Showing posts with label Diabetic Cure. Show all posts
Showing posts with label Diabetic Cure. Show all posts

Tuesday, August 6, 2019

ஆவரம் பூ டீ#சூப் / ஹெர்பல் டீ / cassia senna Tea/Samaiyal_attakaasam

.



Simple and Easy Recipes and Traditional Recipes
#ஆவரம்பூ# டீ#சூப் / ஹெர்பல் டீ / #cassiasenna#மருத்துவ குறிப்புகள்
.


இந்த டீ கண்டிப்பாக சர்க்கரை வியாதியை குணப்படுத்தும்.
ஆவரம் பூ டீ * சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்/மற்றும் அனைத்து நோயையும் தீர்க்க வல்ல அரு மருந்து
தேவையான பொருட்கள்
ஆவாரம் பூ - சிறிது
தைம் இலை - சிறிது
ஓமம் இலை - 1
முருங்ககீரை பொடி - அரைதேக்கரண்டி
முடக்கத்தான் கீரை பொடி - கால் தேக்கரண்டி
மிளகு தூள் தேவைக்கு
உப்பு சிறிது
******************************
ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகரா /How to Make Orange fruit Agar Agar/ Samaiyal_attakaasam

https://youtu.be/EwhRnPFt1fw
Star Agar Agar /Egg Agar Agar /Malaysian Special Agar Agar/Samaiyal_attakaasam

https://youtu.be/xLnhDq_P4Oc

Eggless Pandan Agar Agar /Samaiyal_attakaasam by Jaleelakamal
https://youtu.be/NqR7pH6BsPY

Jaleela''s Special Royal Agar Agar Falooda Part 2 /Coffee/Samaiyal_attakaasam
https://youtu.be/mq9tf1AV5oY
Mango Agar Agar /Samaiyal_attakaasam by Jaleelakamal
https://youtu.be/GyMXqXs9RsI
How to make Double Layer Agar Agar / watermelon Agar Agar Part 2/Samaiyal_attakaasam
https://youtu.be/MhIRHDsYT2k
Double layer Setting part 1/Samaiyal_attakaasam by jaleelakamal
https://youtu.be/OYQFVngM9fM
How to make Biscoff Cheese Cake /சீஸ் கேக் செய்வது எப்படி?Samaiyal_attakaasam
https://youtu.be/DCGwI4T3iIs
Red And Green simple jelly / * ஜில்லுன்னு ஒரு டேஸ்ட்/Samaiyal_attakaasam by Jaleelakamal
https://youtu.be/N895s1r7yos
#நுங்கு புட்டிங் / Palm Pudding / ஜில்லுன்னு ஒரு டேஸ்ட்/Samaiyal_attakaasam by Jaleelakamal
https://youtu.be/zMbNMb1ZBEw

samayal attagasam

சமையல் அட்டகாசங்கள் by Jaleelakamal
Facebook:
https://www.facebook.com/jaleela.kamal
Face Book Page:
https://www.facebook.com/Samaiyalatta...
Dubai Burka Group wholesale and Retail:
https://www.facebook.com/groups/Dubai...
Tamil Blog:
http://samaiyalattakaasam.blogspot.com
English Blog:
http://cookbookjaleela.blogspot.com/
for Inquiry: cookbookjaleela@gmail.com
for Business inquiry - cookbookjaleela@gmail.com

Please Subscribe , Like share and comment.
Thank You









https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Wednesday, March 9, 2016

சிறப்பு விருந்தினர் பதிவு - கலா ஸ்ரீராம் - பாகற்காய் கொத்சு & ராகி



அன்பான வலை உலக தோழ தோழியர்களே பாரம்பரிய குறிப்பு சிறப்பு விருந்தினர் பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டன, நிறைய தோழிகள் குறிப்புகள் அனுப்பி இருந்தாலும் அதை தொகுத்து இங்கு பதிவிட நேரம் கிடைகக்வில்லை

இன்று சமையல் அட்டாகாசம் வலைப்பூவில் சிறப்பு விருந்தினராக பாரம்பரிய சமையல் குறிப்பை நமக்கு வழங்கி இருப்பவர் கலா ஸ்ரீராம் 
இவர்களுடைய வலைப்பூவின் பெயர் புதுகை தென்றல் , 1000 க்கும் மேற்பட்ட பயனுள்ள பதிவுகளளை வலைப்பூவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
இவரின் வலைப்பூ பல்சுவை நிறைந்ததாக இருக்கும். நிறைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். பேரண்ட்ஸ் கிளப் வலை பூவிலும் கூட்டாக பிளாக்கர்கள் சேர்ந்து அவரவர் பதிவுகளை இங்கு பகிர்ந்துள்ளனர்.  பெற்றோர்களுக்கு பயனுள்ள தாக பிள்ளைகளின் அனுபவங்களை தொகுத்து எழுதி இருக்கிறார்.


http://parentsclub08.blogspot.in/ பேரண்ட்ஸ் கிளப் லிங்க்
http://pudugaithendral.blogspot.in/ என்னுடைய வலைப்பூ
நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள்.

