இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
மட்டன் ரான் என்பது சிக்கன் ஹோல் லெக் போல மட்டன் லெக் இத மொத்தமாக அப்படியே கிரில் செய்து குடும்பத்தோடு ஒரு தட்டில் சாப்பிடுவது .
ஹஜ் பெருநாள் நேரம் குர்பாணி மட்டன் கொடுக்கும் போது மற்றவர்களுக்கு கொடுத்தது போக மீதியை இப்படி நாம் செய்து கொள்ளலாம்.
இதில் இரண்டு வகையான செய்முறை கொடுத்துள்ளேன்/
தேவையான பொருட்கள்
மட்டன் லெக் – முக்கால் கிலோ
தயிர் – 2 மேசைகரண்டி
சிவப்பு மிளகாய் தூள் ஒரு மேசைகரண்டி
ஆச்சி கபாப் மசலா – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
எலுமிச்சை சாறு – ஒரு மேசைகரண்டி
பப்பாளி காய் பேஸ்ட் – ஒரு மேசைகரண்டி
ஆலிவ் ஆயில் + பட்டர் – 5 தேக்கரண்டி
Mutton Raan, Leg Roast -1 Samaiyal attakaasam by Jaleelakamal
மட்டன் லெக் ஐ அங்காங்கே கீரல் போட்டு உப்பு தடவி சிறுது நேரம் ஊறவைக்கவும். பிறகு தயிரில் எல்லா மசாலாக்களையும் சேர்த்து கலக்கி ஆலிவ் ஆயில் + பட்டரை 4 மேசைகரண்டி ஊற்றி மசாலாவுடன் சேர்த்து மேரினேட் செய்யவும். ( இரவு முழுவதும் ஊறனும்)
கிரில் ட்ரேயில் ரானை வைக்கும் முன் உங்களுக்கு பிடித்தமான காய் கறிகளை கட் செய்து பரவலாக வைத்து அதன் மேல் மட்டன் ரானை வைக்கவும்.
பிறகு ஓவனை 200 டிகிரியில் வைத்து விட்டு நடு ட்ரேவில் ஊறவைத்த மட்டனை கிரில் பண்ணனும். குறைந்தது ஒன்னறை மணி நேரம் ஆகும்.
அரை மணி நேரம் கழித்து திருப்பி விடனும். ஒரு மணி ஆனதும் மேலும் சிறிது பட்டர் ஆலிவ் ஆயில் தெளித்து இரண்டும் பக்கமும் கால், கால் மணி நேரம் கிரில் செய்யவும்.
மட்டன் லெக் ரோஸ்ட்
மட்டன் லெக் ரோஸ்ட் -2மட்டன் ரான்
மட்டன் ரான் என்பது சிக்கன் ஹோல் லெக் போல மட்டன் லெக் இத மொத்தமாக அப்படியே கிரில் செய்து குடும்பத்தோடு ஒரு தட்டில் சாப்பிடுவது .
ஹஜ் பெருநாள் நேரம் குர்பாணி மட்டன் கொடுக்கும் போது மற்றவர்களுக்கு கொடுத்தது போக மீதியை இப்படி நாம் செய்து கொள்ளலாம்.
Goat leg roast 2
மட்டன் லெக் ரோஸ்ட் -2
மிளகாய் தூள் - 1 மேசைகரண்டி
தனியா( கொர கொரப்பாக திரித்தது) - 1 மேசைகரன்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
பூண்டு பொடி - 1 தேக்கரண்டி
வெங்காய பொடி - ஒரு தேக்கரண்டி
வடிகட்டிய கட்டி தயிர் - 2 மேசைகரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைகரண்டி
பப்பாளி காய் - பேஸ்ட் - 1 மேசைகரண்டி
செய்முறை
மட்டன் லெக் ஐ அங்காங்கே கீரல் போட்டு உப்பு தடவி சிறுது நேரம் ஊறவைக்கவும். பிறகு தயிரில் எல்லா மசாலாக்களையும் சேர்த்து கலக்கி ஆலிவ் ஆயில் + பட்டரை 4 மேசைகரண்டி ஊற்றி மசாலாவுடன் சேர்த்து மேரினேட் செய்யவும். ( இரவு முழுவதும் ஊறனும்)
கிரில் ட்ரேயில் ரானை வைக்கும் முன் உங்களுக்கு பிடித்தமான காய் கறிகளை கட் செய்து பரவலாக வைத்து அதன் மேல் மட்டன் ரானை வைக்கவும்.
