Saturday, October 30, 2010

விகடனில் என் குறிப்பு



விகடன் தீபாவளி மலர் ஸ்வீட் சிக்ஸ் சில் என் ஸ்வீட் முழு பாசிபயிறு போளி ரெசிபியும்,
ஹே ஹே இப்ப என் குறிப்பு விகடனிலும்


கீழே உள்ள அனைத்து தளங்களிலும் என் குறிப்புகள்
 அறுசுவைடாட்காம் , 



தமிழ் குடும்பம்டாட்காம்,


சமையலறைடாட்காம் இங்கும்

பிறகு கீழை அஞ்சல் மாத இதழ்

இப்ப விகடனில் என் ஸ்விட் ரெசிபி முழு பாசி பயறு போளி.

விகடனுக்கு நன்றி ரொம்ப சந்தோஷம்.



இது முன்பு 2005 தென்றல் புக்கில் என் பீட்ரூட் ஹல்வாவும், பூண்டு கோழியும் வந்தது,



பாதம் ஹல்வா




பாதம் ஹல்வா உங்களுக்கு தான் எடுத்து கொள்ளுங்கள்/


முழுபாசி பயிறு போளியை விகடனில் பார்க்கலாம்.


என்னை விட என் பையனுக்கு தான் ஒரே குஷி. விகடனிலிருந்து ரெசிபி கேட்டு மெயில் வந்துருக்கு என்று சொன்னதும்.என்னோடு சேர்த்து தான் போட்டோ வோடு போடனும் போடனும் என்றுbசின்ன பையன் .ஒகே பையன் ஆசை படுகிறானே என்று அவனையும் போட்டாச்சு.

விகடன் புக் நான் பார்ப்பதில்லை,எப்பவாவது கிடைக்கும் போது பார்ப்பேன். இதை எனக்கு அனுப்பிய நீத்துவிற்கு மிக்க நன்றி











Thursday, October 28, 2010

சிம்பிள் உருளை சிப்ஸ் - simple potato chips


தேவையான பொருட்கள்

உருளை ‍ ‍= 2
மிளகாய் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = கால் தேக்கரண்டி
எண்ணை பொரிக்க = தேவையான அளவு
பெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை

செய்முறை

உருளை கிழங்கை மெல்லிய தாக வட்ட வடிவில் ஸ்க்ராப்பரில் சீவி கொள்ளவும்.

எண்ணையை காயவைத்து ஒன்றோடு ஒன்று ஓட்டாமல் போட்டு வறுத்து எடுக்கவும்.

சிறிது சூடு ஆறியதும் மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி தூவி இரக்க‌வும்.

குறிப்பு

பெருங்காயப்பொடி தேவையில்லை என்றால் சேர்க்க தேவையில்லை.
மிளகாய் தூளுக்கு பதில் பெப்பர் தூளும் சேர்க்கலாம். மோர் குழம்பு, தயிர் சாதம் க்கு சிம்பிளா செய்தாலும் குழந்தைகள் சிப்ஸ் என்பதால் கூட இரண்டு புடி உள்ளே போகும்.




டிஸ்கி: முன்பு அடிகக்டி செய்வேன், பெரியவன் ஊருக்கு போனதிலிருந்து எப்பவாவது தான் செய்வது, ஏன்னா செய்து வைத்தால் இரண்டு பேரும் எனக்கு கொஞ்சம் இருக்கு, அவனுக்கு மட்டும் முனு சிப்ஸ் அதிகமா போச்சு என்று செல்ல சண்டைகள் நிறைய வரும்.
இப்ப சின்னவ்ன் மட்டும் தான் கூட சண்டை போட ஆளில்லை, என்ன சொல்வது என்று தெரியல நீங்க இத‌ டைம் கிடைக்கும் போதெல்லாம் செய்து 400 பாக்கெட் போட்டு வைய்யுங்க் நாம ஊருக்கு போகும் போது கொண்டு போய் வித்துடலாம். வெரும் சிம்பிள் சிப்ஸ் தான் ஆனால் மொரு மொருன்னு பாக்கெட்டில் இருப்பது போலவே.. சுவையாக இருக்கும்.



