Showing posts with label பெண்கள் பகுதி. Show all posts
Showing posts with label பெண்கள் பகுதி. Show all posts

Sunday, June 9, 2019

1st and 3rd Category winners selection at Cp Zeeba Ladies Innerwear _ C...


1st  and 3rd Category winners selection at Cp Zeeba Ladies Inner wear _ Cp Zeena
Ladies inner wear wholesale shop in Chennai


Giveaway Date April 23 to May 30th 2019



முதல் சுற்று தேர்வாளர்கள்




எல்லா ரூல்ஸ்ம் கரெக்டாக  பாலோ செய்தவர்கள் 
13 பேர் அதில் ஒரு கேள் வி கேட்டு இருந்தேன் அதற்கு சரியான விடை அளித்தவர்கள் 7 பேர் அதில் குலுக்கலில் தேர்வனவர்கள் 2 பேர்

RULES

1. subscribe panni irikkanum
2 . 23 .4.19 to 30.5.19
varai post comment
pani irukkanum
3. share panni irukkanum
4 . ennudaiya channel la total a over all eththana grill recipe post panni irukeen
inth question ku answer



1. தன்வீர் இர்பான்
2. தெபாரல் பிலிஸ்ஸி 



முன்றாம் சுற்று தேர்வாளர்கள்

இரண்டு பேர்


1 முத்துலக்ஷ்மி பிரபு
2.பாத்திமா ஷெரின்

FOR GOOD COMMENT 2 persons from cp zeeba Ladies Innerwear



உங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலும்

கடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவர்ந்த சென்னை பிளாசா, எங்களதுபுதிய கிளையை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் “CHENNAI PLAZA – ZEEBA” என்ற பெயரில்  புது பொலிவுடன் திறந்துள்ளோம்.
14 வகையான பெண்கள் உள்ளாடை டிசைன்கள் உள்ளன‌
இந்த புதிய கிளையில் எங்களால் நேரடியாக  தயாரிக்கப்பட்ட‌உள்ளாடைகள் உட்பட பெண்களுக்கு தேவையான அணைத்து துணி வகைகளும் உயர்ந்த தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கும்.

விழா கால சலுகைகளும் உண்டு.

வாருங்கள், வாரி செல்லுங்கள்
பெண்கள் உள்ளாடைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்க கிழே உள்ள முகவரியை அனுகவும்.


Cp Zeeba
New #231
Triplicane High Road
Triplicane Chennai
Tel: 0091 44 45566787
cpzeeba@gmail.com

என்ன பரிசு / போட்டி முடிவுக்கு வருது


தேர்வானவர்களுக்கு லேடீஸ் இன்னவேர்/ பெண்கள் உள்ளாடை  wholesale and retail shop சார்பாக பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.


இது போல போட்டிகளில் பங்கு பெற் விருப்பமா, பிலாக்கர் பார்வையாளர்களே.
அதற்கு நீங்க செய்யவேண்டியது சமையல் அட்டகாசம் யுடியுப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பாலோசெய்து எல்லா பதிவுகளிலும் கருத்து தெரிவிக்க வேண்டும், அடுத்த ஈவன்ட் விரைவில் அறிவிக்கப்படும்.





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Tuesday, March 8, 2016

பெண்மையை கொண்டாடுவோம்



அஸ்ஸலாமு அலைக்கும்


அல்ஹம்து லில்லாஹ் சென்னை ப்ளாசாவில் இருந்து கிளைகள் போல பல சகோதரிகள் ஹோல்சேலில் எங்களிடம் சரக்குகள் வாங்கி விற்று கொண்டு இருக்கின்றனர். பல பெண்கள்  சிறு தொழிலில் ஆர்வமாய் இருப்பது.

மிகவும் சந்தோஷம். 
அல்லாஹ் அனைவருக்கும் தொழில் பரக்கதை அளிப்பானாக.
எல்லா புகழும் ஏகவல்ல இறைவனுக்கே.






உலகில் உள்ள அனைவருக்கும் இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்
இஸ்லாமிய சாதனை பெண்களின் மகளிர் தினம்
ஏன் நம்மில் பலர் பெண்களாய் பிறந்ததை நினைத்து சலித்து கொள்கிறார்கள்? 


Happy Women's Day

  • பெண்ணாய் பிறந்ததற்கு நாம் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
  • பெண்கள் அனைவரும் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் உங்களை பிசியாக வைத்து கொண்டால் வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகள் மன அழுத்தம் ஆகியவைகளில் இருந்து விடுதலை பெறலாம்
  • பெண்கள் கண்டிப்பாக தத்தம் சின்ன சின்ன செலவுகளுக்கு உரிய செலவுகளை நாமே பார்த்துகொள்ளும் அளவிற்கு சிறுதொழில் செய்து தொகை ஈட்டவேண்டும்
  • இப்படியான பெண்கள் நிச்சயம் கொண்டாடப்படவேண்டியவர்களே. அவர்களுக்கெல்லாம் சலிப்பு வராது, மாறாக இன்னும் எப்படி முன்னேறலாம் என்பதில் தான் சிந்தனை ஓடும்.


  • பெண்களே மனதை ரிலாக்ஸ் ஆக வைத்து கொள்ளுஙக்ள் இல்லையென்றால் குடும்பத்தை சரி வர கவனிக்க முடியாது.
  • கணவரின் வருவாய்க்கு ஏற்றபடி சிக்கனமாய் செலவு செய்யுங்கள்.
  • எதையும் வீண் விரையம் செய்யாதீர்கள். ஆரோக்கிய மான உணவை செய்யுங்கள், எதையும் அளவுக்கு அதிகமாக வாங்காதீர்கள்.
  • பிள்ளைகளை நல் வழி படுத்துங்கள்,



ஆக்கம்
ஜலீலா




மேலும் வேறு யாருக்கும் கடைகளுக்கோ அல்லது வீட்டில் வைத்து சேல் செய்யும் எண்ணம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.



Assalamu alaikkum
2016 Latest Model Shawls/Duppatta/Shela/Hijab/Head Cap/Niqab(Nose Piece)
Islamic Clothing @ Chennai Plaza
Available in Wholesale and Retail
Please like and Share

http://cookbookjaleela.blogspot.com/…/2016-latest-model-sha…
தொடர்புகொள்ளவேண்டிய
வாட்ஸஅப் நம்பர்
00971 55 9608954
00971 55 9608961






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, September 22, 2014

மிக்சி ப்ளேடும் குழந்தைகளும்.

குழந்தை வளர்பபு டிப்ஸ்கள் போட்டு வெகு நாட்கள் ஆகிறது, நிறைய டிப்ஸ்கள் இருந்தாலும் இப்ப எல்லாம் டைப் செய்ய சோம்பேறிதனம் .




இந்த மிக்சிக்கு வாஷர் இல்லை, வாங்குவதற்காக இதை எடுக்கும்போது தான் ஒரு டிப்ஸ் ஞாபகத்துக்கு வந்தது. 

சம்பவம்  : 1

ஒரு முன்று வருடம் முன் ஒரு வீட்டுக்கு சாப்பிட போகும் போது அங்கு ஒரு பெண் மடியில் அவளின் பெண் குழந்தை கையில் நாலு விரலிலும் கட்டு போட்டு போட்டு இருந்தது.

என்னவென்று கேட்ட போது. இப்ப தான் புதுசாக விட்டில் ப்லெண்டர் ,சாப்பர் செட் வாங்கி வந்து வைத்து  இருக்கிறார்கள், இப்ப உள்ள குழந்தைகள் தான் வெளியில் போய் வந்ததும் வாங்கி வரும் கவர்களை பிரித்து என்ன இருக்கு என்று பார்த்து அக்கு வேரா ஆணிவேர ஆக்கிவிடுகிறார்களே.
அவங்க அம்மா அதை பிரித்து எடுத்து வைப்பதற்குள் லபக்குன்னு பிளேட் உள்ள ஜாரை பிடிங்கி விட்டது, கையில் நாலு விரலும் வெட்டி இரத்தம் பீறிட்டு ஓடி இருக்கு , உடனே ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி போல் கட்டு போட்டு கூப்பிட்டு வந்து இருக்கிறார்கள்.


ஆகவே குழந்தைகள் உள்ள வீட்டில் ஷாப்பிங் சென்று வந்தால் இது கூர்மையான பொருட்கள் , கத்தி வகைகள், கத்திரி கோல் போன்றவை வாங்கி வந்தால் உடனே அதை கவனமாக குழந்தைகளுக்கு கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து விடுங்கள். பிறகு செய்யலாம் என்று விட்டு வைத்தால் வேண்டாத விபரீதம் உங்களுக்கு தான்.