பிறகு ஓவனை 200 டிகிரியில் வைத்து விட்டு நடு ட்ரேவில் ஊறவைத்த மட்டனை கிரில் பண்ணனும். குறைந்தது ஒன்னறை மணி நேரம் ஆகும்.
அரை மணி நேரம் கழித்து திருப்பி விடனும். ஒரு மணி ஆனதும் மேலும் சிறிது பட்டர் ஆலிவ் ஆயில் தெளித்து இரண்டும் பக்கமும் கால், கால் மணி நேரம் கிரில் செய்யவும்.
மட்டன் லெக் ஐ அங்காங்கே கீரல் போட்டு உப்பு தடவி சிறுது நேரம் ஊறவைக்கவும். பிறகு தயிரில் எல்லா மசாலாக்களையும் சேர்த்து கலக்கி ஆலிவ் ஆயில் + பட்டரை 4 மேசைகரண்டி ஊற்றி மசாலாவுடன் சேர்த்து மேரினேட் செய்யவும். ( இரவு முழுவதும் ஊறனும்)
கிரில் ட்ரேயில் ரானை வைக்கும் முன் உங்களுக்கு பிடித்தமான காய் கறிகளை கட் செய்து பரவலாக வைத்து அதன் மேல் மட்டன் ரானை வைக்கவும்.
பிறகு ஓவனை 200 டிகிரியில் வைத்து விட்டு நடு ட்ரேவில் ஊறவைத்த மட்டனை கிரில் பண்ணனும். குறைந்தது ஒன்னறை மணி நேரம் ஆகும்.
அரை மணி நேரம் கழித்து திருப்பி விடனும். ஒரு மணி ஆனதும் மேலும் சிறிது பட்டர் ஆலிவ் ஆயில் தெளித்து இரண்டும் பக்கமும் கால், கால் மணி நேரம் கிரில் செய்யவும்.
இது போல லெக் ரோஸ்ட் வெளி நாடுகளில் அரபு நாடுகளில் செய்து கிரில் செய்து மந்தி, மத்பி,மக்பூலா, மஜ்பூஸ், கப்சா போன்ற உணவு வகைகளுடன் செய்து சாப்பிடுவார்கள். பாக்கிஸ்தானியர்களும் இது போல பெருநாள் (ஈத் ) ளின் போது குடும்பமாக சேர்த்து ஒன்றாக செய்து ஒரே தட்டில் அனைவரும் ஒற்றுமையாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.
அந்த காலங்களில் குழந்தைகளுக்கு பாரம்பரியமாக ஒற்றுமை மற்றும் பகிர்ந்து உண்ணுதல் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை பிள்ளைகளுக்கு கற்று தரும் வகையில் இது போல மொத்தமாக மட்டன் ரான் ( மட்டன் லெக் )என்றில்லை மற்ற உணவு வகைகளையும் இப்படி ஒரே தட்டில் எல்லாரும் அமர்ந்து சாப்பிடுவார்கள்.
இப்போது உள்ள அவசர உலகில் எல்லாரும் ஒன்று கூடி சாப்பிடுவதே ஒரு அதியமாக இருக்கு.. ஏன் நீங்களும் இது போல உங்கள் குழந்தைகளுக்கு பழக்க படுத்தலாமே///
பஸ்பூஸா என்பது துபாயில் தாஜா சிக்கன், கே எஃப் சி, அல் பரூஜ், போன்ற அரபிக் உணவங்களில் பிரத்தி பெற்ற இனிப்பு கேக் . இது முட்டையில்லாமல் செய்த்தது முட்டை போட்டு சாப்ரான் கொஞ்சம் சேர்த்து கொண்டால் இன்னும் நல்ல சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாகு தயாரிக்க
சர்க்கரை - 200 கிராம்
தண்ணீர் - 100 கிராம்
லெமன் ஜூஸ் - ஒரு துளி
ஆரஞ்ச் ஜுஸ் - 1 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி
கேக் தயாரிக்க
செமோலினா ( பட்டு போல் உள்ள ரவை) - 225 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
கன்டென்ஸ்ட் மில்க் - அரை கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கர்ண்டி
பால் - ஒரு கப்
வென்னிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
உருக்கிய வெண்ணை - 20 கிராம்
வெள்ளை எள் பேஸ்ட் அல்லது பட்டர் - சிறிது
grated Dry coconut - 1/2 cup
பொடியாக அரிந்த பாதாம் - தேவைக்கு
செய்முறை
சர்க்கரை பாகு தயாரிக்க
முதலில் வாயகன்ற பவுளில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து கொதிக்க விட்டவும், லெமன் சாறு சேர்த்து குளிரவிடவும். பிற்கு ரோஸ் வாட்டரும் , ஆரஞ்ச் வாட்டர் ( அல்லது) ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து தனியாக வைகக்வும்.
பேக்கிங் ட்ரேவில் தஹீனி அல்லது பட்டரை தடவி வைக்கவும்.
பெரிய வயகன்ற பவுளில் செமொலினா, சர்க்கரை, தேங்காய் , பேக்கிங் பவுடர் அனைத்தையும் கலந்து வைககவும்.
நடுவில் ஒரு துளை போட்டு அதில் உருக்கிய பட்டர்,வென்னிலா எசன்ஸ்,சர்க்கரை பாகு சிறிது ,தேவைக்கு பால் சேர்த்து கையால் நன்கு கலக்கவும், கட்டியான சூப் போல கலக்கி வைகக்வும்.
பேக் செய்ய போகும் ட்ரேவில் ஊற்றி 12 மணி நேரம் ஊறவைக்கவும்.
3 மணி நேரமும் போதுமானது
ஓவனை 200 டிகிரிக்கு சூடுபடுத்தி ட்ரேவில் இருக்கும் பஸ்பூசா கலவையை 3 இஞ்ச் சதுரவடிவமாகவோ அல்லது டயமண்ட் வடிவிலோ வெட்டி மேலே பாதாம் பருப்பை எல்லா கட்டத்திலும் அடுக்கி வைத்து 15 லிருந்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
நல்ல வெந்து ப்ரவுனானதும் மீதி உள்ள சர்க்கரை பாகை சூடு படுத்தி கேக்கின் மேல் ஊற்றி குளிரவிடவும்.
பரிமாறும் போதுசிறிது சர்க்கரை சிரப் ஊற்றி பரிமாறலாம்.
புனித தியாக திருநாள் வாழ்த்துக்கள்/ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
இந்தியாவில் இன்று பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் புனித தியாக திருநாள் வாழ்த்துக்க்ள், இந்த பெருநாள் அன்று இஸ்லாத்தின் 5 கடமைகளும் ஒன்றான ஹஜ்செல்வதை வசதி உள்ளவர்கள் ஹஜ் சென்று தங்கள் கடமையை நிறைவேற்றுவார்கள்.
ஹஜ் க்கு செல்லாதவர்கள் பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு நோன்பு வைக்கனும்.இந்த நோன்பு வைப்பதால் நாம் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்.
இந்த நோன்புக்கு பெயர் "அரஃபா நோன்பு" என்பதாகும்.
ஹஜ் க்கு சென்றவர்கள் அரஃபா என்ற மைதானத்தில் ஒன்று கூடுவார்கள்.
நானும் குடும்பத்துடன் ஹஜ் செல்லவேண்டும் என்று நாட்டம் வைத்துள்ளேன். அதை அல்லாஹ் சீக்கிரம் நிறைவேற்றி வைக்க எனக்காக துஆ செய்யுங்கள்.
நோன்பு பெருநாள் , ஹஜ் பெருநாள் தொழுகை என்பது , இறைவனுக்கு நன்றி செல்லுத்தும் பொருட்டு உலகில் உள்ள அனைத்து முஸ்லீம் களும் காலை சூரியன் உதமாகும் போது இரண்டு ரக் அத்தை கொண்ட தொழுகையை நிறைவேற்றுவதாகும்.
ஹஜ் பெருநாள் தொழுது முடித்து வந்து நாம் சமைத்து வைத்திருக்கும் இனிப்பு பண்டத்தை சாப்பிடவேண்டும்.
எப்போதும் வெளிநாடுகளில் ஒரு நாள் முன் பெருநாள், மறுநாள் இந்தியாவில் வரும். இந்த முறை இரண்டு நாள் தள்ளி வந்துள்ளது.
இங்கு துபாயில் சனிக்கிழமை - 04.10.14 அன்று பெருநாள் நல்லபடியாக முடிந்தது.
