Showing posts with label வகைகள். Show all posts
Showing posts with label வகைகள். Show all posts

Monday, April 5, 2010

காயம் லேகியம்,மருந்து சோறு

மருந்து சோறும், காய லேகியமும்
//இது கர்ப்பை வீக்காக இருந்து அடிக்கடி குழந்தை அபார்ஷன் ஆகிறவர்களுக்கும், பிள்ளை பெற்ற பிறகு கர்ப்பை வலுவடையவும், அதில் உள்ள அழுக்குகள் வயிற்று புண் போகவௌம் இந்த இரண்டு ரெசிபியும், இதை ஆண்களும் சாப்பிடலாம், இடுப்பெலும்பு மற்றும் முதுகெல்லும்பு பலம் பெரும், கீரைஸுக்கு பதில் இதை கூட செர்ய்து சாப்பிடலாம் மருந்தின் அளவை சரியாக சேர்த்து தேங்காய் பால் சேர்த்து செய்வதால் இதில் கசப்பு தெரியாது சுவையாக இருக்கும், காலை டிபனுக்கு கூட மாசி துவையலுடன் சாப்பிடலாம்.//


தேவையான பொருட்கள்
மருந்து பொடி = 75 கிராம்
முழு தேங்காய் = ஒன்று
இஞ்சி = 25 கிராம்
பாதம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் = 400 கிராம்
ம‌லை பூண்டு = இர‌ண்டு முழுவ‌தும்
நல்லெண்ணை = 100 கிராம்
நெய் = 50 கிராம்
கருப்பட்டி வெல்லம் = கால் கிலோ
தேன் = ஒரு குழி கரண்டி




1. தேங்காயை பாலெடுத்து வைக்கவும்.இஞ்சி அரைத்து சாறு எடுத்து நஞ்சை தெளியவைத்து கொள்ளவும். பாதம் பிஸ்தா முந்திரி அக்ரூட்டை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.கருப்பட்டியை இளக்கி மண்ணில்லாமல் வடி கட்டிகொள்ளவும்.பூண்டை உறித்து பொடியாக நருக்கி வைக்கவும்






2. வெல்லம் மருந்து பொடி, இரண்டாவது எடுக்கும் தண்ணீ தேங்காய் பாலுடன் கலக்கவும்






3. அரைத்து வைத்துள்ள பாதம் கலவையையும், கட்டி தேங்காய் பால், இஞ்சி சாறையும் சேர்த்து கலக்கவும்.






2. வெல்லம் மருந்து பொடி, இரண்டாவது எடுக்கும் தண்ணீ தேங்காய் பாலுடன் கலக்கவும்.அரைத்து வைத்துள்ள பாதம் கலவையையும் கலந்து கொள்ளவும்.





3.ஒரு வாயகன்ற பெரிய சட்டியில் ந‌ல்லெண்ணை + நெய்யை ஊற்றி பூண்டை போட்டு வ‌றுக்க‌வும்.க‌ட்டி தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி கொதிக்க‌ விட‌வும்.







5. க‌ல‌ந்து வைத்த‌ காய‌க்க‌ல‌வையை அதில் ஊற்றி கிள‌றி ந‌ன்கு காய்ச்ச‌வும், மருந்து வாடை போகும் வரை காய்ச்சவும்







கலவை சுருண்டு ஹல்வா பதம் வர கொஞ்சம் டைம் எடுக்கும்.







கடைசியாக தேன் கலந்து இரக்கவும்.


இதில் முட்டை உடைத்து ஊற்றுவார்கள். முட்டை ஊற்றுவதாக இருந்தால் லேகியம் மாதிரி இல்லாமல் தளர்வாக காய்ச்சி கொள்ளவும்.

Note:
ஹ‌ல்வா ப‌த‌த்திற்கு கிளற ஒரு க‌ண்டெயின‌ரில் போட்டு வைத்து பிள்ளை பெற்றவர்கள் தின‌ம் சாப்பிடும் போது முட்டையை அவித்து இத‌னுட‌ன் சாப்பிட‌லாம்.கர்ப்பபை புண்ணை ஆற்றும் பலம் பெற்ம். இதை காய்ச்ச முடியவில்லை என்றால் மருந்து சோறு போலவும் ஆக்கி சாப்பிடலாம்

இது குழந்தைபெற்றவர்களுக்கு, அபார்ஷன் ஆனவர்களுக்கு பூப்பெய்திய பெண்களுக்கு எல்லாம் செய்து கொடுக்கலாம்.இதற்கு தோசை, இடியாப்பம், ஆப்பம், பிரெட் எல்லாம் தொட்டு கூட சாப்பிடலாம்


இந்த மருந்து பொடி கிடைக்கும் இடம் சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் தாயார் மருந்து கடை ஜெயசந்திரன் டெக்ஸ்டைல் எதிரில்வுள்ளது
இது மருந்து சோறு ஸ்டெப் பை ஸ்டெப் அருசுவையில் கொடுத்துள்ளேன் பார்த்து கொள்ளவும்.

