Sunday, December 30, 2012

சேமர் இப்ராஹிம் ஜலீலா பானு




சேமர் இப்ராஹிம் ஜலீலா பானு , பாஸ்போர்டில் எங்க டாடி பெயரோடுதான் என் பெயர் இருக்கும் 
இங்கு ஏர்போட் ஹாஸ்பிட்டல் எங்கு சென்றாலும் என் பெயரை சேமர் இப்ராஹிம் என்று தான் கூப்பிடுவார்கள்.அப்படி கூப்பிடுவது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.



இது என் 700 வது பதிவு, என் டாடிய பற்றியே எழுதிவிடுகிறேன்.
.

சேமர்  முகம்மது இப்ராஹிம்


 சின்ன வயதில்  டாடி தலை சீவும் போது   நான் தான் எதிரில் கண்ணாடி பிடித்து கொண்டு நிற்பேன், அப்படி இப்படி ஆட கூடாது. அப்பதான் தலை சொறி எடுக்கும். அவங்க திட்டதேவையில்லை முகம் போகிற போக்கே புரிஞ்சிக்கலாம்.
சாப்பாடு விஷயத்தில் ருசித்து அதில் உள்ள குறை நிறைகளை அழகாக சொல்லுவாங்க.

நாங்க துணி துவைத்து காய போட்டு கொண்டு இருந்தால் (அப்பதான் வாஷிங் மிஷின் கிடையாதே) அப்படியே அலசி தொங்க விட வடமாட்டாங்க நல்ல பிழி, நல்ல பிழிஞ்சி போடுங்க. அப்பதான் சீக்கிரம் காயும்/ பிழிவதிலேயே அது பாதி உலர்ந்து விடும் என்பார்கள்

கட்டி பருப்பு ரசம் வைத்தால் ஜலீ அந்த பருப்பு போட்டு அதுக்கு மேலே ரசம் ஊற்றி, பருப்பில் இருக்கும் மிளகாயை பிழிஞ்சி சாப்பிடு சூப்பராக இருக்கும்.

மீன் சால்னா வைத்தால் காரம், உப்பு, புளிப்பு கரெக்டா இருக்கனும். மாமியார் கிட்டயாவது நல்ல இருக்குன்னு பெயர் வாங்கிடலாம் ஆனால் டாடி சால்னாவ உப்பு சரி பார்க்கும் போது அவர் முகம் எப்படி போகுதுன்னு பார்ப்பேன், சாப்பிட்டு பார்த்து வாழ்த்தும் போது ஆஹா அருமையா இருக்கு என்பார்.ஆனால் கொஞ்சம் நல்ல இல்லன்னாலும் எங்க மனசு நோக கூடாதேன்னு.சரி பரவாயில்ல சாப்பிடலாம் ஆனால் முகம் காட்டி கொடுத்துடும்.
/.மதியம் சாப்பிட உட்காரும் போது ,வாங்கம்மா எல்லாரும் சாப்பிட்டலாம் முதலில் வீட்டில் வேலை செய்யும் அஜ்ஜாவை ஏய் முதல அவள சாப்பிட உட்கார சொல்லு என்பார், உடனே என் தங்கை பாரே நான் இவ்வளவு நேரம் நின்று கொண்டு இருக்கேன் என்னை உட்கார சொல்லல, அஜ்ஜாவை கூப்பிடுகிறீங்க என்பாள்.

நீ இந்த வீட்டு பிள்ளை, தேவைக்கு எப்ப வேனும்னா போட்டு சாப்பிடலாம் பாவம் அவ நம்ம கொடுத்தா தானே சாப்பிடுவா,வா என்று கூட உட்காரவைத்து தான் சாப்பிட வைப்பார். வெக்கபடமா சாப்பிடு எம்மா அஜ்ஜாவுக்கு இன்னும் கொஞ்சம் வைமா என்பார்.
ஊருக்கு போயிருந்த போது வித விதமா சிக்கன் செய்து கொடுத்தேன் அதில் அவங்கலுக்கு ரொம்ப பிடிச்சது ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரெவி.நான் இங்க வந்ததும் ஜலீ கிட்ட கேளும்மா எப்படின்னு கேட்டு செய்.சால்னா, கிரேவி என்றால் திக்காக கிரிப்பாக இருக்கனும்.