நாங்கள் இங்குள்ள ஈத்கா என்னும் தொழுகை திடலில் குடும்பத்துடன் சென்று தொழுது வந்தோம்.
இந்த தடவை 5 வருடமாக எங்க கூட இல்லாமல் இந்த முறை என் பெரிய பையன் எங்களுடன் வந்து சேர்ந்து பெருநாள் கொண்டாடியது மிக்க மகிழ்சி.
இந்த வருடம் ஹஜ் பெருநாளுக்கு நான் செய்தது.
காலை டிபன்
ஷீர் குருமா/Sheer Kurma
மட்டன் சேமியா/Mutton Semiya
ஊறுகாய் / Pickle
இஞ்சி டீ/Ginger Tea
மதியம்
மட்டன் பிரியாணி(Mutton Biriyani)
எண்ணை கத்திரிக்காய்(ennai kaththirikkaay) (Bringal Curry)
ஹஜ் பெருநாளுக்கு எல்லாரும் ஆடு அறுத்து அதை உறவினர்களுக்கும் , தெரிந்தவர்களுக்கும் பண்டமாற்று போல் ஒருவருக்கு ஒருவர் பங்கிட்டு கொடுப்பார்கள், அப்படி எல்லாவீடுகளில் இருந்து வரும் கறிகளை பதப்படுத்துவார்கள். முன்றில் ஒரு பங்கை ஏழைகளுக்கும் கொடுப்போம்.
போன வருடம் ஹஜ் பெருநாள் அன்று ஊரில் இருந்தேன். அப்போது மாமியார் வீட்டில் , குர்பாணி கொடுத்தபோது கிட்னி, ஈரல், மட்டன் எல்லாவகைகளையும் தனித்தனியாக செட்டி நாடு மட்டன், மிளகு ஈரல், கிட்னி ஃப்ரை, என பலவகைகளை எல்லோருக்கும் செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தினேன், எல்லாரும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டது போல் இருக்கு என்றார்கள்.
அம்மாவீட்டில் கறி தக்குடி எல்லாரும் சேர்ந்து போட்டோம்.
மட்டன் தக்குடி குர்பாணி கறியில் செய்வதற்கு ஏற்ற சமையல் கறி தக்குடி.
முக்கியாமாக துண்டு கறிகளை உப்பு கண்டம் போடுவார்கள்.உப்பு கன்டம் கறி தயாரித்து வெளிநாடுகளில் உள்ளவர்கள் பேக்கிங் செய்து அனுப்புவார்கள்.
கறியை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அதில் அவரவர் விருப்ப மசாலாவை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் ஊறவைத்து சனல் கயிற்றை கோணி ஊசியில் கோர்த்து இந்தகறியை தூர தூரமாக கோர்த்து கொடுப்போல் காயவைக்கவேண்டும்.காய்ந்த கறியை ஈரமில்லாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து தேவைக்கு தட்டி பொரித்து சாப்பிடலாம்.
இதை தண்ணீர் படாமல் வைத்து தேவைக்கு எடுத்து தட்டி அப்பளம் பொரிப்பது போல் பொரித்து ரசம் சாதம், பருப்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.ஏற்கனவே 4 வருடம் முன் போட்ட பதிவு தான் மீண்டும் இப்போது லின்க் கொடுத்துள்ளேன்.
நிறைய பேருக்கு வந்து குமியும் கறியை வைத்து என்ன செய்வதென்று தெரியாது
ஹஜ் பெருநாளுக்கு எல்லாரும் ஆடு அறுத்து அதை உறவினர்களுக்கும் , தெரிந்தவர்களுக்கும் பண்டமாற்று போல் ஒருவருக்கு ஒருவர் பங்கிட்டு கொடுப்பார்கள், அப்படி எல்லாவீடுகளில் இருந்து வரும் கறிகளை பதப்படுத்துவார்கள்.
அதை உப்பு கண்டம் போடுவார்கள்.உப்பு கன்டம் கறி தயாரித்து வெளிநாடுகளில் உள்ளவர்கள் பேக்கிங் செய்து அனுப்புவார்கள்.இதை தண்ணீர் படாமல் வைத்து தேவைக்கு எடுத்து தட்டி அப்பளம் பொரிப்பது போல் பொரித்து ரசம் சாதம், பருப்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
மட்டன் தக்கடியும் போட்டு குடும்பத்தினருடன் சேர்ந்து விருந்து வைத்து சாப்பிடலாம்.