அன்புநட்புக்களுக்குவணக்கம்.
என்பெயர்கலாஸ்ரீராம்.
வலையுலகில்புதுகைத்தென்றல்.
புதுகைத்தென்றல்
என்னுடைய 

சுய அறிமுகம்:
வணக்கம். வலையுலகில் எனது பெயர் புதுகைத் தென்றல். எனது வலைப்பூவின் பெயரும் அதுவே. பேரண்ட்ஸ் கிளப் எனும் வலைத்தளத்திலும் எழுதுவதை என் பெருமையாக கருதுகிறேன்.
மூத்தமகன் +2 தேர்வுக்கு ரெடியாகி கொண்டிருக்க இளையவளோ 9 ஆம் வகுப்பு பரிட்சைக்கு ரெடியாகி கொண்டிருக்கிறார். இலங்கையில் 7 வருடங்கள் வாழ்ந்ததை என் பாக்கியமாக கருதுகிறேன். இப்பொழுது ஹைதராபாத்தில் இருக்கிறோம்.

ஜலீலாக்கா என எங்களால் அன்பாலஅழைக்கப்படும் ஜலீலாகமல் அவர்களின் சமையல்அட்டகாசம் வலைப்பூமூலமாதெரியும்.
அவங்களுடைய சமையல்குறிப்புக்களுடன் பல பயனுள்ள டிப்ஸ், மருத்துவ குறிப்புகள், குழந்தை உணவு, சமையல் டிப்ஸ்கள், ஆண்களுக்கு டிப்ஸ்கள், கர்பிணி பெண்களுக்கான பதிவுகள் என்று பல பயனுள்ள பதிவுகளை பதிந்துள்ளர். அனைத்து பதிவுகளும் மிக அருமை. 

பாராம்பரிய சமையல்:
எனக்கு மிகவும் பிடித்த இந்த உணவு உடலுக்கு ரொம்பவும் நல்லது. வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு பதின்ம வயது குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியை தரும் சத்தான உணவு.
ராகி சங்கட்டி:
இது ஆந்திரா ஷ்பெஷல் உணவு.
தேவையான பொருட்கள்:
ராகி(கேப்பை மாவு) 1 கப், சமைத்த சோறு - 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் - 1 ஸ்பூன்.
செய்முறை:

கொஞ்சம் குழைவாக சமைத்த சோற்றில் தேவையான அளவு
உப்பு், 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

1 கப் ராகிக்கு 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து
கரைத்து வைக்கவும்.

அடுப்பை பற்றவைத்து, அடி கனமான பாத்திரம் வைத்து
அதில் கரைத்து வைத்திருக்கும் சோற்றை போட்டு கிளறவும்,
கொஞ்சம் கொதிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் கரைத்து
வைத்திருக்கும் கேப்பை மாவையும் ஊற்றி கைவிடாமல்
கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது நெய்
சேர்த்து மேலும் கிளறி இறக்கினால் சங்கட்டி ரெடி.

புளி இலையைப் போட்டு ஒரு குழம்பு செய்வார்கள். அதோடு
இந்த களியை தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். அது இல்லாவிட்டாலும்
இதற்கு சரியான ஜோடி பூண்டுக்குழம்பு அல்லது வடைகறி.

காரம் சைட்டிஷ்ஷில் மட்டும் தான் எனவே, இது வயிற்றுக்கு ஊறு ஏதும் செய்யாது.
கேப்பை உடலுக்கு மிகவும் நல்லது. குளிர்ச்சி தரும்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இவ்வுணவு மிக 
உதவும்.


1.சமைத்த சோறு இல்லாவிட்டால் அரிசியை
மிக்சியில் போட்டு உடைத்து(அரிசி உப்புமா
செய்யும் பதம்) சோறு சமைத்து சேர்க்கலாம். 




சமையற்குறிப்பு
பாகற்காய் கொத்சு செய்வதுஎப்படின்னுபாப்போம்.

இது ஆந்திராபக்கம்செய்யப்படும்உணவு.
வெண்பொங்கலுக்குசரியானஜோடி.
கசப்பேதெரியாது. சாதத்துலஊத்திபிசைஞ்சும்சாப்பிடலாம்.
தோசைக்கும் நல்லா இருக்கும்.
இவ்வளவுருசியானகொத்சு செய்ய என்னென்னதேவைன்னுபாத்துக்கலமா!!!!



