
இந்த தொடர் பதிவுக்கு அழைத்த நீரோடை மலிக்காவிற்கு நன்றி.
தொடர் பதிவுன்னு போட்டு நிறைய நிபந்தனைகளை வேறு போட்டு விட்டார்கள், எல்லோரும் பல பிரபல சாதனை பெண்களை சொல்லி பதிவு போட்டு இருக்கிறார்கள்.ஆனால் கூலி வேலை செய்பவர்களை பற்றி சில பேர் தான் போட்டுள்ளார்கள். அவர்களுடைய உழைப்பும் எல்லோருக்கும் தெரியனும். அதான் இப்படி அவர்களை பற்றி போட்டுள்ளேன்
நிபந்தனைகள் :-
1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...

1.லதா மங்கேஷ்கர் இந்தியாவின் மிகச்சிறந்த பாடகி என்ன குரல் வளம்.இவர்களுடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான்
லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar, பி. செப்டெம்பர் 28, 1929) இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர்.இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

2. விமான பணி பெண்கள் என்ன ஒரு கனிவுடன் இன்முகத்துடன் சேவை செய்கிறார்கள். அவர்கள் சீருடையே ஒரு தனி அழகு தான்.

3.செவிலியர்கள், இவர்களுக்கு ரொம்பவே பொறுமை அதிகம், அதிலும் இந்த பிலிப்பைனி நர்ஸுகள் எல்லோரும் ஒரே சைஸ், என்ன ஒரு இனிமையான பேச்சு, அவர்களுக்கு கோபம் வந்தே பார்த்ததில்லை, எரிச்சல் படாமல் நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் விதம் எல்லாமே சூப்பர்.
அதுவும் ஊசி போட போகிறவர்கள் அவர்கள் தலைமுடியின் வாசத்திலேயே இன்னும் இரண்டு ஊசி போட்ட பரவாயில்லையேன்னு நினைக்க வைக்கும் ரங்கமணிகளை... ஹி ஹி

4.வீடு கட்டும் போது கட்டுமானத்தில் முக்கியமாக சித்தாள் கண்டிப்பாக உண்டு. இந்தியாவில் எல்லா இடங்களில் சித்தாள்களை வைத்து தான் வேலை நடக்கிறது. கணவனால் கைவிடப்பட்ட படிப்பறிவில்லாத நிறைய பெண்களை இந்த வேலையில் பார்க்கலாம்.அதே போல் தமிழ் சினிமாவிலும் (ரஜினி,சத்யராஜ்,தியாகரஜன்) எல்லோருக்கும் ஒரு பிளாஷ் பேக் கதை ஓடும் பார்த்தா அம்மா ஒரு சித்தாளாக தான் இருப்பாள்.

5.இந்திரா காந்தி
இந்திரா காந்தி, சோனியா காந்தி எல்லோரும் இவர்களை பற்றி சொல்லி இருந்தாலும், எனக்கும் இவர்களை ரொம்ப பிடிக்கும்.
இந்திரா காந்தி பாரதத்தின் முதல் பெண் பிரதமர்.இவர் நடை, உடை, பாவானை பேச்சு திறன் எல்லாமே ரொம்ப நல்ல இருக்கும்.
சமீபத்தில் அலகாபாத்தில் உள்ளா ஆனந்த பவன் அங்கு சென்ற போது அவர்கள் சிறு வயது போட்டோக்கள், கல்யாண போட்டோக்கள், மற்றும் பல போட்டோக்கள் பார்த்தேன், அனைத்தும் அவ்வளவு அற்புதம்

6. சோனியா காந்தி
சோனியா காந்தி ஒரு இத்தாலிய பெண்மணி நம் நாட்டு கலாச்சாரத்துடன் வாழ்ந்து கொண்டு சாதனை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் அங்ரேஜி என்று சிலர் ஏளனப்படுத்திய போது இரவு பகல் பாராது ஹிந்தி மொழியை விரைவில் கற்று கொண்டவர்.

7.பெண் ஆசிரியைகள் நிறைய பேருக்கு வீட்டில் இல்லத்தரசிகளுக்கு இரண்டு முன்று குழந்தைகளை சாமாளிப்பது எவ்வளவோ கழ்டமாக இருக்கு. எப்படாப்பா 3 வயதாகும் பள்ளியில் சேர்த்து விடலாம் என்று நினைப்பார்கள்.
ஆனால் ஒரு வகுப்பில் 35 பிள்ளைகள வைத்து அதுவும் கே.ஜி யிலிருந்து 3ஆம் வகுப்பு வரை சமாளிப்பது மிக கடினமே. அப்படி அவர்கள் கற்றுக்கொடுத்து , இருப்பதிலேயே டீச்சர் வேலையில் தான் வேலைகளும் மிக அதிகம். சாட், புராஜெக்ட் என்று இன்னும் பல.
8.ஔவையார் , ஔவையின் ஆத்திசூடியை யாராலும் மறக்க முடியாது.
அதே போல் நெல்லிக்கனியும் ஔவையால் தான் பிரபலமானது.
(அறம் செய விரும்பு, ஐயம் இட்டு உண், ஓதுவது ஒழியேல் இளமையில் கல் , இலவம் பஞ்சில் துயில்,வைகறைத் துயில் எழு, ஊருடன் கூடி வாழ். )
9..வீடு வீடாக பத்து பாத்திரம் தேய்க்கும்(முனிமா, ராக்கமா) பெண்கள் சோம்பல் சடவில்லாமல். காலை 6 மணியிலிருந்து இரவு 8 வரை டைம் மேனேஜ்மென்டோடு வேலை உழைத்து காசு கொண்டு வந்து என்ன புரயொஜனம் அப்படி கழ்டப்பட்டு சம்பாத்தித்து கொண்டு வந்தால் அவர்களுடைய ரிக் ஷா, மூட்டை தூக்கும் ரங்கமணிகள் சாராய கடைக்கே சரியாபோகும்.அடி உதையும் வாங்கி கொண்டு வந்து வேலை பார்ப்பார்கள். (படத்தில் உள்ளது காஸ்லி வேலைக்காரி ஹி ஹி)

10.பெண் டெயிலர்கள் ஊர் ஊராக ஏற்றுமதியாகும் பல வகையான துணிகளை தைக்கின்றனர். மிக கடின உழைப்பு. இதில் பணி புரியும் நிறைய பெண்களும் ஆதவற்றவர்கள். அவர்கள் சொந்த உழைப்பைக்கொண்டு குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்.
மலிக்கா சொல்வது போல் நமக்கு நம்மை தான் முதலில் பிடிக்கனும். எனக்கும் என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
அடுத்து இந்த பதிவ தொடர அழைப்பது
நட்புடன் ஜமால் (கற்போம் வாருங்கள்)
மேனகா சத்யா
சசிகுமார் (வந்தேமாதரம்)
தோழி விஜிமுதல் போட்டோவில் உள்ள உஷா உதுப் இந்தியாவின் பாப் பாடகி, எல்லா மொழிகளிலும் கலக்கலான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் இவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பதினொன்றாவதாக அவரையும் சொல்லி கொள்கிறேன், நிபந்தனைய மீறிட்டேனே...