Sunday, December 1, 2013

EXPO 2020 & 42nd U.A.E National Day Celebration







EXPO 2020 & 42nd U.A.E National Day Celebration 02.12.2013

 அமீரகத்தில் நேஷனல் டே கொண்ட்டாட்டமும் EXPO2020 துபாய் வெற்றி பெற்ற கொண்டாட்டமும் கோலாகலமாக பல வித விதமான
வான வேடிக்கைகளுடன் கொண்டடப்படுகிறது .

நாங்க எங்கும் வெளியில் செல்வதிலை. சரியான டிராபிக்கில் மாட்டி கொள்ளனும், ஆகையால் பொறுமையாக இங்கு டீவியிலேயே கொஞ்சநேரம் பார்த்து கொள்வோம்.

ஓவ்வொரு வருடம் National Day யின் போது என் கணவரில் ஆபிஸில் அழகிய பரிசு பொருட்கள் நல்ல பாக்கிங் உடன் வரும்.  உயர்ந்த ரக சாக்லேட் வித விதமான பொருட்கள் போன வருடம் தஸ்பி ,UAE வண்ண கொடியி, தஸ்பி, மொபைல் வைக்கும் சின்ன உல்லன் பை மற்றும் பணம் வைக்கும் சுருக்கு பை
2012







2013

இந்த வருடம் UAE வண்ண கொடி கலர்ல் செய்த அழகான பூ கூடை மற்றும் பேனா , சாக்லேட் மற்றும் இந்த குளிருக்கு இதமான ஒரு மஃப்ளர்.
இவ்வள்வு செலவு செய்து அனைவருக்கும் கொடுக்கிறார்களே என்று கேட்ட போது என் கணவர் சொன்னார் இது கைத்தொழில் செய்து பிழைக்கும் ஏழை அரபிகளுக்கு இவர்கள் செய்யும் உபகாரம் என்றார்.

 இந்த சம‌யத்தில் அவர்களிடம் வாங்கினால் அவர்களுக்கு நல்ல வியாபாரம் ஆகும் இல்லையா? அதற்காக தான் என்றார். இது நல்ல விஷியம் தானே



 Sharjah Airport

அதே போல் இங்கு எல்லா மால் களிலும் யு ஏ யி வண்ண கொடி கலரில் குடை , டீ ஷர்ட் , தலை குத்து கிளிப்புகள், பூக்கள்,சின்ன குழந்தைகளுக்கு அடுக்கு அடுக்கு கவுன் மற்றும் வாசலில் கட்டும் தோரணங்கள் எல்லாம் விற்க படுகின்றன. மக்களும் சந்தோஷமாக வாங்கி செல்கின்றனர்.





EXPO 2020 - Abdul Kader முக நூலில் பகிர்ந்தது


துபாய் என்ற ஒரு நகரம் இல்லாமல் போயிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலத்தில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அடித்தட்டு மட்டும் நடுத்தர மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் கேள்விக் குறியாகியிருந்திருக்கும்.

பல மலையாளிகளும் தமிழர்களும் துபாயின் திர்ஹம்ஸை ஊதியமாகப் பெற்று. குடிசை வீடுகளை மாடி வீடுகளாக மாற்றி இருக்கின்றனர். தாயின், தந்தையின் கனவுகளை நிறைவேற்றி இருக்கின்றனர். வறுமையிலிருந்த எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சகோதரிகளுக்கு மணமுடித்து வைத்திருக்கின்றனர்.

அமீரகம் ஆன்மீகத்தோடு நெருங்கிய தொடர்புடைய நேர்மறை அதிர்வுகள் கொண்ட பூமி...! இங்கே உழைத்து பெறும் ஒவ்வொரு திர்ஹமும் பரக்கத்தானது. சிறு ஊதியம் பெற்றாலும் அவனால் எல்லாவற்றையும் ஓரளவிற்கு அவன் சொந்த ஊரில் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து குடியமர்ந்திருக்கும் அத்தனை மக்களையும் மரியாதையுடனும், அன்புடனும் பாரபட்சமின்றி நடத்தும் அமீரகத்தின் அன்பு மிகக் கம்பீரமானது! பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் கொடுக்கும் முன்னுரிமையை, மரியாதையை இந்த உலகத்தின் இன்ன பிற நாடுகள் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும்....!

