Showing posts with label வடை பஜ்ஜி. Show all posts
Showing posts with label வடை பஜ்ஜி. Show all posts

Thursday, January 14, 2016

மட்டர் (பட்டாணி பருப்பு) தால் வடை - Mutter Dal Vadai



.மட்டர் (பட்டாணி பருப்பு) தால் வடை
மசால்வடை
Mutter dal vadai
மசால் வடை செய்ய கடலை பருப்புக்கு பதில் பட்டாணி பருப்பு பயன் படுத்தினால் சுவை அபாரமாக இருக்கும்.


இந்த குறிப்பு போனவருடம் நோன்புகால சமையல் குங்குமம் தோழியில் வெளியானது.



தேவையான பொருட்கள்

பட்டாணி பருப்பு - ஒரு டம்ளர்
இஞ்சி - இரண்டு அங்குலம் அளவு
பச்ச மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பூண்டு - முன்று பல்
பட்டை - ஒருசிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
சோம்புஅரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை – சிறிது




செய்முறை

1. கடலை பருப்பை ஒரு ணி நேர ஊறவைக்கவும்.

 ஊறியதும் ண்ணீர் முழுவதையும் ஒரு டி ட்டில் வடிக்கவும்.

2. முன்றில் ஒரு பாகம் கடலை பருப்பை எடுத்து   அத்துடன் கிராம்புட்டை,இஞ்சிபூண்டு , சோம்பு   சேர்த்து நன்கு அரைக்கவும்.அப்போது தான் எல்லாம் சாலாவும் ஒன்று சேரும்.

3. இப்போது மீதி உள்ள‌ கடலை பருப்பை மிக்சியில் விப்பரில் இரண்டு முறை திருப்பு திருப்பி எடுக்கவும், மிக்சியை ஓடவிடல் இப்படி திருப்பி டுத்தால் ஒன்றும்   பாதியுமாய் இருக்கும்.

4. அரைத்த மாவில் வெங்காயம் பச்சமிளகாய்கருவேப்பிலை அரிந்து சேர்த்துன்கு பிசைந்து ஐந்து நிமிடம் ஊற‌ வைத்து         தேவைக்கு ஏற்ப பெரிய டைகளாகவோ,சிறிய‌ டைகளாகவோ பொரித்துஎடுக்கவும்.


சர்க்கரை பொங்கல் ரெசிபியை கிழே உள்ள லின்கில் சென்று பார்க்கவும்.




ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ் 

மசால் வடை மொருகலாக வரவேண்டும் என்றால் தண்ணீர் நல்ல வடித்து மாவை முன்று பாகமாக பிரித்து ஒரு பாகம் நல்ல மைய்யாகவும் , ஒரு பாகம் முக்கால் பதமாகவும், ஒரு பாகம் அரை பதமாகவும் அரைத்து கலந்தால் கிரிஸ்பியாக ஹோட்டலில் செய்வதை விட மிக அருமையாக வரும்.


கஞ்சி , பொங்கல்,உப்புமா போன்றவைகளுக்கு ஏற்ற சூப்பரான ஸ்நாக்ஸ் வடை, இதை கடலை பருப்பிலும் செய்யலாம் பட்டாணி பருப்பிலும் செய்யலாம்.இதில் நான் காரம் அவ்வளவாக சேர்க்கவில்லை. காரம் அதிகம் தேவைபடுபவர்கள். பச்சமிளகாய் அல்லது சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுஙக்ள், இதில் சேர்த்துள்ள இஞ்சி பதில்  காஞ்சமிளகாய் ( வரமிளகாயும்) சேர்த்து அரைக்கலாம்.

தமிழ் நாட்டில் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டி, தெருவுக்கு தெரு எந்த முக்கு சந்துக்கு போனாலும் மசால் வடை  கிடைக்கும்.
இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு கஞ்சிக்கு ஏற்ற சூப்பரான காம்பினேஷன் இது.

தமிழர் திருநாளான பொங்கலின் போது போகி பண்டிகை அன்று அவர்கள் செய்யும் மெனு


மசால்வடை
பாயாசம்

Tags: Road side Snacks,Festival Recipe, பண்டிகை கால சமையல்

Jaleela Banu, Dubai

http://www.chennaiplazaki.com



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, October 12, 2014

தில் கீரை இந்தியன் டோனட் - Dill Leaves Vadai


தில் கீரை உளுந்து வடை

நோன்பு நேரத்தில் யாரும் காய்கறி வகைகளோ அல்லது கீரை வகைகளோ சேர்ர்த்து கொள்வதில்லை, கஞ்சி செய்யும் போது காய்கறிகளையும், உளுந்து வடை , பருப்பு வடை செய்யும் போது கீரை வகைகளையும் சேர்த்து கொண்டு ஆரோக்கியமான சிற்றுண்டியை தயாரிக்கலாம்.

Step by Step Dill Leaves Doughnut Click here

தேவையான பொருட்கள்.


 உளுந்து பருப்பு - 200 கிராம்
பச்ச மிளகாய் - 3
உப்பு - முக்கால் தேக்கரண்டி ( தேவைக்கு)
தில் கீரை -  ஒரு கட்டு பொடியாக நறுக்கியது
வெங்காயம் - இரண்டு பொடியாக நறுக்கியது
அலங்கரிக்க தில் கீரை சிறிது
எண்ணை - பொரிகக் தேவையான அளவு


செய்முறை 
1. தில் கீரையை மண்ணில்லாமல் கழுவி அதை பொடியாக நறுக்கி தண்ணீரை வடிக்கவும்.
2.உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு வடிக்கட்டி , அத்துடன் பச்சமிளகாய் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
3.அரைத்த உளுத்தமாவில் வடிகட்டிய தில்  கீரை, அரிந்த வெங்காயம் சேர்த்து நன்கு பிசறி வைக்கவும்.
4.ஒரு வாயகன்ற இரும்பு வானலியில் எண்ணையை காயவைத்து வடை மாவை கமலா பழ சைஸ் உருண்டைகளாக பிடிதது வட்ட வடிவமாக தட்டி கட்டை விரலால் நடுவில் ஓட்டை போட்டு தீயின் தனலை மிதமாக வைத்து கருகாமல் பொரித்து எடுக்கவும்.
சுவையான அயர்ன் சத்து மிகுந்த உளுந்து வடை தயார்.


Monday, February 13, 2012

மொளகா பஜ்ஜி



மொளகா (மிளகாய்) பஜ்ஜி என்றாலே சென்னையில் உள்ள காந்தி பீச் தான் நினைவுக்கு வரும். அங்கு கிடைக்கும் பஜ்ஜியின் சுவையே தனி தான்.

சில‌ருக்கு மொள‌கா ப‌ஜ்ஜி சாப்பிட‌ ஆசை ஆனால் கார‌ம் வ‌யிறு உபாதை கார‌ண‌மாக‌ சாப்பிட‌ முடியாது, அத‌ற்கு இந்த‌ முறையில் செய்து சாப்பிட்டால் கார‌ம் அந்த‌ அள‌விற்கு தாக்காது. வினிக‌ரில் ஊறி சுவையும் வித்தியாச‌மாக‌ இருக்கும். முழுசா செய்ய‌ விரும்புவ‌ர்க‌ள் அப்ப‌டியே பாதியா வெட்டாம‌ல் காம்புட‌ன் க‌ல‌வையில் முக்கி பொரித்து சாப்பிட‌லாம்.










நீட்டு மிளகாய் = 3

பஜ்ஜி மாவு கலவை

கடலை மாவு = அரை கப்
அரிசி மாவு = ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
இட்லி சோடா = சிறிது
ரெட் க‌ல‌ர் பொடி = சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி = ஒரு பின்ச்

மிள‌காயை ஊற‌வைக்க‌

வினிக‌ர் = ஒரு மேசை க‌ர‌ண்டி
த‌ண்ணீர் = கால் க‌ப்
உப்பு = ஒரு சிட்டிக்கை
ச‌ர்க்க‌ரை = ஒரு சிட்டிக்கை











1. மிள‌காயை காம்பு ம‌ற்றும் விதைக‌ளை நீக்கி விட்டு இர‌ண்டாக‌ அரிந்து வினிக‌ர், த‌ண்ணீர், ச‌ர்க்க‌ரை, உப்பு சேர்த்து ஊற‌வைக்க‌வும்.

2. கடலை மாவு+ அரிசிமாவு+மிளகாய் தூள் + உப்பு+பெருங்காயப்பொடி+இஞ்சி பூண்டு பேஸ்ட்+இட்லி சோடா+ரெட் கலர் பொடி, அனைத்தையும் த‌யிர் ப‌த‌த்திற்கு போர்கார் ந‌ன்கு க‌ல‌க்கி ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

3. எண்ணையை காய‌வைத்து மிளகாயை க‌ல‌வையில் தோய்த்து பொரித்தெடுக்க‌வும்.


குறிப்பு

பச்ச மிளகாய் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று கேள்வி பட்டுள்ளேன். இப்படி விதை எடுத்து வினிகரில் ஊறி செய்தால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். கூடுமானவரை பச்சமிளகாயை அதன் உள்ளே இருக்கும் விதையை எடுத்து விட்டு சமையலுக்கு அரைத்து சேர்க்கலாம். பொடியாக நருக்கியும் சேர்த்து கொள்ளலாம்


Sunday, January 15, 2012

உளுந்து வடை - urad dhal vadai


தமிழ் நாட்டு மக்களு எந்த ஹோட்டலுக்கு போனாலும் உளுந்து வடை ஆர்டர் செய்யாதவர்களே கிடையாது. வீட்டிலும் சுவைபட வித விதமாக தயாரிக்கலாம்.  உளுந்து வடை , தயிர் வடை, ரச வடை, சாம்பார் வடை, கீரை வடை, கேரட் வடை, மிளகு வடை இன்னும் பல பல விதங்களில் தயாரிக்கலாம்.
பொங்கல் என்றால் அதற்கு கூட துணைக்கு வடை இல்லாமல் இருக்காது.




தேவையானவை

 உளுந்து கால் கிலோ
வெங்காயம் – 100 கிராம்
பச்சமிளகாய் – 3
கருவேப்பிலை – 3 ஆர்க்
மிளகு – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது
இஞ்சி – சிறிய துண்டு


செய்முறை

 
உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு மையாக அரைக்கவும்.
வெங்காயம் ,இஞ்சி ,பச்சமிளகாயை பொடியாக அரிந்து வைக்கவும்.
கொத்துமல்லி கருவேப்பிலையை நன்கு மண்ணில்லாமல் கழுவி பொடியாக அரிந்து வைக்கவும்.
அரைத்த மாவில் வெங்காயம் பச்சமிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, உப்பு,இஞ்சி,மிளகு அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
ஒரு வாயக்ன்ற வானலியில் எண்ணையை காயவைத்து மிதமான சூட்டில் வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
சட்னி சாம்பாருடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
எனக்கு சர்க்கரை தொட்டு சாப்பிட ரொம்ப பிடிக்கும்.

.குறிப்பு:

உளுந்து வடையில் கீரைவகைகள், கேரட் போன்றவைகளை பொடியாக அரிந்து துருவி சேர்த்து செய்தால் மிகவும் ஆரோக்கியமான் உணவாக உண்ணலாம், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.







அரைத்த உளுத்தமாவில் பாலக் கீரை சேர்த்து செய்தால் குழந்தைகளுக்கு ஈசியாக கீரை உணவை சேர்த்து விடலாம்.

கேரட் வடை




உளுத்தமாவுடன் மற்ற பொருட்கள் ஏதும் சேர்க்காமல். பச்சமிளகாய் சேர்த்து அரைத்து கேரட் மட்டும் துருவி சேர்த்தால் பிள்ளைகளுக்கு காய் கள் கொடுத்தமாதிரியும் இருக்கும். பள்ளிக்கும் கொடுத்தனுப்பலாம் ஈசியாக சாப்பிடுவார்கள்.




கிட்ஸ் கலர் புல் தயிர் வடை





பொங்கல் , உளுந்து வடை , புதினா சட்னி, சாம்பார்.


கீரை வடை பொட்டுகடலை சட்னி








மங்கையர்உலகம் ஜனவரி மாத போட்டிக்குறிப்புக்கு. - தமிழ் நாட்டு பாரம்பரிய சமையல் உளுந்து வடை


உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

மழலை உலகம் மகத்தானது - 1
அடுத்து அடுத்து தொடர்கள் முடிந்த போது எழுதுகிறேன்...

எல்லாரும் கரும்பு மென்று பல்லை கிளீன் பண்ணிக்கங்க

Monday, August 8, 2011

பாலக் கீரை போண்டா,பேரிட்சை புதினா துவையல் - Palak Bonda,dates mint chutney




நோன்பு காலங்களில் கஞ்சிக்கு பகோடா, உளுந்து வடை, போண்டா, சமோசா இப்படி ஏதாவது கூட வைத்து சாப்பிட இது போல அயிட்டங்களில் ஏதாவது ஒன்றும் கூடவே சட்னியும் இருந்தால் தான் அது கஞ்சி சாப்பிட காம்பினேஷன் சரியாக இருக்கும், சட்னி அதிலும் 5 பேரிட்சையை புதினாவுடன்

Monday, August 23, 2010

முந்திரி பருப்பு போண்டா



இந்த குறிப்பு தமிழ் குடுமப்த்தில் நடந்து கொண்டிருக்கும் நோன்பு ஸ்பெஷல் சமையல் போட்டிக்காக நான் அனுப்பும் முதல் குறிப்பு, குறிப்பை இங்கு சென்று பார்த்து உங்கள் அன்பான கருத்தை தெரிவிக்கவும்.





