Saturday, May 18, 2013

பயனுள்ள இரவல் டிப்ஸ்கள் - Useful Tips Tips




நான் இங்கு ஏகப்பட்ட டிப்ஸ்களை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
யார்வீட்டுக்கு போனாலும் என்னை விட சின்னவர்களாக இருந்தாலும் அவர்கள் சொல்லும் டிப்ஸை மிகவும் விரும்பி கேட்டு கொள்வது.

அப்படி கேட்டதில் சில டிப்ஸ்கள் உங்களுக்காக ..

ஜுபைதா - துபாய்

1. பிரியாணிக்கு சாதம் வடிக்கும் போது சிலருக்கு பதமாக முக்கால் பதத்தில் வடிக்க வராது. அதற்கு ரைஸ் குக்கரில் ஒன்றுக்கு ஒன்று தண்ணீர் வைத்து சமைத்து பிரியாணி கறி தாளித்து விட்டு இந்த சாதம் சேர்த்து தம்மில் விட்டால் பிரியாணி ஒன்னு ஒன்னாக உதிரியாக நீட்டு நீட்டாவரும்.
இது தண்ணீர் கொதிக்க வைத்து வடித்து தம் போட தெரியாதவர்களுக்கு உதவும்.



அஜ்ஜா - சென்னை


2. தொடர் இருமல் ,  தொண்டை வலிக்கு வடித்த சுடு கஞ்சியில் சிறிது மிளகு தூள் சேர்த்து குடித்தால் தொண்டை இதம் பெறும். 



சித்திக்கா - அஜ்மான் , யு. ஏ.யி.


3. புறை யேறி புறையேறி இருமல் வருவதற்கு எல்லோரும் கிராம்பை வாயில் அடக்கி கொள்வார்கள், அது கரைந்து இன்னும் தொண்டைக்குள் போய் ரொம்ப பாடுபடுத்தும், அதுவும் நாளெல்லாம் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஒன்றும் தெரியாது, பகலில் இருமல் இருந்தால் அந்த அளவுக்கு உங்களுக்கு சிரமமாக இருக்காது. இரவு தூங்க போகும் போது தான்  அதிக இருமல் வரும். அதற்கு 
முன்று மிளகு கிஸ்மிஸ் பழம் 7 சேர்த்து வாயில் வைத்து மிட்டாய் போல் ரொம்ப நேரம் வைத்திருந்து சுவைத்து வாயில் அடக்கி கொண்டு படுத்தாலும் அதன் சாறை முழுங்கினாலும் நிம்மதியாக தூங்கலாம்.
இது ஏற்கனவே இவங்க டிப்ஸும் என் டிப்ஸும் சேர்த்து தொண்டை கரகரப்புன்னு என்று பதிவாக போட்டுள்ளேன்.

தளிகா - அபுதாபி (அறுசுவை தோழி)

4.மீன் பொரிக்கும் போது சில நேரம் பொரிக்கும் தவ்வாவில் போய் ஓட்டி கொள்ளும். அதற்கு கருவேப்பிலையை நீளமான ஆர்க்கோடு எண்ணையில் வைத்து விட்டு அதன் மேல் மசாலா தடவிய மீனை வைத்து பொரித்தால் ஒட்டவும் செய்யாது, மனமும் அபாரமாக இருக்கும்.


இது என்னுடைய டிப்ஸ் 

நான் கருவேப்பிலையை பொடியாக அரிந்தே சேர்த்து மசலாவுடன் பிரட்டி கொள்வது, மனம் அருமையாக இருக்கும்.

மவுலானா - துபாய்
மீனுக்கு மசாலா போடும் போது அதில் எண்ணை சிறிது கலந்து தடவி பொரித்தால் கூட பேனில் ஒட்டாது
(பார்பிகியு செய்யும் போது மீனில் மசாலாவுடன் ஆலிவ் ஆயிலையும் சேர்த்து தான் பிரட்டி வைப்போம்.)

இது என் மாமியார் சொன்னது.
குழந்தைகளுக்கு தொடர் பேதி மற்றும் அதனால் சோர்வடைந்து தெம்பில்லாமல் இருந்தால்
உப்பு சர்க்கரை சேர்த்து தண்ணீர் அதிகமாக கொடுக்கனும். ஆனால் குழந்தைகள் அதை  விரும்ப மாட்டார்கள். அதற்கு டேங்க் லெமன் அல்லது ஆரஞ்ச் ஒரு டம்ளர் கரைத்து அதில் குளுக்கோஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொடுக்கலாம்.8 மாத குழந்தைகள் முதல் கொண்டு இதை கொடுக்கலாம். பாட்டிலில் ஊற்றியும் கொடுக்கலாம்.
எலலா வயதினரும் இப்படி குடிக்கலாம்.


 
எப்போதும் நான் கொஞ்சம் கார்ன் மாவு சேர்த்து பொரிப்பேன் ஒட்டாது, முட்டை சேர்த்து பொரித்தாலும் ஒட்டாமல் வரும்
 
மீனை ஒட்டாமல் பொரிக்க உங்கள் யாருக்கும்  ஏதும் ஐடியா இருந்தால் சொல்லலாம்

Monday, May 13, 2013

என் பொருள் தான் எனக்கு மட்டும் தான்








என் பொருள் தான் எனக்கு மட்டும் தான் தொடர் பதிவுக்கு ஆசியா சில தோழ தோழியர்களை அழைத்து இருந்தார்கள் அதில் என்னையும் அழைத்து இருந்தார்கள், எல்லாருமே இந்த பதிவு எழுதி மறந்தும் போய் இருப்பார்கள்.

என்னை பொருத்தவரை நான் பயன்படுத்தும் எல்லா பொருட்களும் என் பொருள் தான் எனக்கு மட்டும் தான்.

இப்படி லிஸ்டில் நிறைய இருக்கு.ஆனால் போட்டோக்கள் இல்லாததால் நானும் இங்கு பதிவு போடாமல் தள்ளி கொண்டே போய்விட்டேன்.



1. சமையல் டைரி 
2. குர் ஆன் கல்யாணத்தில் என் தாய் மாமா எனக்கு கொடுத்தது.
3. நான் சேகரித்த சின்ன சின்ன துஆ  புத்தகங்கள்
3. வித விதமான டிரஸுக்கு மேட்சான வளையல்கள்
4.மோதிரம்
5.கம்மல்

இன்னும் லிஸ்ட் நிறைய இருக்கு ..


1. சமையல் டைரி: முதல் முதல் ஒன்றுமே சமைக்க தெரியாத போது அம்மா கிட்ட கேட்டு , பாட்டி கிட்ட கேட்டு பாரம்பரிய குறிப்புகளை எல்லாம் எழுதி வைப்பேன். அடுத்து டிப்ஸ்கள் அப்பவே ரொம்ப வயதானவர்களை பார்த்தால் உடனே டிப்ஸ் கேட்டு எழுதி வைத்து கொள்வேன்.
இந்த டிப்ஸ்கள் என்ககு ரொம்பவே உதவியது,. இங்கு வ்லை தளங்களில் போட்டு நிறைய பேர் பயனடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.இந்த டிப்ஸ்கள் நான் 25 வருடம் முன் அவர்களிடம் கேட்டது, அவர்க்ள் எனக்கு சொல்லும் போது அவர்கள் வயது எப்படியும் 50, 55 இருக்கும். அப்ப இங்குள்ள என் டிப்ஸ 75 வருடமுன் உள்ள மிக அருமையான் டிப்ஸ்கள்.சில டிப்ஸ்கள் என் சொந்த அனுபவத்தில் எழுதி இருக்கிறேன்.
இன்னும் பல டிப்ஸ்கள் இங்கு நான் பகிரவில்லை. முடிந்த போது  பகிர்கிறேன்.டைரி ஊரில் இருந்து வரும் பிறகு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் வரவில்லை. 

ஆரம்பத்தில் தேவை பட்டது இப்ப கண் அளவு கை அளவில் என் இஷ்டத்துக்கு போடுவது, நிறைய பேருக்கு செய்வதாக இருந்தால் தான் சரியான அளவை அந்த டைரியில் பார்ப்பேன், இபப்  அந்த டைரி என் தங்கை மகளுக்கு கொடுத்து  இருக்கிறேன், அளவுகளை எழுதி விட்டு கொடுக்க சொன்னேன்.


2.குர் ஆன்.:கல்யாணத்தில் தாய் மாமா வாங்கி கொடுத்த குர் ஆன் அதில் ஓதி பழகிய பின் அதில் ஓதினால் தான் நல்ல திருப்தியாக இருக்கும்.

அந்த குர் ஆனில் -  என் கிரான்மா 1986  சில முக்கியமான சூராக்கள் அவங்கள் கையால் குறித்து கொடுத்தது 





1985 - என் கிரான்மா  இரவில் ஓதவேண்டியவை. என்று எனக்கு சொல்லி கொடுத்தவை.


இது 1984 ரில் ரமலான் அட்ட்டையில் வந்த துஆ.










சுட்டியை சொடிகி பார்க்கவும்.

இது என் பெரிமா பையன் ஏரோ ட்ராவல்ஸில் வேலைக்கு சேர்ந்த போது அங்கு ஓவ்வொரு வருடமும் பெருநாளுக்கு துஆ புக் போடுவார்கள் அதில் இருந்து முன்பு எடுத்து வைத்தது 




3. துஆ புத்தகங்கள்: சின்ன வயதில் இருந்து எங்கு எப்ப து ஆ புக் கிடைத்தாலும் அதை எடுத்து வைத்துகொள்வேன்.அதில் கிடைத்த ஒருசின்ன புக் தான் முத்தான துஆக்கள்
லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.