கால் பாயா ரொட்டி போட்டால் சால்னாவ ரொட்டியில் ஊற்றி சாப்பிட சொல்வாஙக் சூப் போல கை கால் வலியெல்லாம் கேட்கும் என்பாகள்.


வேர்கடலைய .மல்லாட்டை என்று தான் சொல்வார்கள் , உப்பு போட்டு அவித்து சாப்பிடுவோம்.
பகோடா ரொம்ப பிடிக்கும். எங்க கடையில் இருந்து நான்காவது க்டைதான் மிக்சர் பகோடா கடை சுட சுட போட்டால் டாடிக்கு ஒரு பாக்கெட் வந்துடும்.
ஊருக்கு வந்தபோது எனக்கு அப்ப பகோடா போட தெரியாது. 
மம்மி வெளியில் போயிருந்த போது பகோடா செய்ய தெரியுமான்னு கேட்டார் நானும் தெரியாதுன்னு சொல்லாம , நானும் என் தங்கையும் சேர்ந்து எங்களுக்கு தெரிந்த பகோடாவை செய்து கொடுத்தோம். 
சின்னவயதில் ஓரளவுக்கு சுமாராக தான் செய்தோம்.

டாடி மவுத்ரார்கன் நல்ல வாசிப்பாங்க. 


என் பையன் லீவுக்கு வந்தான்னா காலேஜ்க்கு டிரெயினில் போய் சேர 2 நாட்கள் ஆகும். டாடி முழிச்சிட்டு இருந்து அவன் துங்கிட போறான்னு அவன் இறங்கு ஸ்டேஷன் வருவதற்கு அரை மணி நேரம் முன்பே போன் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.அவனும் ட்ரெயினில் கிரான்பா எழுப்புவாங்கன்னு நிம்மதியா தூங்குவான்.

பையன் காலேஜ் போனதில் இருந்து முன்று மாதமாக சரியாக சமைக்கவே இல்லை ஏனோ தானோன்னு சமைத்துகொண்டு இருந்தேன்.
டாடி தான் இந்த மாதிரி எல்லாம் செய்ய கூடாது, இப்ப கூட இருக்கிற ஹனீபுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒழுங்கா சமையல் செய்து கொடு . ரிஸ்க் அளிப்பவன் அல்லா ,யார் யாருக்கு என்ன ரிஸ்க் கிடைக்கனுமோ அதன் படி கிடைக்கும், அவன் சாப்பிடலையே நாம சாப்பிடுறோமே இப்படி நினைக்க கூடாது. உன் பையனுக்காக அல்லாவே அவன் எங்கு இருந்தாலும் நல்ல ரிஸ்க் கிடைக்கனும் என்று துஆ கேட்டுக்கோ என்றார்கள்.



எனக்கு என்ன மனக்க்‌ஷ்டம் என்றாலும் கரெக்டா டாடி கிட்ட இருந்து போன் வந்துடும். ஜலீ என்ன செய்ற நல்ல இருக்கியா என்று கேட்ட்துமே ஒரு தெம்பு புத்துணர்வு எல்லாம் தானே வந்துடும். ஒன்றும் கவலை படாதே எல்லாம் அவன் கிட்ட விட்டுடு எல்லாம் அவன் சரியாக்கிடுவான். இத ஓது அதை ஓது என்று குர் ஆன் வசங்கள் எடுத்து சொல்லுவாங்க.



சின்னதில் இருந்து எங்க டாடிக்கு இந்த கடைதான்  35 வருடஉழைப்பு



 பள்ளியில் ஒரு வகுப்பு  முடிந்த்தும் அடுத்த வகுப்பு அல்லது இடைவேளையில் டாடியை பார்க்க்னுமுன்னா உடனே நான் பார்க்கலாம்.
 உங்கள் யாருக்காவது இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கா?
பள்ளிகூடம் நின்று ரோட் கிராஸ் பண்ணா நேராக எங்க வாப்பாவின் 
துணி  கடை பானு சில்க் பேலஸ் அங்கிருந்து பார்த்தால் டாடி உட்கார்ந்து இருப்பது தெரியும்.
உள்ளே அசம்பிலி ஹாலில் நின்று திரும்பி பார்த்தாலும் டாடிய பார்க்கலாம்.
பள்ளிகூட்த்தின் முன்புறம் டாடி கடை, பள்ளி கூட்த்தின் பின்புறம் எங்க வீடு.


