| Tweet | ||||||
Showing posts with label மாலைநேர சிற்றுண்டி. Show all posts
Showing posts with label மாலைநேர சிற்றுண்டி. Show all posts
Sunday, April 28, 2019
பொன்னாங்கண்ணி கீரை பக்கோடா - Ponnaanganni kiirai pakoda
பொன்னாங்கண்ணி கீரை கண்பார்வைக்க்கு மிகவும் நல்லது. முடிவளர இதை எண்ணையில் சேர்த்து காய்ச்சி தேய்க்கலாம்.
பொன்னாங்கண்ணி கீரை பக்கோடா
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 3 (நீளவாக்கில் நறுக்கியது)
பூண்டு – 3 பெரிய பல் (தட்டியது)
இஞ்சி – 1 தேக்கரண்டி (துருவியது)
பச்சமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கடலை மாவு – 175 கிராம்
வறுத்த ரவை – 25 கிராம்
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை சிறிது
பொன்னாங்கண்ணி கீரை – ஒரு கட்டு
முந்திரி – 5 பொடியாக அரிந்தது
எண்ணை – ஒரு தேக்கரண்டி
எண்ணை – பக்கோடா பொரிக்க தேவையான அளவு
செய்முறை
பொன்னாங்கன்னி கீரையை நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் வெங்காயம் , பூண்டு, இஞ்சி,பச்சமிளகாய் , உப்பு, முந்திரி எண்ணை அனைத்தையும் சேர்த்து நன்கு பிசறவும்.
கடைசியாக கடலை மாவு + ரவை சேர்த்து லேசாக கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.
எண்ணையை காயவைத்து மிதமான தீயில் பிசறிவைத்த பக்கோடா கலவையை சிறிது சிறிதாக போட்டு கருகாமல் சிவற பொரித்து எடுக்கவும்.
அவள் விகடனில் 2017 வந்த என் ரெசிபி இது.
(மாலை நேர சிற்றுண்டி என்றில்லை பகோடாவை ரசம் சாத்ததுடன் மதிய உணவுக்கும் சாப்பிடலாம், அப்படி செய்யும் போது ஆரோக்கியமாக அதில் நம் தேவைக்கு கிடைக்கும் ஹெல்தியான கீரைவகைகளை சேர்த்து செய்து சாப்பிடலாம்.)
Sunday, December 9, 2018
ஸ்பினாச் (பாலக்) பகோடா - Palak Pakoda
ஸ்பினாச் பகோடா
பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் #பகோடா, #வெங்காய பகோடா தான்..அதையே நாம் இன்னும் சுவையாக ஹெல்தியாக நாம் வீட்டில் காய்கறிகள் ( முட்டைகோஸ், சுரைக்காய்,கீரைவகைகள் ( பொன்னாங்கண்ணி, பாலக்கீரை,முருங்ககீரை, வெந்தய கீரை இது போல பல வகை கீரைவகைகள் சேர்த்து ஹெல்தியாக செய்யலாம். தேவையானவை
ஸ்பினாச் – ஒரு கட்டு
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
பூண்டு – இரண்டு பல்
பெருங்காயம் – ஒரு சிட்டிக்கை
உப்பு –¾ தேக்கரண்டி (அ) தேவைக்கு
ரெட் கலர் – ஒரு சிட்டிக்கை (விரும்பினால்)
பொடியாக அரிந்த வெங்காயம் – ஒன்று
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
தண்ணீர் – 2 மேசைக்கரண்டி
எண்ணை பொரிக்க தேவையான அளவு
செய்முறை
எண்ணையை தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து பொருகளையும் கட்டியாக பிசைந்து சிறு
சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.எண்ணையை காயவைத்து உருண்டைகளை மிதமான
தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
| Tweet | ||||||
Saturday, December 8, 2018
முருங்ககீரை முந்திரி பகோடா
இது போட்டோ சரியாக வரவில்லை , பிறகு மறுபடி செய்தால் மாற்றுகிறேன்/
பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் பகோடா, வெங்காய பகோடா தான்..அதையே நாம் இன்னும் சுவையாக ஹெல்தியாக நாம் வீட்டில் காய்கறிகள் ( முட்டைகோஸ், சுரைக்காய்,கீரைவகைகள் ( பொன்னாங்கண்ணி, முருங்ககீரை, வெந்தய கீரை இது போல பல வகை கீரைவகைகள் சேர்த்து ஹெல்தியாக செய்யலாம்.
மொரு மொரு முருங்கக்கீரை பகோடா.
