
ஒரு வெள்ளி கிழமை இந்த கிழங்கை வாங்கலாம் என்று தினம் வாங்கும் குராசரியில் போன் செய்து கேட்டேன், எப்படின்னு பாருங்க.
நான்: ஹலோ மரவள்ளி கிழங்கு இருக்கா?
குராசரி மேன்: எந்த விளிக்கிது மர வள்ளியா? ஒன்றும் அறியலயேப்பா
நான்: என்ன சொன்ன இவனுக்கு புரியும், (யோசனை) ஆள்வள்ளிகிழங்கு இருக்கா?
குராசரி மேன்: இல்லல்லோ, எந்தப்பா விளிக்கிது நீங்களு ஒன்னும் மனசிலாவுல
நான் :ஐய்யோ என்னத்த சொல்லி கேட்பது, மரவள்ளிய நாங்க ஆள் வள்ளி இன்று சாப்பிட்டே ஆகனும்.
நான்: ஆ ஞாபகம் வந்துடுச்சி கப்ப கிழங்கு ,கார்த்திக் ராதாவின் முதல் படமான அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக் அந்த படத்தில் பாடியது நினைவுக்கு வந்தது ,வாடி ஏ கப்ப கிழங்கு.
நான்: கப்ப கிழங்கு உண்டா?
குராசரி மேன்: ஓ அதே கப்பயா ஓஒ இப்ப மனசிலாவுது/
குராசரி மேன்: உண்டல்லோ
ஓகே அத கொடுங்க.ஒரு வழியா வாங்கியாச்சி
கேரளத்து மக்களின் தினசரி உணவில் செய்யப்படும், கப்ப கிழங்கு, இதில் நாங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவது இனிப்பு உருண்டைதான். சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
கப்ப கிழங்கு இனிப்பு உருண்டை
தேவையான பொருட்கள்கப்ப கிழங்கு = ஒரு முழம் நீளம் ஒன்று
தேங்காய் துருவல் = முன்று பத்தை
சர்க்கரை = முன்று மேசைக்கரண்டி
நெய் = ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் தூள் = கால் தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு = ஒரு சிட்டிக்கை
செய்முறை
கிழங்கை நல்ல மண் போக கழுவி தோலை செதுக்கி கேரட் துருவியில் பெரிய துளையில் துருவி கொள்ளவும்.
துருவியதை இட்லி பானையில் ஈர துணியை விரித்து அவித்து எடுக்கவும்.
அவித்த கிழங்கில் உப்பு, சர்க்கரை,தேங்காய் துருவல் அனைத்தையும் கலந்து உருண்டைகளாக பிடித்து சாப்பிடவும்.
ரொம்ப சூப்பரா இருக்கும்
குறிப்பு
இந்த மரவள்ளி கிழங்கில் பிட்சா , கே.எஃப்.சி ஷாப்பில் சாலட் மையானஸுடன் வைத்து இருப்பார்கள்.
குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்ல சத்து. அப்படியே அவித்து சாப்பிட்டால் ரொம்ப நல்லது.
இதில் குழம்பு, பொரியல்,கூட்டு, அடை என பல உணவுகள் தயாரிக்கலாம்.
இது அதிகமாக சாப்பிட்டால் கேஸ் பிராப்ளம் வரும், மலையாளிகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்