ஆனால் 35வருடத்துக்கு பிறகு சவுதி சென்று விட்டார்கள்.
அங்கு போனதில் இருந்து நல்ல இஞ்சி டீ போடுவது. புளிசாதம், உப்புமா , மைதா முட்டை தோசை, பீட்ரூட் ஹல்வா இதெல்லாம் சூப்பராக செய்ய கற்றுகொண்டார்கள்.
.ஞாயிற்று கிழமை என்றால் காலை நீங்க எல்லாரும் தூங்குங்கம்மா நான் சுபு தொழுதுட்டு வந்து டீ போடுறேன் என்பார்.ஒரு சமையலுமே தெரியாது சமைக்கும் கழ்டமும் தெரியாது, வெளி ஊரில் இருக்கும் போது இரவில் தீடீர் விருந்தாளிகள் அந்த ராத்திரியிலும் என் அம்மா சமைத்து கொடுப்பாங்க

இரண்டு வருடம்  முன் ஊருக்கு போயிருந்த போது கூட என்னை உட்காரவைத்து காலையில் மைதா முட்டை தோசை அதில் ஏலம் தேங்கா கீறி போட்டு அருமையாக சுட்டு மேலே நெய் தடவி சாப்பிடு என்று கொடுத்தார். இவ்ளோ ஹெவி வேண்டாம் டாடி சாப்பிடு பரவாயில்ல எப்படி இருக்கு சாப்பிட்டு பாரு என்றார்.
பேரன் பேத்திகளுக்கும் கிரான்பா ந்னா ரொம்ப பிடிக்கும். பேத்திகள் எல்லாம் பரிட்சைக்கு மாடியில் படித்து கொண்டு இருந்தால் இரவும், காலையில் விடிகாலையிலும் ஒரு பெரிய கிளாஸ் நிறைய பாதம் காம்ப்ளான் கரைத்துகொண்டுபோய் கொடுப்பாங்களாம், இந்த தடவை ஊருக்கு போயிருக்கும் போது தஙகச்சி பிள்ளைகள் எல்லாம் என்னிடம் கிரான்பாவை பற்றி தான் பேசிகொண்டு இருந்தார்கள்.
வெளியில் ஏசி ரிப்பேருகோ, பைப் ரிப்பேருக்கோ , டேங்க் ரிப்பேருக்கோ ஆள்வந்தால் வாங்க போங்கன்னு அவர்களிடம் மரியாதையாக பேசுவதும் அவர்களை கவனிப்பதும் பார்க்க நல்ல இருக்கும்.
டாடிக்கு ரொம்ப பிடிச்ச டிரஸ் சபாரி, இங்கு இருந்து போகும் போது ஏதாவது வேணுமான்னு கேட்டால் எனக்கு ஒன்றும் வேண்டாம் நீ நல்ல படியா வந்து சேரு, காசு வேஸ்ட் பண்ணாதே என்பார்கள்.


 சபையில் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தால் அந்த சபையே கலகலப்பாக  இருக்கும். அப்படி பேசி கொண்டு இருக்கும் போது உடனே கிளம்ப வேண்டி இருந்தால்  ரொம்ப தன்மையாக அப்ப உத்தரவு வாங்கிக்கிறேன், என்று சொல்லிட்டு எழுந்திருப்பாங்க.
தெருவில் நட்ந்து போனாங்கன்னா வழியில் எல்லாரையும் நலம் விசாரிக்காம போக மாட்டாங்க.
டாடிக்கு இரண்டு தம்பி ஒரு அண்ணன், 4 பேரும் ஒற்றுமை என்றால் அப்படி ஒரு ஒற்றுமை.

நான்கு பேரும் சேர்ந்து பேச ஆரம்பித்தார்கள் என்றால் சுற்றி இருக்கும் எங்களை எல்லாம் மறந்துடுவாங்க.
குர் ஆன் ஹதிஸ் பற்றின விளக்கங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு பேசி கொண்டு இருப்பார்கள். 

எழுத எழுத நிறைய நினைவுகள் வந்து கொண்ட்டே இருக்கு .. இத்துடன் முடித்து கொள்கிறேன். கண்மூடி திறப்பதற்குள் எல்லாமே முடிஞ்சே போச்சே.. நினைக்க நினைக்க டாடி பேசியது தான் எண்ணத்தில் ஓடிக்கொண்டு இருக்கு.
ஆண்டவன் அனைவருக்கும் நல்லது கெட்டதை தாங்கிக்ககூடிய மன தைரியத்தை கொடுக்கன்னும்

700 வது பதிவு என்னால் மறக்க முடியாத என் டாடிய பற்றியே எழுதிடலாம் என்று எழுதிட்டேன்.


