Showing posts with label கூட்டு. Show all posts
Showing posts with label கூட்டு. Show all posts

Thursday, January 6, 2011

அரைத்து விட்ட வாழைதண்டு கூட்டு


///வெங்காயம் தக்காளி விக்கிர விலையில் வெங்காயம் இல்லாம என்ன குறிப்பு போடலாமுன்னு யோசித்தேன், வாழதண்டு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, மனோ அக்கா வாழ தண்டு ரசம் என்றதும் எனக்கு கூட்டு சாப்பிட ஆசை உடனே செய்தாச்சு சுவைத்து மகிழுங்கள்./

அரைத்து விட்ட வாழைதண்டு துவரம் பருப்பு கூட்டு

தேவையானவை

வாழை தண்டு – ஒரு ஜான் அளவு
துவரம் பருப்பு – அரை ஆழாக்கு (100 கிராம்)

எண்ணையில் வறுத்து பொடிக்க

எண்ணை - ஒரு மேசை கரண்டி
காஞ்சமிளகாய் நீட்டு மிளகாய் – 3
கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு மேசைகரண்டி
முழுதனியா – ஒரு மேசை கரண்டி
கருவேப்பிலை – 10 இதழ்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – இரண்டு மேசை கரண்டி

Sunday, December 12, 2010

செட்டி நாடு மட்டன் கிரேவி - chettinad mutton gravy



தேவையானவை

மட்டனில் வரட்டி கொள்ள
எலும்புடன் மட்டன் – 400 கிராம்
உப்பு தேவைக்கு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் – கால்

தாளிக்க

எண்ணை – இரண்டு மேசை கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – இரண்டு
தக்காளி – ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசை கரண்டி
கருவேப்பிலை – இரண்டு முன்று ஆர்க்
மிளகாய்தூள் – கால்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

தேங்காய் பவுடர் – முன்று தேக்கரண்டி

வறுத்து பொடிக்க

மிளகு – ஒன்னறை தேக்க்ரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்க்ரண்டி
கருப்பு ஏலக்காய்- ஒன்று, பச்சை ஏலக்காய் – ஒன்று
பிரியாணி இலை – முன்று
கிராம்பு – முன்று
பட்டை – சிறியட் துண்டு
முழு தனியா – ஒரு தேக்கரண்டி ( அ) தூள்
முந்திரி - நான்கு

செய்முறை

1.மட்டனில் வரட்டி கொள்ளவேண்டியவைகளை சேர்த்து வரட்டிபாதி வேக்காடு வெந்து வைத்து கொள்ளவும்.வறுத்து பொடிக்க வேண்டியவைகளை வறுத்து பொடிக்கவும்.
2. குக்கரில் எண்ணையை காய வைத்து கருவேப்பிலை , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் தக்காளி மடங்கியதும், பொடித்த பொடி,உப்பு,தேங்காய் பொடி சேர்த்து நன்கு பிரட்டவும்.
5. ஒரு சேர எல்லாவற்றையும் நன்கு கிளறவும்.கிளறி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்க்ரில் முன்று விசில் விட்டு இரக்கவும்.
மட்டன் பஞ்சு மாதிரி வெந்து கிரேவியும் சேர்ந்து சுவை சூப்பராக இருக்கும்.

Note:

சுவையான செட்டி நாடு மட்டன் கிரேவி ரெடி.
பிளெயின் சாதம், ரொட்டி,நான்,பிரைட் ரைஸ் சப்பாத்தி வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.

சுவை எபப்டி இருந்ததுன்னு கண்டிபாக வந்து சொல்லனும்.





Thursday, April 1, 2010

முழு கத்திரிக்காய் முட்டை கூட்டு


தேவையான பொருட்கள்


சின்ன முழு கத்தரிகாய் = 4
அவித்த முட்டை = 4
டொமேட்டோ பேஸ்ட் = 135 கிராம் பாக்கெட்
சிவப்பு மிளகாய் தூள் = முக்கால் தேக்கரண்டி
தனியா(கொத்துமல்லி) தூள் = ஒன்னறை தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு
தாளிக்க‌
எண்ணை = 4 தேக்கரண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
மிள‌கு = 7
வெந்த‌ய‌ம் = கால் தேக்க‌ர‌ண்டி
பூண்டு = முன்று ப‌ல்
வெங்காயம் = ஒன்று பெரியது
க‌ருவேப்பிலை = முன்று ஆர்க்
ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று
கொத்துமல்லி தழை கடைசியாக மேலே தூவ‌









1.முட்டையை கழுவி ஒரு பத்திரத்தில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 7 லிருந்து பத்து நிமிடத்தில் வேகவைத்து ஓட்டை பிரித்து (வீட்டு ஓட்டை இல்லை) முழுசா நாலா பக்கமும் கீறி வைக்கவும்.



தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கத்திரிக்காயை கழுவி அதையும் முழுசாக நாலாபக்கமும் கீறி சேர்த்து வதக்கவும்.



2.லேசாக வதஙகியதும் தக்காளி பேஸ்ட்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு தூள்,தனியாதூள் சேர்த்து நன்கு கிளறிதேவைக்கு தண்ணீர் சேர்த்து முடி போட்டு வேக விடவும்.



3.வெந்ததும் அவித்த முட்டையையும் சேர்த்து கொதிக்கவிட்டு இரக்கவும்.
கொத்து மல்லி தழை தூவி பரிமாறவும்.





இது குஸ்கா, பிரியாணி, பிளெயின் சாதத்திற்கு தொட்டு கொள்ள நல்ல இருக்கும்.


டொமேட்டோ பேஸ்ட் கிடைக்காதவர்கள், பழுத்த ரெடி தக்காளி இரண்டு அரைத்து சேர்க்கவும்.


இது பிரியாணிக்கு தயாரிக்கும் எண்ணை கத்திரிக்காய் போல் சிறிது மாற்றம் , பிரியாணிக்கு தொட்டு கொள்ளும் எண்ணை கத்திரிக்காய் பிறகு முடிந்த போது போடுகிறேன்




Saturday, March 6, 2010

வெந்தய கீரை பருப்பு - methi dal

வெந்தய கீரை = ஒரு கட்டு
துவரம் பருப்பு = கால் கப்
பாசிப்பயறு = ஒரு மேசை கரண்டி
எண்ணை = ஒரு தேக்கரண்டி
நெய் = அரை தேக்கரண்டி
வெங்காயம் = ஒன்று
பூண்டு = முன்று பல்
தக்காளி = அரை பழம்
மிளகாய் தூள் = கால் தேக்கரண்டி
தனியாத்தூள் = கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
தேங்காய் துருவல் = ஒரு மேசை கரண்டி






வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.பருப்பு வகைகளை ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணை விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து தாளித்து தக்காளியை அரைத்து ஊற்றி தூள் வகைகள் அனைத்தையும் போட்டு வதக்கி, கீரையை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக பருப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் துருவல், நெய் சேர்த்து குக்கரை மூடி முன்று விசில் விட்டு இரக்கவும்.
ரொம்ப அருமையான சுலபமான வெந்தயக்கீரை பருப்பு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.


குறிப்பு
டயட்டுக்கு ஏற்ற உணவு, டயட் செய்பவர்கள் (நெய், தேங்காய் சேர்க்க தேவையில்லை). சப்பாத்தியுடன் சாப்பிட நல்ல இருக்கும்.
அபார்ஷன் ஆனவர்கள் வெந்தய கீரை உணவில் சேர்த்து கொண்டால் கர்பப்பையில் உள்ள அழுக்குகள் வெளியாகும்.
கர்ப்பப்பையில் உள்ள அழுக்குக்களை வெளியேற்ற பிள்ளை பெற்றவர்களுக்கும், கருகலைப்பானவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் நல்லது
உடல் சூடு, வயிற்று புண் வாய் புண் அல்சருக்கும் மிகவும் நல்லது இந்த வெந்தயக்கீரை.
இதில் மேத்தி புலாவ், மேத்தி பரோட்டா, மேத்தி மீன் கூட்டு, மேத்தி சிக்கன் என வித விதமாக செய்யலாம்.
இது குக்கரில் செய்வதால் நல்ல வெந்து இருக்கும் குழந்தைகளுக்கு அப்படியே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.


மற்ற கீரைகளையும் இதே முறையில் செய்யலாம்.
வெந்தயக்கீரை கிடைக்கவில்லை என்றால் வீட்டிலேயே ஈசியாக சின்ன தொட்டியில் வைத்து பிரெஷாக கூட சமைக்கலாம்.
ஒரு கைப்பிடி வெந்தயத்தை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றினால் முன்றே நாளில் வெந்தயக்கீரை ரெடி.



Friday, November 6, 2009

நெத்திலி மீன் தொக்கு


மீன் டிப்ஸ்க்கு கீழே கவி ஜலீலாக்கா முள்ளே இல்லாமல் மீனை எப்படி சாப்பிடுவது என்று கேட்டாங்க.இதோ நெத்திலி மீனில் முழுவதும் முள் ஆனால் அதை முள்ளே இல்லாமல் சாத்தத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

மீன் கழுவும் விதம்


பெரிய அலுமினியம் கண் வடிகட்டி எடுத்துக்க்கொள்ளுங்கள்.மீனை ஒரு சட்டியில் தண்ணீரில் போட்டு லேசாக அரிசி களைவது போல் கலந்து வடுகட்டியில் போடவும்.
சிங்கில் டேபுக்கு நேரக வடிகட்டியை பிடித்து கொண்டு இரண்டு மூன்று தடவை கையால் உலசி கழுவவும்.
இப்போது அழுக்கு மண் எல்லாம் போய் சுத்தமாகி விடும்.
மீனி தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விறலால் கீறி தலையோடு சேர்த்து முள்ளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும்.
அதே மாதிரி எல்லா மீனையும் செய்யவும்.
இப்போது மீனில் சுத்தமாக முள் இருக்காது மீண்டும் ஒரு முறை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
இப்போது போன் லெஸ் நெத்திலி மீன் ரெடி அப்ப‌ர‌ம் என்ன‌ குழ‌ம்பு வைத்து சாப்பிட‌வேண்டது தான்.
பிள்ளைக‌ளுக்கும் அப்ப‌டியே பிசைந்து ஊட்டி விட‌லாம். இதே கிள‌ங்கா மீனிலும் எடுக்க‌லாம்
.




தேவையான பொருட்கள்



நெத்திலி மீன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - கால் கிலோ
பச்ச மிளகாய் - முன்று
மிளகாய் தூள் - ஒன்னறை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஆறு பல்
கருவேப்பிலை - அரை கை பிடி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணை - முன்று மேசைகரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேஙகாய் பால் - அரை கப் (இரண்டு பத்தை)









1. முதலில் நெத்திலியை முள்ளெடுத்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.



2. வெங்காயம், தக்காளியை பொடியாக அரியவும்.



3.ஒரு பெரிய வாயகன்ற வானலியை காயவைத்து அதில் எண்ணையை ஊற்றி கடுகு,சீரகம்,வெந்தயத்தை போட்டு கருகாமல் வெடிக்கவிட்டு பூண்டை தட்டி போடவும்.



3.பூண்டு லேசாக வதங்கியதும் வெங்காயம், கருவேப்பிலையை போட்டு நன்கு வதக்கவும்.



4.எல்லா மசாலாதூள்வைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி, பச்ச மிளகாயை இரண்டாக ஒடித்து போட்டு நன்கு கிளறி ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைக்கவும்.



5. புளியை கட்டியாக கரைத்து ஊற்றி பச்ச வாடை போகும் வரை கொதிக்கவிடவும்.



6.இப்போது வடித்து வைத்திருக்கும் நெத்திலி, தேங்காய் பாலை சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.



7.நெத்திலி கொதித்து கிரிப்பானதும். கொத்துமல்லை தழை தூவி இரக்கவும்.



8. சுவையான நெத்திலி தொக்கு ரெடி.




குறிப்பு




1.நெத்திலியை கழுவும் போது தலை பகுதியை பிடித்து கொன்டு கட்டி விரலால் நடுவில் கீறினால் முள்ளை அப்படியே எடுத்து விடலாம்.சாப்பிடும் போது ஒரு முள் கூட இருக்காது.


2.நெத்திலியை கழுவும் போது ஒரு பெரிய கண் வடிகட்டியில் (புளி வடிகட்டி போல்) வைத்து கழுவினால் கீழே விழாது. அரிசி க‌ளைவ‌து போல் க‌ழுவ‌னும் இல்லை என்றால் குழைந்து விடும்.


3.நெத்திலி மீன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் போடனும்.


4.காரசாரமாக சாப்பிடுபவர்கள் இன்னும் அரை தேக்கரண்டி மிள‌காய் தூளும், ஒரு பச்சமிளகாயும் கூட சேர்த்து கொள்ளலாம்.


5.கடைசியில் உப்பு பார்த்து தேவைக்கு சேர்த்து கொள்ளவும்







Wednesday, October 21, 2009

மொகலாய் சிக்கன் கிரேவி - Mughlai Chicken Gravy



//ஹோட்டலில் முந்திரியை நெயில் வறுத்து பொடித்தோ அரைத்தோ போடுவதால் தான் கிரேவி ரொம்ப ருசியாக இருக்கிறது.
இதில் தயிர் சேர்த்துள்ளது, சிக்கன் சூடு என்று சாப்பிடாமல் இருப்பவர்கள் இதுபோல் தயாரித்தால் தாராளமாக சாப்பிடலாம்//


சிக்கன் = ஒரு கிலோ


அரைத்து கொள்ள‌

வருத்த முந்திரி = 50 கிராம்
வதக்கிய வெங்காயம் = ஒன்று பெரியது
மிளகு = ஒரு மேசை கரண்டி
காஞ்ச மிளகாய் = ஐந்து
சோம்பு = ஒன்னறை தேக்கரண்டி
முழு தனியா = ஒரு மேசை கரண்டி
பட்டை = ஒரு அங்குலம் அளவு
கிராம்பு = முன்று
ஏலம் ‍= இரன்டு
தயிர் = 50 மில்லி + 350 மில்லி

தாளிக்க‌
********
எண்ணை = 50 மில்லி
க‌ர‌ம் ம‌சாலா = அரை தேக்க‌ர‌ண்டி





செய்முறை


1. அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் அரைக்கவும். அரைத்து கடைசியாக தயிர் சேர்த்து அரைத்தால் மிக்சியில் ஏதும் ஒட்டாமல் வந்துவிடும்.

2. சிக்கனை நன்கு கழுவி அதில் உப்பு,மஞ்சள் தூள் தயிர் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். அடுத்து அரைத்த‌ பொருட்க‌ளையும் சேர்த்து அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.

3. பிற‌கு ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணை + க‌ர‌ம் ம‌சாலா சேர்த்து ஊற‌வைத்த‌ சிக்க‌னை போட்டு அதிக‌ தீயில் ந‌ன்கு கிள‌றி , பிற‌கு தீயை மித‌மாக‌ வைத்து ந‌ன்கு வேக‌விட்டு கிரேவி ப‌தம் வ‌ந்து எண்ணை தெளிந்து வ‌ரும் போது இர‌க்க‌வும்.

4. குக்க‌ரில் செய்ப‌வ‌ர்க‌ள் குக்க‌ரிலும் செய்ய‌லாம். ந‌ன்கு கொதிக்க‌ விட்டு இர‌ண்டு மூன்று விசில் விட்டு இர‌க்க‌வும்.




5. சூப்பரனா சுவையான மொகலாய் சிக்கன் கிரேவி

Thursday, June 4, 2009

ஈரல் கூட்டு - Liver Gravy





தே.பொருட்க‌ள்





ஈரல் = கால் கிலோ

தக்காளி = ஒன்று

வெங்காயம் = இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி

மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி

உப்பு தூள் = தேவைக்கு

ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி

க‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி

ப‌ச்ச‌ மிள‌காய் = இர‌ண்டு (பொடியாக‌ அரிந்த‌து)

கொத்து மல்லி தழை = சிறிது

ப‌ட்டை = ஒரு சிறு துண்டு

எண்ணை = நான்கு தேக்கரண்டி







செய்முறை



1. ஈர‌லை சுத்த‌ம் செய்து மேலே உள்ள‌ மெல்லிய‌ இழையை இர‌ண்டு முன்று முறை க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.



2. ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியை காய‌வைத்து அதில் எண்ணை ஊற்றி ப‌ட்டை போட்டு வெடிக்க‌ விட‌வும்.



3.அடுத்து வெங்காய‌ம் + இஞ்சி பூண்டு + த‌க்காளியை ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ வ‌த‌க்க‌வும்.

4.த‌க்காளி சுருண்ட‌தும் ஈரலை போட்டு உப்பு + ம‌ஞ்ச‌ள் தூள் சேர்த்து அதிக‌ தீயை வைத்து கிள‌ற‌வும்.



5.அடுத்து மிள‌காய் தூள்,க‌ர‌ம் ம‌சாலா தூள் சேர்த்து கிள‌றி தீயை குறைத்து வைத்து மூடி போட்டு சிறிது நேர‌ம் வேக‌ விட‌வும்.

6. க‌டைசியாக‌ கொத்தும‌ல்லி த‌ழை ம‌ற்றும் ப‌ச்ச‌ மிள‌காயை பொடியாக‌ ந‌ருக்கி சேர்த்து கிள‌றி இர‌க்க‌வும்.





குறிப்பு:



ஆட்டு ஈர‌ல் இர‌த்த‌ம் க‌ம்மியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ந‌ல்ல‌து.

ரொம்ப‌ நேர‌ம் வேக‌ விட்டால் க‌ல்லு மாதிரி ஆகிவிடும். க‌ருப்பாக‌வும் ஆகிவிடும்.ஹிமோகுளொபின் க‌ம்மியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள், க‌ர்பிணி பெண்க‌ள் இதை வார‌ம் முன்று முறை சாப்பிட்டால் இர‌த்த‌த்தின் அள‌வு கூடும்.