அந்த பெயரையே பிலாக்குகும் வைத்து விட்டேன்.

எப்ப எங்கு போனாலும் ஹாண்ட் பேகில் சின்ன யாஸின் சூரா (அ) மன் ஜில் புக், சிறிய துஆ புக் இருக்கும். அப்படி தான் ஊரில் பல் டாக்டர் கிட்ட போன போது கூட என் தங்கை துணைக்கு வந்ந்தாள். எனக்கு பல் பரிசோதனை நடந்து முடிய 45 நிமிஷம் ஆச்சு அது வரை என் ஹாண்ட் பேக்கை  வைத்திருந்த என் தங்கை  அதில் இருந்து நான் வைத்திருந்த துஆ புக் எடுத்து ஓதி கொண்டு இருந்தால் , நான் பல் பரிசோதனை முடிந்து வரும் போது அப்பா நீ பேக்கில் இந்த புத்தகங்கள் வைத்திருந்தது ரொம்ப நல்லதா போச்சு நானும் எல்லாவற்றையும் ஓதி முடிச்சேன். உன்னை போல் தான் பேக் கில் இது போல் துஆ புத்தகங்கள் வைத்து கொள்ளவேண்டும் என்று சொன்னாள்.

குர் ஆன் முன்புபோகும் போது வரும் போது எடுத்து போய் வந்து கிழிந்தே போய்விட்டது  ஒரு இட்மா இருக்கட்டும் என்று இங்கே நான் எங்கு இருக்கிறேனோ அங்கேயே வைத்து கொள்வ்து.

பீரோவில் துணி வைக்கிறேனோ இல்லையோ முதலில் ஒரு அடுக்கு துஆ புத்தகங்களை வைத்து கொள்வேன்.


என்னை போலவே  என் பையனும் காலேஜ் படிக்க போகும் போது சில துஆக்கள் பிரிட்ன் எடுத்து கொடுத்தேன், எங்க டாடி அவனுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்துள்ள சிறிய கு ஆன் வாங்கி கொடுத்தார்கள். அதை எல்லாம் அவர் எந்த ஊருக்கு கடந்த 4 வருடமாக போனாலும் ஒரு ஸ்கூல் பேக்கில் வைத்து என்னேரேமும் மாட்டி கொண்டி தான் செல்கிறார்.



4. வளையல்:  பள்ளி செல்லும் காலம முதல் டிரஸுக்கு மேட்சாக வளையல் கண்டிப்பாக இருக்கனும். அது யாருக்கும் கொடுக்க மாட்டேன், எல்லாம் கண்ணாடி வளையல். ரொம்ப வருடம் வரை பத்திரமாக பாதுகாத்து வந்தேன், இப்ப தான் 3 வருடம் முன் எல்லா பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்தேன்.
சில வளையலகள் இங்கும் வைத்துள்ளேன்.இது படங்கள் பிறகு சேர்க்கிறேன்.








4.மோதிரம்: என் கணவர் முதல் முதல் என்னை பார்த்த போது போட்ட மோதிரம் கல்யாணத்தில் எங்க டாடி எனக்கு  போட்ட அந்த கம்மலுக்கு மேட்சாகவே அமைந்து விட்டது.சிவப்பு வெள்ளை கல் மோதிரம்.



5.கம்மல்

5. கல்யாணம் ஆன புதிதில் என் கணவர் முதல் முதல் சவுதி போய் வந்த போது வாங்கி வந்த கம்மல்.எவ்ளோ கம்மல் இருந்தாலும் இது தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. இது அப்படியே இன்னும் என் காதில் ஊஞ்ச்ல் ஆடி கொண்டு இருக்கிறது, இப்படி வருசையாக சொல்லனும் என்றால் சீப்பு, எண்ணை, டவல் , சோப்பு எல்லாமே என் பொருள் எனக்கு மட்டும் தான்..... 
மற்றவர்களுக்கு ஏதாவது கேட்டால் உடனே கொடுத்து விடுவேன், சாப்பாடு கூட பசி என்றால் எனக்கு ஏதும் வைத்துகொள்ள மாட்டேன், ஆனால் நான் பயன் படுத்தும் பொருட்கள் அது எனக்கு மட்டும் தான், பச்சை டைரி எல்லாம் எழுதி விட்டு எனக்கு திருப்பி கொடுத்து விடனும் என்று சொல்லி இருக்கிறேன்.

அன்னையர் தினத்துக்கு எனக்கு தெரிந்த சின்ன கவிதையை எனக்கு தோன்றியதை என் அம்மாவுக்கு போன் செய்து படித்து காண்பித்தேன். நீ சொல்ல சொல்ல ரொமப் நல்ல இருக்கு என்றார்கள்.பிறகு இங்கு பகிர்கின்றேன்.



Wednesday, May 8, 2013

பரிசு மழை


Agar Agar Halwa with Sesame -  வெள்ளை எள் அகர் அகர் ஹல்வா.



இது புதுசா முயற்சி செய்த ஹல்வா, அகர் அகர் காண்டஸ்ட் காக செய்தது போஸ்ட் பண்ண முடியாம போய்விட்டது.

இது வரை எனக்கு கிடைத்த பரிசுகள்

நான் ஆங்கில பிளாக்கில் வைத்து இருப்பது எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இங்குள்ள குறிப்புகள் தான் சிலது போட்டு கொண்டு இருக்கிறேன், சில புது ரெசிபிகள் போட்டு கொண்டு இருக்கிறேன்.
ஆகையால் தான் அந்த லின்க் இங்கு கொடுக்கவிலலை.


இது என் ஆங்கில வலைபூ குக்புக்ஜலீலா. விருப்பம் உள்ளவர்கள் பாலோவராக ஆட் ஆகி கொள்ளலாம்.
நிறைய பேருக்கு சமையல் அட்டகாசம் பதிவு டேஷ் போர்டில் வராததால் இங்கு பதிவு போட்டது தெரியவில்லை என்கிறார்கள். குக் புக் ஜலீலாவில் ஆட் ஆகி கொண்டால் அங்கு இந்த லின்க் கொடுத்து வைத்துள்ளேன். அதன் மூலம் என்பதிவுகளை கண்டு கொள்ளலாம்.குறிப்பாக நம்ம பூஸாருக்காகவும், தனபாலன் சாருக்கும்.
http://cookbookjaleela.blogspot.in



இது என் பேஸ்புக் பேஜ். இதிலும் விருப்பம் உள்ளவர்கள் லைக்  கொடுங்கள்.
இப்ப எல்லாருக்கும் பிளாக்கை விட பேஸ் புக்கில் கமெண்ட் போடுவது தான் சுலபமாக இருக்கிறது.  முடிந்த போது எல்லா பதிவுகளையும் பதிவுகளை இணைக்கிறேன்.சமையல் குறிப்பை பற்றின சந்தேகங்கள் ஏதும் இருந்தால் அங்கே கேட்கலாம்.



இதுவரை பரிசு வாங்கியது பற்றி இங்கு தெரிவிக்கவில்லை, எல்லா லின்கும் எடுத்து போட முடியாமல் அடுத்த அடுத்த போஸ்ட் என்று தள்ளி கொண்டே போய் விட்டது.


கிழே உள்ள பரிசுகள் எல்லாம் ஆங்கில பிளாக்கில் எனக்கு கிடைத்தது.





May 2013


1. I m happy to inform everyone in that I have won as 

second winner in Hyderabadi Cuisine Roha's Giveaway  for 

her First Blog Anniversary.  Check here for  details.

Thank you very much Roha.




free glitter text and family website at FamilyLobby.com free glitter text and family website at FamilyLobby.com



இந்த அவார்டு ஹைதராபாத் சமையல் குறிப்புகள் வைத்துள்ள வலை தோழி ரோஹா கான்.
பிளாக்கில் நடத்திய ஈவண்டில் கிடைத்தது.


********************************



March 2013




ஜபாங் & கூப்போநேஷன் ஈவண்ட், வலை தோழி பாரதி நடத்திய ஸ்பைசி டேஸ்டி ஈவண்டுக்கு இரண்டு குறிப்புகள் இணைத்ததில் கிடைத்த பரிசு தொகை - ரூபாய் 1500/-



Feb - 2013 I won First Prize form Spicy Chilly & cuponation  Jabong From Barathy, for My Auththur Milaku kaRi   ஆத்தூர் மிளகு கறி & Healthy Adai.
Thank you very much Barathy.








Indiaagar -  Marine Chemical - The Agar Agar Specialist Hosted By Food Corner , Anamika
I have been Awarded as Fifth Winner in Marine Chemical - The Agar Agar Recipe Contest - During December 2012 to February 2013. -  For My Indian Flag Agar Agar


Thank you Anamika.

 
******************
 
December 2012

இந்தியா அகர் , மெரின் கெமிக்கல்ஸ் நடத்திய அகர் அகர் ரெசிபி காண்டெஸ்டில் ட்ரைகலர் அகர் அகர் க்கு 5 வது பரிசு கிடைத்துள்ளது.




I received Tarla Dalal Book for Gayathri's Walk Through Memory Lane ,hosted by Nithu , for My  Plain Flour Onion Dosa (Pancake) - December 2012
Thank you Gayathri.

இது மாதந்திர ஈவண்ட் நடத்தி கொண்டு இருக்கும் வலை தோழி காயத்ரி ஈவண்டில் கிடைத்த பரிசு.