தேவையானபொருட்கள்:

பாகற்காய்: 250 gms, (விதைநீக்கிவெட்டிவெச்சுக்கணும். ரவுண்டாகவோநீளமாகவோஅதுஉங்கவிருப்பத்தைபொறுத்து
கடலை பருப்பு: 1 cup
உளுத்தம் பருப்பு : 1 cup
காய்ந்தமிளகாய் : 7
எலுமிச்சைஅளவுபுளிஊறவைத்துஅந்ததண்ணி
வெள்ளை எள்ளுஇல்லைன்னாகறுப்புஎள்ளு50 gms.க்
கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் – 1 ஸ்பூன்.
வெல்லம் - ருசிக்கு

செய்முறை:

வெறும்கடாயில்எள்ளைவறுத்துஆறியதும்பொடித்துவைக்கவும்.க.பருப்பு, உ.பருப்பு, காய்ந்தமிளகாய்இவைகளையும் எண்ணெய் சேர்க்காமல்வறுத்துஆறியதும்பொடிசெய்துவைத்துக்கொள்ளவும்.அதேகடாயில்இல்லாவிட்டால்வெறொருவாணலியில் எண்ணெய் விட்டுகடுகு, கறிவேப்பிலைதாளித்துநறுக்கிவைத்திருக்கும்பாகற்காயை போட்டு நன்குவதக்கவும்.கொஞ்சமாக உப்பு சேர்த்துமேலும்வதக்கவும்.காய்நன்குசுருண்டுவதங்கும்தருவாயில், கரைத்துவைத்திருக்கும்புளிநீரைசேர்த்துநன்குகொதிக்கவிடவும். மஞ்சள், உப்பு சேர்த்துபுளிவாசனைபோகநன்குகொதித்ததும்பொடித்துவைத்திருக்கும்எள்ளுபொடிமற்றும் பருப்பு மிளகாய்பொடியைசேர்த்துநன்குகொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்துவரும்பொழுதுகொஞ்சம்வெல்லம்சேர்த்துநன்குகலக்கிஇறக்கவும்.ருசியானபாகற்காய்கொத்சுரெடி.
குறிப்பு
அவசரமாகசெய்யும் பொழுது வறுத்துபொடிக்கநேரமில்லைஎன்றால்இட்லிமிளகாய்ப்பொடி( க.பருப்பு, உ.பருப்பு, காய்ந்தமிளகாய், எள்ளு போட்டு அரைத்தது) போட்டு செய்யலாம்.



சர்க்கரை நோயாளிகளுக்கு, சிறப்பு விருந்தினர் பதிவு, பாரம்பரிய சமையல்


சிறப்பு விருந்தினர் பதிவு
உங்கள் குறிப்புகளையும் இங்கே நீங்கள் பகிற விரும்பினால் என் மெயில் க்கு அல்லது கிழே கமெண்டில் தெரிய படுத்தலாம்.
அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள்,முக நூல் தோழியர்கள் வலை உலக தோழ தோழியர்கள் மற்றும் இதை பதிவை பார்ப்பவர்கள் யாருக்கும் விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகை, மதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள், மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள். குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம் மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன். 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, March 26, 2013

தோடம் பழ ஷாப்டி கேக் - Grapefruit Pancake



எல்லா புகழும் இறைவனுக்கே என்ற வலைப்பூ எழுதும் , என் நீண்ட நாள் தோழி ஸாதிகா அக்காவின் குறிப்பு.
 கீழக்கரையை சேர்ந்த சென்னை வாசி என் அன்பு தோழி.
ஸாதிகா அக்கா அவங்க வலைப்பூவில் சமையல் குறிப்பு எழுதுவதில்லை 
பல சிறு கதைகள், பயணங்கள், சுற்றுலா, போன்ற பல ஜனரஞ்சக பதிவுகளை இங்கு பகிர்ந்து வருகிறார்கள்.குறிப்பாக அவர் கற்பனையில் உதிக்கும்கேரக்டர்களை மிகவும் தத்ரூபமாக உயிரோட்டமாக அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதுவது மிகவும் ரசிக்கதக்கது.
இவர் எழுதிய தயிர் பானைக்குள் பிரியாணியையும் சற்று நோக்குங்கள்.

ஸாதிகா அக்கா தயாரித்த சுவையான பட்டர் பிஸ்கேட் இட்லி ஷேப்பில் தயாரித்து வாயில் போட்டால் அப்படியே கரைவது போல் இருக்கும் 


புல் கிரில் சிக்கனை சூப்பராக சமைப்பார்கள்.  பேரன் ஆமிருக்கு செல்லமான யங் பாட்டி.