அதில் இருக்கும் ஈரல், மண்பத்தை போன்றவைகளை இப்படி புலாவ் பிரியாணி போல் செய்யலாம்.
ஆட்டு ஈரல் பாலக் கீரை பிரியாணி (புலாவ்)
தேவையான பொருட்கள்
தேங்காய் சாதம் தாளிக்க
1.தரமான பாசுமதி அரிசி – அரை படி (4டம்ளர்) 800 கிராம்
5.குக்கரில் எண்ணையை காயவைத்து பட்டை ஏலம் கிராம்பு போட்டு வெடிய விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாடைபோகும் வரை வதக்கி கொத்துமல்லி புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தக்காளிபொடியாக அரிந்து சேர்த்து பச்சமிளகாய் ஒடித்து போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.சேர்க்க வேண்டிய தூள்வகைகள் அனைத்தையும் சேர்த்து ஈரலையும் சேர்த்து குக்கரில் முன்று விசில் விட்டு இரக்கவும்.
6.பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் சேர்த்து வெடிய விட்டு வெங்காயம்,இஞ்சி பூண்டு , புதினா கொத்துமல்லி தழை சேர்த்து தாளிக்கவும்.
7.அடுத்து வெந்த ஈரலை சேர்த்து ஒரு டம்ளருக்கு ஒன்னறை டம்ளர் வீதம் அளந்து ஊற்றவும். 4 டம்ளர் அரிசிக்கு 6 டம்ளர் தேங்காய் பால் ஊற்றவேண்டும்.
8.லேசாக கொதிக்கும் போது அரிசியை களைந்து ஊற்றி உப்பு சரி பார்த்து சேர்க்கவும். அரை பதம் அரிசி வெந்த்தும் வேகவைத்த கடலை பருப்பு, அரிந்து வைத்துள்ள கீரை சேர்த்து முடிபோட்டு தீயின் தனலை சிம்மில் வைத்து20 நிமிடம் தம்மில் விடவும்.
9.சுவையான ஆரோக்கியமான சத்தான ஈரல் கீரை பிரியாணி ரெடி.
இது ஹிமோ குளோபின் அளவு கம்மியாக உள்ளவர்கள்இந்த ஈரல்கீரை பிரியாணியைஅடிக்கடி சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் இரண்டு மாதத்திற்குள் ஹிமோ குளோபின் அளவு அதிகரிக்கும்
மட்டன் சாப்பஸ் துண்டுகள் = ஒரு கிலோ
மிளகு = இரண்டு தேக்கரண்டி
உப்பு = தேவையான அளவு
பச்ச மிளகாய் = ஆறு
தனியாத்தூள் = ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் = நான்கு தேக்கரண்டி
எண்ணை + டால்டா(அ) பட்டர் = நான்கு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் = அரை தேக்கரண்டி
பச்சமிளகாயை சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.சாப்பஸ் மட்டனை நன்கு சுத்தம் செய்து அதில் அரைத்த பச்ச மிளகாய், மிளகு தூள், தனியாதூள்,உப்பு தூள், சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு குக்கரில் மட்டனை வேக விட்டு இரக்கி மட்டனில் உள்ள தண்ணீரை வற்றவிடவும்.
ஒரு நான் ஸ்டிக் தவ்வா (அ) தோசை கல்லில் எண்ணை + டால்டாவை விட்டு வெந்த மட்டனை சேர்த்து கரம் மசாலா தூள் தூவி நன்கு சிவறும் வரை வறுத்தெடுக்கவும்.
குறிப்பு
சாப்பஸ் துண்டு தனியாக கிடைக்கிறது, அது இல்லை என்றால் எலும்புடன் கூடிய மட்டனையே பயன் படுத்தலாம். ஹோட்டலில் வைக்கும் ரிச் சாப்பஸ் டிரை மட்டன் ஃப்ரை.
ஆனால் செய்வதோ ரொம்ப சுலபம்.
தேவையானவை காய் வேக வைக்க: காய் வகைகள் ( முருங்கை, கருனை, வாழை,கத்திரி) = அரை கிலோ மாங்காய் - ஒன்று வெங்காயம் - இரண்டு தக்காளி - இரண்டு பச்சை...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.