ஒன்றாக கலக்கி கொள்ள
******************
தேங்காய் பால் - இரண்டு கப்
புளி - சிறிதளவு
தக்காளி - ஒன்று
ஒன்றும் பாதியுமாய் தட்டி கொள்ள
***************************
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் - ஒன்று
பூண்டு - முன்று பற்கள்
கருவேப்பிலை - கால் கை பிடி
கொத்து மல்லி தழை - கால் கைபிடி
1. தக்காளியை நன்கு பிசைந்து அதில் புளி தண்ணீர் மற்றும் தேங்காய் பாலை சேர்த்து கொள்ளவும்.
2. கொர கொரப்பாக தட வேண்டிய பொருட்களை தட்டி கொள்ள வேன்டும்.
3. சட்டியை காயவைத்து அதில் எண்ணை ஒரு தேக்கரண்டி ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காஞ்சமிளகாய் தாளித்து பொருங்காய பொடியும் சேர்த்து லேசாக தட்டி வைத்துள்ளதை சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ல முன்று கலவையையும் சேர்த்து உப்பு சேர்த்து தீயை மிதமாக வைக்கவும்.
4. லேசாக நுரைத்து வரும் போது இரக்கிவிடவும்.
குறிப்பு
********
இதில் முதலே கூட தட்டிய மசாலாக்களை (புளி, தேங்காய், தக்காளி ) கலவையில் சேர்த்து கொள்ளலாம்.
இது வாய் புண் மற்றும் வயிற்று புண் உள்ளவர்களுக்கு ரொம்ப நல்லது.
ஜலீலா