*******************


*********************

March - 2012

போன வருடம் நேசம் மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்திய புற்று நோய் விழிப்புணர்வுக்காக  நான் எழுதிய புற்றை வெல்வோம் வறுமுன் காப்ப்போம் - பெண்களுக்காக, கட்டுரைக்கு  1000 ரூபாய் மதிப்புள்ள ஆறுதல் பரிசு, புத்தக கூப்பன் , , உடுமலை டாட் காமில் அவர்கள் கொடுக்கும் கோட்டை செலுத்தி பெற்று கொள்ள சொன்னார்கள், நான் இடையில் உடம்பு முடியாலம் இருந்த போது அவர்கள் கோட் அனுப்பியதால் நிறைய மெயில் வந்ததில் அதை கவனிக்கவில்லை, இப்ப தான் அதை பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டதே கிடைக்குமோ கிடைககாதோ என்று உடுமலை டாட் காமுக்கு ஒரு மெயில் செய்தேன், என்ன் ஆச்சரியம், உட்னே பதில் மின்னல் வேகத்தில் பறந்து வந்தது, நான் கேட்ட புத்தகங்களை அவ்ர்களே தேர்வு செய்து உடனே மெயில் அனுப்பி , எங்க கடைக்கும் அனுப்பி வைத்து விட்டார்கள்.

உடனே ஆவன செய்த மகேஸ்வரி மேடத்துக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
********************************


March  2013
 
என் இனிய இல்லம் பாயிஜா நடத்தி Passion on Plate ஈவண்டிலும் பரிசு கிடைத்துள்ளது.




 
*************
தினகரனிலும் பிளாக்கர்களை ஊக்குவிக்கும் முறையில் சில பிளாக்கர்களை அறிமுகப்படுத்து கிறார்கள் அதில் இணையத்தை கலக்கும் இலக்கிய பெண்கள் வரிசையில் என்னையும் இணைத்துள்ளார்கள், ரொம்ப சந்தோஷம்.






உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி. நீங்கள் அனைவரும்  கமெண்ட் மூலம் கொடுத்த ஊக்கம் தான் என்னை இந்த அளவுக்கு குறிப்புகள் போடவைத்தது. அனைவருக்கும் மிக்க நன்றி.


Chennai Plaza



Saturday, May 4, 2013

பிரான் மஞ்சூரியன் கிரேவி - Prawn Manchurian Gravy




இறாலில் கூட்டு மற்றும் சால்னா பிரியாணி செய்து அலுத்து போனால் இது போல் மஞ் சூரியன் கிரேவி போல் செய்தால் இரவு வேளை சாப்பாத்தி , ரொட்டி நாண் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
ஹோட்டலில் போனால் பெருமபாலும் அநேகமாக அனைவரும் ஆர்டர் செய்வது சிக்கன் ம்ஞ்சூரியன் வெஜ் பிரியர்கள் காலிப்ளவர் மஞ்சூரியன் தான், அதே நாம வீட்டிலேயே எளிமையாக தயாரித்து விடலாம்.



பரிமாறும் அளவு : 3 Persons

பிரான் மஞ்சூரியன் கிரேவி
பிரான் (பெரியது) – கால் கிலோ
கிரேவிக்கு
எண்ணை + பட்டர் – இரண்டு மேசை கரண்டி
வெங்காயம் – ஒன்று
பூண்டு – நான்கு பல்
வெங்காய தாள் – இரண்டு ஸ்ரிக்
சோயா சாஸ் – முன்று குழி கரண்டி
கெட்சப் – இரண்டு மேசை கரண்டி
சர்க்கரை – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகாய் தூள் – அரை தேக்க்ரண்டி
கார்ன் மாவு – ஒரு மேசை கரண்டி
பிரான் பொரிக்க
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி (அ) வெள்ளைமிளகு தூள்)
உப்பு – சிறிது
மைதா – ஒரு குழிகரண்டி
கார்ன் மாவு – ஒரு மேசை கரண்டி
முட்டை – ஒன்றில் பாதி
செய்முறை
1.       பிரானை சுத்தம் செய்து அதில் பொரிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்
2.       ஊறிய பிரானை எண்ணையில் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.



3.       எண்ணை + பட்டரை காயவைத்து வெங்காயம், பூண்டு , ஸ்ப்ரிங் ஆனியனை போட்டு வதக்கவும்.
4.       அதில் சோயா சாஸ், கெட்சப், உப்பு, மிளகாய் தூள் ,சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

5.       கடைசியாக கார்ன் மாவை முக்கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க் விடவும்
6.       பொரித்து வைத்த பிரானை சேர்த்து மீண்டு கொதிக்கவிட்டு இரக்கவும்.
7.       சுவையான பிரான் மஞ்சூரியன் கிரேவி ரெடி



8.       பரோட்டா, சப்பாத்தி, தந்தூரி ரொட்டி , பிரைட் ரைஸுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.


இந்த குறிப்பு இரண்டு வருடம் முன்பே தமிழ்குடும்பம் டாட் காமில் பகிர்ந்த குறிப்பு தான்.