Crispy Moringa pakoda
நோன்புகலத்தில் நோன்பு கஞ்சிக்கு ஏற்ற சூப்பரான ஈசி சிற்றுண்டி
முருங்ககீரை முந்திரி பகோடா
தேவையான பொருட்கள்
கடலை மாவு - ஒரு டம்ளர்
அரிசி மாவு - கால் டம்ளர்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
டால்டா - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - அரை கைப்பிடி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - மூன்று
முந்திரி - ஐம்பது கிராம்
முருங்கக்கீரை – ஒரு டம்ளர்
தண்ணீர் - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முந்திரிப் பருப்பை லேசாக இரண் டாக பிளந்துவறுத்து கொள்ள வேண் டும்.
உப்பு, சோடா உப்பு, கடலை மாவை, மிளகாய் தூள்ஒன்றாக கலக்கி அதி ல் டால்டாவை சூடுப்படுத்திஊற்றி , பச்சைமிளகாய், முருங்க்ககீரை, கறிவேப்பிலையை பொடியாக அரிந்து போட்டு,வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு வறுத்தமுந்திரி பருப்பையும் சேர்த்து கெட்டியா க பிசறிகொள்ளவும்.
மாலை நேர சிற்றுண்டி,Street Food with healthy cooking,Drumstickleavespakoda,Moringa pakoda
| Tweet | ||||||
Friday, November 16, 2018
வெந்தய கீரை சுரைக்காய் பகோடா
வெந்தய கீரை சுரைக்காய் பகோடா
வெந்தய கீரை வயிற்று புண்ணிற்கு மிகவும் நல்லது, கசப்பாக இருக்கும் இதை பருப்புடன் சமைப்போம் , இப்படி பகோடாவாக செய்யும் போது நீர்காயான சுரைக்காய் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து கொண்டால் அருமையாக பகோடா வாக சாப்பிடலாம்.
வெந்தய கீரை – சிறிய கட்டு
சுரைக்காய் – அரை கப் துருவியது
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு 50 கிராம்
மிளகாய் தூள் – அரை தேக்க்ரண்டி
இஞ்சி துருவியது -1 மேசைகரண்டி
சர்க்கரை – அரை தேக்க்ரண்டி
உப்பு – தேவைக்கு
பச்ச மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை (தேவைப்பட்டால்)
செய்முறை
ஒரு வாயகன்ற பேசினில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும். தண்ணீர் சேர்க்கதேவையில்லை, சுரைக்காயில் உள்ள தண்ணீரே போதுமானது.
வானலியில் எண்ணையை காய வைத்து மிதமான தீயில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு கருகாமல் பொரித்து எடுக்கவும்.
சுவையான சத்தான சுட சுட பகோடா ரெடி, மாலை நேர சிற்றூண்டி அல்லது கால நேரம் உப்புமாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
மொரு மொரு பகோடா
| Tweet | ||||||
Thursday, May 17, 2018
ஈசியான முன்று வகை மாலை நேர சிற்றுண்டி - Quick and easy Evening Snacks for kids
எல்லா அம்மா மார்களுக்கும் பள்ளிவிட்டு வரும் பிள்ளைகளுக்கு மற்றும் பள்ளி விடுமுறையில் ஆட்டம் போட்டு வரும் பிள்ளைகளுக்கு என்ன டிபன் செய்து கொடுப்பது என்று மண்ட காயுதா, வாங்க சுலபமாக முன்று வகையான ஈசி மாலை நேர சிற்றுண்டியை சமையல் அட்டகாசங்கள் யுடியுப் சேனலில் பார்க்கலாம்,.
இது வரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து பக்கத்தில் உள்ள பெல் பட்டனையும் கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ரெசிபி - 1
சால்டட் பிஸ்கேட் சாண்ட்விச்
சால்டட் பிஸ்கேட் – 6
கேபேஜ் – 3 மேசைகரண்டி துருவியது
கேரட் – இரண்டு மேசைகரண்டி துருவியது
கேப்சிகம் – ஒரு தேக்கரண்டி
மையன்ஸ் அ ஏதாவது ஒரு ஸ்ப்ரெட் – முன்று மேசைகரண்டி
பெப்பர் – ஒரு பின்ச்
சால்ட் - சிறிது
லெமன் – அரை டீஸ்பூன்
சுகர் – அரை டீஸ்பூன்
மில்க் – ஒரு தேக்கண்டி
செய்முறை
பிஸ்கேட் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பவுளில் கலந்து பிஸ்கேட்டில் வைத்து பிள்லைகளுக்கு சாண்ட்விச் போல செய்து கொடுக்கவும்.
