1. காஞ்சிபுரம் இட்லி
2.சாம்பார்
3. தக்காளி சட்னி
4.தேங்காய் சட்னி
5. கொள்ளு இட்லி
தேவையானவை
இட்லி அரிசி - ½ கப் (100 கிராம்)
பச்சரிசி – ½ கப்
உளுந்து – ½ கப்
வெந்தயம் – ½ தேக்கரண்டி
இட்லி சோடா – 1
சிட்டிக்கை
உப்பு தேவைக்கு
தாளிக்க
நெய் – 1 மேசைகரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
சீரகம் – 1
தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
ஊறவைத்த கடலை பருப்பு
– 2 மேசைகரண்டி
கொர கொரப்பாக பொடித்த
மிளகு – ½ தேக்கரண்டி
பொடியாக அரிந்த
முந்திரி – 2 மேசைகரண்டி
பொடியாக அரிந்த பச்ச
மிளகாய் – 1
பொடியாக அரிந்த
தேங்காய் – 1மேசைகரண்டி
துருவிய இஞ்சி – 1
தேக்கரண்டி
செய்முறை
உளுந்து + வெந்தயம் தனியாகவும்,
அரிசியை தனியாகவும் 4 லிருந்து 5 மணி
நேரம் ஊறவைக்கவும்.
மிக்சியில் அல்லது
கிரைண்டரில் முதலில்வெந்தயம் + உளுந்தை நல்ல் மையாக அரைத்து எடுத்து விட்டு
அரிசியை கொஞ்சம் கொர கொரப்பாக (முக்கால் பதம்) அரைத்து 8 மணி நேரம் புளிக்க
விடவும்.
மாவு பொங்கியதும்
உப்பு + இட்லி சோடா கொஞ்சமாக
தண்ணீரில் கலக்கி மாவுடன் சேர்த்து கலக்கி நன்கு கிளறவும்.
தாளிக்க கொடுத்துள்ள
பொருட்களை தாளித்து இட்லிமாவுடன் கலக்கவும்.
இட்லி தட்டில் நெய்
அல்லது எண்ணை தடவி 10 நிமிடம் அவித்து எடுக்கவும்.
இதற்கு தொட்டுகொள்ள
இட்லி பொடி, தக்காளி சட்னி , தேங்காய் சட்னி, சாம்பாருடன் சாப்பிட அருமையாக
இருக்கும்.
Linking to faiza's
Passion on Plate
gayathiri's walk through memory lane