Sunday, June 19, 2011

பிரிவின் துயரால்



//என் தந்தையே
இத்தனை வருடம்
எங்களோடு ஒன்றாக இருந்து
இன்று எங்களோடு இல்லாத 
உன் பிரிவின் துயரால் 
நாங்கள் வாடுகிறோம்




உன் நற்குணத்தை
சொல்ல வார்த்தைகள் இல்லை
தாய் சொல்லை தட்டாத
மகனாய்
உடன் பிறப்புகளுக்கு
அன்பான தந்தையாய்
மைத்துனிகளுக்கு பாசமான
சகோதரராய் இருந்தாய்

என் அன்னையை பூவினும்
மேலாக பாதுகாத்தாய்
ஐந்து வைரங்களையும்
ஒரு வைடூரியத்தையும்
அழகாய் பெற்றெடுத்தாய்
மிகவும் கண்ணியமான
முறையில் அனைவரையும்
கரைசேத்தாய்

தனக்கென எதையும்
பதுக்கவில்லை
பல  ஜோடிகளை
அன்பாக பேசி சேர்த்து வைத்தாய்
உற்ற நண்பர்களை
அன்பாய் நேசிப்பாய்

 நான் சோகமாக இருக்கும்
போது குரான் வசனத்தை
எடுத்துரைத்து தெளிவு
படுத்துவாய்
என் மகனுக்கு நல்ல
உபதேசம் செய்தாய்



பொறுமையின் சிகரமாய்
திகழ்ந்தாய்
அதிர்ந்து கூட ஒரு வார்த்தை
பேசியதில்லை
உற்றார் உறவினரை
கண்ணியப்படுத்துவாய்
அப்படி பட்ட என்
தந்தையை பிரிந்து
வாடுகிறோம்//


//என் தந்தையே
இத்தனை வருடம்
எங்களோடு ஒன்றாக இருந்து
இன்று எங்களோடு இல்லாத 
உன் பிரிவின் துயரால் 
நாங்கள் வாடுகிறோம்//


--ஆக்கம்
ஜலீலாகமால்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டாடி:ஜலீ ஜலீ ஜலீ ஜலீம்ம்மா ,

நான்:என்னங்டாடி , என்னங்டாடி

இனி யார் என்னை இப்படி கூப்பிடுவாங்க./

எப்போதும், முன்பெல்லாம் சிறு வயதில் வல வல ந்னு பேசிகொண்டே இருப்பேன், சிரித்து கொண்டே எல்லாத்தையும் கேட்டுட்டு கொஞ்சம் நேரம் தேய்ந்து போன ரெக்கார்ட ஆஃப் பண்ணு என்று கிண்டல் பண்ணுவார்கள்.
போனவருடம் இதே நாள் என் டாடியிடன் பேசினேன்,   ஜலீ ஜலீ நல்ல இருக்கீயா , அப்படி கேட்டதுமே ரொம்ப நல்ல இருக்கிறேன் என்ற தெம்பு வந்துடும்.ரொம்ப நேரம் பழைய கதைகளை பேசி கொண்டு இருந்தோம்.

எவ்வளவு தான் மனதை கட்டு படுத்தினால் நினைவுகள் டாடிய சுற்றி யே தான் இருக்கு.
ஒரு வேலையும் ஓட மாட்டுங்கிறது.

நான் சோகமா இருக்கும் போது போன் செய்தால் கீழே உள்ள வசனத்தை நினைவு கூறுவார்கள். இப்போதைக்கு என் டாடி சொன்ன இந்த துஆவை ஓதிக்கொள்கிறேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
////லா -யுகல்லி ஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா உஸ் அஹா லஹா மாகஸபத், வ அலைஹா மக்தஸபத், ரப்பனா லா துஆகிதனா இந்நஸீனா, அவ் அக்தஃனா , ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹூ அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாகதலனா பிஹி, வ வஃ ஃபு அன்னா, வஃக் ஃபிர்லனா, வர் ஹம்னா அன் த்த மவ்லானா ஃப்ன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்..///

///அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்பந்திப்பதில்லை. அது தேடிக்கொண்ட நன்மை அதற்கே-( பயனளிக்கும் அவ்வாறே) அது தேடிக்கொண்ட தீமை அதற்கே ( கேடு விளைவிக்கும்)


எங்கள் இறைவனே! நாங்கள் ( எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும், அல்லது ( அதில்) தவறிழைத்து விட்டாலும், ( அதைப் பற்றி) நீ எங்களை (க் குற்றம் ) பிடிககதே!
 எங்கள் இறைவனே ! நீ, எங்கள் மீது ( கடினமான கட்டளைகலை விதித்துப் ) பளுவான சுவையைச் சுமத்திவிடாதே!..
எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது ( கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு - ( சுமத்தாதே !)
எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத கஷ்டங்களை எங்கள் மீதுசுமத்திவிடாதே!எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக!
எங்களை பொறுப்பாயாக!எங்கள் மீது கருனை புரிவாயாக! நீ தான் எங்கள் இரட்சகன்! ஆகவே. ( என்னை) நிராகரிகும் ஜனங்கள் மீது (வெற்றி பெற ) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று பிராத்திப்பீர்களாக!)
 குர் ஆன் , 2: 286/////

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
”அன்று நீ “ அஸ்மாவின் இடுகையையும், சகோதரர ஆஷிக்கின்  வல்லையில், ஹாஜாவின் இடுகை // மரணம் முதல் மண்ணறை வரை என்ற இடுகையையும்  படித்தேன் என்னை நான் தேற்றி கொண்டேன்/இருந்தாலும் எங்களால் முடியல .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நீங்கள் முன் சென்றவர்களாக இருக்கீறீர்கள் நாங்கள் பின்வருகிறவர்களாக இருக்கிறோம், ஆண்டவன் அனை வரின் பாவத்தையும் மன்னிப்பானாக ஆமீன்!


இதெல்லாம் படித்து தேற்றினாலும் மறுபடி நினைவெல்லாம் வாப்பாவையே தான் என்னுது,

.உலகில் உள்ள அனைத்து தந்தைமார்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்



Thursday, May 26, 2011

பெருந்துயரஅறிவிப்பு

அன்பின் சகோதர சகோதரிகளே...


அனைவரின் அன்புக்கும் ஆளான நம் சகோ.ஜலீலா அக்காவின் தந்தையார் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு இருந்தனர். இந்த ஒரு வாரமாகதான் சிறு முன்னேற்றம் தென்பட்டிருந்தாலும் இன்று காலை இறைவனின் நாட்டப்படி இவ்வுலகை நீங்கிவிட்டார்கள்.  தந்தைக்காகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்காகவும், தந்தையை மிகவும் விரும்பிய, கடந்த சில நாட்களாகவே இதன்பொருட்டு மன உளைச்சலில் இருந்த சகோ. ஜலீலா அக்காவின் மனம் சாந்தி அடைவதற்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம்.


”இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்”

இறைவன் அன்னாரது சிறு பிழைகளையும், பெரும் பிழைகளையும் மன்னித்து, மக்ஃபிரத் அளித்து, குறையாத அவன் கருணையை பொழிந்து அன்னாரின் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்

அவரின் கப்ரில் விசாலத்தையும், வெளிச்சத்தையும் தந்தருள்வானாக. ஆமீன்

கப்ரின் வேதனையிலிருந்தும், அதன் நெருக்கத்திலிருந்தும் பாதுகாப்பளிப்பானாக. கேள்வி கணக்குகளை எளிதாக்குவானாக. ஆமீன்

மறுமை நாள் வரையிலும், தீர்ப்பு கூறும் அந்நாளிலும், அதன் பின்பும் எல்லா வேதனைகளிலிருந்தும் கடினங்களிலிருந்தும் காப்பாற்றி அருள்வானாக. ஆமீன்

அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் ஷிஃபா’அத்தை பெற்றுத் தருவானாக. ஆமீன்

மறுமை வாழ்வில் ஜன்னத்தையே பரிசாக தந்து ஜஹன்னத்திலிருந்து விடுதலை அளித்து ரட்சிப்பானாக. ஆமீன்

எங்கள் ரப்பே அன்னாருக்காக எங்களின் து’ஆவை ஏற்றுக் கொள்வாயாக. அன்னார் நோய்வாய்ப்பட்டு வருந்திய நொடிகளனைத்தையும் அன்னாரது மறுமையில் அமல்களாக மாற்றி ஷி’ஃபா தந்தருள்வாயாக. ஆமீன்

எங்களைப் படைத்து பாதுகாப்பவனே அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கும், மற்றும் அவரது உறவினர்களுக்கும் அமைதியையும், உன் கருணையையும் தந்தருள்வாயாக. ஆமீன்

ஜலீலா அக்காவின் மனதிற்கு தைரியத்தையும் இந்த துயரத்திலிருந்து மீண்டு வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியையும் தந்தருள்வாயாக. ஆமீன்

தூயோனே... உன்னிடத்திலிருந்தே வருகிறோம். இன்னும் உன் புறமே திரும்ப உள்ளோம். துயரம் சூழ்ந்த இந்த நொடிகளில் எங்களையும், எங்கள் ஈமானையும் பாதுகாப்பாயாக. ஆமீன், ஆமீன், யா ரப்பில் ஆலமீன்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.

Tuesday, May 24, 2011

மைதா மற்றும் கடலைமாவு சுழியன்





இங்கு துபாயில் உள்ள டீ கடைகளில் இந்த சுழியன் , இனிப்பு பனானா பஜ்ஜி, பகோடா போடுவார்கள். இந்த சுழியனை முதல் முதல் பஜார் ஏரியாவில் ஒரு வீட்டுக்கு சென்ற போது கீழே டீகடையில்  ஆர்டர் செய்து கொடுத்தாங்க பாசிப்பயிறில் இனிப்பு சுண்டல் , கார சுண்டல் மற்றும் பல அயிட்டங்கள் செய்தாலும் இந்த சுழியன் ரொம்ப  பிடித்து அதில் இருந்து நானும் என் இழ்டத்துக்கு கலவைகள் போட்டு அடிக்கடி செய்வது .நோன்பு காலங்களிலும் செய்வேன். இது இரண்டுவகையான சுழியன் செய்து இருக்கிறேன் சுவைத்து மகிழுங்கள். 

Sunday, May 22, 2011

அவித்த முட்டை புளி குழம்பு - boiled egg puli kuzampu



//வெஜ்டேரியன்கள் இதில் ஏதேனும் காய் சேர்த்து செய்து கொள்ளலாம் , சேமங்கிழங்கு, கருனை கிழங்கு,

Friday, May 20, 2011

கொள்ளு ஓட்ஸ் பார்லி குழிபணியாரம் - horse gram oats kuzipaniyaram


தேவையாவை

கொள்ளு - அரை கப்
ஓட்ஸ் - கால் கப்

Wednesday, May 18, 2011

சாசேஜ் சாண்ட்விச் - Sasuage sandwich


சாசேஜ் என்றால் பிள்ளைகளுக்கு கொள்ளை பிரியம்.
அதை அபப்டியே சமைக்காமல் கொஞ்சம் குக்கரில் வேகவைத்து பொரித்து கொடுத்தால் நல்ல இருக்கும்.


Monday, May 16, 2011

சென்னை ஃப்ளாசாவின் புதிய புர்கா மாடல்கள்

சென்னை ஃப்ளாசாவின் விபரம் அறிய இங்கு சென்று பார்க்கவும்.