ரெசிபி - 2
கார்ன் வேகவைத்தது அல்லது ரெடி மேட் டின் 100 gram
பட்டர் – ஒரு தேக்கரண்டி
பெப்ப்ர் சால்ட்
ஒரிகனோ – அரை தேக்கரண்டி
சில்லி பொடி – கால் தேக்கரண்டி
சால்ட்
கார்னில் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்த்து கலக்கி பிள்ளைகளுக்கு கொடுக்கவும்.
ரெசிபி - 3
ஹனி பிளேவர் நெஸ்ல் கிரீம்
புரூட் டின் (அ) ப்ரஷ் ப்ரூட்
சாப்ரான்
தேன்
சீசன்களில் கிடைக்கும் பழங்கள் (மாம்பழம், ஆப்பிள், அன்னாசி ,வாழைபழம் செர்ரி) போன்றவைகளை பொடியாக நறுக்கி அதில் நெஸ்ஸில் கிரீம், சாப்ரான் தேன் கலந்து கொடுக்கவும்.
முன்று விதமான ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு ரெடி.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
| Tweet | ||||||
Labels:
குழந்தை உணவு,
மாலைநேர சிற்றுண்டி,
வீடியோ சமையல்
Tuesday, February 27, 2018
Cabbage urad dal Medu Vada /Vada Recipes/Uzhunthu Vada in Tamil Samaiyal...
ப்ளைன் உளுந்து வடையும் , கேபேஜ் உளுந்து வடையும்.
சாதாரணமாக நாம உளுந்து வடை செய்வதை விட அதில் கேரட், கீரை, முட்டை கோஸ் போன்ற ஏதேனும் ஒருகாய் வகையை துருவி சேர்த்து குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் அல்லது ஒரு மீலாகவேகொடுக்கலாம்..
உளுந்து இடுப்பெலெம்பை பலப்படுத்தும் குழந்தைகளை
காய் சாப்பிட வைத்தது போலவும் ஆயிற்று.
இங்க பிலாக்கில்நிறைய உளுந்து வடை தயிர் வடை , உளுந்து வடை டிப்ஸ் நிறைய கொடுத்துள்ளேன் அந்த லின்ங் எல்லாம்
கிழே கொடுக்கிறேன்.
http://samaiyalattakaasam.blogspot.ae/2009/08/blog-post_29.html
வீடியோவை பாருங்கள் கமென்ட் லைக் பண்ணி சப்ஸ்கிரைப் செய்யுங்கள் , உங்கள் நண்பர்களுக்கு ஷேர்செய்யுங்கள்
உளுந்துவடை டிப்ஸ்
http://samaiyalattakaasam.blogspot.ae/2014/10/dill-leaves-vadai.html
Link - Curd Vadai
http://samaiyalattakaasam.blogspot.ae/2013/07/curd-vadai.html
பாரம்பரிய சமையல்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
| Tweet | ||||||
Sunday, June 4, 2017
சிக்கன் கேரட் சமோசா Chicken Carrot Samosa
சிக்கன் கேரட் சமோசா
சிக்கன் கேரட் சமோசா
தேவையான பொருட்கள்
பில்லிங் தயாரிக்க
சிக்கன் = கால் கிலோ
கேரட் = கால் கிலோ
வெங்காயம் = கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி
கொத்து மல்லி தழை = அரை கட்டு
பச்ச மிளகாய் = இரண்டு
தக்காளி = ஒன்று சிறியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி
கொத்து மல்லி தழை = அரை கட்டு
பச்ச மிளகாய் = இரண்டு
தக்காளி = ஒன்று சிறியது
தயிர் = ஒரு தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
உப்பு = தேவைக்கு
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா பொடி = அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
சீரக தூள் = அரைதேக்கரண்டி
கரம் மசாலா பொடி = அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
சீரக தூள் = அரைதேக்கரண்டி
மாவு தயாரிக்க:
மைதா மாவு = கால் கிலோ
பொடி ரவை = ஐம்பது கிராம்
டால்டா (அ) பட்டர் உருக்கியது இரண்டு மேசை கரண்டி
உப்பு தேவைக்கு
பேக்கிங்க பவுடர் = அரை தேக்கரண்டி
சர்க்கரை = இரண்டு தேக்கரண்டி
மாவு தயாரிக்க கொடுத்துள்ளவைகளை அனைத்தையும் ஒன்று சேர்த்து மாவு குழைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
வெங்காயம் பச்ச மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும்,கேரட்டை பூந்துருவலாக துருவி கொள்ளவும்.சிக்கனை கழுவி மிக்சியில் கீமா போல் திரித்து கொள்ளவும். கொத்துமல்லி தழையை மண்ணில்லாமல் கழுவி நல்ல பைனாக சாப் செய்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற நான்ஸ்டிக்கில் எண்ணை ஊற்றி வெங்காயம் பச்சமிளகாய் , கேரட் சேர்த்து வதக்கவும்.அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிது கொத்து மல்லி, சிக்கன் சேர்த்து வதக்கவும். அடுத்து தூள் வகைகள் (மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு தூள், சீரக தூள்) சேர்த்து தயிரையும் சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் வேக விடவும்.