இதோ கடந்த சிலமாதங்களாக ஒட்டு மொத்த அமீரகத்தின் அத்தனை குடிமக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த எக்ஸ்போ 2020ல் துபாய் வென்றிருக்கிறது. அறிவால் இணைவோம் புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம் (Connecting minds creating the future) என்ற கருத்தாக்கத்தோடு களத்தில் நின்ற துபாயின் வெற்றி திடமான தொலை நோக்குப் பார்வை கொண்ட தெளிவான தலைமைத்துவத்தின் வெற்றி!

ஏற்கெனவே அசுரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் துபாய் இன்னும் வேகமாக இயங்கப் போகிறது. அந்த பிரம்மாண்ட உழைப்பு உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகளால் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்க்கை வளம் பெறப் போகிறது என்பது உறுதி....!

@
தேவா சுப்பையா


 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/


Wednesday, November 27, 2013

பிரட் ஊத்தாப்பம் - Bread Uththappam




Bread uththaappam

தேவையானவை

தோசை மாவு ஒரு கப்

ப்ரெட் ஸ்லைஸ்  ‍ 6
பொடியாக அரிந்த வெங்காயம் ‍ 2
பொடியாக அரிந்த பச்ச மிளகாய் ‍ 2
கருவேப்பிலை ‍ சிறிது
எணணை + நெய் (அ) பட்டர் சுட தேவையான அளவு


செய்முறை

தோசைமாவில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சமிளகாய், கருவேப்பிலையை கலக்கவும்.

தோசை தவ்வாவை காயவைத்து எண்ணை + பட்டர் ஊற்றிதோசை மாவில்  ப்ரட் ஸ்லைஸ்களை இருபுறமும்  தோய்த்து சுட்டெடுக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் ப்ரட் ஊத்தாப்பம் ரெடி

தோசை மாவில் தோய்க்க வரவில்லை என்றால் ப்ரட்டை தவ்வாவில் வைத்து கரண்டியால் ஒரு கரண்டி அளவிற்கு அள்ளி ஊற்றலாம்.



பிரட் ஊத்தாப்பத்துடன் சாம்பார் காம்பினேஷனில் சுவை சூப்பரோ சூப்ப்ராக இருக்கும்.

Linking to Gayatri's Walk Through memory lane hosted by Sahasra

 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Friday, November 22, 2013

Latest Hijab Design


 Latest Hijab Design @ Chennai Plaza 

Latest Stone + Flower  Hijab
Model No 2402 A


Hijab Model No 482 A

 Model No 482 A


Hijab Model No: 2383


Sh 2377D Lace with Stone Hijab 

Model No Q 10


Prayer makkannaa 


Model No XH 40

Model No : 2377A


Umbrella Type Hijab /Makkanna
 Sh 2307

Sh 2333 A


Model No: N 106 


Model No Q2S

Big Hijab


Address:
Chennai Plaza
No, 277/30 Pycrofts Road,1st Floor, (opp:shoba cut piece)
(Near Marina Beach/Express Avenue/Rathna Café)
Triplicane ,
Chennai 600 005
Tel: 91 44 4556 6787



Chennai Plaza is located in the heart of the Chennai City. We sell all varieties of burkas, shawl, shela, hijab, makkanna,
electronics items like rechargeable lights, fans, fancy items like necklace sets, earrings and clips,
general items like hand bags and purses. Ladies tailoring facility and xerox facility also available. 
We deal with imported high quality products and offer them at affordable rates. 
We sell all items in Retail and Wholesale.
Interested parties  may mention their quantities. Price vary according to quantity.
Most of the items are available Ex-Stock.
CHENNAI PLAZA
No, 277/30 Pycrofts Road,1st Floor, (opp:shoba cut piece)
(Near Merina Beach/Express Avenue/Rathna Café)
Triplicane ,
Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 9176664687
Mr.Ibrahim Mob   : 91 98 43709497
Jaleelakamal           : 00971 50 5453400
Email id: chennaiplazaik@gmail.com
              feedbackjaleela@gmail.com
              kamal10182@gmail.com
 https://www.facebook.com/pag
es/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Tuesday, November 19, 2013

சிக்கன் 65 - Chicken 65

சிக்கன் 65  - 1 - Chicken 65

ஹோட்டல்களில் பெரும்பாலும் அசைவத்தில் முதலில் ஸ்டார்டர் க்கு ஆர்டர் செய்வது சிக்கன் 65 அல்லது சிக்கன் லாலிபாப். அதை எளிதாக நாமே வீட்டில் செய்யலாம்.

சிக்கன் 65 என பெயர் வர காரணம் , ஹோட்டல்களில் மெனு கார்ட் வரிசையில் இந்த சிக்கன் ஃப்ரைக்கு 65 வது இடம்.அது எல்லோருக்கும் பிடித்து போகவே சிக்கன் 65 பிரபலமாகி  உள்ளது.

தேவையான பொருட்கள்
சிக்கன் லாலி பாப் 9 துண்டுகள் or Full Chicken
பூண்டு பேஸ்ட் – 1 மேசைகரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 மேசைகரண்டி
லெமன் ஜூஸ் – 1 மேசைகரண்டி
கார்ன் ப்ளார் மாவு – 1 மேசை கரண்டி
உப்பு – ¾ தேக்கரண்டி
கலர் பொடி – ஒரு சிட்டிக்கை  (விருப்ப்பட்டால்)
எண்ணை – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

சிக்கன் லாலி பாப்பை  வினிகர் சேர்த்து ஊறவைத்து நன்கு கழு
வி எடுக்கவும்.
சிக்கன் லாலிபாப்பை குறுக்காக நான்கு கீறல்கள் போடவும்.


மேற்கண்ட அனைத்துமசாலாக்களையும் சிக்கனில் போட்டு பிறட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய சிக்கனை , ஒரு ஆழமான வாயகன்ற வானலியில் எண்ணையை சூடு படுத்தி நன்கு மொருவலாக பொரித்து எடுக்கவும்.

இது எங்க வீட்டு அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான 65, என் பையன் ஹனீஃப்க்கு லாலி பாப் சிக்கன்  ரொம்ப பிடிக்கும். வாரம் ஒரு முறை செய்தே ஆகனும். என் தம்பி இங்கு இருந்தபோதும் அடிக்கடி இந்த சிக்கன் 65 தான் செய்து கொடுப்பேன், இப்ப தம்பி தானே சமைத்து சாப்பிடுவதால் இந்த குறிப்பு அவருக்காக இங்கு போட்டுள்ளேன். இது அவருக்கு செய்ய சுலமாக இருக்கும்.
இந்த லாலிபாப்பை பிரட், சப்பாத்தி,குபூஸ், மற்றும் பிளையின் சாதம் , கட்டி பருப்புடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.



 சிக்கன் 65 – 2 - Chicken 65

 தேவையான பொருட்கள்

கோழி – 1 கிலோ
மென்மையாக அரைத்த பூண்டு – 100 கிராம்
மிளகாய் தூள் – 50 கிராம்
உப்பு தேவைக்கு
கேசரி கலர் பொடி – 2 தேக்கரண்டி
எண்ணை – கால் கிலோ (பொரித்து எடுக்க)

 செய்முறை

How to Make Easy Chicken 65

கோழி துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் அரைத்த பூண்டு, மிளகாய் தூள்,உப்பு, கேசரி பொடியை சிறிது தண்ணீரில் கலக்கி சேர்க்கவும். நன்கு மசாலா எல்லா துண்டுகளிலும் சேரும் படி தடவி, 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு ஒரு வாயகன்ற வானலியில் எண்ணை சூடு படுத்தி தீயின் தனலை மிதமாக வைத்து வானலியில் கொள்ளும் அளவிற்கு கோழி துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.