இப்ப குழந்தைகள் எங்கே எங்க வீட்டில் பெரிய பிள்ளைகளே ( ஹனீஃப்)  கடைக்கு போய் அவங்க டாடி கவருடன் வந்தால் என்ன வாங்கி வந்து இருக்கீங்கன்னு நேராக கொண்டு வந்த கவர் பக்கம் தான் வருவான், பெரிய பிள்ளைகளுக்கே இப்படி இருக்கும் போது குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்.

கையில் விளையாடி கையை மட்டும் கிழித்து கொண்டது இதே கழுத்திலோ  எதிரில் வேறு குழந்தைகளுடன் விளையாடி இருந்தால் என்ன ஆகும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். பிள்ளைகளை வளர்ப்பது கண்ணாடி பாத்திரத்தை எப்படி பத்திரமாக பாதுகாப்போமோ அப்படி ஆகும்..



சம்பவம் – 2

போன வருடம் நான் ஊருக்கு போயிருந்த போது பக்கத்து வீட்டில் குய்யோ மொய்யோன்னு சத்தம் எல்லாரும் என்ன ஆச்சுன்னு ஓடி போய் பார்த்தால்  யு கே ஜி படிக்கும் சின்ன பையன், ஓடி கொண்டு இருந்த மிக்சியினுள் கை விட்டு விட்டான், விரல் வெட்டு பட்டு இரத்தம்.

அம்மா மிக்சி அரைக்கும் போது பையனுக்கு எப்படி வெட்டுபடும்.
ரொம்ப செல்லமாம், சமைக்கும் போது பக்கத்தில் சமையல் மேடை மீது உட்காரவைத்து தான் சமைப்பார்களாம், பக்கத்தில் மிக்சி அரைத்துட்டு திறந்து வைத்திருந்த போது ஓடவிட்டு கையை உள்ளே விட்டு விட்டான். பிறகு டாக்டரிடம் சென்று கட்டு போட்டு ரொம்ப நாட்கள் கழித்து சரியானது.

பிள்ளைகள் அடம் பிடிக்கிறார்கள் என்று பெரும்பாலும் அம்மா மார்கள் சமையலரையில் சமைக்கும் போது தொல்லை தாங்க முடியாமல் கூட  வைத்துகொண்டு  சமைக்கிறார்கள். இதனால் பிறகு பெரும் ஆபத்துகளை நீங்க சந்திக்கவேண்டிவரும் என்பதை மறந்து விடாதீர்கள்.

சம்பவம் 3
முன்பு என் தங்கை பையன் சில சமயம் மிக்சி திறந்து இருந்தால் ஆன் செய்து விட்டுட்டு ஓடிவிடுவான். அதில் உள்ள பருப்பு ,தேங்காய் எல்லாம் சிதறி சுவரெல்லாம் பருப்பு குளியலாகவும் பெயிண்ட் அடிச்ச மாதிரியும் இருக்கும்.

பிள்ளைகளுக்கு அது ஒரு ஆசை அம்மா ஏதோ மிக்சிய வச்சி விளையாடுகிறார்களே நாமும் விளையாடலாம் என்று, அம்மாமார்களே மிக்சி ,கத்தி, கத்திரிக்கோல், அயர்ன் பாக்ஸ், பெலென்டர் எல்லாம் பயன் படுத்துபவர்கள் உயரமான இடத்தில் பிள்ளைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்து பயன் படுத்துவது நல்லது.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, February 4, 2014

முட்டை பால் (ஒல்லியாக இருப்பவர்களுக்கு)


பூபெய்திய பெண்களுக்கு, பிள்ளை பெற்றவர்களுக்கு, வாய் புண் இருப்பவர்களுக்கு, ஆண் குழந்தைகளுக்கும் கூட இதை கொடுக்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை குடிக்கலாம்.

ஒல்லியாக உள்ளவர்கள் தடியாகனுமா???உங்கள் குழந்தைகள் புஷ்டியாகனுமா? இந்த முட்டை பாலை தினம் கொடுத்து பாருங்கள்.

((இப்போதைக்கு எங்க வீட்டில் ஒல்லியாக உள்ளவர்கள் யாரும் இல்லை ஆகையால் தேவையான பொருட்களை மட்டும் வைத்து போட்டு இருக்கிறேன்)

தேவையானவை

முட்டை - 1
பால் - கால் டம்ளர்
தேன் - ஒரு மேசை கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி

செய்முறை

பாலை நன்கு சூடு படுத்தவும்
முட்டையை நுரை பொங்க அடித்து அதில் தேனை கலக்கவும்.
பிறகு பாலையும் சேர்த்து கலக்கி நெய்யை சூடு படுத்தி ஊற்றி குடிக்கவும்.
முட்டைய நல்ல நுரை பொங்க அடிக்கலன்னா குடிக்க முடியாது.

ஒரு மாதமோ அல்லது 40 நாட்களோ குடித்தால் நல்ல பலன் தெரியும்.

டிப்ஸ்: இது குழந்தைகளுக்கும், பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கும், பூப்பெய்திய பிள்ளைகளுக்கும் , பிள்ளை பெற்றவர்களுக்கும் ரொம்ப ஒல்லியாக எலும்பு தோலுமா இருப்பவர்களுக்கும் கொடுக்கலாம்.
நோஞ்சானாக கண் சோர்வடைந்து இருப்பவர்களுக்கு முட்டை பால் அடித்து கொடுக்கலாம்

அதே போல் சூட்டினால் வாய் முழுவது வெந்து புண்ணாகி இருந்தால் இது போல் செய்து முன்று நாட்களுக்கு மருந்து போல் குடிக்கலாம்.

இதை நான் முன்பு  செய்து இருக்கிறேன். பெரிய மகன் சிசேரியன் தான் ஆகையால்
சரியாக மருந்து எடுத்துக்காததால் வாய் புண் அடிக்கடி வரும், அப்போது வாய் புண் போக பல பாட்டி மார்களை அனுகி கேட்ட குறிப்புகள் இதுவும் ஒன்று. அதில் இது என் கிரான்மா சொன்ன குறிப்பு..



ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள் இதை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல புஷ்டியாக ஆகிவிடலாம்.
பிள்ளை பெற்றவர்களுக்கு உடம்பு ரொம்ப வீக்காக இருந்தாலும் இதை செய்து கொடுக்கலாம்.

பூப்பெய்திய பெண்களுக்கு கொடுத்தால் பிற்காலத்தில் பிள்ளை பெறும் போது பேறுகால வலியை தாங்கிக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.


இதே டிப்ஸ் மனோ அக்கா சிறப்பு விருந்தினர் பதிவில் சொல்லி இருக்காங்க  பூப்பெய்தி பெண்கள் முட்டை குடிப்பது பிற்காலத்தில் இடுப்பு எலும்பு பலப்படும் , பிரசவ வலிகளை தாங்கிக்கூடிய சக்தி கிடைக்கும்,

Monday, January 21, 2013

கண்ணாடிகள் கவனம்.-M அப்துல் ரஹ்மான் M.P.




(பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாமல் பாதுக்காப்பது போலாக்கும்)



கண்ணாடிகள் கவனம். = M அப்துல் ரஹ்மான் M.P.

நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.

பெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே அவர்கள் கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு பெற்றோர்களின் பங்கு முடிந்து விடுவதில்லை. அதை அவர்கள் எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். அதன் நன்மை தீமைகளை விளக்கித் தர வேண்டும். தீவிர கண்காணிப்பும் வேண்டும். மீறும்போது கண்டிக்கவும் வேண்டும்.
தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் காட்டப்படும் கற்பனைக் காட்சிகளால் ஈர்க்கப்படும் பிள்ளைகள் இளமைக்கால தூண்டுதலால் தானும் அதுபோல செய்ய வேண்டுமென உந்தப்படுகிறார்கள். பிள்ளைகளை வைத்துக்கொண்டே தொடர்நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்கின்றோம். வரம்பு மீறிய காட்சிகளைப் பார்க்கும் சூழலை நாமே உருவாக்கித் தருகின்றோம். பெற்றோர்கள் நல்ல முன்மாதிரிகளாக இருந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நம் பிள்ளைகள் தனி அறையில் நீண்டநேரம் யாரோடு பேசிக்கொண்டிருக்கின்றார்கள்? என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களின் கல்லூரி நண்பர்கள் யார்யாரோடெல்லாம் பழகுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். செலவுகளுக்காக அதிகமாகப் பணம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக நகைகளை அணிவிக்காமலிருப்பதும், நகைகள் இருக்குமிடம், பணப்புழக்கம் அவர்களுக்குத் தெரியாமலிருப்பதும் நல்லது. ஏனென்றால் ஓடிப்போகலாம் என்று அவர்கள் முடிவெடுக்கும்போது பணபலமும் அவர்களுக்குச் சக்தி ஊட்டும் அம்சமாக இருக்கலாம். நம் பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடலாமாஎன்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் நலன்களைக் கருதி கண்காணிக்க வேண்டும். படியில் பார்த்து இறங்கு’ என்று சொல்வது அவர்கள் கீழே விழப் போகிறார்கள்’ என்பதற்காக அல்ல. கீழே விழுந்து விடக்கூடாதுஎன்பதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சத்தையும், மறுமைச் சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். ஒழுக்க மாண்புகளை விதைக்க வேண்டும். 

குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வுமுறைகளையும் தெளிவாகப் போதித்தாலே அவர்கள் சிறந்தவர்களாக வளர்வதற்குப் போதுமானதாகும். பெண்கள் கண்ணாடிகளைப் போன்றவர்கள் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். பெண்களை கண்ணாடியைப் போன்று பாதுகாக்க வேண்டும். கை தவறினால் கீழே விழுந்து உடைந்து நொறுங்கும். நம் காலையே அது குத்திக் கிழிக்கும். கவனமோடு நம் பிள்ளைகளை வளர்ப்போம். கண்ணாடிகள் கவனம்.

M அப்துல் ரஹ்மான் M.P.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்
***************************************** 

நானும் என் பதிவில் டிப்ஸ் பகுதியில் முன்பு சொல்லி இருக்கிறேன். 

(பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாமல் பாதுக்காப்பது போலாகும்)



அப்துல் ரஹ்மான் காக்காவை பற்றிசொல்லனும் என்றால் முதல் முதல் துபாய் வந்த போது முன்பு  அண்ணன் வீட்டில் தான் தங்கி இருந்தோம் அப்ப அவரும் அதே  அப்பாட்மெட்டில் எதிர் எதிர் பிளாட்டில் எல்லோரும் தங்கி இருந்தோம்.அதற்கு பிறகு எல்லோரும் வீடு மாறி வேறு வேறு இடத்துக்கு சென்று விட்டோம்.

இப்போது பாராளு மன்ற எம்.பி. என்னிலையிலும் பெருமை கிடையாது . அப்ப பார்க்கும் போது எப்படி பேசுவாரோ அதே போல் தான் இப்போதும். சில பேருக்கு பதவி வந்து விட்டால் அவர்களுடைய நடை உடை பாவனை எல்லாமே மாறிவிடும். இது நிறைய பேரிடம் நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்.

முன்று மாதம் முன்பு இங்கு துபாய் வந்த போது அப்துர் ரஹ்மான் வந்து இருக்கிறார்ர் என்றார்கள். ரொம்ப பிஸியாக இருப்பார், அவரை எங்க போய் பார்க்க முடியும் என்று நினைத்தேன்.
நான்கு நாட்கள் கழித்து என்ன ஆச்சரியம். ஆபிஸில் லுஹர் தொழுதுட்டு என் இருக்கைக்கு வந்த போது சாதரணமாக வரவேற்பரையில் உட்கார்ந்து இருந்தார். எனக்கு ஒன்றுமே புரியல. என்ன என்று கேட்டதற்கு கிஃப்டுகள் கொடுக்க வாட்ச் வாங்க வந்தேன் என்றார். பிறகு பேசிவிட்டு என் ஹஸ்கிட்ட பேசனுமே என்று பல் வேலைகள் இருக்கும், திரும்ப எப்ப கூப்பிடலாம் எப்ப நீங்க பிரி என்றேன். சிரிச்சிட்டு எப்ப வேண்டுமானாலும் பேசலாம், கமாலை பேச சொல்லுங்க என்று சொன்னார்.
அதே இப்ப மறுபடி துபாய் வந்த சமயம், ரீஃப் மாலில் என் கணவரை பார்த்து இருக்கிறார். புர்கா ஷாஃப் ஆரம்பித்ததை பற்றி என் கணவர் அவரிடம் சொல்ல, நீங்க எப்படி ஆரம்பித்தீங்க இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையே ஜலீலா தானே பார்க்கனும் என்றார். 
அவர் எதை வைத்து சொல்கிறார் என்றால் முன்பு 15 வருடம் முன் அவங்க மகளுக்கு பட்டு பாவாடையும் , சோளியும் தைத்து கொடுத்தேன். அதை ஞாபகம் வைத்து சொல்லி இருக்கிறார்.
***************************************************