Saturday, April 27, 2013

மாங்காய் ராஜ்மா சாலட் (கர்பிணி பெண்களுக்கு)




டயட் செய்பவர்களுக்கு  மிக அருமையான சாலட், காலை நேரம் ஒரு பவுள் சாப்பிடலாம்.
கர்பிணி பெண்களுக்கும் சாப்பிட வாய்க்கு ருசியாக இருக்கும்.
பார்டியில் வைக்க சுலபமான சாலட் .பார்க்க கலர் ஃபுல்லாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

மாங்காய் - சிறியது ஒன்று

வேகவைத்த ராஜ்மா - 2 மேசை கரண்டி


கலக்க வேண்டிய சாஸ் வகைகள்:

லெமன்,தேன், மிளகு தூள், உப்பு - தலா கால் தேக்கரண்டி







செய்முறை: 
மாங்காயை 2” நீளத்துக்கு ஸ்லைஸ்  செய்யவும்.
அத்துடன் ராஜ்மாவை சேர்க்கவும்.

ட்ரெஸ்ஸிங் கலவையை நன்கு கலக்கி மாங்காய் ராஜ்மா கலவையுடன் சேர்க்கவும்.
குளிரூட்டியில் அரை மணி நேரம் குளிரவைத்து சாப்பிடவும்.



ராஜ்மா வேக வைக்கும் முறை: ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ராஜ்மாவை முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம்  ஊறவைக்கவும்.
ஊறியதும் குக்கரில் சிறிது உப்பு சேர்த்து ஒரிரு விசில் வைத்து இரக்கவும்.
வெந்ததை வடிக்கட்டி சாலட்க்கு பயன் படுத்தவும்.

வெளிநாடுகளில் டின் களில் கிடைக்கின்றன பேச்சுலர்களுக்கும் இன்னும் சுலபம், இப்போது மாங்காய் சீசன் என்பதால் அடிக்கடி வாங்கி இப்படி செய்து சாப்பிடலாம்.
இதே போல் கொண்டைகடலை வேர்கடலை போன்றவை வேகவைத்து அதனுடன் மாங்காய் சேர்த்து செய்தும் சாப்பிடலாம்.

. அவசர பசிக்கு உடனடி ஹெல்தி சாலட் . நல்லதொரு பில்லிங்காக இருக்கும்.

ராஜ்மா அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
இது என்னுடைய ஐடியா.ராஜ்மா மசாலாசெய்து சாண்ட்விச் செய்தேன், அப்படியே மீதமுள்ள ராஜ்மாவில் இபப்டி செய்தது.
எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது, உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.




linking to virunthu unna vaangka viji's show your style to world and soul food show & giveaway

Thursday, April 25, 2013

முக்கனி ஜூஸ் (மா பலா வாழை)












முக்கனி ஜூஸ் ( மா பலா வாழை ) முன்றும் முக்கனி இது என் கிரான்பாவிற்கு  ரொம்ப பிடித்தமான ஜூஸ் என்று என் கிரான் மா அடிக்கடிசொல்வார்கள்.
கிரான்பாவை (அம்மாவுடைய அப்பா) பார்த்தது கிடையாது. அவர்கள் ரங்கூனில் இருந்து அங்கேயே காலமாகிவிட்டார்கள்.



தேவையானவை


மாம்ப‌ழ‌ம் = ஒன்று
ப‌லா ப‌ழ‌ம் = ஐந்து
வாழைப‌ழ‌ம் = ஒன்று
பால் = முன்று ட‌ம்ள‌ர்
த‌ண்ணீர் = ஒரு ட‌ம்ள‌ர்
ஐஸ் க‌ட்டிக‌ள் = ப‌த்து
சர்க்கரை (தேவை பட்டால் சேர்த்து கொள்ளலாம்)

செய்முறை

மாம்ப‌ழ‌ம் ம‌ற்றும் ப‌லாப‌ழ‌த்தை கொட்டை இல்லாம‌ல் பொடியாக‌ அரிந்து எடுத்து கொள்ள‌வும்.வழை பழத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
பாலை காய்ச்சி ஆற‌வைக்க‌வும்.
மிக்சியில் ப‌ழ‌ங்க‌ள், பால், த‌ண்ணீர்,ஐஸ் க‌ட்டிக‌ள் அனைத்தையும் சேர்த்து ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து ஜூஸ் ட‌ம்ள‌ரில் ஊற்றி குடிக்க‌வும்.


வித்தியாச‌மான‌ காம்பினேஷ‌னில் சூப்ப‌ர் பான‌ம்.

படம் சரியாக வரவில்லை, இது நான் நான்கு வருடம்  முன்பு எடுத்தது. பழைய போஸ்ட் தான் ரீபோஸ்ட் செய்துள்ளேன்.

இங்கு துபாயில் பலாபழம் கிடைக்க  வில்லை, .டின் ஃபுட்டில் ரெடி மேட் பலா தான் கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் சுவை இருககாது. ஒரு முறை ஆசை பட்டு வாங்கிட்டு வீணாகி விட்டது.

ஊருக்கு போனால் முதல் வேலை இங்கு கிடைக்காத பழம், காய், கீரைகளை தேடி வாங்கி செய்து சாப்பிடுவோம்.

அதில் பலாபழம் தான் முதலில் வாங்கி சாப்பிடுவது.  முன்பெல்லாம் யாரிடமாவது சொல்லி விட்டு வாங்கி சாப்பிடுவேன்.
இப்ப கடை ஆரம்பித்ததில் இருந்து க்டை வாசலிலேயே பழகடைகள் கிடைக்கின்றன . தினம் சென்னை ப்ளாசா கடைக்கு போகும் போது வாங்கி கொண்டு செல்வேன்.எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவோம்.



virunthu unna vaangka viji's show your style to world

Monday, April 22, 2013

மட்டன் தக்குடி (கொழுக்கட்டை) - Mutton Kuzukkatai



இந்த மட்டன் தக்குடி இஸ்லாமிய இல்ல பல வகை சமையல் வகைகளில் இதுவும் ஒன்று
மிகவும் சத்தான டிபன் வகை.

எங்க வீட்டு கல்யாணங்களில் கல்யாணம் முடிந்து  அன்று மாலை அல்லது மறுநாள் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு பூஜோடிச்சி அனுப்பும் போது அன்று அனைவருக்கும் செய்யும் ஸ்பெஷல் டிபன் வகை. ரொம்ப அருமையாக இருக்கும்.
இது நிறைய செய்வது ரொம்ப சிரமம், இப்போது யாரும் செய்வதில்லை வேலை பாடு ஜாஸ்தி என்று , மட்டன் சேமியா, மட்டன் மக்ரூனி அதுவும் வெளியில் ஆர்டர் கொடுத்து விடுகின்றனர்.

முன்பு கல்யாண வீட்டில் நாங்கள்  அனைவரும் ஒன்று கூடி மொத்தமாக உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டே இந்த தக்குடியை நன்கு குழைத்து பிடித்து பெரிய பெரிய தாலா க்களில் வைத்து சமையனாவிடம் கொடுது அனுப்புவோம்.
அடுத்து இப்ப இரண்டு வருடம் முன் ஒரு கல்யாணத்தில் தக்குடி தான் போடனும் என்று முடிவு செய்து ஒரு வாரம் ஆள் வைத்து சமைத்தார்கள்.
அன்று தக்குடி போட்டார்கள், பூ ஜோடிப்பு எல்லாம் முடிந்தது, சமையல்காரரும் தக்குடி தம் போட்டு விட்டு வேறு வேலையாக வெளியில் போய் விட்டார். சட்டிய திறந்து தக்குடி எடுக்கிறார்கள் அது கொழுக்கட்டை பிடித்து போட்ட மாதிரி அப்படியே இருக்கு வேகவில்லை.
பிறகுதான் வந்த சமையனாவுக்கு தக்குடி போட தெரியாது, அதை பிரியாணி போல் தாளித்து தம் போட்டு விட்டு போய்விட்டார்,

தக்குடி செய்வதாக இருந்தால்  கறி தாளிச்சி தண்ணீர் அளந்து ஊற்றி  தர தரன்னு கொதிக்கும் போது ஓவ்வொரு குழக்கடைகளாக  பிடிச்சி போடனும் சிறிது நேரம் கழித்து உடையாமல் அதறகென நீட்டு கண் அகப்பை கொண்டு லேசாக கிழிருந்து மேலாக பிரட்டி விடனும், இதே போல் 10 நிமிடத்துக்கு ஒரு முறை அடி பிடிக்காமல் கிளறி விடனும்
நல்ல பழக்க பட்டவர்களுக்கு ஈசி , பதம் பார்த்து இதை செய்ய்யாவிட்டால் எல்லாம் வீணாகிடும்.

இன்னும் தெளிவாக ஸ்டெப் பை ஸ்டெப்பாக இந்த குறிப்பை பார்க்க இங்கு சென்று பார்க்கலாம்




கறி கொழுக்கட்டை (தக்குடி)
தேவையான பொருட்கள்
*************************************
வருத்த மாவு - 400 கிராம்( இரண்டு டம்ளர்)
மட்டன் - 400 கிராம்
மாவில் விறவி கொள்ள
**********************************
வெங்காயம் - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி  தழை - கால் கப்
புதினா - கால் காப்
தேங்காய் துருவியது - அரை முறி
உப்பு  - அரை தேக்கரண்டி




கறி தாளிக்க
*****************
எண்ணை  - கால் கப்
பட்டை - ஒரு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்ச மிளகாய்  - ஒன்று
கொத்து மல்லி -  சிறிது
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒன்ன்ரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முன்று தேக்கரண்டி (தேவைக்கு)


கடைசியில் கரைத்து ஊற்ற 
****************************************
வருத்த மாவு -  இரண்டு மேசை கரண்டி







செய்முறை
***************
1. முதலில் கறியை கழுவி வைக்கவும். வெங்காயம்,தக்காளியை அரிந்து வைக்கவேண்டும். மசாலா தூள் வகைகளையும் ரெடியாக வைக்கவும், புதினா, கொத்துமல்லி யை மண் போக கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
2. இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு,மாவு, மாவில் கலக்க வேண்டிய வெங்காயம்,பச்சமிளகாய்,கொத்துமல்லி,புதினாவை பைனாக சாப் பன்ணி ரெடியாக வைக்க வேண்டும்.
3.ஒரு பெரிய வயகன்ற சட்டியில் எண்ணையை காய வைத்து அதில் பட்டை,கிராம்பு,ஏலத்தை போட்டு பொரிய விட வேண்டும். பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
4.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பொட்டு நன்கு பச்ச வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
5.தக்காளி, கொத்துமல்லி, புதினா, பச்சமிளாயை போட்டு நன்கு வதக்கவும்.



6.எல்லா தூள்வகைகளையும்(உப்பு,தனியா,மஞ்சள்,மிளகாய்)போட்டு நன்கு பிரட்ட வேண்டும்.
7.ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.
8.பிறகு ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீர் ஊற்றி  கொதிக்க விட வேண்டும்.
9. மாவில் தேங்காய்,சிறிது உப்பு,கொத்துமல்லி,புதினா,வெங்காயம் நல்ல பைனா எல்லாவற்றையும் சாப் செய்து போட்டு கிளறி வைக்க வேண்டும்.கொதித்த கறி தண்ணீரிலிருந்து இரண்டு டம்ளர் மசாலா தண்ணீரும் எடுத்து கொள்ளவேண்டும். (இது மாவு கொழுக்கட்டை பிடிக்க விறவுவதற்கு)



 10. மசாலா தண்ணீரை மாவில் போட்டு பிசறி நன்கு அழுத்தி குழைத்து கொள்ள வேண்டும்.(மசாலா தண்ணீர் ஊற்றி பிடித்தால் தான் இது நல்ல டேஸ்டாக இருக்கும்)

 11.குழைத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்க வேண்டும்.
12.பிடித்த கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதித்து கொண்டிருக்கும் கறி மசாலாவில் போட வேண்டும்.
13. போட்ட தும் கரண்டியை போட்டு கிண்ட கூடாது கொழுகட்டை கரைந்து விடும்.
ஒரு தோசை கரண்டி அல்லது கட்டை கராண்டியால் லேசாக ஒன்றோடு ஒன்று ஒட்டமல் பிறட்டி விட வேண்டும்.
14.கறியும், கொழுக்கட்டையும் ஒரே நேரத்தில் வெந்துவிடும். முதலே கறி வெந்துவிட்டால்  கறிரைந்து விடும்.
15.இப்போது கரைத்து ஊற்ற வேண்டிய மவை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
 16.. லேசகாக கிளறி விட வேண்டும்.
17. கடைசியில் தம் போடும் கருவி (அ) தோசை தவாவை வைத்து பத்து நிமிடம் சிம்மில் வைத்து இரக்கவேண்டும்.

18 . சுவையான கறி தக்குடி (கொழுக்கட்டை ரெடி).






குறிப்பு
************
வறுத்த மாவு தயாரிக்கும் முறை
***********************************
மொத்தமாக 3 கிலோ பச்சரிசி (அ) சிகப்பரிசியை நன்கு களைந்து வடிகட்டி ஒரு மெல்லிய துணியில் காயவைத்து மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவேண்டும்.
இதை ( கொழுக்கட்டை, வெல்லம் உருண்டை ,வணக்கம், சுத்திரியான், தட்டு ரொட்டி ( அரிசிமாவு ரொட்டி, பத்திரி) , புட்டு, இனிப்பு கொழுக்கடை) போன்றவை செய்ய பயன்படுத்தலாம்,
திரித்த மாவை ஒரு பெரிய இரும்பு வானலியில் போட்டு நன்கு அடி பிடிக்காமல் வறுக்கனும்.
 வறுத்ததை ரவை சலிக்கும் சல்லடையில் சலித்து கொள்ளவேண்டும் .
அப்படி இல்லை என்றால் ஆட்டு தக்குடி என்பார்கள் , அதாவது அரிசியை ஊறவைத்து மிக்சியில் கெட்டியாக ஆட்டி அதனுடன் சிறிது ரெடி மேட் அரிசி மாவு கலந்து தக்குடியாகவும் செய்யலாம்.

இதைராகி மற்றும்  ரவையிலும் செய்யலாம். ரவையை நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.
எலும்புடன்  உள்ள மட்டன் போட்டால் போட்டால் தான் சுவை அதிகமாக இருக்கும்.
கறிக்கு பதில் சிக்கன், இறால், வெஜிடேபுள்ஸ் சேர்த்தும் செய்யலாம்.