Showing posts with label முத்தான துஆக்கள். Show all posts
Showing posts with label முத்தான துஆக்கள். Show all posts

Sunday, July 7, 2013

இனிய ரமலான் வாழ்த்துக்கள்







புனித மிக்க ரமலானை வரவேற்க்க நபிகளாரின் வழிமுறை
நம் புனித மிக்க ரமலான் மாதத்தை வரவேற்க்க மிக ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம்
அறிந்து கொள்ளவேண்டிய சில முக்கிய செய்திகள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:   

நீங்கள் பிறை பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள், பிறை பார்த்து நோன்பை முடித்துக்கொள்ளுங்கள் மேகம்
(பிறையை மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 
 (ஹதீஸ் – புஹாரி)
இது போன்று பல ஹதீஸ் காணப்படுகின்றன.   
நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானில் பிறை தேடினார்கள் ஸஹாபாக்களையும் தேட  துண்டிக்கொண்டிருந்தார்கள்.
ரமலானின் பிறையை பார்ப்பது பிக்ஹ் அடிப்படையில் சில  பேர் மட்டும் செய்தால் போதுமானது என்ற – கிபாயா-
சட்டமாக இருந்தாலும், நபி வழியில் பிறையை அனைவரும் பார்க்க முயற்சிப்பது அவசியமாகும். அப்படி பிறை
காண கிடைத்தால் அந்நேரம் கீழ்கண்ட துஆ ஓதுவது ஸுன்னாவாகும்

الله اكبر ، اللهم اهله علينا بالامن و الايمان و السلامة و الاسلام و التوفيق لما تحب و ترضى ربنا و ربك الله  
அல்லாஹ் அக்பர்,  அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் அம்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ்ல்
இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பு வ‌த‌ர்ளா ரப்பி வ ரப்புகல்லாஹ். 
அல்லாஹ் நீ தான் உயர்ந்தவன்
யா அல்லாஹ்! இந்த‌ பிறையை நிம்மதி உள்ள‌தாக‌வும்ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ
விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும்பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க்
கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும்உன‌து ர‌ப்பும் அல்லாஹ் தான்!


 -       ஹஸனி


**************************************


1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் தூஆ

"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".

அல்லாவே! கிருபையாளர் களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.


2. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ

"அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வக‌ஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்".

அல்லாவே!ஆலத்தார்களின் இரட்சகனே!எங்கலுடைய பாவங்களையும் எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.

3. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ


அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்.


அல்லாவே!ஆலத்தார்க்ளின் இரடகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!

குறிப்பு

மேற்கண்ட முன்று தூஆக்களையும் எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்தது. மற்ற தூஆக்களுடனும் சேர்த்தும் ஓதலாம்.

ஏக வல்ல இறைவனில் அருளால் நாம் ரமலான் மாதத்தை உடல் ஆரோக்கியத்தோடு அடைவதற்க்கு அல்லாஹ் உதவிபுரிவான்.

Monday, May 13, 2013

என் பொருள் தான் எனக்கு மட்டும் தான்








என் பொருள் தான் எனக்கு மட்டும் தான் தொடர் பதிவுக்கு ஆசியா சில தோழ தோழியர்களை அழைத்து இருந்தார்கள் அதில் என்னையும் அழைத்து இருந்தார்கள், எல்லாருமே இந்த பதிவு எழுதி மறந்தும் போய் இருப்பார்கள்.

என்னை பொருத்தவரை நான் பயன்படுத்தும் எல்லா பொருட்களும் என் பொருள் தான் எனக்கு மட்டும் தான்.

இப்படி லிஸ்டில் நிறைய இருக்கு.ஆனால் போட்டோக்கள் இல்லாததால் நானும் இங்கு பதிவு போடாமல் தள்ளி கொண்டே போய்விட்டேன்.



1. சமையல் டைரி 
2. குர் ஆன் கல்யாணத்தில் என் தாய் மாமா எனக்கு கொடுத்தது.
3. நான் சேகரித்த சின்ன சின்ன துஆ  புத்தகங்கள்
3. வித விதமான டிரஸுக்கு மேட்சான வளையல்கள்
4.மோதிரம்
5.கம்மல்

இன்னும் லிஸ்ட் நிறைய இருக்கு ..


1. சமையல் டைரி: முதல் முதல் ஒன்றுமே சமைக்க தெரியாத போது அம்மா கிட்ட கேட்டு , பாட்டி கிட்ட கேட்டு பாரம்பரிய குறிப்புகளை எல்லாம் எழுதி வைப்பேன். அடுத்து டிப்ஸ்கள் அப்பவே ரொம்ப வயதானவர்களை பார்த்தால் உடனே டிப்ஸ் கேட்டு எழுதி வைத்து கொள்வேன்.
இந்த டிப்ஸ்கள் என்ககு ரொம்பவே உதவியது,. இங்கு வ்லை தளங்களில் போட்டு நிறைய பேர் பயனடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.இந்த டிப்ஸ்கள் நான் 25 வருடம் முன் அவர்களிடம் கேட்டது, அவர்க்ள் எனக்கு சொல்லும் போது அவர்கள் வயது எப்படியும் 50, 55 இருக்கும். அப்ப இங்குள்ள என் டிப்ஸ 75 வருடமுன் உள்ள மிக அருமையான் டிப்ஸ்கள்.சில டிப்ஸ்கள் என் சொந்த அனுபவத்தில் எழுதி இருக்கிறேன்.
இன்னும் பல டிப்ஸ்கள் இங்கு நான் பகிரவில்லை. முடிந்த போது  பகிர்கிறேன்.டைரி ஊரில் இருந்து வரும் பிறகு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் வரவில்லை. 

ஆரம்பத்தில் தேவை பட்டது இப்ப கண் அளவு கை அளவில் என் இஷ்டத்துக்கு போடுவது, நிறைய பேருக்கு செய்வதாக இருந்தால் தான் சரியான அளவை அந்த டைரியில் பார்ப்பேன், இபப்  அந்த டைரி என் தங்கை மகளுக்கு கொடுத்து  இருக்கிறேன், அளவுகளை எழுதி விட்டு கொடுக்க சொன்னேன்.