கவனிக்க:
முன்பு (30 வருடம் முன்) ஒரு விசேஷம் என்றால் வீட்டில் சமையல் காரர்களை அழைத்து தான் செய்வோம். 5 படி மட்டன் பிரியாணி, 5 கிலோ கோழி வறுவல், 2 கிலோ எண்ணை கத்திரிக்காய்,3 கிலோ மைசூர் பாக் என்று, அப்படி எங்க வீட்டு ஓவ்வொரு விசேஷத்திலும், சமையல்காரருக்கு எல்லா சாமான்களை எடுத்து கொடுப்பது என் வேலை. இஞ்சி பூண்டு அவர் கேட்கும் அளவில் மிக்சியில் அரைத்து கொடுப்பதும் என் வேலை தான்.இன்னும் பல சமையல் வகைகள்,நான் இங்கு சமைக்கும் பாரம்பரிய சமையல் வகைகள் எல்லாமே என் பாட்டியின் அம்மாவின் அளவுகள். நான் என் சுவைக்கு ஏற்ப மாற்றி செய்து கொள்வேன்.
அப்படி சமைக்கும் போது இது என் அம்மா அவருக்கு கொடுத்த மசாலா சில நேரம் இப்படி செய்தால் ஈசியாக செய்து விடலாம்.
 சிலருக்கு சிக்கன் பொரிக்கும் போது அடியில் போய் அனைத்தும் ஒட்டி கொள்ளும், அதற்கு இஞ்சி பூண்டு ஒன்றாக சேர்ப்பதால் அப்படி ஆகிறது, வெறும் பூண்டு மட்டும் சேர்த்து பிரட்டினால் வானலியில் ஒட்டாமல் தனியாக பொரிந்து வரும்.
சிக்கன் 65 க்கு என்று ஸ்பெஷல் மசாலாக்கள் எல்லாம் கிடையாது.இப்ப தான் நிறைய் ரெடி மேட் மசாலாவகைகள் வந்துள்ளன. நல்ல சிவப்பாக பொன்முறுவலாக டிரையாக இருக்கும் அது தான் சிக்கன் 65.,


சிக்கன் 65 என பெயர் வர காரணம் , ஹோட்டல்களில் மெனு கார்ட் வரிசையில் இந்த சிக்கன் ஃப்ரைக்கு 65 வது இடம்.அது எல்லோருக்கும் பிடித்து போகவே சிக்கன் 65 பிரபலமாகி  உள்ளது.

இது முன்பு தயாரிக்கும் பொருட்களோடு நான் இப்ப கூட சேர்ப்பது, லெமன் சாறு + கார்ன் ப்ளார் மாவு (சோளமாவு) கேசரி கலர் பொடி கொஞ்சமாக சேர்ப்பது ,சில நேரம் சேர்ப்பதும் இல்லை. நல்ல நிதானமாக பொன்முறுவலாக பொரித்து எடுத்தாலே நல்ல நிறம் வரும்.


சிக்கன் 65 - 3


இதில் மேலே உள்ள பொருட்களுடன் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து பொரித்து கொள்ளவேண்டியது.
தேவைப்பட்டால் 65 மசாலாவும் சேர்த்து கொள்ளலாம்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Saturday, November 16, 2013

பொட்டு க‌ட‌லை துவைய‌ல்/கெட்டி சட்னி


பொட்டு க‌ட‌லை துவைய‌ல் - How to make Roasted Gram Chutney/ketti satney/கெட்டி சட்னி செய்வது எப்படி?

வயிறுக்கு இதமான சட்னி இட்லி, தோசை, ஆப்பம், பூரி, வடை, பஜ்ஜி, உளுந்து வடை, வெள்ளை கஞ்சி அனைத்துக்கும் பொருந்தும் அருமையான சட்னி.




தேவையான பொருட்கள்

பொட்டு க‌ட‌லை = கைக்கு ஒரு கை பிடி
தேங்காய் ப‌த்தை = இர‌ண்டு
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று
இஞ்சி சிறிய‌ துண்டு
வெங்காய‌ம் = கால் துண்டு
உப்பு = ருசிக்கு தேவையான‌ அள‌வு

செய்முறை

1.முத‌லில் தேங்காய் ப‌த்தை + ப‌ச்ச‌மிள‌காய் பொட்டு க‌ட‌லையை சேர்த்து அரைக்க‌வும்.
2. பாதி அரைந்த‌தும் இஞ்சி + வெங்காயம் + உப்பு சேர்த்து அரைத்து எடுக்க‌வும்.