மருந்து சோறு

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி (அ) பொன்னி புழுங்கல் அரிசி - அரை படி - 400 கிராம் (நாலு ஆழாக்கு)
நல்லெண்ணை ( அ) சன் பிளவர் எண்ணை - 125 கிராம்
தேங்காய் - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 75 கிராம்
மருந்து பொடி - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்முட்டை - இரண்டு
வெல்லம் - கொஞசம்
உரித்த முழு பூண்டு - இரண்டு உப்பு - தேவைக்கு
பட்டை - இரன்டு அங்குலம் இரண்டு துண்டு
கிராம்பு - நன்கு
ஏலம் - இரண்டு

பச்ச மிளகாய் - இரண்டு

செய்முறை

1. தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.

2.தேங்காயை மிக்சியில் அரைத்து கொள்ளவேண்டும்.

3.அரைத்த தேங்காயை ஒரு வெள்ளை துணியில் வடித்து பிழிந்து பால் எடுக்கவும்.

4.அரிசி உளுந்தை ஒன்றாக ஊறவைத்து கொள்ள வேண்டும்.மருந்து பொடியை கடைசியாக எடுக்கும் தண்ணீர் தேங்காய் பாலில்கரைத்து வைத்து கொள்ள வேண்டும், பூண்டை உறித்து வைக்க வேண்டும்.முட்டை அடித்து வைக்கவேண்டும்.

5.ஒரு வாயகன்ற சாட்டியை காயவைத்து அதில் எண்ணையை ஊற்றி பட்டை ஏலம் கிரம்பு போட்டு வெடிக்க விட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு கொத்துமல்லி புதினா, பச்ச மிளகாயை ஒவ்வொன்றக போட்டு வதக்க வேண்டும்.

6.இப்போது கலக்கிய மருந்து பொடியை முதலில் ஊற்றி , உப்பு, மஞ்சள் தூளையும் சேர்க்க விடவேண்டும்.
7.கட்டியான தேங்காய் பாலை ஒன்றுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

8.கொதி வந்ததும் அரிசியை தட்டி , வெல்லம், உரித்துவைத்துள்ள பூண்டையும் போட்டு தீயை மித மாக வைத்து வேக விட வேண்டும்.

9. முக்கால் பாகம் வெந்துவரும் இப்போது தீயை குறைத்து விடவும்.


10.தம் போடும் கருவியை கேஸ் அடுப்பின் மேல் வைத்து தீயை சிம்மில் வைக்க வேண்டும்.

11. முட்டை நன்கு கலக்கி ஊற்ற வேண்டும்.

12. மருந்து சாதத்தை நன்கு பிறட்டி விட்டு சிறிது நேரம் வேக விட வேண்டும்.


12. மருந்து சாதத்தை நன்கு பிறட்டி விட்டு சிறிது நேரம் வேக விட வேண்டும்.மூடி போட்டு அடுப்பின் மேல் ஏற்றி மேலே ஒரு கணமான பாத்திரம் (அ) சூடான குழம்பு சட்டி வைக்கவேண்டும்.

13 சுவையான மருந்து சாதம் ரெடி.


குறிப்பு

**********

இந்த மருந்து பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் பெயர் காயப்பொடி. திருநெல்வேலி சைடில் தயார் செய்கிறார்கள்.இது பிள்ளை பிறந்த பிறகு இத்துடன் நிறைய பொருட்கள் சேர்த்து லேகியம் போல் செய்வார்கள்,இந்த பொடியில் சாப்பாடும் செய்வார்கள்.இது பிள்ளை பெற்றவர்களுக்கு செய்து கொடுப்பார்கள். வயிற்று புண்ணை ஆற்றும்.மற்றவர்களும் சாப்பிடலாம் இதற்கு தொட்டு கொள்ள மீன் குழம்பு,சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, பிளெயின் தால் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.இதற்கு பொன்னி புழுங்கல் அரிசியும் நல்ல இருக்கும்.


///இந்த காயப்பொடியில் உள்ள மருந்துகள் 12 வகை என்று அருசுவையில் கொடுத்துள்ளேன், அது 12 கிடையது, என் மாமியார் வந்திருந்த போது கேட்டு எழுதி வைத்துள்ளேன் , அதில் இருக்கும் பொடி வகைகள் மட்டும் சொல்கிறேன். இது மொத்தமா நாங்க வாங்கி வைத்து கொள்வோம், யாரும் வீட்டில் திரிபப்து கிடையாது. //


இதில் சேர்ந்துள்ள பொடிவகைகள்.
பட்டை = ஒரு பங்கு
அதில் பாதி சாலியல்
அதில் பாதி சரக்குப்பை
வெந்தயம்
மஞ்சள்

இதெல்லாம் நாட்டு மர்ருந்து கடைகளில் கிடைக்கும்.





கொசுறு தகவல்கள்: நம்ம மங்கு அமைச்சருக்கு ஸ்பெஷலா ஜெய்லானி கொசு முட்டையிலும், மரவட்டிலும் லேகியம் தயாரித்து கொடுப்பார்