2.குர் ஆன்.:கல்யாணத்தில் தாய் மாமா வாங்கி கொடுத்த குர் ஆன் அதில் ஓதி பழகிய பின் அதில் ஓதினால் தான் நல்ல திருப்தியாக இருக்கும்.

அந்த குர் ஆனில் -  என் கிரான்மா 1986  சில முக்கியமான சூராக்கள் அவங்கள் கையால் குறித்து கொடுத்தது 





1985 - என் கிரான்மா  இரவில் ஓதவேண்டியவை. என்று எனக்கு சொல்லி கொடுத்தவை.


இது 1984 ரில் ரமலான் அட்ட்டையில் வந்த துஆ.










சுட்டியை சொடிகி பார்க்கவும்.

இது என் பெரிமா பையன் ஏரோ ட்ராவல்ஸில் வேலைக்கு சேர்ந்த போது அங்கு ஓவ்வொரு வருடமும் பெருநாளுக்கு துஆ புக் போடுவார்கள் அதில் இருந்து முன்பு எடுத்து வைத்தது 




3. துஆ புத்தகங்கள்: சின்ன வயதில் இருந்து எங்கு எப்ப து ஆ புக் கிடைத்தாலும் அதை எடுத்து வைத்துகொள்வேன்.அதில் கிடைத்த ஒருசின்ன புக் தான் முத்தான துஆக்கள்
லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.




அந்த பெயரையே பிலாக்குகும் வைத்து விட்டேன்.

எப்ப எங்கு போனாலும் ஹாண்ட் பேகில் சின்ன யாஸின் சூரா (அ) மன் ஜில் புக், சிறிய துஆ புக் இருக்கும். அப்படி தான் ஊரில் பல் டாக்டர் கிட்ட போன போது கூட என் தங்கை துணைக்கு வந்ந்தாள். எனக்கு பல் பரிசோதனை நடந்து முடிய 45 நிமிஷம் ஆச்சு அது வரை என் ஹாண்ட் பேக்கை  வைத்திருந்த என் தங்கை  அதில் இருந்து நான் வைத்திருந்த துஆ புக் எடுத்து ஓதி கொண்டு இருந்தால் , நான் பல் பரிசோதனை முடிந்து வரும் போது அப்பா நீ பேக்கில் இந்த புத்தகங்கள் வைத்திருந்தது ரொம்ப நல்லதா போச்சு நானும் எல்லாவற்றையும் ஓதி முடிச்சேன். உன்னை போல் தான் பேக் கில் இது போல் துஆ புத்தகங்கள் வைத்து கொள்ளவேண்டும் என்று சொன்னாள்.

குர் ஆன் முன்புபோகும் போது வரும் போது எடுத்து போய் வந்து கிழிந்தே போய்விட்டது  ஒரு இட்மா இருக்கட்டும் என்று இங்கே நான் எங்கு இருக்கிறேனோ அங்கேயே வைத்து கொள்வ்து.

பீரோவில் துணி வைக்கிறேனோ இல்லையோ முதலில் ஒரு அடுக்கு துஆ புத்தகங்களை வைத்து கொள்வேன்.


என்னை போலவே  என் பையனும் காலேஜ் படிக்க போகும் போது சில துஆக்கள் பிரிட்ன் எடுத்து கொடுத்தேன், எங்க டாடி அவனுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்துள்ள சிறிய கு ஆன் வாங்கி கொடுத்தார்கள். அதை எல்லாம் அவர் எந்த ஊருக்கு கடந்த 4 வருடமாக போனாலும் ஒரு ஸ்கூல் பேக்கில் வைத்து என்னேரேமும் மாட்டி கொண்டி தான் செல்கிறார்.



4. வளையல்:  பள்ளி செல்லும் காலம முதல் டிரஸுக்கு மேட்சாக வளையல் கண்டிப்பாக இருக்கனும். அது யாருக்கும் கொடுக்க மாட்டேன், எல்லாம் கண்ணாடி வளையல். ரொம்ப வருடம் வரை பத்திரமாக பாதுகாத்து வந்தேன், இப்ப தான் 3 வருடம் முன் எல்லா பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்தேன்.
சில வளையலகள் இங்கும் வைத்துள்ளேன்.இது படங்கள் பிறகு சேர்க்கிறேன்.








4.மோதிரம்: என் கணவர் முதல் முதல் என்னை பார்த்த போது போட்ட மோதிரம் கல்யாணத்தில் எங்க டாடி எனக்கு  போட்ட அந்த கம்மலுக்கு மேட்சாகவே அமைந்து விட்டது.சிவப்பு வெள்ளை கல் மோதிரம்.



5.கம்மல்

5. கல்யாணம் ஆன புதிதில் என் கணவர் முதல் முதல் சவுதி போய் வந்த போது வாங்கி வந்த கம்மல்.எவ்ளோ கம்மல் இருந்தாலும் இது தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. இது அப்படியே இன்னும் என் காதில் ஊஞ்ச்ல் ஆடி கொண்டு இருக்கிறது, இப்படி வருசையாக சொல்லனும் என்றால் சீப்பு, எண்ணை, டவல் , சோப்பு எல்லாமே என் பொருள் எனக்கு மட்டும் தான்..... 
மற்றவர்களுக்கு ஏதாவது கேட்டால் உடனே கொடுத்து விடுவேன், சாப்பாடு கூட பசி என்றால் எனக்கு ஏதும் வைத்துகொள்ள மாட்டேன், ஆனால் நான் பயன் படுத்தும் பொருட்கள் அது எனக்கு மட்டும் தான், பச்சை டைரி எல்லாம் எழுதி விட்டு எனக்கு திருப்பி கொடுத்து விடனும் என்று சொல்லி இருக்கிறேன்.