சிக்கன், கேரட் எல்லாமே துருவி இருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும்.
கடைசியாக கொத்துமல்லி தழை கரம்மசாலா தூவி கிளறி இரக்கி ஆற வைக்கவும்.
சமோசா ஷீட் செய்ய
பூரிக்கு உருண்டை போடும் அளவிற்கு உருண்டைகளை போட்டு மாவு தடவி வட்டவடிவமாக திரட்டவும்.
சதுர வடிவமாக நான்கு மூலையையும் வெட்டவும்.
சிக்கன் பில்லிங்கை ஒரங்களில் படாமல் வைத்து முக்கோணவடிவில் மடித்து ஓரங்களை போஃர்க் கொண்டு அழுத்தவும்.
இதே போல் சிறியது பெரியது என்று வேண்டிய அளவில் அனைத்தையும் தயார் செய்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற வானலியில் பொரிக்கும் அளவிற்கு எண்ணை ஊற்றி சூடானதும், தீயின் அளவை மீடியமாக வைத்து பொரித்து எடுக்கவும்.
சுவையான ஹோம் மேட் சிக்கன் சமோசா ரெடி.
இதை பப்ஸ் போல் செய்து ஓவனில் வைப்பதாக இருந்தால் உருண்டைகளை முன்று உருண்டைகளாக எடுத்து ஒன்றன் மேல் ஒன்று வைத்து இடை இடையில் மாவு தூவி, சிறிது பட்டர் (அ) டால்டா தடவி முன்று உருண்டையையும் ஒன்றாக வைத்து உருட்டி கட்டமாக கட் செய்து பில்லிங் உள்ளே வைத்து 200 டிகிரி முற் சூடு செய்த அவனில் பத்து நிமிடம் வைத்து எடுக்கவும்.சிவறவில்லை என்றால் மறுபடி பிரட்டி வைத்து ஐந்து நிமிடம் வைத்து எடுக்கலாம்.
| Tweet | ||||||
Monday, March 6, 2017
மல்டி பீன் சுண்டல் / கலவை பயறு சுண்டல்
மல்டி பீன் சுண்டல் / கலவை பயறு சுண்டல்
Multibean Sundal
தேவையான பொருட்கள்
வெள்ளைகொண்டைக்கடலை
கருப்பு கொண்டைக்கடலை
கருப்பு உளுந்து
கொள்ளு
முழு பாசி பயிறு
காராமணி
ராஜ்மா ( கிட்னி பின்ஸ்)
பட்டாணி
எல்லாம் வகை கடலையும் கால் கிலோ
தாளிக்க
எண்ணை - 2 தேக்கரண்டி
பச்ச மிளகாய் - 3 ( பொடியாக நறுக்கியது)
கடுகு - ஒரு தேக்க்ரண்டி
கருவேப்பிலை - கை கால் கொத்து
உளுந்து பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
துருவிய தேங்காய் - அரை கப்
உப்பு - தேவைக்கு
கடைசியாக மேலே தூவ
லெமன் சாறு - ஒரு தேக்க்ரண்டி
கொத்துமல்லிதழை - சிறிது
சர்க்கரை - 2 சிட்டிக்கை
செய்முறை
எல்லாவகையான பீன் ( கடலைவகைகளையும் ) 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
இரவு ஊறவைத்து காலை செய்தால் சரியாக இருக்கும்.
நன்கு களைந்து குக்கரில் பயறு வகைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும்.
வெந்தததை வடிக்கட்டி தனியாக வைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்து அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து, கொத்துமல்லி, சர்க்கரை , லெமன் சாறு தூவி இரக்கவும்.
காலை நேர உணவுக்கு இட்லி தோசை, பொங்கல் என்று சாப்பிடாலம் ஒரு மாறுதலுக்கு இப்படி மல்டி பீன் சுண்டல் செய்து கூடவே அதற்கு ராகி குழிபணியாரம் ,மற்றும் ஏதாவது வெல்லம் கலந்த டிபன் வகை செய்து சாப்ப்பிடால் மிக அருமையாக இருக்கும், லைட் டிபன் ஆனால் ஆரோக்கியமான உணவு.
கவனிக்க:
இதையே முளைவிடவிட்டு (படத்தில் காட்டியுள்ள படி) அதில் காய் பழ வகைகள் கலந்து சாலடாகவும் செய்தும் சாப்பிடலாம்.