இது வரை என்பதிவுகளுக்கு ஊக்கம் கொடுத்துவருகின்ற பதிவுலக தோழ தோழியர்களுக்கு மிக்க நன்றி.


டிஸ்கி :

இனி சுலப குறிப்புகள் நிறைய கொடுக்க இருக்கிறேன் ஏன் என்றால் என் தம்பி தங்க கம்பி இப்ப இத பார்த்து தான் சமைத்து கொண்டு இருக்கிறார்.அதற்காக தான் பேச்சுலர் ஈவண்டே ஆரம்பித்தேன்.

புரோக்கோலி பொரியல், சிக்கன் குருமா, ஷீர் குருமா போன்றவை செய்து பார்த்து ரொம்ப நல்ல வந்தது என்று சொன்னார். ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

அது இல்லாமல் என் தங்கைகள் கேட்ட குறிப்புகள், பெரியாப்பா மகள் கேட்ட குறிப்பு, என் பெரிமா பேத்தி கேட்ட குறிப்புகள் எல்லாம் முடிந்த போது எல்லாத்தையும் போட இருக்கிறேன்.

போனவார ஒரு குட்டி வி ஐ பி வந்து என் சமையலை ருசி பார்த்து விட்டு தனியாக கிச்சனில் வந்து என்னை பாராட்டிட்டு போனார், ஜல்லான்னாட்டி ரொம்ப சூப்பரா இருந்தது என்று சொன்னார் குழந்தைகள் பாராட்டை கேட்க எல்லாம் கொடுத்து வைத்து இருக்கனும்.

பெரிமா மகள் ஊருக்கு போயிருந்த சமையம் என்ன ஜலீக்கா நானும் எதிர் பார்த்து கொண்டே இருக்கேன் இன்னும் நான் கேட்ட குறிப்பை போடலையே
என் செல்லமாக கோபித்து கொண்டாள்.. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக போடுகிறேன் என்றேன்.

ஒரு நாள் ருவைசில் இருக்கும் பெரிவாப்பா பையன் எனக்கு வெஜ் பிரியாணி ரெசிபி லின்க் கொடுங்க என்றார், செய்து விட்டு ரொம்ப சூப்பராக வந்தது என்று சொன்னான்.

என் தங்கை பொண்ணுக்கு சமீபத்தில் தான் கல்யாணம் ஆகியது, என் தங்கை  நான் ஒன்றுமே சொல்லிகொடுக்கல எல்லா சமையலும்  உன் பிளாக் பார்த்துதான் சமைக்கிறாள்.ரொம்ப நிம்மதியா இருக்கு என்றாள்
.
நான் என்றும் என்றென்றும் உலகத்தில் உள்ள அனைத்து வீட்டு சமையலறையிலும் உப்பா சர்க்கரையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இன்னும் பலபேருக்கு பயனுள்ளதாக தான் இருக்கிறது.அதை இங்கு வந்து சொல்ல தான் யாருக்கும் நேரம் இல்லை போல இருக்கு தினம் 1000 க்கும் மேற்பட்டவர்கள்  இங்கு வந்து சுவைத்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் ஒரு வார்த்தை இங்கு வந்து சொல்ல தான் யாருக்கும் மனம் வரவில்லை.
கவனிக்க

பேச்சுலர் ஈவண்டுக்கு நீங்கள் அனுப்பிய குறிப்புகள் எல்லாம்  செக் பண்ணி கொண்டு இருக்கிறேன், இன்னும் எத்தனை குறிப்புகள் கிடைக்க பெற்றுள்ளன எப்ப ரிச்ல்ட் என்பதை அடுத்த போஸ்டில் சொல்கிறேன், சில பேர் லின்குகளை மற்றும் அனுப்பிட்டு அவர்க்ள் போஸ்டில் லின்க் கொடுக்கல. அனுப்பியவர்கள் உங்கள் பதிவில் என் லிங்க் கொடுத்து  இருக்கீங்களான்னு ஒரு முறை சரி பார்த்து கொள்ளுங்கள். தேதியில் இருந்து அனுப்பிய புது குறிப்பு + சில பழைய குறிப்புகள் 2012 லில் உள்ள் செலக்ட் பண்ணுவேன்.




