Showing posts with label செட்டிநாடு ஸ்பெஷல். Show all posts
Showing posts with label செட்டிநாடு ஸ்பெஷல். Show all posts

Thursday, November 23, 2017

மிளகு (செட்டி நாடு ஸ்டைல்) பேப்ஷா



ஹிமோகுளோபின் கம்ம்பியாக இருப்பவர்கள், ரொம்ப அனிமியாவாக இருப்பவர்கள் இதுபோல ஆட்டு நுரை, ஈரல், கிட்னி , மன்பத்தை என செய்து வாரம் முன்று நாள் என ஒரு மாதம் சப்பிட்டால் கண்டிப்பாக அனிமியா சரியாகும் ஹிமோகுளோபினும் சரியான லெவலுக்கு வரும்.





மிளகு (செட்டி நாடு ஸ்டைல்) பேப்ஷா 


பேப்ஷா ( ஆட்டு  நுரை ஈரல்) என்பது ஆட்டு நுரைய்யிரல் இதை கத்திரிக்காய் போட்டு சால்னா செய்வோம். இல்ல பொரிச்ச கறி கூட்டு போல செய்வோம். இதை கொஞ்சம் காரசாரமாக செய்வோன்னு செட்டிநாட் டைப்பில் செய்துள்ளேன்.
ஆட்டு நுரை ஈரல் - 200 கிராம்
வெங்காயம் - இரண்டு
தயிர் இரண்டு மேசைகரண்டி

திரிக்க

சோம்பு , சீரகம் மிளகு தலா ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - ஒன்று
பட்டை ஏலம் கிராம்பு
அரைக்க
தக்காளி அரை பழம்
பாதம் முந்திரி - தலா3
தாளிக்க
நல்லெண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை
கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - ஒன்னரை தேக்கரண்டி


செய்முறை
நுரையீரலை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்கவும். திரிக்க கொடுத்துள்ளதை திரித்து வைக்கவும்
அரைக்க கொடுத்துள்ளதைகெட்டியாக அரைத்து வைக்கவும்/
குக்கரில் நல்லெண்ணை+ நெய் ஊற்றி பிரிஞ்சி இலை கருவேப்பிலை இஞ்சி பூண்டுசேர்த்து வதக்கவும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் நுரையீரல் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். அடுத்து அரைத்த மற்றும் திரித்து வைத்துள்ள பொடிவகைகளை சேர்த்து நன்கு கிளறி தயிர் சேர்த்து குக்கரை மூடி வேகவிடவுமசு
சுவையான செட்டிநாடு ஸ்டைல் நுரை ஈரல் ரெடி.

Linking to   #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.  
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, December 14, 2011

கருப்பட்டி குழிபணியரம் - Palm sugar kuzipaniyaram



தேவையான பொருட்கள்
கருப்பட்டி குழி பணியாரம்
பச்சரிசி – அரை டம்ளர்
மைதா – அரை டம்ளர்
கருப்பட்டி வெல்லம் – முக்கால் டம்ளர்
துருவிய தேங்காய் – இரண்டு மேசை கரண்டி
பல்லாக நருக்கிய தேங்காய் – இரண்டு மேசை கரண்டி
ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
வருத்த முந்திரி – 6 ( பொடியாக அரிந்து கொள்ளவும்)
முட்டை – ஒன்று (விருப்ப பட்டால்)
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை




செய்முறை



அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து அத்துடன் மைதா ,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.அரைத்த மாவில் பொடியாக அரிந்த் தேங்காய், முட்டை,துருவிய தேங்காய் ஏலக்காய் பொடி இட்லி சோடா கலந்து வைக்கவும்.

கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கரைந்த்தும் அதை கலக்கிய மாவில் வடிகட்டவும்.குழி பணியார சட்டியை காய வைத்து எண்ணை + நெய் சிறிது ஊற்றி மாவை முக்கால் பாகம் இருக்குமாறு ஊற்றவும்.தீயின் தனலை மிதமாக வைக்கவும், இல்லை என்றால் கரிந்து விடும்.இரண்டு முன்று நிமிட்த்தில் வெந்து விடும்,ஒரு பக்கம் வெந்த்தும் திருப்பி போட்டு மறுபக்கமும் வேகவிட்டு இரக்க்வும்.

சுவையான கருப்பட்டி குழிபணியாரம் ரெடி.


காலை உணவிற்கு(காரம்+ இனிப்பு) குழிபணியாரத்துடன்  சுண்டலும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். குட்டியாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.எத்தனை உள்ளே போகுதுன்னே தெரியாது  செட்டி நாடு ஸ்பெஷல்  குழிபணியாரம்.இது என் சுவைக்கு ஏற்ப செய்துள்ளேன் சுவைத்து மகிழுங்கள்
தேங்காய் பல்லாக கீறிய தேங்காயாக இருந்தால் இன்னும் நல்ல இருக்கும், இதில் துருவிய தேங்காய் சேர்த்துள்ளேன்.




Sunday, December 12, 2010

செட்டி நாடு மட்டன் கிரேவி - chettinad mutton gravy



தேவையானவை

மட்டனில் வரட்டி கொள்ள
எலும்புடன் மட்டன் – 400 கிராம்
உப்பு தேவைக்கு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் – கால்

தாளிக்க

எண்ணை – இரண்டு மேசை கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – இரண்டு
தக்காளி – ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசை கரண்டி
கருவேப்பிலை – இரண்டு முன்று ஆர்க்
மிளகாய்தூள் – கால்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

தேங்காய் பவுடர் – முன்று தேக்கரண்டி

வறுத்து பொடிக்க

மிளகு – ஒன்னறை தேக்க்ரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்க்ரண்டி
கருப்பு ஏலக்காய்- ஒன்று, பச்சை ஏலக்காய் – ஒன்று
பிரியாணி இலை – முன்று
கிராம்பு – முன்று
பட்டை – சிறியட் துண்டு
முழு தனியா – ஒரு தேக்கரண்டி ( அ) தூள்
முந்திரி - நான்கு

செய்முறை

1.மட்டனில் வரட்டி கொள்ளவேண்டியவைகளை சேர்த்து வரட்டிபாதி வேக்காடு வெந்து வைத்து கொள்ளவும்.வறுத்து பொடிக்க வேண்டியவைகளை வறுத்து பொடிக்கவும்.
2. குக்கரில் எண்ணையை காய வைத்து கருவேப்பிலை , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் தக்காளி மடங்கியதும், பொடித்த பொடி,உப்பு,தேங்காய் பொடி சேர்த்து நன்கு பிரட்டவும்.
5. ஒரு சேர எல்லாவற்றையும் நன்கு கிளறவும்.கிளறி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்க்ரில் முன்று விசில் விட்டு இரக்கவும்.
மட்டன் பஞ்சு மாதிரி வெந்து கிரேவியும் சேர்ந்து சுவை சூப்பராக இருக்கும்.

Note:

சுவையான செட்டி நாடு மட்டன் கிரேவி ரெடி.
பிளெயின் சாதம், ரொட்டி,நான்,பிரைட் ரைஸ் சப்பாத்தி வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.

சுவை எபப்டி இருந்ததுன்னு கண்டிபாக வந்து சொல்லனும்.