குறிப்பு:

நோன்பு கால‌த்தில் வெள்ளை க‌ஞ்சி , ம‌சால் வ‌டை, பஜ்ஜி. உளுந்து வடைபொட்டு க‌ட‌லை துவைய‌ல் தொட்டு சாப்பிட‌ இத‌மாக‌ இருக்கும்.
நான் காரம் குறைவாக தான் பயன் படுத்துவேன், காரசாரமாக சாப்பிடுபவர்கள் பச்சமிளகாயின் அளவை கூட்டி கொள்ளவும்.

இதே சட்னியில் இஞ்சிக்கு பதில் பூண்டு சேர்த்தும் அரைக்கலாம்.
கொத்துமல்லி , சிறிது புளி அல்லது எலுமிச்சை சேர்த்தும் அரைக்கலாம்.

பரிமாறும் அளவு - முன்று நபர்களுக்கு
ஆயத்த நேரம் - 3. நிமிடம்
சமைக்கும் நேரம் - 3.நிமிடம்

கொத்துமல்லி பொட்டுகடலை சட்னி



Linking to Gayatri's Walk Through memory lane hosted by Sahasra

அனைவரும் நலமா? ஊருக்கு போய் நல்லபடியாக திரும்பி வந்துவிட்டேன். இது முன்பே போட்டு வைத்து இருந்த குறிப்பு. ஏதும் போஸ்ட் பண்ண முடியல ஊர் ஞாபகமாகவே இருக்கிறது. முடிந்த போது வந்து குறிப்புகளை பகிர்கிறேன்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Tuesday, October 15, 2013

ஹைதராபாத் மட்டன் பிரியாணி - Hyderabad Mutton Biriyani




தேவையானவை
எலும்பில்லாத மட்டன் – 300 கிராம்
தரமான பாசுமதி அரிசி – 400 கிராம்
உருளை கிழங்கு – 100 கிராம்
தயிர் – அரைகப்
பச்ச மிளகாய் – 2 நீளவாக்கில் கீறியது
கொத்துமல்லி தழை
புதினா
பட்டை - 1
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
கருப்பு பெரிய ஏலக்காய் - 1
பிரிஞ்சி இலை – 2
சீரகதூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் – அரை தேக்கரண்டி
முழு மிளகு  - 5
இஞ்சி பூண்டு விழுது – இரண்டு மேசை கரண்டி
பொரித்த வெங்காயம் – 2 பெரியது
ஜாதி பத்திரி
லெமன் ஜூஸ் – 3 தேக்கரண்டி

வெண்ணீரில் அல்லது பாலில் ஊறவைத்த சாப்ரான் – ¼ தேக்கரண்டி
செய்முறை:
அரிசியை நன்கு களைந்து ஊறவைக்கவும்.
வெங்காயத்தை அரிந்து சிவற கருகாமல் வறுத்து வைத்து கொள்ளவும்.
வாயகன்ற பேசினில் ( பாத்திரத்தில்) சுத்தம் செய்த மட்டனை சேர்த்து அதில் மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள்,உப்பு தூள் , சீரக தூள்,பட்டை , லவங்கம் , ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை,தயிர், வறுத்த வெங்காயம்,கொத்துமல்லி , புதினா, சாப்ரான் ஊறியது,பச்சமிளகாய், உருளைகிழங்கு,ஜாதி பத்திரி அனைத்தயும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒருமணி நேரம் ஊறவைத்தாலும் நல்ல இருக்கும்.

மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீரை விட்டு உப்பு சிறிது எண்ணை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதி வந்த்தும் ஊறிய அரிசியை போட்டு முக்கால் பாகத்துக்கு (65 %) குறைவாக வேகவைத்து வடிக்கவும்.
( உலை கொதிக்கும் போது அதில் புதினா கொத்துமல்லி ஷாஜீரா போன்றவை சிறிது சேர்த்து கொள்ளவேண்டியது)
பிரியாணி செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மேரினேட் செய்து வைத்துள்ள மட்டனை முதலில் பரவலாக வைக்கவும். அடுத்து வடித்த சாத்த்தை பரவலாக வைக்கவும்.
அதன் மேல் ப்ரஷ் புதினா கொத்துமல்லி தழை,சாப்ரான் தண்ணி , வறுத்த வெங்காயம்.எல்லாவற்றியும் தூவு ஒரு பாயில் பேப்பரை போட்டு முடி கனமான முடியை போட்டு மூடி , தீயின் தனலை 15 நிமிடம் மீடியமாகவும் பிறகு சிறிய தீயிலும் வைத்து 30 நிமிடம் தம் போடவும்.

தம் போடுமுன் பிரியாணி சட்டியின் அடியில் தம்போடும் கருவி அல்லது கணமான தோசை தவ்வாவை வைத்து தம் போடவும்.இப்படி வைப்ப்து சிறிதும் அடி பிடிக்காது.
தம் போட முடிய பிறகு சும்மா சும்மா பிரியாணி சட்டியை திறக்க கூடாது.

30 நிமிடம் கழித்து லேசாக பிரட்டி விடவும்.
சுவையான ஹதராபாத் மட்டன் பிரியாணி ரெடி.


 பரிமாறும் அளவு 4 லன்ச் பாக்ஸ்
ஆயத்த நேரம் (ஊறவைக்கும் நேரம் + 10 நிமிடம்
சமைக்கும் நேரம் – 30 நிமிடம்.





 இதில் கவனிக்க வேண்டியது: உப்பின் அளவை சரி பார்த்து கொள்ளவும். மேரினேட் செய்யவும் சேர்க்க வேண்டும், சாதம் கொதிக்கவும் சேர்க்கவேண்டும்.

இதற்கு தொட்டு கொள்ள காராபூந்தி ரெய்தா, மற்றும் ஹைதராபாத் சிக்கன் 65, பைங்கன் பர்தா போன்றவை கொண்டு பரிமாறலாம்.


Fried Onion




பிரியாணி என்றாலே எங்க வீடுகளில் பாரம்பரியமாக செய்யும் மட்டன் பிரியாணி தான் எங்க எல்லாருக்குமே பிடிக்கும்.ரொம்ப நாளாக பாரம்பரிய ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்யனும் என்று செய்து பார்க்க் ஆசை.
ஹதராபாத் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி முன்பு செய்துள்ளேன், நம்ம பாயிஜா முறையிலும் ஒரு முறை செய்துள்ளேன். அதில் நெட்டில் தேடியதும் வா செஃப் என் தங்கை அடிக்கடி சொல்வாள் அவர் சொல்லும் போதே நமக்கு சாப்பிடனும் போல இருக்கும் என்று, ம்ம வாரே வாஹ் செஃப் nஹைதராபாத் பிரியாணி ரொம்ப பிடிச்சி இருந்த்து. இதில் சிக்கன் பிரியாணி தான் அடிக்கடி செய்வது, மாதம் ஒரு முறை கண்டிப்பாக ஹைதராபாத் சிக்கன் பிரியாணி செய்துவிடுவது. சில மசாலா வகைகள் ரொம்ப அதிகமாக இருந்த்தால் கொஞ்சம் குறைத்து கொண்டேன். இதில் செய்துள்ளது போன்லெஸ் மட்டனும் உருளையும் சேர்த்து ஒரு நாள் முன்பே மசாலாஊறவைத்து விட்டேன். காலையில் செய்து ஆபிஸுக்கும் கட்டி கொண்டு வந்து லன்சுக்கு சாப்பிட்டாச்சு ரொம்ப ஈசியாக வேலை முடிந்துவிட்ட்து. இதில் எண்ணையும் குறைவு, தக்காளியும் சேர்க்க தேவையில்லை,டயட் செய்பவர்களுக்கு சூப்பரான உணவு.எதுவும் தாளிக்க தேவையில்லை ஒரே தம் அவ்வளவுதான். இதுபோல் வெஜ் மற்றும் சிக்கனிலும் செய்யலாம். சிக்கன் பிரியாணி ஆங்கில பிளாக்கில் போஸ்ட் பண்ணி உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு சென்று பார்க்கலாம், இங்கு பிறகு பதிவிடுகிறேன்.








அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள். நான் ஊருக்கு போகிறேன். இனி பிறகு பார்ப்போம் ..... 


Hyderabad Boneless Mutton Biriyani
Khara Bhoondi Raitha
Chennai Plaza   Old website

Chennai Plaza  முகநூல் முகவரி

Chennai Plaza Page -  லைக் பண்ணுங்கோ. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் கடையை பற்றி தெரியபடுத்துங்கள். 



 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Tuesday, October 8, 2013

ஆனியன் ஊத்தாப்பம் - Onion Uthaappam


ஆனியன் ஊத்தாப்பாம் என் கணவரின் பேவரிட், எப்ப ஹோட்டலுக்கு போனாலும் முதலில் இதை தான் அவர் ஆர்டர் செய்வார். ஏன்னா அது திக்காக இருக்குமாம் நல்ல பில்லிங்காய இருக்கும் என்பார். சில நேரம் தோசைமாவு மீதம் ஆனால் இப்படி செய்து ஆபிஸ்க்கு கொண்டுபோவது , அப்படியே தோசையில் தக்காளிசட்னியை தடவி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சுருட்டி சாப்பிட அருமையோ அருமை தான்..





தோசை மாவு - ஒரு கப்

( தோசைமாவில் உப்பு, சிறிது சர்க்கரை, நல்லெண்ணை சேர்த்து கலக்கி வைக்கவும்)

வெங்காயம் - கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
பச்சமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
எண்ணை + நெய் - சுட தேவையான அளவு





செய்முறை
முதலில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாயை நன்றாக கலக்கி வைத்து கொள்ளவும்.


தோசைமாவில் 
தோசைகல்லை காயவைத்து மாவை தடிமனாக ஊற்றவும்.

முன்று மேசைகரண்டி அளவுக்கு வெங்காயம் பச்சமிளகாய் கலவையை பரவலாக தூவி மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும்.
தோசையை திருப்பி போட்டு தீயின் தனலை குறைவாகவைத்து வெங்காயம் கருகாமல் சுட்டு எடுக்கவும்.



தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்.
வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
தக்காளி - 4
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
உப்பு தேவைக்கு
கருவேப்பிலை - சிறிது
பூண்டு - 2 பல் பொடியாக நறுக்கியது
எண்ணை - ஒரு தேகக்ரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு
செய்முறை 

எண்ணையை காயவைத்து கருவேப்ப்பிலை கடுகு,உளுத்தம் பருப்புகருவேப்பிலை  பூண்டு சேர்த்து தாளித்து
வெங்காயம், பச்சமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய் தூள் உப்பு தூள் தூவி தீயின் தனலை சிம்மில் வைத்து கூட்டாகும் வரைசுருள வேகவிட்டு இரக்கவும்.இதில் வெங்காயம் ரொம்ப குழைய வேகவைக்கவேண்டாம், அப்படியே முழுச்சிக்கிட்டு நிற்கனும்.. ஹிஹி (ரொட்டிக்கு செய்யும்போது வெங்காயம் தக்காளி அளவு சரி சமமாக இருக்கனும்.
இந்த தக்காளி சட்னி செய்முறை என் பெரிமாவிடம் கற்று கொண்டது. நாங்க பள்ளிக்கு செல்லும் போது கோதுமை பரோட்டாவிற்கு பக்க உணவாக செய்து தருவார்கள்.ஆனால் பெரிமா இப்ப இல்லை. எங்க டாடி போய் ஆறுமாதத்தில் அவர்களும் இறந்து விட்டார்கள்.ஜலீ ஜலீ ஜலீ ஜலீன்னு பெரிமா கூப்பிடும்போது ரொம்ப நல்ல இருக்கும்.

Linking to Gayatri's Walk through Memory Lane Hosted by Asiya. and Tamizar samaiyal
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam