Showing posts with label மனவேதனை. Show all posts
Showing posts with label மனவேதனை. Show all posts

Saturday, May 16, 2015

மரண அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்
என் மாமனார் (சேமர் அப்துல் காதர்) மே 5 ந்தேதி காலை 6 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள். 
ரஜப் 16 - 1436
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நாங்க ஊர் சென்று வந்தோம்
(பொறுமையின் சிகரம்,நடந்து சென்றால் பூமிக்கு கூட நோகாமல் நடப்பார். )
 எங்கள் அனைவருக்கும் குடும்பத்தார்க்கும் “ஸப்ரன் ஜமீலா” என்னும் அழகிய பொறுமையைக் கொடுத்தருள துஆ செய்யுங்கள்
//நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்.//
இறைவனிடம் அன்னாரின் மஃபிரத்துக்காக நானும் துஆ செய்கிறேன் நீங்களும் துஆ செய்யுங்கள். மறுமை நாளின் கேள்விகணக்கை எளிதாக்கி கப்ரின் அதாபிலிருந்தும் இடுக்கத்திலிருந்தும், பாதுகாத்து கப்ரில் வெளிச்சத்தையும, விசாலத்தையும் தந்தருள்வானாக.!! ஆண்டவன் அவர்களின் பாவங்களை ம்ன்னித்து ஜன்னத்துல் பிர்தவுஸில் நுழைய செய்வானக!!
மறுமை வாழ்வை வல்ல ரஹ்மான் சிறப்பானதாக்கி தருவானாக!!ஆமின்
எங்கள் ரப்பே அவர்களுக்காக எங்களின் து’ஆவை ஏற்றுக் கொள்வாயாக. அவங்க நோய்வாய்ப்பட்டு வருந்திய நொடிகளனைத்தையும் அன்னாரது மறுமையில் அமல்களாக மாற்றி ஷி’ஃபா தந்தருள்வாயாக. ஆமீன்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, December 19, 2011

பிஞ்சு குழந்தைகள் இழப்பு

zசின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்களை பார்த்து கொள்வதில் கூடுதல் கவனம் தேவை,



அந்த காலத்தில் எப்படியும் குழந்தைகளை பார்த்து கொள்ள கூட்டு குடும்பத்தில் நிறைய பேர் இருப்பார்கள்,. ஒருவர் வேலையா இருந்தால் மற்றொருவர் வைத்து கொள்வார்கள். ஆனால் வெளிநாடுகளுக்கு வருகிறவர்களுக்கோ எல்லாமே அம்மா அப்பா மட்டும் தான்..

எழுத நிறைய இருக்கு எதை முதலில் எழுதுவது.அதற்குள் கீழே உள்ள இந்த செய்தி ரொம்ப கலங்க வைத்து விட்ட்து. ஷார்ஜா, அபுதாபி சைட் எல்லாம் 16 அடுக்கு கட்டிடங்கள், 20 அடுக்கு இது போல் இருக்கும்.


சும்மா நாலாவது மாடியில் இருந்து எட்டி பார்த்தாலே தலை சுற்றும்.

இப்ப்டி வசிப்பவர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.


கடந்த டிசம்பர் 4 ந்தேதி சிரியன் நாட்டு 3 வயது பையன் ஷார்ஜாவில் 14 வது மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டான். இந்த செய்தி பார்ததிலிருந்து ஒரே மனகஷ்டம். நினச்சி நினச்சி ரொம்ப வே வேதனையாக இருந்த்து. குழந்தைகளுக்கு என்ன தெரியும்.அடிபடும் உயிரே போய் விடும் என்பது அதுக்கு தெரியுமா? 

பச்ச குழந்தை விழுந்து விட்ட்து என்றால் எப்படி யாராலும் ஜீரனச்சிக்க முடியும். அம்மா குழந்தை இருவரும் விளையாடி கொண்டி இருந்த போது படிக்கட்டில் விளையாட்டு சாமான்கள் போட்டு பையனும் அம்மாவும் பையன் போட அம்மா எடுதது வர விளையாடி கொண்டு இரு்ந்த போது விளையாட்டு சாமானை அம்மா எடுத்து வர சென்ற சமயம் தலையை கம்பி வழியா எட்டி பார்த்ததில் தவறி விழுந்து ஸ்பாட்லேயே குழந்தை..........

என்ன செய்ய யாரை குறை சொல்வது இதே போல் ஷார்ஜாவில் 19.11 அன்று 4 வயது பொண்ணு 15 வது மாடியில் இருந்து, 24.11 அன்று 3 வயது பையன் 14 வது மாடியில் இருந்து ,30.11 அன்று 4 வயது பையன் 16வது மாடியில் இருந்து தவறி விழுந்து இருக்கிறார்கள்.

எத்தனை பிஞ்சுகள் குழந்தைகள் இறப்பு.

இன்னும் எத்தனை இடங்களில் இப்படி நடந்து கொண்டு இருக்கோ.

யாரை குறை சொல்வது பிள்ளைகள் துடிப்பானவர்கள்.
குழந்தைகள் என்று வந்து விட்டால் வளர்ந்து அவர்களுக்கு புரியும் வரை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கனும்.

பிள்ளைகள் எதை செய்யவேண்டாம் என்று சொல்கிறோமோ அதை தான் முதலில் செய்வார்கள். பால்கனியில் எட்டி பார்க்காதே என்றால் கண்டிப்பாக எட்டி பார்ப்பார்கள்.

வீடு கட்டும் போது அந்த காலத்தில் குட்டி குட்டியா ஜாலி வைத்த்து போல் யாரும் உள்ளே வெளியே நுழையாத வண்ணம் கட்டுவார்கள்
இப்ப எல்லாமே அழகுகாக இடைவெளியிடன் கம்பிகள் போடும், வளைந்தபால்கனிகளும், மேல் திண்டு வழவழப்பாகவும் கட்டு கின்றனர்.

அடுக்குமாடி குடி இருப்புகளில் இருப்பவர்கள் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.


இங்குள்ள பால்கனி டோர் கள் கூட அப்படியே ஸலைட் போல் சார்த்தும் போது கொஞ்சம் தவ்றினால் கை விரல் நரம்பு கட்டாகும் அளவுக்கு ரொம்ப ஸ்ட்ராஙகாக இருக்கும்.

அம்மாக்கள் மேலும் ஒன்றும் குறை சொல்ல முடியாது குழந்தைகள் எந்த நேரத்தில் எபப்டி ரியாக்ட் கொடுக்கிறாங்கன்னு நம்மால் யூகிக்கவே முடியாது.

எல்லா பிள்ளைகளுக்கும் பால்கனியில் இருந்து எட்டி பார்க்க ரொம்பவே பிடிக்கும், நான் என் பசங்கள கண்னெதிரிலேயே தான் வைத்து கொண்டு சமைப்பது



ஆனால் பொதுவாக குழந்தைகள் அங்க கிங்க கொஞ்சம் நகர்ந்தாலும் கண்டிப்பாக அவர்களுக்கு எப்படி தான் கண்டு பிடிப்பார்களோ தெரியாது கூர்மையான விளையாட்டு பொருட்கள் கொண்டு கண்ணை குத்தி கொள்வது ஒருவருக்கொருவர் ச்ண்டையிட்டு் கடித்து வைப்பது, தள்ளி விடுவது , சாமான்களை தூக்கி முகத்தில் அடிப்பது இது போல் பல குழ்ந்தைகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.





இப்படி தான் போன வருடம் ஒரு பையனுக்கு கண்ணும் கருத்துமாக கையிலேயேதூக்கி கொண்டு வைத்திருப்பாங்க , அன்னைக்கு பார்த்து கிச்சனில் கூடவே வைத்து இருந்து மற்ற பிள்ளைகளுக்கு பாலை கரைத்து கொண்டு , சிறிய 2 வயது பையனுக்கும் பால் கரைத்து விட்டு தனக்கு பிலாக் டீ போட்டு டீ பேக்குடன் டம்லரை வைத்து விட்டு கை கழுவிட்டு வருவதற்குள் கீழே நின்று கொண்டு இருந்தவன் டீ பேக் தொங்குவதை பார்த்து பிடித்து இழுத்து விட்டான் அவ்வளவு தான் அரை நொடியில் ஒரு டம்ளர் கொதிக்கும் டீ முகத்தில் அப்ப்டியே குளிப்பது போல ஊற்றி கொண்டான் பையன் துடித்து விட்டான், அந்த பெண்ணும் பதறி விட்டால் இவ்வளவு நல்ல வைத்து இருந்தும் இப்படி நடந்து விட்ட்து. கடைசியில் ஹாஸ்பிட்டலில் வைத்து 3 மாதம் கழித்து சரியானது. ஆனால் திட்டியவர்கள் அவன் இழுக்கும் வரை இவள் என்ன செய்தாள் என தாயை தான் வசை, எந்த தாயாவாது இப்படி நடக்க நினைப்பாளா?

குழந்தைகள் விழியத்தில் யாராக இருந்தாலும் என்ன வேலையாக இருந்தாலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.


ஒன்னறை வருடம் முன் ஒரு வீட்டுக்கு போயிருந்த போது கையில் பெரிய க்ட்டு என்னன்னு கேட்டால் எலக்ரானிக் ஆனியன் சாப்பர் நிறைய பிளேட் உடன் கூடியது கடையில் இரு்ந்து வாங்கி வந்து பிரிச்சி பார்த்து அதை உள்ளே எடுத்து வைப்பதறகுள் கூர்மையான பிலேட எடுத்து உடனே கை விரல் வெட்டி கொண்டதாம். என்ன செய்வது பிள்ளைகள் துடுப்பானவர்கள்.

குழ்ந்தை வைத்து இருப்பவ்ர்கள் சில விஷியங்களை நினைவில் கொள்ளுஙக்ள்;

1. டிவி தானே பார்க்கிறார்கள் என்று நீங்க பாட்டு கிச்ச்னில் வேலை பார்க்காதீர்கள்.


2 பாத்ரூமில் போய் தண்ணிய திறந்து விடுறேன்னு ஹாட் வாட்டரை திறந்து விட நேரிடலாம்.

3. கிச்சனில் நின்று கொண்டிருந்தாலும் கத்தி போன்ற பொருட்களை கண் பார்வையில் வைக்காதீர்கள்.

4. மெயினா போன் வந்து விட்ட்து பேசி கொண்டு இருக்கும் போது சேட்டைகள் அதிகம் இருக்கும்



5. வெளியில் செல்லும் போது ரோடில் நடந்து போகும் போது கூட கை பிடித்து கொண்டு தான் வந்திருப்பார்கள் , ஒரு சனத்தில் கை உருவி கொண்டு ஓடுவார்கள். பிள்ளைகளை கூப்பிட்டு செல்லும் போது நாம ரொம்ப பராக் பார்க்க கூடாது.



6. மிக்சி மறந்து ஆனில் இருந்தால் நாமும் ஆன் பண்ணி பார்க்கலாமேன்னு டக்கு ஆன் செய்து சத்தம் வந்த்தும் பயத்தில் ஓடி விடும்.

7. அயர்ன் பாக்ஸ் அயர்ன் பண்ணுவதை பார்த்து கொண்டே இருந்து நானும் அயர்ன் பண்றேனே ஆன் செய்து ஒரு இட்த்தில் துணி கருகிவிட்ட்து, மற்றொரு வீட்டில் அப்ப்டியே தொடை அந்த குழந்தை வைத்து கொண்ட்து, இன்னும் ஒரு இட்த்தில் சோபாவ அயர்ன் பண்றென்னு அப்படியே உள்ளே வரை எரிந்து விட்ட்து என்றார்கள்.



8. சும்மா தூங்க வைத்து விட்டு கதவ சாத்தி விட்டு வேலை பார்த்து கொண்டு இருந்தாலும் உள்ளே அவர்கள் சத்தமில்லாம வொயர் பிளக் போன்றவைகளை குடைந்து கொண்டு இருப்பார்கள்.



ஓவ்வொன்றில் கண்டிப்பாக விழிப்புணர்வுடன் இருங்க,
வாழ்வில் குழந்தை செல்வம் தானே உலகத்திலேயே பெருஞ்செல்வம். அதை கண்ணும் கருத்துமாய் வளர்க்கவேண்டியது உங்கள் கடமை அல்லவா//

















Sunday, November 27, 2011

ஒரு சோக செய்தி

என் வாப்பாவின் கடைசி தம்பி முஸ்தபா சின்ன வாப்பா ஒரு வருடமாக சுகர் வந்தது தெரியாததால் கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு,  கிட்னி பிரப்ளத்தால் இப்ப கொஞ்சம் நாளா படுத்த படுக்கையாகி இன்று காலை . வருஷ கடைசி முஹரம் முதல் நாளில் 12.30 மணிக்கு வஃபாத்தாகிவிட்டார்கள்

///'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்.//

இறைவனிடம் அன்னாரின் மஃபிரத்துக்காக நானும் துஆ செய்கிறேன் நீங்களும் துஆ செய்யுங்கள்.
மறுமை நாளின் கேள்விகணக்கை எளிதாக்கி
கப்ரின் அதாபிலிருந்து  இடுக்கத்திலிருந்தும், பாதுகாத்து கப்ரில் வெளிச்சத்தையும, விசாலத்தையும் தந்தருள்வானாக.!!
ஆண்டவன் அவர்களின் பாவங்களை ம்ன்னித்து ஜன்னத்துல் பிர்தவுஸில் நுழைய செய்வானக!!

மறுமை வாழ்வை வல்ல ரஹ்மான் சிறப்பானதாக்கி தருவானாக!!ஆமின்

(சின்னடாடி 4 அண்ணன் தம்பிகளில் கடைகுட்டி நல்ல எல்லோரும் நல்ல உதவி செய்யும் குணம் படைத்தவர்.  படிப்பு முடித்ததும் சவுதி சென்று சிலகாலம் இருந்து மீண்டும் இந்தியா வந்து , மறுபடி சவுதி சென்ற்று சில வருடம் இருந்தார் , அப்பதான் சர்க்கரைவியாதி இருப்பது தெரியமலே இருந்து இருக்க்கு. ஊருக்கு வந்து செட்டில் ஆகும் போது செக் பண்ணிய போது தெரிந்து இருக்கு சுகர் லெவல் ஹை கிட்னிய பாதித்து விட்டது.ஒரு வருட காலம் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.)

(அண்ணன்கள் பெண்குழந்தைகள் அனைவரை பெற்ற பிள்ளைகள் போல கண்டிப்புடனும் பாசத்துடனும் பாதுகாத்தவர். எல்லோருக்கும் சின்னவாப்பான்னா தனி பிரியம். என் கணவர் சவுதி போயிருந்த போதும் எனக்கு ஹாஸ்பிட்டலுக்கு கூட வருவது பாஸ்போட் எடுக்க எல்லாம் உதவி செய்தது சின்ன டாடி தான்.)


சின்ன வாப்பாவை இழந்து வாடும் எங்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் ஆண்டவன் பொறுமையையும், மனதைரியத்தையும்,தாங்கிக்கொள்ள கூடிய சக்தியையும் கொடுப்பானாக!! ஆமின்










Tuesday, September 6, 2011

மருதாணி மோகம் ஏன் இப்படி?



மருதாணி மோகம் ஏன் இப்படி பெண்களை ஆட்டிப்படைக்குது.

மருதாணிய விரும்பாத பெண்களே கிடையாது, முன்பெல்லாம் கல்யானங்களுக்கு கல்யாண பெண்களுக்கு தான் கை முழுவதும் வைப்பார்கள், ஆனால் இப்ப சின்ன சின்ன விஷேசங்களுக்கெல்லாம் எல்லோரும் மருதாணியை விரும்பி கை முழுவதும் வைத்த் கொள்கின்றனர்.

மருதாணி பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று முன்பெல்லாம் உள்ளங்கையில் ஒரு ரவுண்டு ஷேப்பு, கை விரல்களில் தொப்பி இப்படிதான் வைப்பார்கள்
எனக்கு மருதாணி வைத்துகொள்ள் ரொம்ப பிடிக்கும்.
ஆனால் டிசைனோ சுத்தம் ஒன்றுமே தெரியாது, சின்னவயதில் என் தங்கைகளுக்கெல்லாம் நான் தான் வைப்பேன் ஆனால் நான் வைப்பது தான் டிசைன்.

ஆனால் அதே இப்ப காலம் மாறி போச்சு இப்ப ஊர் சென்றிருந்த போது ஆச்சரியம் என் தங்கை பெண்கள் மற்றும் என் நாத்தனார் பிள்ளைகள் எல்லாம் அடிச்சி தூள் கிளப்புறாங்க, சின்ன குட்டிகள் எல்லாம் என்னமா டிசைன் போடுறாங்க , என் கையையும் கொடுத்தேன், எனக்கு டிசைன் வைத்து முடிக்கும் வரை பொருமை இல்ல ஆண்டி அசைக்காதீஙக், கைய நேரா காட்டுங்கள், இன்னும் மாமி ஆட்டகூடாது. எப்பா எனக்கு பெருமையே போச்சு.

அதே போல் இப்ப இந்த ஈதுக்கு ஒரு கையில் எப்படியோ வைத்து கொண்டேன்.முதல் முறையா பொறுமையாக ஒரு டிசைன் போட்டேன், எனக்கே சந்தோஷம் தாங்கல



இது நான் கிறுக்கியது



இன்னொரு கையில் என் தோழி மகள் சாதியா போட்டுவிட்டால். ( அந்த டிசைன் இங்கு பதியவில்லை ) வலது கையில் கொஞ்சம் ஹனீஃப் போட்டு விட்டான்.


அவளுக்கும் என் கையில் டிசைன் போடுமுன் பத்து முறை ஆட்டி ஆட்டி அவளுக்கும் வைப்பதற்குள் போதும் போது என்று ஆகிவிட்டது.

சாதியா ரொம்ப சூப்பரா மருதாணி போடுவா . இது அவள் கையில் போட்ட டிசைன்.


இது இந்த தடவை போட்ட புது டிசைன்.


(பதிவு போட வந்ததோ மருதாணி டிசைன்கள் இந்த இரண்டு மாதமாக போட்ட்து சேகரித்துவைத்ததை ஆனால், கீழ் காணும் வீடியோ பார்த்ததில் மற்ற இன்னொரு பதிவும் சேர்ந்து கொண்டது)

சாதியா போட்ட டிசைனை வீடியோ எடுத்து போடலாமுன்னு எடிட் செய்து எல்லோருக்கும் விடியோ லிங்க் கொடுக்கலாம் என்று  அட கொடுமையே அங்கு இந்த விடியோ பார்க்க்க நேர்ந்தது .
கீழே உள்ள இந்த வீடியோ பார்த்ததும். சே ஏன் இப்படி மருதாணி மோகம் பெண்கள் இப்படி ஆட்டி படைக்குது.

ஏன் இப்படியும் மெகந்தி வைத்துகொள்ளனுமா? இந்த வீடியோவை பாருங்க

எவ்வளவோ பெண்கள் பியிட்டி பார்லர் இருக்கின்றன, நிறைய பெண்கள் வீட்டிற்கும் வந்து வைத்து விடுகின்றனர்.
மெகந்தி மேலே ரொம்ப கிரேஸ் உள்ளவர்கள் மெகந்தி கிளாஸ் போயும் கற்றுகொள்ளலாலே.நாமே வீட்டில் போட்டு கொள்ளலாமே//



இது ஆக்ராவில் நான் எடுத்த போட்டோ


போன வருடம் டெல்லி, ஆக்ரா, ராஜஸ்தான் போன போது ஆக்ராவில் இந்த வாலிப ஆண்கள் சின்ன பெண்களுக்கு மெகந்தி போட்டு விடுவத பார்த்து அதிர்ந்து போனேன், ஆனால் அதே போல் நம் தமிழ் பெண்களும் இப்படி முகம் தெரியதவனுடன் மருதாணிக்காக அதுவும் நல்ல டிசைனுக்கா ஒட்டி கொண்டு போட்டு கொள்ளனுமா என்ன?
வட இந்தியாவில் அங்குள்ள கலாச்சாரத்துக்கு எல்லோரும் டேக்கிட் ஈசியா எடுத்து கொண்டாலும், இங்கு தமிழ் பெண்களை இப்படி பார்ப்பது ரொம்ப வருத்தபடவைக்கிறது.யாரோ ஒரு முகம் தெரியாதவன் மெகந்தி போட்டு விடுகிறன், சின்ன சின்ன பதின்மவயது பெண்களும், கல்லூரி பெண்களும் இபப்டி ஒட்டி உட்கார்ந்து போட்டு கொள்வதை பார்த்தாலே முகம் சுளிக்க வைக்கிறது.
வட இந்தியாவில் இருந்து சென்னையில் கடை போட்டு அங்கிருந்தே மெகந்திக்கும் ஆட்களை கூப்பிட்டு வந்து கடை வாசலிலேயே கடைய போட்டு விடுகின்றனர்.


வெளியில் செல்லும் உங்கள் வீட்டு பிள்ளைகளை இப்படி மருதாணி போட்டு கொள்ள அனுமதிப்பீங்களா? இது தவறு அல்லாவா? இதனால் சில பேரை வழிதவறவைக்கும் இல்லையா?

டிஸ்கி: காண்டு பிடிச்ச அனானி உங்கள யாரும் இங்க வெத்தல பாக்கு வைத்து அழைத்தா , வந்துட்டு வயத்தெரிச்சல் பட்டு கொண்டு ஏன் வீனாக  கமெண்ட் போட்டுட்டு போறீங்க. ஹிஹி


Sunday, June 19, 2011

பிரிவின் துயரால்



//என் தந்தையே
இத்தனை வருடம்
எங்களோடு ஒன்றாக இருந்து
இன்று எங்களோடு இல்லாத 
உன் பிரிவின் துயரால் 
நாங்கள் வாடுகிறோம்




உன் நற்குணத்தை
சொல்ல வார்த்தைகள் இல்லை
தாய் சொல்லை தட்டாத
மகனாய்
உடன் பிறப்புகளுக்கு
அன்பான தந்தையாய்
மைத்துனிகளுக்கு பாசமான
சகோதரராய் இருந்தாய்

என் அன்னையை பூவினும்
மேலாக பாதுகாத்தாய்
ஐந்து வைரங்களையும்
ஒரு வைடூரியத்தையும்
அழகாய் பெற்றெடுத்தாய்
மிகவும் கண்ணியமான
முறையில் அனைவரையும்
கரைசேத்தாய்

தனக்கென எதையும்
பதுக்கவில்லை
பல  ஜோடிகளை
அன்பாக பேசி சேர்த்து வைத்தாய்
உற்ற நண்பர்களை
அன்பாய் நேசிப்பாய்

 நான் சோகமாக இருக்கும்
போது குரான் வசனத்தை
எடுத்துரைத்து தெளிவு
படுத்துவாய்
என் மகனுக்கு நல்ல
உபதேசம் செய்தாய்



பொறுமையின் சிகரமாய்
திகழ்ந்தாய்
அதிர்ந்து கூட ஒரு வார்த்தை
பேசியதில்லை
உற்றார் உறவினரை
கண்ணியப்படுத்துவாய்
அப்படி பட்ட என்
தந்தையை பிரிந்து
வாடுகிறோம்//


//என் தந்தையே
இத்தனை வருடம்
எங்களோடு ஒன்றாக இருந்து
இன்று எங்களோடு இல்லாத 
உன் பிரிவின் துயரால் 
நாங்கள் வாடுகிறோம்//


--ஆக்கம்
ஜலீலாகமால்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டாடி:ஜலீ ஜலீ ஜலீ ஜலீம்ம்மா ,

நான்:என்னங்டாடி , என்னங்டாடி

இனி யார் என்னை இப்படி கூப்பிடுவாங்க./

எப்போதும், முன்பெல்லாம் சிறு வயதில் வல வல ந்னு பேசிகொண்டே இருப்பேன், சிரித்து கொண்டே எல்லாத்தையும் கேட்டுட்டு கொஞ்சம் நேரம் தேய்ந்து போன ரெக்கார்ட ஆஃப் பண்ணு என்று கிண்டல் பண்ணுவார்கள்.
போனவருடம் இதே நாள் என் டாடியிடன் பேசினேன்,   ஜலீ ஜலீ நல்ல இருக்கீயா , அப்படி கேட்டதுமே ரொம்ப நல்ல இருக்கிறேன் என்ற தெம்பு வந்துடும்.ரொம்ப நேரம் பழைய கதைகளை பேசி கொண்டு இருந்தோம்.

எவ்வளவு தான் மனதை கட்டு படுத்தினால் நினைவுகள் டாடிய சுற்றி யே தான் இருக்கு.
ஒரு வேலையும் ஓட மாட்டுங்கிறது.

நான் சோகமா இருக்கும் போது போன் செய்தால் கீழே உள்ள வசனத்தை நினைவு கூறுவார்கள். இப்போதைக்கு என் டாடி சொன்ன இந்த துஆவை ஓதிக்கொள்கிறேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
////லா -யுகல்லி ஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா உஸ் அஹா லஹா மாகஸபத், வ அலைஹா மக்தஸபத், ரப்பனா லா துஆகிதனா இந்நஸீனா, அவ் அக்தஃனா , ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹூ அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாகதலனா பிஹி, வ வஃ ஃபு அன்னா, வஃக் ஃபிர்லனா, வர் ஹம்னா அன் த்த மவ்லானா ஃப்ன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்..///

///அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்பந்திப்பதில்லை. அது தேடிக்கொண்ட நன்மை அதற்கே-( பயனளிக்கும் அவ்வாறே) அது தேடிக்கொண்ட தீமை அதற்கே ( கேடு விளைவிக்கும்)


எங்கள் இறைவனே! நாங்கள் ( எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும், அல்லது ( அதில்) தவறிழைத்து விட்டாலும், ( அதைப் பற்றி) நீ எங்களை (க் குற்றம் ) பிடிககதே!
 எங்கள் இறைவனே ! நீ, எங்கள் மீது ( கடினமான கட்டளைகலை விதித்துப் ) பளுவான சுவையைச் சுமத்திவிடாதே!..
எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது ( கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு - ( சுமத்தாதே !)
எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத கஷ்டங்களை எங்கள் மீதுசுமத்திவிடாதே!எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக!
எங்களை பொறுப்பாயாக!எங்கள் மீது கருனை புரிவாயாக! நீ தான் எங்கள் இரட்சகன்! ஆகவே. ( என்னை) நிராகரிகும் ஜனங்கள் மீது (வெற்றி பெற ) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று பிராத்திப்பீர்களாக!)
 குர் ஆன் , 2: 286/////

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
”அன்று நீ “ அஸ்மாவின் இடுகையையும், சகோதரர ஆஷிக்கின்  வல்லையில், ஹாஜாவின் இடுகை // மரணம் முதல் மண்ணறை வரை என்ற இடுகையையும்  படித்தேன் என்னை நான் தேற்றி கொண்டேன்/இருந்தாலும் எங்களால் முடியல .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நீங்கள் முன் சென்றவர்களாக இருக்கீறீர்கள் நாங்கள் பின்வருகிறவர்களாக இருக்கிறோம், ஆண்டவன் அனை வரின் பாவத்தையும் மன்னிப்பானாக ஆமீன்!


இதெல்லாம் படித்து தேற்றினாலும் மறுபடி நினைவெல்லாம் வாப்பாவையே தான் என்னுது,

.உலகில் உள்ள அனைத்து தந்தைமார்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்



Thursday, May 26, 2011

பெருந்துயரஅறிவிப்பு

அன்பின் சகோதர சகோதரிகளே...


அனைவரின் அன்புக்கும் ஆளான நம் சகோ.ஜலீலா அக்காவின் தந்தையார் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு இருந்தனர். இந்த ஒரு வாரமாகதான் சிறு முன்னேற்றம் தென்பட்டிருந்தாலும் இன்று காலை இறைவனின் நாட்டப்படி இவ்வுலகை நீங்கிவிட்டார்கள்.  தந்தைக்காகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்காகவும், தந்தையை மிகவும் விரும்பிய, கடந்த சில நாட்களாகவே இதன்பொருட்டு மன உளைச்சலில் இருந்த சகோ. ஜலீலா அக்காவின் மனம் சாந்தி அடைவதற்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம்.


”இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்”

இறைவன் அன்னாரது சிறு பிழைகளையும், பெரும் பிழைகளையும் மன்னித்து, மக்ஃபிரத் அளித்து, குறையாத அவன் கருணையை பொழிந்து அன்னாரின் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்

அவரின் கப்ரில் விசாலத்தையும், வெளிச்சத்தையும் தந்தருள்வானாக. ஆமீன்

கப்ரின் வேதனையிலிருந்தும், அதன் நெருக்கத்திலிருந்தும் பாதுகாப்பளிப்பானாக. கேள்வி கணக்குகளை எளிதாக்குவானாக. ஆமீன்

மறுமை நாள் வரையிலும், தீர்ப்பு கூறும் அந்நாளிலும், அதன் பின்பும் எல்லா வேதனைகளிலிருந்தும் கடினங்களிலிருந்தும் காப்பாற்றி அருள்வானாக. ஆமீன்

அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் ஷிஃபா’அத்தை பெற்றுத் தருவானாக. ஆமீன்

மறுமை வாழ்வில் ஜன்னத்தையே பரிசாக தந்து ஜஹன்னத்திலிருந்து விடுதலை அளித்து ரட்சிப்பானாக. ஆமீன்

எங்கள் ரப்பே அன்னாருக்காக எங்களின் து’ஆவை ஏற்றுக் கொள்வாயாக. அன்னார் நோய்வாய்ப்பட்டு வருந்திய நொடிகளனைத்தையும் அன்னாரது மறுமையில் அமல்களாக மாற்றி ஷி’ஃபா தந்தருள்வாயாக. ஆமீன்

எங்களைப் படைத்து பாதுகாப்பவனே அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கும், மற்றும் அவரது உறவினர்களுக்கும் அமைதியையும், உன் கருணையையும் தந்தருள்வாயாக. ஆமீன்

ஜலீலா அக்காவின் மனதிற்கு தைரியத்தையும் இந்த துயரத்திலிருந்து மீண்டு வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியையும் தந்தருள்வாயாக. ஆமீன்

தூயோனே... உன்னிடத்திலிருந்தே வருகிறோம். இன்னும் உன் புறமே திரும்ப உள்ளோம். துயரம் சூழ்ந்த இந்த நொடிகளில் எங்களையும், எங்கள் ஈமானையும் பாதுகாப்பாயாக. ஆமீன், ஆமீன், யா ரப்பில் ஆலமீன்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.

Tuesday, April 5, 2011

என்னத்த சொல்வது


எல்லாம் எப்படி இருக்கீஙக் நலமா? இந்தமாதம் நான் ஊருக்கு போய்விட்டேன். எல்லாம் திடீர் திடீர் தான், என்னாடா இது பதிவு மட்டும் வருதே பதில் வரலையேன்னு நினைத்து இருப்பீங்க.

அப்பாவுக்கு தீடீருன்னு நடக்க முடியாம போச்சு, அதான் உடனே ஊருக்கு போய் விட்டேன்.

சவுதியில் 2003 யில் பத்து வருடம் வேலை பார்த்தார் அங்கு ஆயில் தடுக்கி ஸ்டோரில் கீழே விழுந்ததால் இடுப்பு எலும்பு முறிந்து விட்டது, ஸ்டீல் வைத்து ஆப்ரேஷன் செய்து சரியாகிவிட்டது. நல்ல நடக்க ஆரம்பித்து விட்டார்.

Monday, February 28, 2011

வேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று



நான் அறுசுவையில் முன்பு கொடுத்த15.01.2009 nil  வேப்பிலை இஞ்சி தினகரனில்  15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்பரில் சமையல் குறிப்பு அனுப்புகிறவர்களை விசாரித்து போட மாட்டார்கள் போல, பிரபலமான பேப்பர், நல்ல சமையல் கலை நிபுனர்களின் அனுமதியோடு போடலாமே. எந்த லூஸு திருடி அனுப்புதுன்னு தெரியல. திருடிய லூஸு என் பெயருடன் போட்டு இருந்தா  கொஞ்சம் திருப்திஅடையலாம்.


இங்கும் போய் பாருங்கள் காப்பி அடிச்சிட்டானுங்க திருந்தாத ஜென்மஙக்ள்


போன வாரம் இதை செய்து விட்டு பதிவு போடலாம் என்று வரும் போது தற்செய்லா தினகரன் பேப்பர செக் பண்ணும் போது இதுவும் அங்கு இருக்கு. இப்ப இந்த குறிப்ப போட்டா, அங்கிருந்து நான் காப்பி அடித்தமாதிரி இல்ல இருக்கும் சே சே ,,,

இது என் மாமியாரின் கை வைத்தியம்

இதில் எழுதியுள்ள டிப்ஸ் , 80% என்னுடைய சொந்த அனுபவ கருத்து 20 % மாமியார் சொன்னது.

.
குழந்தை வளர்பு டிப்ஸ், குழந்தைகளில் வயிற்றில் உள்ள பூச்சி அழிய/

குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதாலும். மண்ணில் கீழே கையை வைத்து விளையாடுவதாலும் வயிற்றில் பூச்சிகள் இருக்கும் , பூச்சி இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது, முகத்தில் ஆங்காங்கே தேமல் இருந்தால் , சாப்பாடு சரியாக உட்கொள்ளமல் இருந்தால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும்.

அதற்கு 6 மாதம் ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிம் காண்பித்து கொடுப்பது நல்லது,
இதே இயற்கை உணவு முறையிலும் நாம் இதை வெளியேற்றலாம், குழந்தைகள் என்றில்லை, பெரியவர்களும் எல்லாருக்குமே இந்த மருந்து `மிகவும் உகந்தது.

இது என் இரண்டாம் முறை தயாரிப்பு செய்முறை - 2




தேவையானவை

இஞ்சி - 100 கிராம்
வேப்பிலை - ஆய்ந்து கழுவியது கைக்கு ஒரு கைப்பிடி
தேன் தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிக்கை
சர்க்கரை சிறிது

செய்முறை

வேப்பிலையையும் , இஞ்சியை தோல் நீக்கி பொடியாக அரிந்து சுத்தம் செய்த வேப்பிலையுடன் சேர்த்து உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்து டீ வடிகட்டியில் பிழிந்து வடிகட்டவும்.

வடித்த ஜூஸை அப்படியே 15 நிமிடம் வைக்கவும், அடியில் நஞ்சு தங்கி இருக்கும், மேலோடு தெளிந்த சாறை மட்டும் எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.

குறிப்பு

ஆறு முதல் 9 மாத குழந்தைகளுக்கு அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைபட்டால் படத்தில் காட்டியுள்ள சங்கில் அரை சங்கு ஊற்றலாம்

9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 சங்கு முழுவதும் கொடுக்கலாம்
அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் 2 , 3 சங்கு (அ) கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொள்ளவும்.

பெரியவர்கள் அவ்வளவா தேவையில்ல மூக்க மூடிட்டு பல்லுல படமா முழுங்கிடுங்க..

இப்படி சாறு எடுக்க முடியாதவர்கள் வேப்பில்லையை பொடித்து வைத்து சுக்குதூள் கிடைக்குது அதையும் வாங்கி கலந்து தேன் கலந்து குடிக்கலாம் ,

( மேலும் இது சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தும், உடலில் ரத்தத்தில் அள்வு கம்மியாக இருந்தால் அதை அதிகரிக்கவும் வேப்பிலை அருமருந்து)


ஆறுமாதம் என்றில்லை அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.
அதே போல் பூப்பெய்திய பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து.

அபார்ஷன் ஆகி கட்டி தங்கி விட்டால் கூட இதை இரண்டு முன்று முறை குடித்து விட்டு கருதரித்தால் மிகவும் நல்லது.வயிற்றில் மீதி தங்கிய அழுக்குகளும் வெளியாகிடும்.

2 மாதம் , முன்றுமாதம் (அ) கர்பிணிபெண்கள் சாப்பிடவேண்டாம்.

கர்ப்பம் தரிக்கும் முன், (அ) குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.



  • மற்றொரு முறை 

    இது என் தங்கை பசீரா செய்வது

    இஞ்சி சாறு தனியாக எடுத்து நஞ்சு எடுத்து வடித்து வைக்கவும்.
    வேப்பிலையை தனியாக அரைத்து சாறு எடுக்கவும்.
    இரண்டையும் கலந்து தேன் ,உப்பு, சர்க்கரை சேர்த்து கொடுக்கவும்

    இஞ்சி சாறு முறையை இங்கு சென்று பார்க்கவும்.


டிஸ்கி : கொஞ்ச நாள் பதிவு போடுவதை நிறுத்திட்டு இப்படி செக் பண்ண இனையம் மூலம் சம்பாதிக்க, சில பேர் நானும் வெப்சைட் ஆரம்பிக்கிரேன்னு ஆரம்பிச்சிட்டு பழியா ஓவ்வொரு இடமா போய் களவெடுத்து போடுகிறார்கள்.

தோழி சுந்தராவின் கவிதை  கீற்று.காமில் வெளியாகி உள்ளது வாழ்த்து தெரிவிக்க அங்கு போனா ச்மையல் பகுதிய கிளிக் செய்தால்
 என் ஆம்பூர் பிரியாணிய அட்டு காப்பி, இன்னும் என்ன என்னன்னு செக் பண்ணா பீபீ எகிறிடும் போல. இதுபோல் ஆளாளாக்கு செய்தால் குறிப்பு போடவே பிடிக்கல, சில பேருக்கு உத்வுதேன்னு போட்டா இந்த களவாணி பசங்கள என்ன செய்வது,
கிற்று இங்க போய் பார்க்கவும், எனக்கு தெரிந்து அங்குள்ள சமையல் குறீப்புகள் எல்லாமே காப்பிஅடிக்கப்பட்டவைதான். 









Saturday, November 6, 2010

எந்த திருடி எந்த திருடனுன்னு தெரியலையே



எந்த திருடி எந்த திருடனுன்னு தெரியலையே இந்த் அனியாயத்த கேட்க யாரும் இல்லையா?

என் குறிப்ப எங்கு பார்த்தாலும் அப்பட்டாமா அப்படியே காப்பி அடிச்சி வைத்து இருக்காங்களே
இதற்கு முன் சுவையோ சுவைன்னு முன்று பேர் சேர்ந்து பிளாக் ஆரம்பித்து, என் அறுசுவை குறிப்புகள், தமிழ் குடும்ப குறிப்புகள் , பிளாக் குறிப்புகள் அனைத்தையும் காப்பி அடிச்சி போட்டு இருந்தாங்கள்

இப்ப தமிழ் சமையலுன்னு பிலாக் பெயர் , தமிழ் செஃப் ந்னு போட்டு மறுபடி எல்லா குறிப்பையும் எடுத்து ஒன்று விடாம போட்டு வைத்து இருக்க்காங்களே/


அட காப்பி அடிச்ச லூசுகளா சோத்துல உப்பு போட்டு தானே சாப்பிடுரீங்க
எத்தனை தடவை சொல்வது இப்படி போட்டோ முதல் கொண்டு என் குறிப்புகளை அப்படியே எடுத்து போட்டு இருக்கீஙக், அறிவில்ல. நான் பிழையா எழுதியதையும் அப்படியே காப்பி அடிச்சி இருக்கீங்களே.


யாரது இதற்கு முன் பதிவு திருட்டு செய்த அதே கும்பலா?


எல்லோரும் இப்ப நான் கொடுத்துள்ள லிங்க பாருங்கள் யாருன்னு கண்டு பிடிக்க முடியுதா?

தமிழ் சமையல் தழிழ்செஃப் ஆம் இவங்க
மண்ணின் மைந்தன் தூத்துக்குடியில் இருந்து

அன்னு வெண்டைக்காய் குறிப்பு தேட போன இடத்தில் இப்படி தெரியவந்து அன்னு சொல்ல போய் தான் தெரிந்த்து.

இதில் என் குறிப்பு மட்டும் இல்ல, மற்றவர் (தோழி) களுடையதும் இருக்கு,

லூசுங்க திருந்தாத ஜென்மங்க்ள்.

முடிந்த வரை பாதிக்க பட்டவர்கள் அங்கு போய் கும்முங்கள்





இதுல தமிழ் செஃப்னு வேற பேரு வேற பிளாக்க்கு.
நீ உண்மையான தமிழ் செஃப்பா இருந்தா . செய்து உங்கள் சொந்த போட்டோவ போடுங்கள்.


டிஸ்கி:
இனி என் குறிப்புகளில் உள்ள அனைத்து குறிப்புகளில் பெயர் மாற்றம் செய்து என் பிளாக் பெயரையும் மாற்றி போட போகிறேன்.


Sunday, May 23, 2010

எதுவும் நம் கையில் இல்லை

நேற்று நடந்த விமான விபத்து ரொம்பவே மனதை பாதித்து விட்டது.எனக்கு மட்டும் அல்ல இந்த செய்திய கேட்ட அனைவருக்கும். ஒரு அதிர்ச்சி தான்.
நேற்று முழுவது ஒன்றுமே ஓடல,மனசும் சரியில்லை.
இதில் கேரி போரில் வேலை பார்க்கும்,ஒரு கவுண்டர் சேல்ஸ்மேன் லீவே தர மாட்டேன் என்று சொன்ன மேலாளரிடம் ரொம்ப வாதாடி லீவு கேட்டு ஊருக்கு சென்றாராம், இப்ப அவரும் இல்லை.
புஜேரா ஹாஸ்பிட்டலில் உள்ள டாக்டர் தம்பதிகள் அவர்களும் இந்த விபத்தில். என்னத்த சொல்வது. ஹர்ஷினி இங்கு எங்க பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் , பெண்கள் படித்த பெண்ணாம்.இதை பற்றி சுந்தரா போட்டு இருகிறார்கள். இங்கு சென்று படிக்கவும். இன்னும் பல நம் மக்கள்.
நேற்று இரவு ஏர்போட்டில் காத்திருந்த போது காலை நடந்த விபத்தில் மடிந்தவர்க்ளை பற்றியே மனம் நினைத்தது. ரொம்ப வேதனையா இருந்தது. என்னால் பதிவு போட கூட முடியல.

நேற்று காலை தான் என் பையனும் ஊரிலிருந்து கிளம்பினான், இரவு அவன் வந்து சேரும் வரை மனம் படப்படப்பாவே இருந்தது.பையன் நல்ல படியாக வந்து சேர்ந்தான்.

இன்று நாம் இருக்கிறோம், நாளை என்ன நடக்கபோகுது என்பதை இறைவன் தான் அறிவான், எதுவும் நம் கையில் இல்லை, அவன் அன்று ஒரு அனுவும் அசையாது.

என்றும் பிரத்தனையோடு ஏக வல்ல இறைவனை வேண்டுவோம்.
என் பசங்க,வெளியில் கிளம்பும் போது அடிக்கடி சொல்வேன்,
அல்லாவுடைய காவல் சொல்லிட்டுபோமா, ஆயர்த்தில் குர்ஸி ஓதிட்டு போமா என்பேன்/
இந்த துஆவை அடிக்கடி ஓதிக்கொள்ளுங்கள்/
"யா அல்லாஹ்!உய‌ர‌த்திலிருந்து கீழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இற‌ப்ப‌தை விட்டும், ம‌ர‌ண‌ நேர‌த்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவ‌தை விட்டும் உன்னுடைய‌ பாதையில் (போர் செய்யும் போது) புற‌முதுகு காட்டி ஓடி இற‌ப‌ப்தை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்."

Tuesday, February 16, 2010

என் பதிவுகள் தினகரனிலும்



ஆனந்த விகடனை தொடர்ந்து பதிவர்களை ஊக்கிவிக்கும் விதமாக தினகரன் செயல் பட்டு வருகின்றது - மிக்க நன்றி.
என் குறிப்புகள் எல்லாம் என் பெயர் இல்லாமல் அங்கும் இருக்கு, ஆனால் நான் அனுப்பல யார் அனுப்பினாங்கன்னும் தெரியல. யாரையும் திட்ட முடியல அதான் நன்றி சொல்லிகொள்கீறேன்.


என்னுடைய பதிவான குழந்தைகளுக்கு டென்ஷன் வந்தால் இதை
தினகரன் வெளியிட்டு இருக்கின்றது.



என் குறிப்புகளை பிரபல நாளிதழ் தினகரனில் வெளிவந்துள்ளது ரொம்ப சந்தோஷம், உடனே என் தோழிகள் தினகரனுக்கு எப்படி குறிப்புகளை அனுப்பனும் என்றூ கேட்கிறார்கள்.

எனக்கும் ஒரு மடல் அனுப்பி தெரிவித்தால் மிக சந்தோஷமடைவேன்.
அப்படியே கீழே என் பெயரையும் போட்டு இருக்கலாம்.

இந்த டிப்ஸ் தமிழ் குடும்பத்திலும் கொடுத்துள்ளேன்.அதை இங்குசென்று படித்து கொள்ளலம்
குழந்தைகளில் விரல்கள் வலுவடைய‌
இது தினகரனில்

குழந்தைகள் திடீரென அழுதால்
இது தினகரனில்


மேலும் என் சமையல் குறிப்புகள்
சீலா மீன் பிஸ்கேட்
காக்டெயில் ஜூஸ்
இதை யார் அனுப்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

Saturday, January 23, 2010

பதிவு திருட்டு ஆகையால் குறிப்பு போட பிடிக்கல.


என் குறிப்புகளை பிரப‌ல தளங்களுக்கு அனுப்பட்டு அங்கு இப்போது போடப்பட்டுள்ளது. நான் ஒரு வருடம் முன் கொடுத்த குறிப்புகளை, இப்போது முடிந்த டிசம்பரில் போடப்பட்டுள்ளது.


ஏற்கனவே அருசுவை, தமிழ்குடும்பம்,சமையலறை, இப்ப பிலாக்கில் உள்ளதையும். பிரபல தளம் மற்றும் சில பேர் பிலாக்குகளில் காப்பி செய்து போட்டுள்ளார்கள்.


இதே முன்று பெண்கள் சேர்ந்து அனைத்து குறிப்புகளையும் எடுத்து ஒரு தளம் போல் ஒரு பிலாக் ஆரம்பித்து போட்டுள்ளார்கள்.


இன்னும் யார் யாரெல்லாம் எடுத்து இப்படி போட்டு வைத்துள்ளார்கள்.என்று தெரியவில்லை.

நிறைய குறிப்புகள் போட்டு வைத்தும் பப்லிஷ் பண்ண மனசு வரல./