அன்னையர் தினத்துக்கு எனக்கு தெரிந்த சின்ன கவிதையை எனக்கு தோன்றியதை என் அம்மாவுக்கு போன் செய்து படித்து காண்பித்தேன். நீ சொல்ல சொல்ல ரொமப் நல்ல இருக்கு என்றார்கள்.பிறகு இங்கு பகிர்கின்றேன்.



Monday, September 28, 2009

தினம் அதிகமாக ஓத வேண்டிய துஆ

"ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதவ் வஃபில் ஆஹிரத்தி ஹஸனதவ் அகினா அதாபன்னார்."


நூல்; முஸ்லிம்


பொருள்; இறைவா! இம்மையிலும் நல்லதை தருவாயாக! மறுமையிலும் நல்லதைத் தருவாயாக! மேலும் நரக வேதனையிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவாயாக!

Saturday, September 12, 2009

அன்னை ஆயிஷா நாயகி அவர்களின் ஸலவாத்து

ஸலவாத்துஸ் ஸஆதா
அன்னை ஆயிஷா நாயகி அவர்களின் ஸலவாத்து


அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹ‌ம்மதின் வ ஆலிஹி வஸஹ்பிஹி அததமாஃபி இல்மில்லாஹி ஸலாத்தன் தாயிமத்தன் பிதவாமி முல்கில்லாஹ்.


யா அல்லாஹ் நீ உன் அறிவில் உள்ள கணக்குப் படி நபி (ஸல்) அவர்களின் எப்போதும் ஸலவாத்து சொல்வாயாக.

தின‌ம் முடிந்த‌வ‌ரை எவ்வ‌ள‌வு முடியுமோ அவ்வ‌ள‌வு தெரிந்த ஸலவாத்தை ஓதுவது மிக‌வும் ந‌ல்ல‌து.
ஸ‌ல‌வாத்து ஒதுவ‌தால் இத‌ய‌ம் ஒளி பெறுகிற‌து.

லைலத்துல் கத்ரு இரவை அடைந்தால் ஓதும் துஆ

லைலத்துல் கத்ரு இரவை அடைந்தால் ஓதும் துஆ

ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை படை நாளில் உள்ள ஒரு இரவு லைலத்துல் கத்ர் இரவு ஆகும் அதாவது(21 , 23 , 25 , 27, 29)
ரமளான் மாதத்தில் அதிகமாக இபாபத் செய்வது மிகவும் ஏற்றமாகும்.



அல்லாஹும்ம இன்ன(க்)க அபுFவ் வுன்(த்) துஹிப்Bபுல் அப்Fவ பFபுF அன்னீ

பொருள்: அல்லாவே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன். மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக!


!

சிறப்பு: நயகம் (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரையடைந்தால் இந்த துஆவை அதிகமாக ஓதி வருவார்களென்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:

லைலத்துல் கத்ர் இரவென்பது பிறை இருபத்தொன்றிலிருந்து (ஒற்றை ப‌டையில் வ‌ரும் பிறைக‌ளை) கடைசி பிறை வரை இருக்கிரதென்று சில ரிவாயத்துகளிலிருந்து காணப்படுகின்றன.

முடிந்த வரை ஸலவாத்தும், இஸ்திக்பாரும், திக்ருகலும், ஓதுங்கள்.

Tuesday, September 1, 2009

பரகத் பொருந்திய ரமலான் மாதம் கேட்க வேண்டிய துஆ


எந்த ஒரு துஆ ஓதும் போதும் முன்பும் பின்பும் ஸலவாத் ஓதிக்கொள்ள வேண்டும்.



1.இறைவா! எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக.

2.இறைவா! முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக.

3.இறைவா! ரமலான் உடைய அருட்கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்குநிறைவாக தந்தருள்வாயாக!

4.இறைவா எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக! மேலும் ஹலாலான ரிஸ்கை த‌ந்தருள்வாயாக!

5.இறைவா! இஸ்லாமிய சட்டத்தின்படி முழ்மையான முறையில் செயல் படக் கூடியவ‌ர்க‌ளாக‌ எங்களை ஆக்கியவைப்பாயாக!

6.இறைவா! நீயே எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

7.இறைவா! லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக!

8. இறைவா! ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாஆக!

9.இறைவா! பொய் புறம், கோபம்,பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை காப்பாயாக!

10.இறைவா!வறுமையின் பயம் மற்றும் கடன் சுமையை விட்டும் எங்கலை பாதுகாப்பாயாக!

11.இறைவா!எஙக்ளின் சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பாயாக!

12.இறைவா! தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை காப்பாயக!

13.இறைவா! முழுமையான பர்தா முறையில் பெண்களை வாழச்செய்வாயாக!

14.இறைவா! சிறிய பெரிய எல்லா நோய்களை விட்டு எங்களை வாழச்செய்வாயாக!

15.இறைவா! இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!

16.இறைவா! பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!

17.இறைவா பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக!

18.இறைவா! நாளை மறுமை நாலிபெருமனார் (ஸல்) அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக!

19.இறைவா! மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக!

20.இறைவா! உன்னுடைய பிரியத்தையும் எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!

21. இறைவா! மரண வேதன. மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

22.இறைவா! இரைவா! முன்கர் நக்கீர் உடைய கேள்வி கனக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!

23. இறைவா! நாலை கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு த்ந்தருள்வாயாக!

24.இறைவா! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!

25. இறைவா! கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

26.இறைவா! கியாமத் நாளில் இழிவுகலை விட்டும் எங்களை மூமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக!

27.இறைவா! எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!
28.இறைவா! கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!

29.இறைவா! ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!

!
எந்த ஒரு தூஆவையும் ஓதுவதற்கு முன்பும், பின்பும் ஸலவாத் ஓதிக்கொள்ளுங்கள்.

Monday, August 17, 2009

ரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்.




1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் துஆ


"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".


அல்லாவே! கிருபையாளர்களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.






2. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ




"அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வக‌ஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்".


அல்லாவே!ஆலத்தார்களின் இரட்சகனே!எங்களூடைய பாவங்களையும் எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.




3. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ




"அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்".