டிஸ்கி டெல்லி சம்பவத்திற்கு  எல்லாருமே பதறி போய் உள்ளனர்.
என்ன இருந்தாலும் வக்கிரபுத்தி கொண்ட சில மிருகங்கள் உள்ள இந்த நாட்டில் பெண்கள் என்றுமே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
இரவில் தனியாக செல்வதை தவிர்ப்பது நல்லது.
அதுக்கு தான் பெரியவர்கள் பெண் பிள்ளைகளை விளக்கு வைத்ததும்  (மக்ரிப் தொழுகைக்கு பின்) தனியாக வெளியே போகாதே என்பார்கள்.
ஏன்னு கேள்வி கேட்டா ஷைத்தான் பினனடியே அலைவான் என்பார்கள்.
அது இப்படி பட்ட மிருக ஷைத்தான் களை தான் சொன்னார்களோ என்னவோ?

( நான் சின்ன வயதில் ரொம்ப பயப்படுவேன் ஷைத்தான் பின்னாடியே வருவான் என்றது சின்ன சாமான்கள் வாங்க சந்து முனை கடையில் போய் சக்கரையோ , டீத்தூளோ வாங்கிட்டு வரும் போது ஆஹா கிரான்மா பின்னாடி ஷைத்தான்வருனு சொன்னாஙகளே திரும்பி பார்க்காம ஓட்டம் பிடிப்பேன்.)

இதே தான் 20 வருடம் முன் என் கிரான்மாவும் 
 பிள்ளைவளர்க்க எங்களுக்கு நல்ல மதியையும்
பிள்ளைகள் வளர அவர்களுக்கு நல்ல புத்தியும் தா நாயனே
 என்று சொல்லுவாரக்ள்.


ஏற்கனவே பதிவுகளில் பெண்களுக்கான டிப்ஸ் பகுதியிலும் , வலைச்சர பதிவுகளில் நல்ல பதிவுகளாக அறிமுக படுத்தியதில் குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பகுதிகள் நான் போட்டு இருந்ததையும் மற்றவரக்ள் பதிந்து இருந்தததையும் சுட்டி இருந்தேன்.
 குழந்தைகள்  கண்ணாடி யை போல் அதை  உடையாமல் பாது காத்து கொள்ளவேண்டியது நம் கடமை.

இங்கு ஜனாப் அப்துல் ரஹ்மான் காக்காவும் அதையே மேலே வெளியிட்டுள்ள செய்தியில்  சொல்லி இருக்கிறார்கள்.
பெற்றோர்களாகிய நான் ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் பெண் பிள்ளைகளாக இருந்தாலும் பிள்ளைகளை வளர்பதில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.



(பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாமல் பாதுக்காப்பது போலாக்கும்)





Wednesday, December 7, 2011

நீங்கவிதவிதமாவாட்ச்அணிபவர்களா?


 

சிலருக்கு விதவிதமாக வாட்ச் அணிவது ரொம்பபிடிக்கும்.


அதுவும் பெண்கள் இப்பசேலை, சுடிக்குமேட்சாக ,பட்டுசேலைக்கு மேட்சாக வாட்ச் அணியும் கிரேஸ் உள்ளவர்களாக இருக்கின்றனர்



ஆண்கள் லெதர், மெட்டல், கோல்ட் எனபல மாடல்கள் வைத்திருப்பனர்.

அப்படி எல்லாமே உபயோகிக்க போவதில்லை ,சிலவாட்ச்கள் பீரோவில் தூங்கும் அப்படி ரொம்பநாள் கழித்து எடுத்துபோடும் போதுபேட்டரிபோய் விடும்.இல்லை கருத்துவிடும்
பேட்டரி போகமால் இருக்க வாட்ச்டைம் செட் செய்யும் ஸ்க்ரு இருக்கும்.

அதை லேசாக இழுத்து விட்டால் மணி ஓடாது நின்றுவிடும்.
அப்படியே பீரோவில் வைத்து விட்டு எடுத்து பயன்படுத்தும் போது அந்த ஸ்க்ரூவை அழுத்தி விட்டு டைம் செட்செய்து போட்டுகொள்ளலாம்





இதனால் வாட்ச் பேட்டரி நீண்ட நாள் முடிந்து போகாமல்இருக்கும்.

வாட்ச்கருத்து போகாமல் இருக்க செண்ட் போன்ற வாசனை திரவியங்கள் பட்டால்கருத்து வெளுத்து போய்விடும்.

எல்லா பொருட்களுடனும் போட்டுவைக்காமல்தனியாக அதற்குறியபாக்ஸிலோஅல்லது டிஷு பேப்பரில் சுருட்டியோ வைக்கலாம்


Thursday, August 25, 2011

பெண்ணரசிகளே உங்கள் கைப்பை கொஞ்சம் கவனியுங்கள்













//இந்த பதிவ படிக்கும் ரங்கமணிகளே உங்கள் தங்கமணிகளுக்கு கண்டிப்பாக இந்த டிப்ஸை சொல்லலுங்கள்.//









எல்லா பெண்களும் வெளியில் போகும் போது கை பை (ஹாண்ட் பேக்) இல்லாமல்  போவதில்லை. நிறைய பேருக்கு உடைக்கேற்ற கை பை கொண்டு செல்ல பிடிக்கும்.


ஷாப்பிங் போகும் போதோ, ஹாஸ்பிட்டல் மற்றும் பல இடங்களுக்கு செல்லும் போது பொருட்களை வாங்கிவிட்டு பில்லை கட்டி விட்டு பில்லையும் மீதி சில்லறையை யும் அவசரமாக கை பையில் திணித்து கொண்டு போவார்கள். அப்படி திணிக்கும் போது ஜிப்பில் கை விரலின் நகம் பட்டு பட்டு நாளைடைவில் அதில் ஓட்டை விழுந்து அவரசரமாக திணீக்கும் பில்கள், வீட்டு சாவி, சில்லறைகள் எல்லாம் அதனுள் சென்று விடும்.


இப்படி அவசரமாக பில்லை தினிப்பது, சில்லரைகள் மட்டும் இல்லை தங்க நகைகள் மோதிரம், மூக்குத்தி ,கம்மல் போன்ற சிறிய நகைகளை அப்பபடியே பேக்கில் போட்டு திணிப்பார்க‌ள்.அதுவும் உள்ளே போய் மாட்டி கொள்ளும்.


சரி சரி அதற்கு இப்ப என்ன செய்யலாம்,
வார‌ம் ஒரு முறையாவ‌து ஹ‌ண்ட் பேக்கை ந‌ன்கு செக் செய்து குலுக்கி தட்டினால் தொலைந்து போன‌ பொருட்க‌ள் எல்லாம் அங்கு கிடைக்கும்.

அப்ப‌டியே அடைத்து வைக்காம‌ல் சிறிது நேர‌ம் கைப்பையை திற‌ந்து வையுங்கள்  ஒரு ஸ்கேல் அல்லது பென்சிலை குறுக்காக‌ வைத்து பிரித்து காற்றோட்ட‌மாக‌ விட்டு பிற‌கு மூட‌வும்.

இது போல் நிறைய‌ பேருக்கு காணாம‌ல் போன‌ மூக்குத்தி க‌ம்ம‌ல் எல்லாம் ரொம்ப நாள் கழித்து கிடைத்துள்ள‌து.


இப்படி தான் ஒரு பெண் ஹாஸ்பிட்டலுக்கு பிரசவத்துக்கு போகும் போது டாக்டர் ஹேர் கிளிப், கம்மல்,மூக்குத்தியை கழட்ட சொன்னார்கள், அந்த பெண் இப்படி கழற்றி அவசர அவசரமா திணித்ததில் அது இப்படி தான் உள்ளே மாட்டி கொண்டு ரொம்ப நாள் கழித்து கிடைத்தது.

கை பை உட்புறம் லைனிங் துணி மெல்லியதாக வைத்து தைத்துஇருப்பதால் இப்படி ஆகுது.

இது போல் நடக்காமல் பல தேவையான பில்கள், சாவிகள், சில்லறைகள் , நகைகளை பாது காத்து கொள்ளுங்கள்.


டிஸ்கி: இந்த பதிவு எல்லா பெண்களுக்கும் கண்டிப்பாக பயனுள்ளது, ஆனால் ஒரு நாளை எத்தனையோ பேர் பார்வையிடுகிறீர்கள் ஆனால் ஒரு நன்றி கடனுக்காகவாவது உங்கள் பொன்னான கருத்தை பதிக்கலாமே///
இந்த பதிவ படிக்கும் ரங்கமணிகளே உங்கள் தங்கமணிகளுக்கு கண்டிப்பாக இந்த டிப்ஸை சொல்லலுங்கள்.




Saturday, February 12, 2011

தங்க நகை அணியும் போது





தங்க நகைகளை அணியும் போது ஓரிடத்தில் அமர்ந்து அணியவும்.கம்மல், மூக்குத்தி போன்றவை அணியும் போது பேசி கொண்டே அவசரமாக அணிய வேண்டாம்.அப்படி அணிபவர்கள் அது பத்து முறை தொலைந்து போய் விழுந்து விழுந்து பதற்றத்துடன் தேட வேண்டி வரும்.


விஷேஷங்களுக்கு செல்லும் போது நகைகளை பெட்டியோடு கொண்டு செல்ல வேண்டாம் அந்த காலத்து பாட்டிகளின் சுருக்கு பை (அ) துணி பர்ஸ்களில் வைத்து கொண்டு செல்லவும்.இதனால் நகை பெட்டி நகைபெட்டி என்று அந்த பெரிய பேக் களை பாதுகாக்க தேவையில்லை, கைக்கு அடக்கமா ஹேண்ட் பேக்கிலேயே வைத்து கொள்ளலாம்.

வெளியூருக்கு சென்று அணியும் நகைகளை, அதாவது கல்யாண சத்திரத்தில் போய் தங்கி அங்கு அணிய வேண்டி வந்தால். பெரிய பார்சலாக தூக்கி கொண்டு போகாமல் சின்ன இரண்டு முன்று பர்ஸ்கள் வைத்து கொள்ளவும்.அதில் கம்மல், மோதிரம், மாட்டல் ஒரு பர்ஸிலும், வளையல் ஒரு பர்ஸிலும், பெரிய ஹார்கள், மாலைகள் ஒரு பர்ஸிலும் வைத்து கொண்டால் எடுப்பது சுலபம் இலலை என்றால் ஒரு சிறிய, கம்மலோ (அ) மோதிரமோ காணமல் போக வாய்ப்பிருக்கு. கவரிங் நகைகள் செண்ட் போன்றவை தனித்தனியாக வைக்கவும்.





முக்கியமாக பிரேஸ்லேட் அணிவர்கள் கல்யாணவீடுகளில் தவறவிடுவதை நேரில் பார்த்தும் இருக்கிறேன், அதை கண்டு பிடித்து கொடுத்தும் இருக்கிறேன்.
ஆகையால் பிரேஸ்லேட் அணியும் போது சின்ன கோல்ட் கலர் சேஃப்டி பின்னை கொக்கி வளையத்தில் மாட்டி கொண்டால் டென்ஷன் இல்லாமல் இருக்காலாம்.

கல்யாண பெண்களுக்கு  கழுத்தில் நிறைய செயின் போடுபவர்கள் கூடவே மெல்லிய செயினும் போட்டு இருப்பார்கள்.
அதுவும் தொலைந்து போக சான்ஸ் இருக்கு அதற்கும் சேஃப்டி பின் தான் எல்லா செயின் வளையங்களிலும் சேர்த்தாற் போல் சின்ன கோல்ட் சேஃப்டி பின்னை குத்தி கொள்ள‌வும்.


கல்யாண பெண்களுக்கு, சின்ன குழந்தைகளுக்கு நெற்றி சுட்டி வைக்கும்போது அது தலையில் ஒரு இடத்தில் நிற்காது அதற்கும்சேஃப்டி பி ன் தான் நேர் வ்கிடு ஆரம்பிக்கும் இடத்தில் முடியோடு சேர்த்து ரிங்கில் குத்தி விடுங்கள் அது நீங்க சொன்ன பேச்சை கேட்கும்.


இப்ப தஙக் விற்கிற விலையில் யாரு கழுத்து நிறைய செயின போடுறதுன்னு கேட்கீறீங்களா? என்னதான் விலை ஏறினாலும் வாங்குகிறவர்கள் வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்,\