இது மட்டுமல்ல இரண்டு வருடம் முன் அவங்க வீட்டுக்கு நானும் மர்லியும் சென்ற போது, அசத்தலான கீழக்கரை ஸ்பெஷல் பெட்டிசும், ஹோட்டல் மிக்ஸர் ஆனால் ஹோம் மேட் இவங்க கைவண்ணத்தில் செய்தது, சுவை சொல்ல வார்த்தை இல்லை.



சென்னையில் உள்ள மூலை முடுக்கில் உள்ள எல்லா ரெஸ்டாரண்டையும் நமக்கு சுற்றி காண்பித்துவிட்டார்கள் , வெளிநாட்டிலிருந்து சென்னை செல்லும் பயணிகள் கவனத்துக்கு சென்னைக்கு போகும் முன் ஒரு முறை ஸாதிகா அக்கா பிளாக்கை தரோவாக பார்த்து விட்டு செல்லுங்கள்.

சாப்பாட்டை பற்றின கவலை இருக்காது.


தோடம் பழ ஷாப்டி கேக், தோடம் பழம் என்றால் ஆரஞ்சு பழம் என்னும் ஸ்வீட் லைம், நான் இந்த பழத்திலும் செய்து இருக்கிறேன், இந்த பேன்கேக்கை ஆரஞ்சு பழம், மொஸம்பி, கமலாவிலும் செய்துள்ளேன்

போஸ்ட் பண்ண பிறகு தான் ஸாதிகா அக்கா மொஸம்பி என்றால் ஆரஞ்ச் என்றார்கள், ஆகையால் மாற்றி உள்ளான்.
கிரேப் ஃபுரூட் என்று தான் நினைத்து கிரேப் ஃப்ரூட் அதிலும் செய்து பார்த்தேன்.


கிரேப் ஃபுரூட்  =   இது சுகர் பிராப்ளம் இருப்பவர்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் ஜூஸாக அடித்து குடித்து வந்தால் சுகர் லெவல் கட்டு படும்.கொலஸ்ராயிலையும் கட்டு படுத்தும்



இந்த குறிப்பை   அறுசுவையில்  கூட்டாஞ்சோறு பகுதியில் பகிர்ந்து இருக்கிறார்கள், இது பல வருடம் முன் மங்கையர்மலரில் முதல் பரிசு வென்ற குறிப்பு.

பொதுவாக பேன் கேக் ( மைதா சேர்த்து செய்யும் முட்டை தோசை/அடை) காலை நேர டிபனுக்கும் , குழந்தைகளுக்கும் செய்து கொடுக்க்கும் இலகுவான ஹெல்தியான உணவு,

இதை நானும் ஏற்கனவே பல பேன்கேக்குகள் (மைதா முட்டை தோசை )இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.சற்றே வித்தியாசமான சத்தான ஸாதிகா அக்காவின் இந்த பேன்கேக்கையும் சுவைத்து மகிழுங்கள்


தேவையானவை

தோடம்பழம் - 3
வெள்ளை புட்டரிசி - 2 டம்ளர்
சர்க்கரை - 1 டம்ளர்
கெட்டி தேங்காய்ப்பால் - 2 டம்ளர்
முட்டை - 1
ஏலம் - 5
சமையல் சோடா - 1 பின்ச்
மைதாமாவு - 1/2 கப்
வனஸ்பதி(அ)நெய் - தேவைக்கு



செய்முறை

முதல் நாளிரவே அரிசியை அலம்பி, ஊற வைக்கவும்.
மறுநாள் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.




தோடம் பழத்தை நீர் சேர்க்காமல் பிழிந்து கெட்டியாக சாறு எடுத்துக்கொள்ளவும்.



தோடம்பழச்சாறில் சர்க்கரை, சோடா, ஏலப்பொடி, அடித்த முட்டை கலந்து, அரைத்த மாவையும், மைதாவையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.




தோசைக்கல்லை அடுப்பில் வைத்து டால்டா அல்லது எண்ணெய் விட்டு ஒரு குழிக்கரண்டி அளவு எடுத்து அடை ஊத்தப்பம் போல் ஊற்றவும். 


வார்க்கக்கூடாது. ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிப்போடவும்.
சுவையான, வித்தியாசமான, இனிப்பு அடை இது. நான்கு நாள் வைத்து இருந்தாலும் கெடாது.



*************


இதில் நான் கெட்டி தேங்காய் பால் எடுக்கவில்லை, நெய் க்கு பதில் பட்டர் + எண்ணை சேர்த்து கொண்டேன்.
கேக் செய்யலாம் என்று தான் வாங்கி வந்தேன். முட்டை சேர்த்து மைதா தோசை எங்க விட்டு பேவரிட் அதில் பல வித விதமாக செய்தவதுண்டு, வாழைபழ பேன் கேக்ம் , தேஙகாய் பேன்கேக், டுட்டி புரூட்டி பேன்கேக், ஆரஞ்சு பழ பேன்கேக், பம்கின் பேன் கேக் என்று செய்தவதுண்டு, ஆபிஸ் விட்டு வண்டி விட்டு இரங்கும் இடத்தில் உள்ள ஜியான்ட் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்ததும் முதலில் நான் வாங்குவது பச்சை பசேலுன்னு இருக்கும் பாலக், புதினா, கொத்துமல்லி ஒரு மண் அழுக்கு இல்லாம் சூப்பராக பேக் பண்ணி வைத்திருக்கும், அடுத்து நோட்டம் இடுவது பழங்கள், அப்ப கண்ணில் தென்பட்டது, இந்த கிரேப் புரூட் என்னும் தோடம் பழம் தான் .   இந்த பழத்தை பார்த்ததும் ஸாதிகா அக்கா ஞாபகம் வந்தது. உடனே வாங்கி வந்து செய்தாச்சு.,



ஆரஞ்சு பழம்
தோடம் பழம்
மொஸம்பி
மதுர நாரங்கா
கமலா
இது எல்லாமே ஒரே குடும்பம் தான் அப்ப்டின்னு நினைக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிய படுத்தலாம்.





 Hudson Canola Oil Give Away. @ Vimitha's Hearty and Healthy -



Tuesday, May 15, 2012

கேழ்வரகு இட்லி - Ragi Idli






கேழ்வரகு (ராகி)இட்லி
தேவையானவை
கேழ்வரகு மாவு -  100 கிராம்
இட்லி மாவு – ஒரு குழிகரண்டி
உளுந்து – 25 கிராம்
வெந்தயம் – கால் தேக்கரண்டி
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
உப்பு – தேவைக்கு

செய்முறை
ராகி மாவை லேசாக வறுத்து கொள்ளவும். உளுந்தையும் வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து மை போல் அரைத்து கொள்ளவும்.
அரைத்த உளுந்துடன் இட்லி மாவு, ராகிமாவையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி (இட்லிமாவு பத்த்தில்)கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
புளித்த மாவில் இட்லி சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லிகளாக வார்க்கவும்.
டயட்டுக்கு ஏற்ற சுவையான டிபன். தக்காளி பூண்டு சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். சர்க்கரை வியாதிகார்களுக்கு ஏற்ற டிபன்.

குறிப்பு: வெளிநாடுகளில் சமைக்கும் பேச்சுலர்கள் மிகச்சுலபமாக செய்து விடலாம். ராகி மாவு எல்லா  தமிழ்க்டைகள், ஆதில் சூப்பர் மார்கெட்களில்  கிடைக்கின்றன. உளுந்து வெந்தயம் ஊறவைப்பதற்கு பதிலாக மிக்சியில் பொடித்தும் மாவுடன் ஊறவைத்துகொள்ளலாம்.இட்லிமாவுக்கு பதில் அரிசிமாவும் சேர்த்து கொள்ளலாம். ரெடி மிக்ஸ் போல மிக்ஸ் செய்தே புளிக்கவைத்து செய்யலாம். ரொம்ப ஈசியான இட்லி, நல்ல் சாஃப்டாக வரும்.
.







Tuesday, October 26, 2010

பாகற்காய் ஜூஸ் - bitter gourd juice






ஹசனாஸ் (மாமியார் பெயர்) பாகற்காய் ஜூஸ்

தேவையானவை

பாகற்காய் – ஒரு விரல் நீள துண்டு
மிளகு – 4
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – சிறிது
லெமன் ஜூஸ் – அரை ஸ்பூன்

செய்முறை

பாகற்காயை துண்டுகளாக நறுக்கி அத்துடன் மிளகு,சீரகம்,உப்பு சேர்த்து மிக்சியில் தேவைக்கு தண்ணீர் ஊற்றி (அரை டம்ளர்) அடிக்கவும்.
நல்ல நுரை பொங்க அடித்து அதை வடிக்கட்டவும்.
லெமென் பிழிந்து குடிக்கவும்.
அந்த அளவிற்கு கசப்பு தெரியாது.


குறிப்பு:

இன்று என் மாமனார், மாமியாரின் கல்யாண நாள்,




என்ன கசப்பா ஒரு ஜூஸ் போட்டு இருக்கேன்னு பார்க்க வேண்டாம்.
மாமனாருக்கு சுகர் அதிகமாகமல், அப்படியே அதிக மானாலும், முன்றே நாளில் சரியான டயட் சமையல் செய்து கரெக்ட் லெவலுக்கு கொண்டு வந்துடுவாங்க எங்க மாமியார். ஆகையால் இப்ப கர்பிணி பெண்கள் முதல் கொண்டு , சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் ஜுரம் தலை வலிப்போல் சர்க்க்ரை வியாதியும் ஒன்றாகிவிட்ட்து, கண்டிப்பா எல்லோருக்கும் இது பயன் படும்.

ஏற்கனவே குறிப்புகளில் சாதரணமான பாகற்காய் ஜூஸ் நான் கொடுத்து இருந்தாலும், இதில் மிளகு சீரகம் சேர்த்து என் மாமியார் செய்வாங்க.
சரி செய்தாச்சு எப்படி குடிப்பது, இப்போதைக்கு இங்கு யாருக்கும் சர்க்கரை வியாதி இல்லை , எனக்கு நாக்கு கொஞ்சம் நீளம் என்ன செய்யலாம் சரி கால் ஸ்பூன் லெமன் பிழியலாம் என்று பிழிந்தேன் சூப்பர்.
எனக்கு தெரிந்து எல்லோருமே இதை பொதுவாக குடிக்கலாம். பிள்ளைகளுக்கு வாரம் ஒரு நாள் கொடுத்து பழக்கலாம். அவர்களுக்கு கொஞ்சம் தேனும், லெமன் சாறும் கொஞ்சம் கூட் சேர்த்து கொள்ளலாம். வயிற்றில் உள்ள பூச்சியும் அழி்ும், குழநைைை்்ு்்கும் சின்ன் வயதிலேயே பாவக்்ாய பழக்க படுத்்ினா ்ாதிரியும் இருக்்ும்.
பார்க்கவே பச்சை பசேல்லுன்னு நல்ல இருந்த்து, உடனே குடிச்சிட்டு இன்னொரு கிளாசும் தயாரிச்சாச்சு, இது நீத்து கிச்சனுக்காக செய்த ஜூஸ் , அப்ப்டியே எல்லோருக்கும் சர்க்கரை வியாதிக்கு அருமையான ஒரு ஜூஸும் கிடைத்து விட்ட்து.

டிஸ்கி: நான் சொல்வது கேட்டு யாரும் சிரிக்க கூடாது, முதலில் செய்த்து இந்த சுவை எப்படி இருக்கும் என்று மடக் மடக்குன்னு போட்டோ எடுக்காமலே காலையில் குடிச்சிட்டேன். பிறகு ஆஹா போட்டோ எடுக்கலையே என்று மறுபடி செய்து ( அதான் நல்ல இருக்கே) எடுத்தேன்.
இந்த பாவக்கான்னே நினைப்பு வருவது, எங்க அப்பா சின்ன வயதில் எல்லோரும் மாதம் ஒரு நாள் பாவக்காய் சாப்பிட்டே ஆகனும். கிட்ட உட்கார்ந்து ஊட்டி விடுவார், கண்ணில் ஆறெடுத்து கஷ்டப்பட்டு முழுங்குவேன்.









Friday, October 15, 2010

ஸ்வீட் & சோர் பாகற்காய் -


//பாகற்காய் என்றாலே கசப்பு தான் அந்த கசப்பு தன்மை இல்லாமல் சமைக்க இந்த முறையில் செய்யலாம். இது குழந்தைகளுக்கு வயிற்றில்
உள்ள பூச்சியை அழிக்கும். சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் நல்ல டிஷ். மிளகாய் தூளுக்கு பதிலாக ரெட் சில்லி சாஸ் சேர்த்தும் செய்யலாம்.//

தேவையானவை


பாகற்காய் - 200 கிராம்
வெங்காயம் - 50 கிராம்எண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் - இரண்டு மேசைக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி



செய்முறை
பாகற்காயை வில்லைகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் நறுக்கின பாகற்காய் துண்டுகளை போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து இரண்டு மணி நேரம் ஊற
வைக்கவும்வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும்.


பாகற்காய் வில்லைகளை தண்ணீர் இல்லாமல் வடித்து இரண்டாக பிரித்து
வைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக போட்டு பொரிக்கவும்பொரித்த பாகற்காயை எண்ணெயை சுத்தமாக வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.



அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும்.
பாகற்காய், அரை தேக்கரண்டி உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பாகற்காயுடன் மசாலா சேர்ந்தவுடன் வினிகரை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விடவும்.
கடைசியில் டொமெட்டோ கெட்சப் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்



ஏழுகறி சாம்பார்


I am sending these recipes to nithubala's vegetable marthon- bitter gourd event


Thursday, May 27, 2010

சர்க்கரை வியாதிக்கு அருமையான உணவு பர்கல்



பர்கல் அப்படின்னா என்ன?burgal
அம்மு ஒரு ரெசிபி போட்டு இருந்தாங்க பல்கர் உப்புமா
இத படிக்கும் போது சில பேருக்கு நகைச்சுவையாகவும் இருந்த்து அங்கு கமெண்ட் படிக்கும் தெரிந்து கொண்டேன், ரொம்ப அருமையான சத்துணவு தான் பல்கர்.

இது நான் எப்ப பார்த்து இருக்கேன்னா 7 வகுப்பு படித்த போது, பள்ளியில் சாப்பிடும் ஏழை பிள்ளைகளுக்கு சாப்பாடு போடுவார்கள். அப்ப பின்வாசல் பக்கம் கிச்சன் இருக்கும் அங்கு இந்த பல்கரை கல்லு பார்த்து கொண்டு இருப்பார்கள்.
அப்படிக்கா போகும் போது ஒரு குத்து அள்ளி கொள்வேன். எனக்கு அதை சும்மா எடுத்து சாப்பிட ரொம்ப்பிடிக்கும். மொத்தமா விறகு மூட்டி பெரிய சட்டியில் போட்டு கிளறுவார்கள்.ஆனால் பிள்ளைகளுக்கு பிடிக்காது. களி மாதிரி கிளறி கொடுப்பார்கள்.

அதற்கு பிறகு அந்த பல்கரை பார்க்கல, வீட்டில் எல்லாம் அது வாங்க மாட்டார்கள். இங்கு துபாய் வந்த்தும் கேரி போரில் இருந்த்து உடனே ஒரு பாக்கெட் வாங்கி கொண்டேன்.

இதை அரிசி சமையல் போலவே எல்லா வகையான சமையலும் சமைக்கலாம்.

இது வரை நான் சமைத்த்து, நோன்பு கஞ்சி,இனிப்பு புட்டு, கொழுக்கட்டை, உப்புமா.

இது டயபட்டீஸ் கார்ர்களுக்கு ஒரு அருமையான உணவு, அவர்கள் வேண்டிய உணவை இதில் தயாரித்து சாப்பிடலாம்.
ஆனால் இந்த பர்கலில் பொங்கல், ரொட்டி , கீமா உப்புமா, சிக்கன் உப்புமா , பிரியாணி , பிஸிபேளா பாத், லோ பேட் தயிரில் தயிர் சாதம் போன்றைவையும் செய்யலாம். அரிசி சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு இது அவ்வளவா பிடிக்காது.இதை பாயாசம் போலும் செய்யலாம்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை வாங்கி இஷ்டம் போல சமைத்து சாப்பிடுங்கள்.

டயட்டில் உள்ளவர்களும் செய்து சாப்பிடலாம்.

இது ஆசியாவின் பொங்கல்




இது அம்முவின் உப்மா




பல்கர் உப்மா - அம்முவின் உப்மா

கீதா ஆச்சல் உப்புமா

பொங்கல் ஆசியா

இப்படி நிறைய வித விதமான உணவுகள் இந்த பர்கலில் தயாரிக்கலாம்/

Tuesday, March 23, 2010

சர்க்கரை வியாதிக்கு பாகற்காய் மற்றும் தண்ணீர் சேமிப்பு

பாகற்காயுடன் மிளகு சீரகம் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிய தண்ணீரை குடிக்கவும். ரொம்ப மிளகு சேர்க்க தேவையில்லை. (பாகற்காய், தண்ணீர் எல்லாமே குடிக்கும் அளவிற்கு அரைத்து வடிக்கட்டி குடிக்கவும்.தொடர்ந்து வாரம் ஒரு முறை குடித்து வரலாம்.(இது எங்க மாமியார் சொன்னது).



கலோஞ்சி என்கிற கருஞ்சீரகம் சர்க்கரை வியாதி, பிரெஷர் எல்லாத்துக்கும் நல்லது.க‌ருஞ்சீர‌க‌த்தை இரவு த‌ண்ணீரில் ஊற‌வைத்து காலை வெரும் வ‌யிற்றில் அந்த‌ த‌ண்ணீரை குடிக்க‌வும்.


வெந்தய‌ம் இர‌வு ஊற‌வைத்து காலையில் அதை வ‌டித்து அந்த‌ த‌ண்ணீரை காலையில் குடிக்க‌வும். இல்லை அதை ந‌ல்ல‌ கொதிக்க‌ வைத்து வ‌டிக‌ட்டியும் குடிக்க‌லாம்/


லோ பேட் மோரில் க‌ருவேப்பிலை, இஞ்சி, வெந்த‌ய‌ப்பொடி க‌ல‌ந்து அரைத்து 11 ம‌ணி வாக்கில் குடிக்க‌லாம், இதே வெயிட்டை குறைக்க‌வும் உத‌வும். வெயிலின் தாக‌த்தையும் தீர்க்கும்.


தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.
தண்ணீர் நிறைய குடிக்கலாம் என்றால் வெரும் தண்ணீர் நிறைய குடித்தால்சிலருக்கு கொமட்டும்.


அதை ஜூஸ், மோர் , சூப், இளநீர்,தர்பூஸ் என்று குடிக்கலாம்


காய்க‌ள்(புட‌ல‌ங்காய்,க‌த்திரிக்காய், வெண்டைக்காய்,பீன்ஸ்,கோவைக்காய் அவரைக்காய் ,இது போல் ப‌ச்சை நிற‌முள்ள‌ நீர் ச‌த்து மிகுந்த‌ காய் க‌ளை பொரிய‌ல், கூட்டு குழ‌ம்பாக‌ வைத்து சாப்பிட‌லாம்.
வேப்பம்பூ கிடைத்தால் அதை நெயில் வதக்கி சாதம் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

பிராமண ஆத்தில் பிரசத்தி பெற்ற பாகற்காய் பிட்லையை இங்கு சென்று பார்த்து சமைக்கவும். கசப்பில்லாமல் இருக்கும்

பாகற்காயை கசப்பில்லாமல் சமைக்க என் ஸ்வீட் & சோர் பாகற்காயை செய்து பாருங்கள்.இன்னும் நிறைய இருக்கு பிறகு போடுகிறேன்.





த‌ண்ணீர் சிக்கன‌ம் என்ற‌து குடிக்கும் த‌ண்ணீரின் அள‌வை குறைக்க‌ வேண்டாம், எவ்வ‌ள்வு வேண்டுமானாலும் குடிக்க‌லாம்.

அதுக்குன்னு ஜ‌லீலா அக்காதான் சொன்னாங்க‌ன்னு ராத்திரில‌ தின‌ம் நிறைய‌ போட்ற‌ க்கூடாது.

உட்கொள்ளும் தண்ணீரின் அள‌வை கூட்டி, வெளியில் ப‌ய‌ன்ப‌டுத்தும் த‌ண்ணீரின் அளவை (குளிக்க, புழங்க) குறைத்து கொள்ள‌வும்
தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.





குழ‌ந்தைக‌ள் பாத்ரூமில் போனால் பின்னாடியே க‌வ‌னிக‌க்னும் அப்ப‌டியே குழாயை திற‌ந்துவிட்டுட்டு நிற்பார்க‌ள். குழ‌ந்தையிலிருந்தே சிக்க‌ண‌மாய் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ழ‌க்கிவிட்டால் பிற்கால‌த்தில் ந‌ல்ல‌து.






தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.


உலக தண்ணீர் தினம் பற்றி இங்கு சென்று அறிந்து கொள்ளலாம்.







Wednesday, September 30, 2009

Diabetic Cure

In the name of Allah, the Most Gracious, Most Beneficent.

Sheikh Saleh Mohammed Tuwairire ( may protection of Allah be on him)
The Supreme judge (Qazi) of Tabuk court has made the extensive
Experiments with perseverance and patience and discovered a
Successful treatment of Diabetes.

Now a days a lot of people, old men & women in particular suffer a lot
Due to Diabetes.

INGREDIENTS:

1… Wheat flour 100 grm.
2… Gum (of tree) (Gundh) 100 grm.
3… Barley 100 grm. ( Juwar )
4… Black Seeds 100 grm (Kalunji)

Method of preparation.

Put all the above ingredient in 5 cups of water. Boil it for 10 minutes
And put off the fire. Allow it to cool down by itselt.
When it has become cold, filter the seeds and preserve the
Water in a glass or bottle.

How to use it.

Take one small cup of this water every early morning when your stomach
is empty. Continue this for 7 days.
Next week repeat the same but in alternate days.

Inshallah with these 2 weeks of treatment you will wonder
to see that you have become normal, and can eat normal
food without any problem.

May Allah (SWT) APPROVE cure to you. Aameen.

Note: Sheikh’s request is to spread this to as many people
as possible, that others can take benefit out of it.

Kindly remember me in your prayers.

//Gum Dhawada (Gond) is derived from gum tree branches in crystal-like form. These can be used in food and beverages, and have known to be medicinal. They are mostly used in bakery, ayurvedic and dietary items//


இது போன வருடம் மெயிலில் வந்த குறிப்பு, இது பலருக்கு பயன் படும் என்று பிலாக்கில் போட்டுள்ளேன்