அல்லாவே!ஆலத்தார்க்ளின் இரடகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!


குறிப்பு

மேற்கண்ட முன்று தூஆக்களையும் எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்தது. மற்ற தூஆக்களுடனும் சேர்த்தும் ஓதலாம்.

Thursday, August 13, 2009

குழ‌ந்தைகளை முத‌ல் முத‌ல் ப‌ள்ளிக்கு அனுப்பும் போது

குழ‌ந்தைகளை முத‌ல் முத‌ல் ப‌ள்ளிக்கு அனுப்பும் போது இக்ர‌ பிஸ்மி சூரா ஓத‌ வைத்து அனுப்புங்க‌ள்.

ஒவ்வொர் ஆண்டு ப‌ள்ளி துவ‌க்க‌த்திலும் இதை ஓத‌ சொல்லவும், எல்லா பிள்ளைக‌ளும் க‌ல்வியில் சிற‌ந்த‌வ‌ர்க‌ளாக‌ விள‌ங்க‌ ஆண்ட‌வ‌ன் கிருபை புரிய‌ட்டும்.




அத்துட‌ன் கீழே உள்ள‌ தூஆவையும் சொல்லி கொடுக்க‌வும்.

1. ரப்பி ஜித்னி இல்மா, ரப்பி ஜித்னி இல்மா,ரப்பி ஜித்னி இல்மா.

"ர‌ட்ச‌கா ர‌ப்பே என‌க்கு க‌ல்வி அறிவை அதிக‌ப்ப‌டுத்துவாயாக‌"!



2. ரப்பிஷ் ரஹ்லி சத்ரி வ யஸ்ஸிர்லி அம்ரி வஹ்லுல் உஹ்ததம் மில்-லிசானி யஃப்கஹூ கௌலி.

"இறைவா! எனக்காக என் என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக!
என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!" (என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக)



3. அல்லாஹும்ம இன்னி அஸஅலுக்க இல்மன் நாஃபிஅன் வ ரிஜ்கன் வாஸிஅன் வஸிஃபாஅன் மின் குல்லி தாஇன்.

"யா அல்லாஹ் ப‌ய‌னுள்ள‌ அறிவு, தாரள‌மான‌ உண‌வு, எல்லா நோய்க‌ளிலிருந்தும் நிவார‌ன‌ம் இவ‌ற்றையே நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் கேட்கிறேன்."

4.சுப்ஹான்க்க ல இல்மலனா இல்லா மா அல்லம்தனா இன்னக்க அன் தல் அலீமுல் ஹகீம்.

(யா அல்லாஹ்) நீ மகாத்தூயவன் நீ கற்றுகொடுத்ததை தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை.நிச்சயமாக‌ நீ அனைத்தையும் அறிந்தவன் ஞானமுள்ளவன்.

Tuesday, August 11, 2009

கோபம் நீங்க தூஆ

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.


எறியப்பட்ட ஷைத்தானின் தீமையிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறேன்.

Thursday, August 6, 2009

ரபிஷ் ரஹ்லி


ரப்பிஷ் ரஹ்லி சத்ரி வ யஸ்ஸிர்லி அம்ரி வஹ்லுல் உஹ்ததம் மில்-லிசானி யஃப்கஹூ கௌலி



. "இறைவா! எனக்காக என் என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக!
என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!"

இந்த‌ தூஆ பெரிய‌ பெரிய‌ ஆலிம்க‌ள், மேடையில் பேசுப‌வ‌ர்க‌ள், டீவியில் குர் ஆன் ஓதுப‌வ‌ர்க‌ள் இதை ஓதிட்டு தான் ஆர‌ம்பிப்பார்க‌ளாம்.
இது தெக்குவாய் உள்ள‌ பிள்ளைக‌ளுக்கு ஓத‌ சொல்வார்க‌ள்.
பொதுவாக‌ நாமும் அடிக்க‌டி இதை ஓத‌லாம், ஓவ்வொரு நாளும் எவ்வ‌ள‌வோ க‌வ‌லை கொள்கிறோம் அதிலிருந்து லேசாக‌ இதை ஓத‌லாம்.
அல்லாவே என்னை ராகாத்தாக்கி வை, என் காரிய‌ங்க‌ளை என‌க்கு லேசாக்கி வை என்று கேட்க‌லாம், ம‌லைபோல் உள்ள‌ வேலையை செய்ய‌ ஆர‌ம்பிக்கும்போது கூட‌ இதை ஓத‌லாம். அல்லா அதை க‌டுக‌ள‌வு ஆக்கிவிடுவானாக‌.

Thursday, July 9, 2009

ஸலவாத்தன் துனஜ்ஜின்னா

அல்லஹும்ம ஸல்லி அலா செய்யதினா வ மௌலானா முகம்மதின் வ அலா ஆலி செய்யதினா மௌலானா முகம்மதின் ஸலவாத்தன் துனஜ்ஜின்னா பிஹா மின் ஜமீஅல் அஹ்வாலி வலாஆஃபாதி வதக்லீலன பிஹா ஜமீஅல் ஹாஜாதி வதுதக்ஹிர்னா பிஹா மின் ஜமீஅல் ஸய்யிஆத்தி வதர்ஃபகுனா பிஹா இன் தக்க அலல் தர்ஜாதி வதுபல்லிகுனா பிஹா அக்ஸல் ஆயாதி மின் ஜமீஅல் ஹைராதி ஃபில் ஹயாதி வபஅதல் மமாதி இன்னக்க அலா குல்லி ஸையின் கதீர்.



யா அல்லாஹ்! எங்கள் தலைவர்,பொறுப்பாளர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், எங்கள் தலைவர், பொறுப்பாளர் முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் நீ ஸலவாத்து அருள் புரிவாயாக! அதன் காரணமாக எங்களை சகலவித ஆபத்துகள், இடுகண்களிலிருந்து காப்பாற்றுவாயாக! மேலும் எங்களது சல தேவைகளையும் நிறைவேற்றுவாயாக! மேலும் எங்களை உயர் பதிவிகளுக்கு உயர்த்துவாயாக! மேலும் வாழ்விலும், மரணத்திற்குப் பின்னும் உள்ள எல்லா நன்மைகளின் இறுதி எல்லைகளை அடையச் செய்வாயாக! நிச்சயமாக நீ எல்லாவற்றின் மீதும் ஆற்றல் படைத்தவன்!