Tuesday, December 25, 2012

சமையல் போட்டிக்கு மெயில் மூலம் கிடைத்த குறிப்புகள்

19-12-12 லிருந்து 22.12.12  வரை மெயிலில் கிடைக்க பெற்ற குறிப்புகள் மற்றும் லின்குகள்.சில பேர் எடிட் பண்ண நேரமின்மையால் தாமதமாக போட்டு இருக்கலாம். 



அஸ்மா 





 மரவள்ளிக் கிழங்கு அடை

http://payanikkumpaathai.blogspot.com/2012/02/blog-post_15.html

- ஹகீம் பொரியல் (காட்டுக்கறி)

http://payanikkumpaathai.blogspot.com/2011/11/blog-post.html

- நண்டு முருங்கைக்காய் குருமா

http://payanikkumpaathai.blogspot.com/2011/07/blog-post.html

- காக்கி மில்க் ஷேக்

http://payanikkumpaathai.blogspot.com/2010/12/blog-post_18.html

- லெமன் க்ராஸ் கிரீன் டீ

http://payanikkumpaathai.blogspot.com/2010/10/blog-post_06.html

- முள்ளங்கிக் கீரை வதக்கல்

http://payanikkumpaathai.blogspot.com/2010/09/blog-post_18.html

***************************************************************************







1.ஸ்பினாஜ் கீரைக்கறி,
 2.நெத்தலிக் கருவாட்டுக் கறி
 3.மீன் சொதி,
 4.எக் அண்ட் சொசேஜ் ரோஸ்ட்,
 5.வெண்டிக்காய் வெள்ளைக்கறி.
6. காலிபிளவர் பொரியல்
7. சால்மன் பிஷ் கறி 1 &8,  2 கிரில் & கறி
9 பன்
 *******************************************************************

கீதா ஆச்சல்.






கீதா ஆச்சல்











********************************************************************



 காளான் பிரியாணி

சிக்கன் பர்பட் வாலா

தால்சா
*************************************************************



அமைதிச்சாரல்







*********************************************************************

மகிஅருண்




**********************************************************************

என்றென்றும் 16





என்றென்றும் 16
புன்னகை வலை
ஸ்ட்ராபெரி ஸ்மூதி

*************************************** ******************************




**********************************************************************

கோமதி அக்கா



தனியா பொடி
தக்காளி சாதம்
உருளைகிழங்கு சிப்ஸ்


 ********************************************************************


ஆமினாவின் குறிப்புகள் - படங்கள் கிடைக்க பெற்றது இங்கு சேர்க்கிறேன்.
ஓட்ஸ் ரவா தோசை oats dhosa
 மாசி தொக்கு
அவித்தமுட்டை கிரேவி (மாமியின் சமையல்)
பிரியாணி பிரட் ஆம்லெட்


***************************************************************************

ஜுலைகா நசீர் அருசுவை தோழி மெயில் மூலமாக அனுப்பிய குறிப்புகள் = 4

கைமா பருப்பு சாதம்



 பாசுமதி அரிசி -4கப்
 கொத்துகறி -300 கிராம்
 க .பருப்பு -1கப்
வெங்காயம் - இரண்டு
தக்காளி - மூன்று
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு கரண்டி
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
கரம்மசாலாதூள் - ஒரு கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் - 150 கிராம்
   உப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய்+நெய் - 100 கிராம்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு மல்லிக்கீரை &பொதினா -தலா 1கைப்பிடி
வெங்காயம் தக்காளியை வெட்டிக்கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.பருப்பை 10னிமிடம் ஊறவைக்கவும்
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
பின்னர் அதில் நறுக்கின வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், மற்றும் மசாலாதூள் போட்டு கிளறி விடவும்.அதில் கொத்துகறியைப்போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும் .தயிர் சேர்க்கவும்.அதில் 1கப் தண்ணீர் ஊற்றி  15நிமிடம்வேக விடவும் .பின் அத்துடன் வேகவைத்த சாதத்தை கொட்டி கிளறி பாத்திரத்தை மூடி வைத்து தம்மில் போடவும்.
கடைசியில் எல்லாம் சேர்ந்தாற்போல் வந்ததும் மேலே மல்லிக்கீரை தூவி அடுப்பை அணைக்கவும்
பரிமாறும் அளவு -3பேர்

முட்டை பிரியாணி


தேவையானப் பொருட்கள்

  • முட்டை -5
  • பிரியாணி அரிசி -அரைகிலோ
  • வெங்காயம் -இரண்டு
  • தக்காளி -மூன்று
  • இஞ்சி பூண்டு விழுது -இரண்டுகரண்டி
  • மிளகாய்தூள் -ஒருகரண்டி
  • கரம்மசாலாதூள் -ஒருகரண்டி
  • மஞ்சள்தூள் -ஒரு டேபிள்ஸ்பூன்
  • தயிர் -150கிராம்
  • தேங்காய்பால் -150கிராம்
  • உப்பு -இரண்டுடேபிள்ஸ்பூன்
  • எண்ணெய்+நெய்-100கிராம்
  • பட்டை சிறியதுண்டு
  • கிராம்பு ,ஏலக்காய் -தலா இரண்டு

செய்முறை

  • அரிசியை உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ளவும்
  • முட்டையை வேகவைத்து தோல்களை உரித்துக்கொள்ளவும் அதை லேசாக கீறிக்கொள்ளவும்
  • வெங்காயம் தக்காளியை வெட்டிக்கொள்ளவும்
  • பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்
  • ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு மிளகாய்தூள் மஞ்சள்தூள் மசாலாதூள் போட்டு கிளறி முட்டையை போட்டு இரண்டு நிமிடம் போட்டு வதக்கவும் பின் தேங்காய்பால் தயிர் ஊற்றி ஒருகப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் வேகவிடவும் பின் உதிர்த்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி தம்மில் போடவும் கடைசியில் எல்லாம் சேர்ந்தால் போல் வந்ததும் மேலே மல்லிக்கீரை தூவி அடுப்பை அனைக்கவும்


வல்லாரை சாலட்



வல்லாரைக்கீரை -100கிராம்
சின்ன வெங்காயம் -50கிராம்
பச்சை மிளகாய் -பெரியது ஒன்று
தயிர் -ஒரு கப்(125கிராம்)
எலுமிச்சை பழம் -1
உப்பு -1 டேபிள்ஸ்பூன் அல்லது தேனையான அளவு
வல்லாரைக்கீரையை காம்பு நீக்கி இலைகளை ஆய்ந்து வைக்கவும்
வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக வெட்டவும்
அதில் தயிர் எலுமிச்சை உப்பு அனைத்தையும் போட்டு பிசிறி பத்து நிமிடம் கழித்து பரிமாறவும் செய்வதற்கு சுலபமான சுவையான சாலட் ரெடி இப்படி செய்தால் வல்லாரையின் அனைத்தி சத்துக்களும் வீணாகமல் நமக்கு நேரடியாக கிடைக்கும்


கோழி சாப்ஸ்

கோழி நெஞ்சு சதை  -300 கிராம்
பூண்டுதூள் - 2 கரண்டி
மிளகுத்தூள் - 2 கரண்டி
மேகிசாஸ் - 1 கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
மல்லிக்கீரை பொடியாக நறுக்கியது சிறிது
எண்ணெய் - பொரித்து எடுப்பதற்கு

Method

 கோழி காலில் மேல் பகுதியில் உள்ள முள்ளை மட்டும் வைத்துவிட்டு மீதி முள்ளை வெட்டிவிட்டு சதை பகுதியை லேசாக நசுக்கவும.அதில் மிளகுத்தூள், பூண்டுதூள், உப்பு, மேகிசாஸ் எல்லாம் சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் ஊற விடவும் ுட்டையை ஒரு கோப்பையில் சிறிது உப்பு மல்லிக்கீரையை போட்டு நன்கு கலக்கி அதில் ஒவ்வொரு கோழி துண்டாக நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து சூடாக பரிமாறவும்.
குறிப்பு:
பூண்டு தூள் கிடைக்கவில்லை என்றால் 4பல் பூண்டை  கேரட் துருவியால் துருவிப்போடவும்

********************************************************************************************************************************

 Anand - 2 
Total - 58 entries are received from mail

மொத்தம் மேலே 60 இருக்கும் அதில் பானு & அமைதிச்சாரல் ஒரு ஒரு குறிப்பு லின்கி டூலில் இணைந்துள்ளது. ஆக மெயில் மூலம் கிடைக்க பெற்ற குறிப்புகள் 58 
மேலே அனுப்பியவர்களின் பெயரை கிளிக்கினால் அவர்கள் பதிவுக்கு செல்லலாம்/ 


Friday, December 21, 2012

கட்டி பருப்பு - Plain Dhal

தேவையான பொருட்கள்


இது என் கணவர் சின்ன குழந்தையாக இருந்த போது அவங்க அம்மா கொடுத்த முதல் உணவு ..
எங்க வீட்டு குழந்தைகள் அனைவருக்கும் ரொம்ப பிடித்த தால் இது..

வேக வைக்க
-------------
துவரம் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (நான்காக நறுக்கியது+
தாளிக்க
--------
வெங்காயம் - அரை பொடியாக நறுக்கியது
கடுகு - அரை டீஸ்பூன்
காஞ்ச மிளகாய் - இரண்டு
பச்சமிளகாய் - ஒன்று
பூண்டு - இரண்டு பல்லு
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
கொத்து மல்லி - சிறிது மேலே தூவ
எண்ணை - இரண்டு டீஸ்பூன்
நெய் -ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒன்னரை டீஸ்பூன்




செய்முறை

பருப்புடன் வேகவைக்க வேண்டியதை போட்டு வேகவைத்து ஆற வைத்து மிக்சியில் அல்லது பிளென்டரில் ஒரு திருப்பு (மையாக அரைக்கவேண்டாம்).
மிக்சியில் அடித்ததை உப்பு, கொத்து மல்லி போட்டு ஒர் கொதி கொதித்து இறக்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ள்வும்.
ஒரு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு, காஞ்ச மிளகாய் போட்டு அரை வெங்காயத்தை வதக்கி லேசாக கலர் மாறியதும் பூண்டை தட்டி போட்டு கருவேப்பிலை பச்சமிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி பருப்பில் கொட்டவேண்டும்.
கடைசீயில் நெய் ஒர் ஸ்பூன் ஊற்றி இரக்கவும்.

இந்த பருப்புக்கு வெங்காய முட்டையும் நார்த்தங்காய் ஊறுகாயும் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

குறிப்பு:

பிள்ளைகளுக்கு வெறும் சாதத்தில் இந்த பருப்பை ஊற்றிக்கொடுத்தால் ரொம்பவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈசியான முறை எளிதில் தயாரிக்கக் கூடியது.

இது என் கணவர் சின்ன குழந்தையாக இருந்த போது அவங்க அம்மா கொடுத்த முதல் உணவு ..
எங்க வீட்டு குழந்தைகள் அனைவருக்கும் ரொம்ப பிடித்த தால் இது..


Linking to Gayathri's Walk-through Memory Lane hosted by Nithu and My own event - Bachelor's Feast

பேச்சுலர் போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள்

 
 
 
 
 
 
 
போட்டி அறிவித்து ஒரு மாதம் ஆகி விட்டது.

நாளை குளாஸ் ஆக வேண்டிய லின்கி டூல் இன்றே குளாஸ் ஆகிவிட்டது.


பரவாயில்லை யாரும் பயப்பட வேண்டாம்

எல்லாருடைய குறிப்புகளும்என் மெயிலுக்கு வந்து விட்டன.

இனி இன்றிலிருந்து யார் யார் கிட்ட இருந்து எத்தனை குறிப்புகள் கிடைக்க பெற்றன என்று கணக்கெடுகக் ஆரம்பிக்கனும்.

அனுப்பிய வரை எல்லாருடைய குறிப்பும் கிடைத்து விட்டது
வேறு யாரும் அனுப்ப விரும்பினால் , நாளைக்குள் என் மெயில் ஐடிக்கு அனுப்பிவிடுஙக்ள்


இன்று அஸ்மா இணைக்கிறேன் என்றார்கள் அஸ்மா என் மெயிலுக்கு அனுப்பி விடுஙக்ள். அதே போல மற்ற தோழிகளும் மெயிலிலேயே அனுப்பிவிடுங்கள்.
 
சில பேருக்கு நேரம் இல்லாத காரணத்தால் இன்று இணைப்பதாக இருந்தவர்களுக்காக ,இன்னும் இரண்டு நாட்கள் டைம் தருகிறேன்.மெதுவாக அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய பதிவில் போட்டு விட்டு லின்கை இங்கும் மெயிலிலும் அனுப்பி விடுங்கள்.
 


பூஸாரே நீங்க இன்னும் நிறைய செய்து எடுத்து வரேன் என்றீர்கள்

ஆகையால் 22 வரை தேதியை தள்ளி போட்டுள்ளேன்.