Saturday, June 12, 2010

பத்து பைசா வடையும் தீ எறிச்ச சாதமும்



அரைக்க
கடலை பருப்பு - 200 கிராம்
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - மூன்றூ பல்
இஞ்சி - ஒரு அங்குல அளவு
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - ஒன்று

அரைத்த மாவில் சேர்க்க வேண்டியவை

வெங்காயம் - ஒன்று
பச்சமிளகாய் - ஒன்று
கருவேப்பிலை - இரண்டு ஆர்
கொத்துமல்லி புதினா - சிறிது
உப்பு - முக்கால் தேக்கரண்டி (தேவைக்கு)
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

கடலை பருப்பை அரை மணி நேரம் ஊரவைத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

வெங்காயம் , உப்பு,பச்சமிளகாய், கொத்துமல்லி கருவேப்பிலை, புதினாவை பைனாக சாப் செய்து அரைத்த மாவில் கலந்து 2 நிமிடம் ஊறவைக்கவும்.
குட்டி குட்டி வடைகளாக சுட்டெடுக்கவும்.







இதற்கு முன் கொடுத்த ( பகறா கானா, ஆலு கோஷ், தால்சா) நிறைய செய்து மீதியாகி விட்டால் அதை தீ எறித்த சாதமாக செய்து அதுக்கு தொட்டு கொள்ள இந்த ஒரு பைசா வடை (அ) அப்பளம்,உப்பில் ஊறிய நார்த்தங்காய் சேர்த்து சாப்பிட ரொம்ப சூப்பராக இருக்கும்.





இந்த தீ எறித்த சாதத்தை மட்டும் ருசி பார்த்து விட்டால் ஓவ்வொரு முறை பகறா , சால்னா செய்யும் போது இதற்க்காகவே கூட கொஞ்சம் சேர்த்து சமைப்பீர்கள்.மசால் வடையுடன் சாப்பிட ரொம்ப அருமையாக இருக்கும்.
அவ்வளவு ருசியாக இருக்கும்.






தீ எறித்த சாதம் செய்முறை



மீதியான சாதம் இரண்டு கப்
தால்சா - ஒரு பவுள் ( முன்று கப் அளவு)
சால்னா - அரை பவுள் ( ஒன்னறை கப்)





முதலில் தால்சா, சால்னா இரண்டையும் கொதிக்க விடவும்.


சாப்பாட்டை இட்லி சட்டியிலோ (அ) மைக்ரோவேவிலோ சூடு படுத்தி கொதிக்கும் குழம்பில் சேர்த்து சாம்பார் சாதம் கிளறு வது போல் கிளறவும்.


கிளறி ஐந்து நிமிடம் சாதம் குழம்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் இரக்கிவிடவும்.




இது விஷேஷங்களில் இது போல் நிறைய மீதியாகும். மீதியாவதை இரவே தயாரித்து ஆறவைத்து மறுநாள் வடையுடன் அல்லது ஊறுகாய் அப்பளத்துடன் சாப்பிட நல்ல இருக்கும்.






(ஏன் ஒரு பைசா வடை என்று சொன்னேன் என்றால் , இப்ப தான் இதை உள்ளங்கை அளவிற்கு பெருசாக போடுகிறார்கள்.சின்ன வயதில்வெளியூரில் இருந்தோம்.)

வார வாரம் ஞாயிற்று கிழமை காலை உணவு ரவை கிச்சிடி ஒரு பைசா வடை, (அ) பழையசாதம் இது ரொம்ப அருமையாக இருக்கும்.(இரவு சாதத்தில் தண்ணீர் ஊற்றீ வைத்து காலை அதில் மோர் (அ) தயிர் வெங்காயம், பச்ச்சமிளகாய், கொத்துமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வடையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.), உளுந்து வடையும் புதினா துவையலும் இன்னும் மற்ற டிபன் அயிட்டமும் அம்மா செய்வார்கள்.


மசால் வடை மட்டும் வெளியில் போய் நான் தான் வாங்கி வருவேன் ஒரு வடை பத்து பைசா, 2 ரூபாயிக்கு வாங்கி வருவேன். எனக்கு அது ரொமப் பிடிக்கும். இன்னும் அதை மறக்கல எந்த இனிப்பு டிபன் போட்டாலும் கூட காரத்துக்கு ஒரு வடை அல்லது சுண்டல் செய்வது என் பழக்கம். அதில் இங்கு நிறைய குறிப்புகளில் பார்த்து இருப்பீர்கள்.








எப்ப வடை சுடும் போது பிள்ளைகளுக்காக இப்படி தான் செய்வேன். எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். நோன்பு காலங்களில் மாலை நோன்பு திறக்கும் போது வெள்ளை கஞ்சி கீமா கஞ்சிக்கு கூட இதை செய்து கொள்ளலாம்.
நான் சுவைத்ததை நீஙக்ளும் சுவைத்து மகிழுங்கள்.