துன் ஜீனா ஸலவாத்தை தனியாகவோ ,கூட்டாகவோ அதிகமாக ஓதுவதில் பலனாகவும் வீடுகளில் தகுந்த இடத்தில் எழுதி வைபப்தாலும், அல்லாஹு தஆலா பலவிதமான இன்னல்களிலிருந்தும் சோதனைக் காலங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறான்.

Saturday, July 4, 2009

லகத்ஜாஅகும் ந‌ல‌ன்க‌ள் அனைத்தும் பெற‌

லகத்ஜாஅகும் ரஸூலுன் மின் அன்புஸிகும் அஜீஜுன் அலைஹி மா அனித்தும் ஹரிலுன் அலைக்கும் பில்முமினின் ரவூஃபுன் ரஹீம்.

ஃப‌இன் தவல்லு ஃபகுல் ஹஸ்பியல்லாஹு லாயிலாக இல்லாஹுவ அலைஹி தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அலீம்..



ஸூரா த‌வ்பாவின் கடைசி இரண்டு ஆயத்துக்கள் இவ்விரு வசனங்களையும் தினமும் ஓதி வருவோனுக்கு இம்மை மறுமைக்காரியங்கள் அனைத்தையும் இறைவன் நல்லபடியாக அமைத்துத் தருவான்.

அவன் இடிபாட்டுக்குள்ளே நசுங்கியோ நெருப்பில் கரிந்தோ, தண்ணீருக்குள் மூழ்கியோ இறக்கமாட்டான். என்பதாக நபித்தோழர் அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

லகத்ஹஜாஅகும்.... எனும் இரண்டு ஆயத்துகளின் கருத்தாவது:
(விசுவாசிகளே! நம்முடைய ) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார். அவர் உங்களில் உள்ளவர் தாம். நீங்கள் துன்பத்திற்காளாகிவிட்டால் அது அவருக்கு வருத்தமாகவே இருக்கும். அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், விசுவாசிகளாகிய உங்கள் மீது மிக்க அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கிறார். (ந‌பியே இத‌ற்குப்) பின்ன‌ரும் அவ‌ர்க‌ள் (உம்மைப்பின்ப‌ற்றாது) வில‌கிக் கொண்டால் (அவ‌ர்க‌ளை நோக்கி நீர் கூறும்) அல்லாவே என‌க்குப் போதுமான‌வ‌ன். அவ‌னைத் த‌விர‌ வேறு நாய‌னில்லை. அவ‌ன் மீது நான் த‌வ‌க்க‌ல் வைத்துள்ளேன் இன்னும் அவ‌ன் ம‌க‌த்தான‌ அர்சுக்கு இர‌ட்ச‌க‌ன் (9:128:129)

Wednesday, June 24, 2009

துன்பங்களை நீக்கும் ஏழு ஆயத்துகள்.

பிஸ்மில்லாஹிரஹ்மான்னிர்ரஹீம்.

1. குல் லன் யுஸிஃபனா இல்லா மா கதபல்லாஹு லன ஹுவ மௌலானா வ அலல்லாஹி ஃபல்யதவக்கலில் முமினூன்.

1 . அருள் மிக்கவன், அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால் நபியே! நீர் கூறுவீராக. அல்லாஹ் எங்களுக்கு எதனை விதியாக்கினானோ அதனைத் தவிர வேறொன்றும் எங்களைப் பற்றி விட மாடா. அவன் எங்களின் எஜமானன். அந்த அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உடையவர்கள் தம் காரியங்களை ஒப்படைத்து விடட்டும். (9.51)

2.வ இன் யம்ஸஸ்கல்லாஹு பிலுர்ரின் ஃபலா காஸ்ஷிபஃப லகு இல்லாஹுவ யுரித்க பிகைரின் ராஆத்த லிஃபல்லிஹி யுஸிபுன் பிஹி மன் யஷாஉ மின் இபாதிஹி வஹுவல் கஃபுருர்ரஹீம்.

2. அருள்மிக்கவன், அன்பு மிக்கவன், அல்லாஹ்வின் பெயரால் நபியே! அல்லாஹ் உமக்கு ஓர் இடரைப் பற்றச் செய்வானாயின் அதனை அவனைத் தவிர வேறு எவராலும் அகற்றிவிட முடியாது. இன்னும் உமக்கு ஒரு நன்மைய அவன் நாடிவிடுவாயின் அந்த நன்மையை எவரும் தடுத்துவிடமுடியாது. இன்னும் அவன் தன்னுடைய அடியார்களிடமிருந்து தான் நாடியவருக்கு அந்த நன்மையைக் கிடைக்கும்படிச் செய்வான். மேலும் அவன் மிக்க மன்னிப்பவனும், மிக்க அன்புள்லவனுமாயிருக்கிறான். (10:37)

3..அருள் மிக்கவன், அன்பு மிக்கவன், அல்லாவின் பெயரால் இப்பூமியிலுள்ள எந்தப் பிராணிக்கும் அதற்குரிய உணவு அல்லாஹ்விடத்தே தவிர வேறெருவரிடத்திலும் இல்லை. அவன் தங்குமிடத்தையும் அது போய்ச் சேருமிடத்தையும் நன்கறிவான். அனைத்துக் காரியங்களும் பகிங்கரமான பட்டோலையில் பதிவு செய்ய பட்டுள்ளன.(11:6)

4. அருள் மிக்கவன், அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால் திண்ணமாக என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமாகிய அல்லாஹ்விடத்தே என்னுடைய காரியங்கள் அனைத்தையும் நான் ஒப்படைத்துவிட்டேன். இத்தரணியிலுள்ள ஓவ்வொரு பிராணியினுடைய முன் நெற்றி உரோமமும் அல்லஹ்வினுடைய பிடியில் மட்டும் உள்ளது. திண்ணமாக என்னுடைய இரட்சகன் நேரிய வழியின் மீது இருக்கிறான். (11.56)

5.அருள் மிக்கவன் அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால் எந்தப் பிராணியும் தனக்குள்ள அப்பிராணிகளுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான் அவன் மிக்க செவியுறுபவனும் மிக்க அறிபவனுமாயிருக்கிறான். (29:60)

6. அருள் மிக்கவன், அன்பு மிக்கவன் அல்லாஹ்வின் பெயரால்.அல்லாஹ் மனிதர்களுக்கு ஓர் அருளை வழங்கிவிடுவானாயின் அதனைத் தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லை. அப்படி ஓர் அருளைத் தடுத்து நிறுத்தி விடுவானாயின் அதன் பிறகு அதனைக் கொண்டு தருபவர் எவருமில்லை. அவன் மிக்க மிகைத்தவனும், மிக்க ஞானமுள்ளவனுமாயிருக்கிறான்.

7. அருள் மிக்கவன், அன்பு மிக்கவன்! அல்லாஹ்வின் பெயரால்.வானங்கள், பூமியைப் படைத்தவன் யார்? என்று நபியே! நீர் அவர்களிடத்தில் கேட்பீராயின் திண்ணமாக அவர்கள் 'அல்லாஹ்' என்றே பதிலுரைப்பார்கள். இன்னும் அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்குகின்ற தெய்வங்கள், எனக்கு ஓர் இடரை அல்லாஹ் நாடிவிட்டானாயின் அவ்விடரை அவைகள் நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ஓர் அருளை நாடி விட்டானாயின் அவ்வருளை அவைகள் தடுத்து விட முடியுமா? என்ன கூறுகின்றீர்கள்? எனறு நபியே நீர் கேட்பீராக. இன்னும் நபியே! அவர்களுக்கு நீர் கூறுவீராக! எனக்கு அல்லாஹ் போதும். அல்லாஹ்விடம் தம் காரியத்தை ஒப்படைப்பவர்கள் அவனிடமே ஒப்படைத்து விடுவார்கள். ( 39:38)

Tuesday, June 23, 2009

இறைவனிடம் மட்டும் இறைஞ்சுவோம்.

பெற்ற தாயினும் தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்; தாய்ப் பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பை விட ஆயிரம் மடங்கு அன்பைநம்மீது பொழிபவன் அல்லாஹ்.



1. "இறைவா! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்தியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!"

2. இறைவா எனக்கு ஸாலிகான நற்குணமுடைய மகனைத் தருவாயாக"

3. "இறைவா! எனக்காக என் என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக! என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக! என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!"

4. "எங்கள் இறைவா! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! நீராகரிக்கும் மக்களிடமிருந்து உன்னாருளால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!"

5. "இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவயாக!"

6. "எங்க‌ள் இறைவா! எங்க‌ளுக்கு இவ்வுல‌கில் ந‌ற்பாக்கிய‌ங்க‌லைத் த‌ருவாயாக‌! ம‌றுமையிலும் ந‌ற்பாக்கிய‌ங்க‌ளைத் த‌ருவாயாக‌! எங்க‌ளை ந‌ர‌க‌ வேத‌னையிலிருந்தும் காத்த‌ருள்வாயாக‌!"

7. "எங்க‌ள் இறைவா! நீ எங்க‌ளுக்கு நேர்வ‌ழியைக் காட்டிய‌ பின் எங்க‌ள் இத‌ய‌ங்க‌ளை (அதிலிருந்து) த‌வ‌றுமாறு செய்து விடாதிருப்பாயாக‌! மேலும் நீ உன் புற‌த்திலிருந்து எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ருளை அளிப்பாயாக‌! நிச்ச‌ய‌மாக‌ நீயே பெருங்கொடையாள‌ன்"

8. "எங்க‌ள் இறைவா! நாங்க‌ள் (இவ்வேத‌த்தின் மீது) ந‌ம்பிக்கைக் கொண்டோம். என‌வே (இவ்வேத‌ம் ச‌த்திய‌மான‌தென்று) சாட்சி கூறுவோருட‌ன் எங்க‌ளையும் நீ ப‌திவு செய்து கொள்வாயாக‌"

Tuesday, June 16, 2009

நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் கேட்ட பிராத்தனைகள்

1. "யாஅல்லாஹ் இயலாமை,சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம், மண்ணறை வேதனை, வாழ்க்கையில் ஏற்படும் சோதனை ஆகியவவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." என்று நபி (ஸல்) அவர்கள் அல்லஹ்விடம் இறைஞ்சினார்கள்".

2. "யா அல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும், கற்பொழுக்கத்தையும் (பிறரிடம்) தேவையற்ற நிலையையும் உன்னிடம் கேட்கிறேன்."


3. யா அல்லாஹ்! நான் உன் அருளையே ஆதரவு வைத்துள்ளேன்; (அதனை) கண் மூடித் திறக்கும் அளவிற்குக் கூட (நிறுத்தி) எனது உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!மேலும் என் அனைத்துக் காரியங்களையும் சீர்படுத்தி வைப்பாயாக! வணக்கத்துக்குரியவன் உன்னைத் தவிர வேறு எவருமிலர்!"

4. "யா அல்லாஹ் உள்ள‌ங்க‌ளைத் திருப்ப‌க் கூடிய‌வ‌னே! எங்க‌ள் உள்ள‌ங்க‌ளை உன் வ‌ழிபாட்டின் ப‌க்க‌ம் திருப்புவாயாக‌!"

5."உள்ள‌ங்க‌ளைப் புர‌ட்டுப‌வ‌னே! என் உள்ள‌த்தை உன் மார்க்க‌த்தில் நிலைத்து நிற்க‌ச் செய்வாயாக‌!"

6. "யா அல்லாஹ்! இவ்வுல‌கிலும் ம‌று உல‌கிலும் உன்னிட‌ம் ந‌ல்ல‌தைக் கேட்கிறேன்"

7. "யா அல்லாஹ் என்னுடைய‌ செவியின் தீங்கை விட்டும்,பார்வையின் தீங்கை விட்டும், நாவின் தீங்கைவிட்டும், உள்ள‌த்தின் தீங்கை விட்டும், எண்ண‌த்தின் தீங்கை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாப்புத் தேடுகிறேன்."

8. "யா அல்லாஹ்! வெண்குஷ்ட‌ம்,பைத்திய‌ம்,உட‌லுருப்புக‌ள் அழுகிவிழும் நோயை, ம‌ற்றும் பிற‌தீய‌ நோய்க‌ள் ஆகிய‌ அனைத்திலிருந்தும் நிச்ச‌யமாக‌ உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.

9."யா அல்லாஹ்! நிச்ச‌ய‌மாக‌ நீயே ம‌ன்னிப்ப‌வ‌ன்; க‌ண்ணிய‌த்துக்குரிய‌வ‌ன்;ம‌ன்னிப்பை விரும்புகின்ற‌வ‌ன். என‌வே என்னை ம‌ன்னித்த‌ருள்வாயாக‌!"

10. "யா அல்லாஹ்! உன்னுடைய‌ த‌யாள‌த் த‌ன்மையிலிருந்தும் உன்னுடைய‌ அருளிலிருந்தும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் கேட்கிறேன். ஏனெனில் இவ‌ற்றை உன்னைத் த‌விர‌ வேறு எவ‌ரும் சொந்த‌ம் கொள்ள‌ முடியாது.

11."யா அல்லாஹ்!உய‌ர‌த்திலிருந்து கீழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இற‌ப்ப‌தை விட்டும், ம‌ர‌ண‌ நேர‌த்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவ‌தை விட்டும் உன்னுடைய‌ பாதையில் (போர் செய்யும் போது) புற‌முதுகு காட்டி ஓடி இற‌ப‌ப்தை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்."


12."இறைவா! வ‌றுமை, ஏழ்மை,இழிவு ஆகிய‌வ‌ற்றை விட்டும், நான் பிற‌ருக்கு அநீத‌ம் செய்வ‌தை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் அண்டை வீட்டார் திசை மாற‌ச் செய்து விடுவார்க‌ள்."

13.யா அல்லாஹ்! (உன‌க்கு) அஞ்சாத‌ உள்ள‌ம், ஏற்று கொள்ள‌ப‌டாத பிராத்த‌னை, நிறைவ‌டையாத‌ ம‌ன‌ம், ப‌ய‌ன‌ளிக்காத‌ க‌ல்வி ஆகிய‌ இந்த‌ நான்கு த‌ன்மைக‌ளை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாப்புத்தேடுகீறேன்."

14. "யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவனப்பதியை கேட்கிறேன். மேலும் எரி நரகை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."


15. "இறைவா! எனக்கு மார்க்க விளக்கத்தைத் தருவாயாக.!"

16. " யா அல்லாஹ்! நான் அறிந்து கொண்டே உனக்கு இணை வைப்பதை விட்டும் நிச்சயமாக நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.நான் அறியாமல் செய்தவற்றிற்காக உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன்."

17. "யா அல்லாஹ் பயனளிக்கும் கல்வியையும் தூய்மையான (ஹலாலான) உணவையும், ஏற்றுக் கொள்ளப்படும் நல்லறங்களையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்."

18."யா அல்லாஹ்! நீ எனக்கு அளித்த அருட்கொடைகளை எனக்குப் போதுமானதாக்கி, அதில் எனக்கு அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! என்னை விட்டும் நீங்கிவிடும் அருட்கொடைகளுக்குப் பகரமாக அதை விட சிறந்தவற்றை எனக்கு வழங்குவாயாக!"

19."யா அல்லாஹ்! என்னை (ம‌றுமையில்) மிக‌வும் எளிதாக‌ விசார‌ணை செய்வாயாக‌!
எல்லாம் வ‌ல்ல‌ ர‌ஹ்மான் நாம் கேட்கும் பிராத்த‌னைக‌ளை ஏற்று ந‌ம் அனைவ‌ர் மீதும் த‌ன் பேர‌ருளைச் சொரிவான‌க‌! ஆமீன்! ஆமீன்! யார‌ப்ப‌ல் ஆல‌மீன்.

(இந்த‌ தூஆ அல் ஜ‌ன்ன‌த் ப‌திப்பு 2002 வில் என‌க்கு கிடைத்த‌து, ப‌த்திர‌ ப‌டுத்தி வைத்தது , அவை அனைத்தையும் எடுத்து கோர்வையாக இங்கு போட்டு உள்ளேன்.)

Sunday, June 14, 2009

மனனம் செய்ய முத்தான துஆக்கள்

1. நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி//

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.

2.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!

3.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.

4.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!

5.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

6.உண‌வு உண்ட‌ பின் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அத் அம‌னா வ‌ஸ‌கானா வ‌ஜ அல‌னா மின‌ல் முஸ்லிமீன்.

ந‌ம‌க்கு உண்ண‌ உண‌வ‌ளித்து,ப‌ருக‌த் த‌ண்ணீரும் த‌ந்து, ந‌ம்மை முஸ்லீம்க‌ளில் ஆக்கி வைத்த‌ அல்லாஹ்வுக்கே எல்லாப் புக‌ழும்!

7.புத்தாடை அணியும் போது

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!

8.கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!

9.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை

10 பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ
அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!

11. ப‌ள்ளிக்குள் நுழையும் போது

அல்லாஹும்ம‌ஃப்த‌ஹ் லீ அப்வாப‌ ர‌ஹ்ம‌த்திக்க‌

அல்லாஹ்! என‌க்கு உன‌து அருளின் வாயில்க‌ளைத் திற‌ந்து விடுவாயாக!

12.முஸாஃபாஹா செய்யும் போது ஓதும் தூஆ

ய‌ஃக்ஃபிருல்லாஹூ லனா வலகும்
அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் மன்னிப்பை அருள்வானாக!