காலையில் ஊறிய பீன் வகைகளை வடிகட்டி , ஒரு ஈர துணியில் கட்டி மூட்டை போல் கட்டி ஒரு ஹாட் பாக்ஸில் முற்றிலும் மூடி வைக்காமல் லேசாக மூடி வைக்கவும். பயிறு வகைகள் முளைவிட்டுடும், அதை எடுத்து வேண்டிய (காய்கள் பழவகைகள் )சேர்த்து( கேரட், குக்கும்பர்,ஆப்பிள், திராட்சை லெமன் சாறு உப்பு மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.
| Tweet | ||||||
Labels:
டிபன் வகைகள்,
டூர் ஸ்னாக்ஸ்,
மாலைநேர சிற்றுண்டி
Monday, July 15, 2013
தயிர் வடை - Curd Vadai
உளுந்து வடை தமிழ் நாட்டின் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டியும் காலை நேரம்
டிபனும் ஆகும். இதை தயிர் வடை, சாம்பார் வடை, மோர் குழம்பு வடை, ரசம் வடை,கீரை வடை என பல வகைகளாக தயாரிக்கலாம்.
இந்த வருடம் நோன்பில் இங்கு துபாயில் சரியான வெயில், வெளியில் சென்றால் குற்றலத்தில்
குளித்து விட்டு வந்தது போல் வேர்வையில் நனைந்து வரலாம்.
பிரியாணி தாளித்து வெயிலில் வைத்தால் கூட தானே தம் ஆகிடும் அந்த அளவுக்கு
கோடை வெயில்இங்கு கொளுத்துகிறது.
இந்த நோன்பு நேரத்தில் நோன்பு திறக்க கஞ்சியுடன் பல சிற்றுண்டிகள் செய்வோம். அடிக்கிற இந்த வெயில் நேரத்தில் குளு குளுன்னு இந்த
தயிர் வடை செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வடைக்கு
உளுந்து பருப்பு = ஒரு டம்ளர் (200கிராம்)
உப்பு = முக்கால் தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு பொடியாக அரிந்தது
பச்ச மிளகாய் = இரண்டு பொடியாக அரிந்தது
ஆலிவ் ஆயில் = அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு பொடியாக அரிந்தது
பச்ச மிளகாய் = இரண்டு பொடியாக அரிந்தது
ஆலிவ் ஆயில் = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை பொடியாக அரிந்தது
- சிறிது
வெங்காயம் (பொடியாக அரிந்தது 4 மேசைகரண்டி)
தயிர் தாளிக்க
தயிர் 300 கிராம்
பால் = அரை டம்ளர்
எண்ணை அரை தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
பெருங்காயம் = ஒரு பின்ச்
மோர் = வடை தோய்க்க
அலங்கரிக்க
ஓம பொடி ,காராபூந்தி
செய்முறைதயிர் 300 கிராம்
பால் = அரை டம்ளர்
எண்ணை அரை தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
பெருங்காயம் = ஒரு பின்ச்
மோர் = வடை தோய்க்க
அலங்கரிக்க
ஓம பொடி ,காராபூந்தி
1. உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து அதில் உப்பு, ஆலிவ் ஆயில், சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்.
3. எண்ணையை காயவைத்து அரைத்த உளுந்து மாவை வடைகளாக தட்டி பொரிக்கவும்
4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.(வெண்ணீரிலும் நனைத்து எடுக்கலாம்)
5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.(வெண்ணீரிலும் நனைத்து எடுக்கலாம்)
6.ஒரு சிறிய கிடாயில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து உடனே அடுப்பில் இருந்து
இரக்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் நனைத்த வடைகளை தாளித்த தயிர் கலவையில் சேர்க்கவும்.10
நிமிடம் ஊறவைக்கவும்.
பவுளில் இரண்டு இரண்டு வகைகளாக வைத்து
தேவைக்கு சிறிது தயிர் கலவையும் சேர்த்து ஓமபொடி ,கொத்துமல்லி தழை,காரா பூந்தி தூவி
பரிமாறவும்.
சுவையான தயிர்
வடை ரெடி
கொளுத்தும் வெயிலுக்கு
இதமான உணவு. உடலுக்கு குளிர்ச்சி தர கூடியது.
நீங்களும் சுவைத்து மகிழுங்கள்
சென்னை ப்ளாசா பேஸ் புக் பேஜ் லைக் பண்ணுங்கோ...
| Tweet | ||||||
Subscribe to:
Posts (Atom)























