Sunday, April 5, 2009

கடுஞ்சளி இருமலுக்கு

1. மிளகு பால்

அரை தேக்கரண்டி மிளகை லேசாக வருத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு , பனங்கற்கண்டு சேர்த்து கடைசியில் ஒரு சிட்டிக்கை மஞ்சள் பொடி சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.

2. சாப்ரான் பால்

ஒரு டம்ளர் பாலை நன்கு காய்ச்சி அதில் ஒரு மேசை கரண்டி பால் எடுத்து நான்கு இதழ் சாப்ரன் (குங்கும பூ) சேர்த்து கரைத்து பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.
இந்த சாப்ரான் பால் குடித்தால் காதுகிட்ட அடைந்து கிடக்கும் சளிக்கூட கரைந்து விடும்.

3. அக்கரா எல்லாத்தையும் விட ரொம்ப நல்ல மருந்து.

அக்கரா பொடியை தேனில் குழத்து சாப்பிடலாம், இஞ்சி சாறில் சேர்த்தும் குடிக்கலாம்.

4. காய்ச்சி ஆறிய வெண்ணீர் அல்லது வெது வெதுப்பான வெண்ணீர் குடிக்கலாம்

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா