Showing posts with label பாப் கார்ன். Show all posts
Showing posts with label பாப் கார்ன். Show all posts

Saturday, November 21, 2009

சூடா பாப் கார்ன் சாப்பிடலாம் வாங்க‌



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது.
இதை ஒரு கைபிடி போட்டு செய்தால் தட்டு நிறைய கிடைக்கும்.
வெளியில் போகும் போது கூட நிறைய செய்து குழந்தைகளுக்கு தனித்தனி கவரில் போட்டு அவரவர் கையில் மாட்டி விட்டால் வாய் அசை போடுவதில் கொஞ்சம் வெளியில் காசும் மிச்சம்.இது நம் ருசிக்கு ஏற்றவாறு மசாலாக்களை சேர்த்து கொள்ளலாம்.



காய்ந்த சோளமணிகள் = கைக்கு ஒரு கைபிடி
உப்பு = சிறிது
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
மிளகு தூள் = அரை தேக்கரண்டி
பட்டர் = ஒரு மேசை கரண்டி





செய்முறை


ஒரு வாயகன்ற வானலியில் பட்டரை உருக்கி அதில் சோளமணி,பட்டர், மிளகு தூள் , உப்பு தூள் போட்டு சிறிது நேரம் சூடுபடுத்தவும்.


பிறகு மூடி போட்டு தீயின் தனலை சிம்மில் வைக்கவும்.


கொஞ்சம் கொஞ்சம பட் பட்ன்னு வெடிக்கும் திறக்க வேண்டாம்.

வெளியில் தெரித்து விடும்.




பிற‌கு பூ போல் வ‌ந்து பொங்கி நிற்கும்.


5 லிருந்து 7 நிமிட‌த்திற்குள் அடுப்பை அனைத்து விட‌லாம்.


ரொம்ப‌ நேர‌ம் விட்டாலோ, தீயின் த‌ன‌லை அதிக‌மாக‌ வைத்தாலோ க‌ரிந்துவிடும்.

சுட‌ சுட‌ பாப் கார்ன் குடும்ப‌த்துட‌ன் சுவைத்து ம‌கிழுங்க‌ள்.