Wednesday, March 4, 2009

நபிகள் (ஸல்) அவர்கள் ஓதி வந்த துஆ

அல்லாஹும்ம அயின்னி அலா ஜிக்ரிக்க வஸுக்க்ரிக்க வ ஹுஸ்னி இபாததிக்க.


யா அல்லாஹ்! உன்னை தியானிப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,அழகிய முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு நீ உதவி செய்வாயாக.

நபி (ஸல்) ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இந்த துஆவை ஓதி வந்தார்கள். முஆத் (ரலி) அவர்களுக்கு இந்த துஆவைக் கற்று கொடுத்தார்கள்.


ஜலீலா

எல்லா நேரங்களிலும் ஓத தகுந்த துஆ

அல்லாஹும்ம இன்னி அஸ் அலுக்க இல்மன் நாஃபிஹன் வ ரிஜ்கன் வாஸிஹன் வ ஸிபாஅன் மின் குல்லி தாஇன்.

யா அல்லாஹ்! பயனுள்ள அறிவு, தாராளமான உணவு, எல்லா நோய்களிலிருந்தும் நிவாரணம் இவற்றையே நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.

முஸ்லிமாக மரணமடைய துஆ

அல்லாஹும்ம தவஃபனா முஸ்லிமீன வல் ஹிக்னி பிஸ்ஸாலிஹீன ஹைர ஹஸாயா வலா மஃதுனீன்.

யா அல்லாஹ்! உனக்கு அடிபணிந்த முஸ்லிம்களாக எங்களை மரணமடையச் செய். எந்த கேவலத்தையும் சந்திக்காமல், எந்த சோதனையிலும் சிக்காமல் நல்லோர்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக.


ஜலீலா

Tuesday, March 3, 2009

வெயிட்டை குறைக்க கொள்ளு

1 . வெயிட்டை குறைக்க கொள்ளு சப்பிடுவதாக இருந்தால் (கொள்ளு ரொம்ப சூடு) ஆகையால் அதை ரசம், சூப்பில் சேர்த்து கொள்ளுங்கள், சுண்டல் செய்யும் போது முன்று வகை சுண்டலாக செய்து கொள்ளுங்கள்

2. பாசி பயறும் இனிப்பு சுன்டலுடனும், வேர்கடலை சுண்டலுடனும், காராமணியுடனும் சேர்த்து செய்து சாப்பிடுங்கள்.

3. கொள்ளு சாலட் கூட கொண்டை கடலையுடன் கேரட் வெள்ளரி கட் செய்து சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடலாம்.

4. பார்லி சேர்த்து பருப்படை செய்தும் சாப்பிடலாம்.

ஜலீலா

இஞ்சி ரசம்








புளி - ஒரு லெமென் சைஸ்
தக்காளி - ஒன்று

அரைத்து கொள்ள
------------ -----------

இஞ்சி இரண்டு அங்குல துண்டு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முழு தனியா - ஒரு மேசை கரண்டி
காஞ்ச மிளகாய் - இரண்டு
கொத்து மல்லி தழை - கால் கை பிடி அளவு
கருவேப்பிலை - கால் கை பிடி அளவு
தாளிக்க
********

நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை அளவு


செய் முறை
********* *****

1. புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
2.அரைக்க கொடுத்துள்ளவைகளை (வதக்க வேண்டாம்) அரைத்து கொள்ளவும்.
3. தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு
கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
4. கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
5. சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி.





குறிப்பு

பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம்.
சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளி காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.
வீசிங் பிராப்ளம் உள்லவர்கலுக்கும் நல்லது.
சில குழந்தைகளுக்கு சளி இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாத்த்தில் பிசைந்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காரம் சிறிது குறைத்து கொள்ளலாம். காரம் அதிகம் சாப்பிடுபவர்கள். கூட்டி கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்கவும் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
இது பிள்ளை பெற்றவர்களுக்கும் ரொம்ப நல்லது.

ஜலீலா

தேங்காய் பால் ரசம்

ஒன்றாக கலக்கி கொள்ள

******************

தேங்காய் பால் - இரண்டு கப்

புளி - சிறிதளவு

தக்காளி - ஒன்று



ஒன்றும் பாதியுமாய் தட்டி கொள்ள

***************************

மிளகு - அரை தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

பச்சமிளகாய் - ஒன்று

பூண்டு - முன்று பற்கள்

கருவேப்பிலை - கால் கை பிடி

கொத்து மல்லி தழை - கால் கைபிடி



1. தக்காளியை நன்கு பிசைந்து அதில் புளி தண்ணீர் மற்றும் தேங்காய் பாலை சேர்த்து கொள்ளவும்.



2. கொர கொரப்பாக தட வேண்டிய பொருட்களை தட்டி கொள்ள வேன்டும்.



3. சட்டியை காயவைத்து அதில் எண்ணை ஒரு தேக்கரண்டி ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காஞ்சமிளகாய் தாளித்து பொருங்காய பொடியும் சேர்த்து லேசாக தட்டி வைத்துள்ளதை சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ல முன்று கலவையையும் சேர்த்து உப்பு சேர்த்து தீயை மிதமாக வைக்கவும்.



4. லேசாக நுரைத்து வரும் போது இரக்கிவிடவும்.



குறிப்பு

********



இதில் முதலே கூட தட்டிய மசாலாக்களை (புளி, தேங்காய், தக்காளி ) கலவையில் சேர்த்து கொள்ளலாம்.

இது வாய் புண் மற்றும் வயிற்று புண் உள்ளவர்களுக்கு ரொம்ப நல்லது.



ஜலீலா

Sunday, March 1, 2009

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு

1. தினமும் ஒரு பத்தை தேங்காயும், நான்கு பாதம் இரவே ஊறவைத்துகாலையில் தோலை நீக்கி விட்டு கொடுங்கள்.

2. அடுத்து அக்ரூட் என்கிற வால் நட்டையும் கொடுக்கவும், அதன் தோற்றம் மூளையை போன்று இருக்கும் இதுவும் மூளை வளர்ச்சிக்கு மிக்க நல்லது.

3. வால்நட் சிறிது கசக்கும் அதனுடன் கருப்பு கிஸ்மிஸ் பழம் சேர்த்து கொடுக்கவும்.

4. பல் முளைத்ததும்,நன்கு கடித்து சாப்பிட ஆரம்பித்ததும் கொடுக்கவும்.

5. கடித்து சாப்பிடாத பிள்ளை களுக்கு நன்கு மையாக அரைத்து பாலில் சேர்த்து காய்ச்சி கொடுக்கலாம்.

(தொடரும்)