இது இஸ்லாமிய இல்லங்களில் ஈத் பெருநாளின் போது செய்வார்கள்.
சாதாரன விஷேஷங்களுக்கும் செய்யலாம். இது பாக்கிஸ்தானியர்களின் ரிச் பாயாசம் .பெரும்பாலும் இதை பாக்கிஸ்தானியர்கள் அதிகமாக விசேஷ நாட்களில் செய்வார்கள். நம் நாடுகளில் உருது முஸ்லீம்கள் செய்வார்கள்
டயட் செய்கிறவர்கள். லோ பேட் மில்கில் வெரும் பாதம், அக்ரூட் மட்டும் அரைத்து ஊற்றி, சுகர் பிரியை சேர்த்து சேமியாவை நெயில் வருக்காமல் அப்படியே சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்
தேவையான பொருட்கள்
பால் ஒரு லிட்டர்
முந்திரி, பாதம், பிஸ்தா = 150 கிராம் (அரைக்க)
பொடி சேமியா கைக்கு இரண்டு கை பிடி 150 கிராம்
சர்க்கரை முக்கால் டம்ளர் (தேவைக்கு
கன்டென்ஸ்ட் டின் 200 கிராம்
ஏலக்காய் 5
நெய் = இரண்டு மேசை கரண்டி
முந்திரி, பிஸ்தா,கிஸ்மிஸ் பழம் 50 கிராம்
சாஃப்ரான் (குங்கும பூ) = இரண்டு சிட்டிக்கை அளவு
செய்முறை
பாலை ஏலக்காய் சேர்த்து நன்கு காய்ச்சவும். (பால் நல்ல கொதித்து முக்கால் பாகமாக வற்ற வேண்டும்).
பாதம், பிஸ்தா, முந்திரியை அரைத்து ஊற்றி மீண்டும் காய்ச்சவும். (அரைத்த முந்திரி பாதம் கலவை ஒரு டம்ளர் அளவிற்கு வரும்).
ஒரு மேசைகரண்டி நெய்யில் சேமியாவை பொடித்து வருத்து கொதித்து கொண்டிருக்கும் பாலில் சேர்க்கவும்.
அடுத்து சர்க்கரை சேர்த்து, முன்று நிமிடம் கொதித்ததும் அடுப்பை அனைத்து விடவும் பால் சூட்டில் வேறு நல்ல வேகும்
முந்திரி,பிஸ்தா பொடியாக அரிந்து, கிஸ்மிஸ் பழம் அனைத்தையும் ஒரு தேக்கரண்டி நெயில் கரியாமல் வருத்து சேர்க்கவும்.
கடைசியாக சாஃப்ரானை தூவி இரக்கவும்
சுவையானா ஷீர் குருமா பாயாசம் ரெடி.
ஷீர் குருமா பாயத்துடன் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
குறிப்பு:
அக்ரூட் இருந்தால் அதையும் சேர்த்து கொள்ளலாம். இது இங்கு ரோஸ்டடே கிடைக்கிறது, லேசாக வருத்தால் போதும், வெள்ளி பொடிசேமியாவாக இருந்தால் நன்கு பொன் முறுவலாக வருத்து போடவும்.
மேலும் அடிக்கடி வீட்டில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். ஹெல்தியும் கூட. தினம் வீட்டில் செய்வதாக இருந்தால் கொஞ்சமாக முந்திரி மட்டும் அரைத்து ஊற்றி கொதிக்கவைத்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.
இந்த பாயசத்தை செய்து குடித்து டேஸ்ட் பார்த்து விட்டால் வேறு எந்த பாயாசமும் செய்ய தோணாது, செய்வது சுலபம், ஈசியும் கூட ஹெல்தியான பாயசமும் ஆச்சு, சுவைத்து மகிழுங்கள்.
இது எங்க அண்ணி சொல்லி கொடுத்தது,அதோடு பாக்கிஸ்தானி பிரெண்ட் ஒருவரும் சொல்லி கொடுத்தார்கள்,இரண்டு முறையிலும் கலந்து இது என் ஸடைலில் என் இஷ்டத்துக்கு அளவுகள் போட்டு செய்வேன். 15 வருடமா பாயாசம் என்றால் அது ஷீர் குருமாதான். ரொம்ப ரிச்சாக இருக்கும்.
ஜெர்மனியில் உள்ள தமிழ் தோழி இதை என்னிடமிருந்து கற்று கொண்டு போய் பார்டியில் செய்து அசத்தி எல்லாருடைய பாராட்டையும் பெற்று காலி சட்டியை வீட்டுக்கு எடுத்து வந்தார்களாம். அவர்கள் அன்று அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிறக்க போகும் வருடத்தில் நடந்து முடிந்த தீமைகளையும், மனக்கசப்புகளையும் மறப்போம். கொஞ்சம் நேரமாவது ஒதுக்கி கடந்த வருடத்தில் என்ன தப்பு செய்தோம், அது இந்த வருடத்தில் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.
பிறக்க போகும் இந்த புது வருடத்தில் ஆண்டவன் அனைவரின் நாட்டங்களையும் நிறைவேற்றி வைக்க ஏக வல்ல ஆண்டவனிடம் பிராத்திப்போம்.