13 .பள்ளியை விட்டு வெளியே வரும் போது

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக‌
அல்லாஹ்! நான் உன்னிடம் உனது கிருபையைக் கேட்கிறேன்.

14.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும்

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

15. தூங்கும் போது ஓதும் தூஆ
அல்லாஹும்ம பிஸ்மிக அமூ(த்)து வ அஹ்யா
அல்லாஹ்! நான் உன் பெயரைக் கொண்டே மரணிக்கவும், உயிர் பெறவும் செய்கிறேன்.

16 . ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!

Thursday, June 11, 2009

பாவ மன்னிப்புக்கு

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُـوْرُ







பொருள்: யாஅல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! என்னுடைய பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பை ஏற்றுக்கொள்பவனும் மன்னிப்பவனுமாவாய்.




أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنِّيْ أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ، اْلأَحَدُ، الصَّمَدُ الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ





பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே இறைவன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீ தனித்தவன். தேவையற்றவன். யாரையும் பெற்றெடுக்காதவன். யாராலும் பெறப்படாதவன். யாராலும் நிகராக முடியாதவன் என்று நான் சாட்சி கூறியதின் பொருட்டால் நான் உன்னிடம் (என் தேவைகளைக்) கேட்கிறேன்.

Saturday, June 6, 2009

ஆபத்துகள் நீங்கிட துஆ

அல்லாஹும்ம அன் த ரப்பீ லா இலாஹ இல்லா அன் த அலைக்க தவகல்து வ அன் த ரப்புல் அர்ஷில் கரீம்.
மாஷா அல்லாஹூ கான வ மாலம் யஷஉ லம்யகுன்வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.
அஃலமு அன்னல்லாஹ அலா குல்லி ஷைஇன் இல்மா.
அல்லாஹும்ம இன்னீ அ ஊது பிக மின் ஷர்ரி நப்ஸீ வமின்ஷர்ரி குல்லி தாப்பத்தின் அன் த ஆகிதுன் பி நாஸியத்திஹா இன்ன ரப்பீ அலா ஸிராத்திம் முஸ்தகீம்.

நாயனே! நீ என் இரசட்சகன். உன்னைத் தவிர வேறு நாயனே இல்லை.நான் என்னுடைய காரியங்கள் யாவற்றையும் உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டேன். நீ கண்ணியமிக்க அர்ஷுடைய இரசட்சகன்.அல்லாஹ் நாடிய ஒன்று நடந்து விடுகிறது. அவன் நாடாத ஏதும் நடப்பதேயில்லை.


எந்த நன்மையைச் செய்யவும் எந்த்த் தீமையிலிருந்து விலகவும் மகத்தான அல்லாஹ்வின் துணைகொண்டு மட்டுமே முடியும். திண்ணமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் மிக்க ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான் என்றும் திண்ணமாக அல்லஹ் அனைத்துப் பொருட்களையும் பரிபூரனமாக அறிகிறான் என்றும் நான் உறுதியாக அறிகிறேன்.


நாயனே! திண்ணமாக நான் என் ஆத்மாவினுடைய திங்கிலிருந்தும், பிராணிகளின் முன் நெற்றி ரோமங்கள் உன் பிடியில் இருக்கின்றனவே அப்படிப்பட்ட பிராணிகள் அனைத்தினுடைய தீங்குகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகீறேன். திண்ணமாக என்னுடைய இரட்சகனாகிய நீ நேரிய வழியின் மீது இருந்து கொண்டிருக்கிறாய்.

Thursday, May 28, 2009

கல்வி ஞான விருத்திக்கும், நினைவு தரிபடுவதற்கும் ஓதும் தூஆ

யா அல்லாஹ்! சந்தேக இருள்களிலிருந்து எங்களை வெளியேறச் செய்தருள். சிந்தனை ஒளிவைக் கொண்டு எங்களுக்குக் கிருபை செய்.
உன் கிருபையினுடயவும், ஞானத்தினுடையவும் வாசல்களை எங்களுக்குத் திறந்து விடு.

உன் கல்வி கருவூலத்தை எங்கள் மீது சொரிந்தருள். உன்னையே துதிக்கின்றேன். (நீ தூய்மையானவன்). நீ எங்களுக்கு கற்பித்ததைத் தவிர வெறொரு கல்வியும் எங்களிடம் இல்லை. நிச்சயமாக நீயே அறிவுடையோனும்,ஞானமுடையோனுமாவாய்.


//நாம் எவ்வளவோ ஓதுகிறோம், பிள்ளைகளும் படிக்கிறார்கள், ஆனால் மறதி என்னும் வியாதி எல்லோருக்குமே இருக்கு, ஆண்டவன் நம் அனைவருக்கும் நல்லவிஷியங்களை மறக்காமல் இருக்கவும், தீய விஷியங்களை மறக்கவும் கிருபை புரிவானாக.//


மேலே உள்ள‌ தூஆவை பிள்ளைக‌ளை ப‌ள்ளிக்கு செல்லும் போது, தேர்விற்கு செல்லும் போது ஓத‌ சொல்ல‌வும்.

Tuesday, May 19, 2009

மன அமைதிக்கு சிறந்த துஆ

யா அல்லாஹ்! நீ எனக்குக் கொடுத்தவற்றை கொண்டு என்னை திருப்தியாக்கிவை.அதில், எனக்கு மேலும் பரக்கத் செய். என்னை விட்டும் மறைந்து விட்ட ஓவ்வொன்றிற்கும் பகரமாக சிறந்தவற்றை எனக்குக் கொடு.


சிறப்பு: இந்த துஆ மனநிம்மதிக்கு சிறந்ததும், உணவு தேவைகளை நிறைவேற்ற வல்லதுமாகும். ஹஜ்ஜின் போது ருக்னே யமானிக்கும், ஹஜ்ருல் அஸ்வத்திற்கும் இடையே இதை ஓதுவது சுன்னதாகும்.