத்ததுக்கு முதல என்னான்னு கேட்கனும்,
 இத நான் அவனை செய்ய சொல்லல

என் மம்மி என்ன கூப்பிட்டாங்கன்னா?  நான் உன் வயதில்  என்ன பண்ணுவேன் எங்கிருந்தாலும் ஜலீல்ல்ல்ல்ல்லீஇ என்று சொல்லும் போது லின்னு முடிப்பதற்குள் பறந்து வந்து நிற்பேன் என்றேன்.
இன்னும் என்ன அவங்க சொல்லாமலே அங்கிருக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்வேன்,

உதாரணத்துக்கு ,இப்படி சொன்னேன்.


இதோ உன் புக் இப்படி கிடக்குது இத நீயே அடிக்கி வைத்து நீட்டாவைத்தா எனக்கு சந்தோஷம் தானே, இதோ எல்லோரும் குடிக்கும் தண்ணீர் பாட்டில் காலியா இருக்கு இத நான் சொல்லும் முன் நீயே பிடித்து வைத்தா எனக்கு சந்தோஷம் தானே என்றேன்.
சரி மம்மி நானும் இனி செய்கிறேன் மம்மி என்றான் ரொம்ப சந்தோஷமாகிவிட்டது,
, என்னாளும் இப்படி இருக்க கிருபை செய் அல்லாஹ் என்றூ. மனதிற்குள் துஆ செய்து கொண்டேன்.//

இன்னொன்று ஹனீப் பற்றி சொல்லனும், போனவருடம் எங்க வீட்டில் இருந்த போது அம்மாவுக்கு புரை யேறிவிட்டது, அப்ப எல்லா பேரன் பேத்திகளும் பயத்தில் பார்த்தாமாதிரி ஒன்னும் புரியல நின்று கொண்டு இருந்தாங்க, ஹனீப் மட்டும் ஓடி போய் தண்ணி கொண்டு வந்து கொடுத்தான்.
அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உடனே கிடு கிடுன்னு ஓடி போய் தண்ணீ எடுத்து வந்தானே என்று இப்ப கூட எல்லார் கிட்டேயும் சொல்லி சொல்லி காண்பிப்பாங்க.

எனக்கு என் அம்மா சொல்லி கொடுத்த முதல் முதல் ரெசிபி, இஞ்சி சாயா, புத்துணர்வு தரும் இஞ்சி சாயா,இப்பவும் காலையில் 5 மணிக்கு இத குடிச்சா தான் எனக்கு அடுத்த வேலையே. ஓடும்.நான் ஊருக்கு போனாலும் என் மாமானார் அப்பாடா ஜலீலா வந்தாச்சு இனி 5 மணிக்கு டான்னு டீ வந்துடும் என்பார்கள்.
 ...
 தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது,

 அம்மாவை சந்தோஷபடுத்தினாலே எல்லாம் நமக்கு கிடைத்த மாதிரிதான்.

அம்மாக்கள் சில வீட்டில் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக கொஞ்சி கவனிப்பாங்க, சில வீட்டில் ஒரே தினம் தினம் திட்டு தான், சில வீடுகளில் அடி தடி, சில வீடுகளில் நாயே பேயே.. என்று இப்படி தான் ஓடிகொண்டு இருக்கும்.
திட்டிட்டாங்களே என்பதால் நம் மேல் பாசம் இல்லாமலோ அல்லது பிடிக்கமலோ சதா திட்டமாட்டார்கள், எல்லாம் நம் நன்மைக்கே, அது அவங்க அவங்க ஒரு காலம் புரிஞ்சிப்பாங்க , அப்ப நிறைய மிஸ் பண்ணிட்டோமோ என்று வருந்துவீர்கள்.
 அம்மாக்கள் கிடைக்காப்பெறாத பொக்கிஷம் அல்லவோ.
உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.