Tuesday, October 26, 2010

பாகற்காய் ஜூஸ் - bitter gourd juice






ஹசனாஸ் (மாமியார் பெயர்) பாகற்காய் ஜூஸ்

தேவையானவை

பாகற்காய் – ஒரு விரல் நீள துண்டு
மிளகு – 4
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – சிறிது
லெமன் ஜூஸ் – அரை ஸ்பூன்

செய்முறை

பாகற்காயை துண்டுகளாக நறுக்கி அத்துடன் மிளகு,சீரகம்,உப்பு சேர்த்து மிக்சியில் தேவைக்கு தண்ணீர் ஊற்றி (அரை டம்ளர்) அடிக்கவும்.
நல்ல நுரை பொங்க அடித்து அதை வடிக்கட்டவும்.
லெமென் பிழிந்து குடிக்கவும்.
அந்த அளவிற்கு கசப்பு தெரியாது.


குறிப்பு:

இன்று என் மாமனார், மாமியாரின் கல்யாண நாள்,




என்ன கசப்பா ஒரு ஜூஸ் போட்டு இருக்கேன்னு பார்க்க வேண்டாம்.
மாமனாருக்கு சுகர் அதிகமாகமல், அப்படியே அதிக மானாலும், முன்றே நாளில் சரியான டயட் சமையல் செய்து கரெக்ட் லெவலுக்கு கொண்டு வந்துடுவாங்க எங்க மாமியார். ஆகையால் இப்ப கர்பிணி பெண்கள் முதல் கொண்டு , சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் ஜுரம் தலை வலிப்போல் சர்க்க்ரை வியாதியும் ஒன்றாகிவிட்ட்து, கண்டிப்பா எல்லோருக்கும் இது பயன் படும்.

ஏற்கனவே குறிப்புகளில் சாதரணமான பாகற்காய் ஜூஸ் நான் கொடுத்து இருந்தாலும், இதில் மிளகு சீரகம் சேர்த்து என் மாமியார் செய்வாங்க.
சரி செய்தாச்சு எப்படி குடிப்பது, இப்போதைக்கு இங்கு யாருக்கும் சர்க்கரை வியாதி இல்லை , எனக்கு நாக்கு கொஞ்சம் நீளம் என்ன செய்யலாம் சரி கால் ஸ்பூன் லெமன் பிழியலாம் என்று பிழிந்தேன் சூப்பர்.
எனக்கு தெரிந்து எல்லோருமே இதை பொதுவாக குடிக்கலாம். பிள்ளைகளுக்கு வாரம் ஒரு நாள் கொடுத்து பழக்கலாம். அவர்களுக்கு கொஞ்சம் தேனும், லெமன் சாறும் கொஞ்சம் கூட் சேர்த்து கொள்ளலாம். வயிற்றில் உள்ள பூச்சியும் அழி்ும், குழநைைை்்ு்்கும் சின்ன் வயதிலேயே பாவக்்ாய பழக்க படுத்்ினா ்ாதிரியும் இருக்்ும்.
பார்க்கவே பச்சை பசேல்லுன்னு நல்ல இருந்த்து, உடனே குடிச்சிட்டு இன்னொரு கிளாசும் தயாரிச்சாச்சு, இது நீத்து கிச்சனுக்காக செய்த ஜூஸ் , அப்ப்டியே எல்லோருக்கும் சர்க்கரை வியாதிக்கு அருமையான ஒரு ஜூஸும் கிடைத்து விட்ட்து.

டிஸ்கி: நான் சொல்வது கேட்டு யாரும் சிரிக்க கூடாது, முதலில் செய்த்து இந்த சுவை எப்படி இருக்கும் என்று மடக் மடக்குன்னு போட்டோ எடுக்காமலே காலையில் குடிச்சிட்டேன். பிறகு ஆஹா போட்டோ எடுக்கலையே என்று மறுபடி செய்து ( அதான் நல்ல இருக்கே) எடுத்தேன்.
இந்த பாவக்கான்னே நினைப்பு வருவது, எங்க அப்பா சின்ன வயதில் எல்லோரும் மாதம் ஒரு நாள் பாவக்காய் சாப்பிட்டே ஆகனும். கிட்ட உட்கார்ந்து ஊட்டி விடுவார், கண்ணில் ஆறெடுத்து கஷ்டப்பட்டு முழுங்குவேன்.









Monday, October 25, 2010

சிக்கன் பிரியாணி - chicken biriyani



தேவையானவை

பாசுமதி அரிசி – அரை கிலோ

Ø சிக்கன் - அரை கிலோ
Ø வெங்காயம் – கால் கிலோ
Ø தக்காளி – கால் கிலோ
Ø தயிர் - கால் டம்ளர்
Ø இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டரை மேசைக்கரண்டி
Ø கொத்தமல்லி - கால் கட்டு
Ø புதினா - எட்டு இதழ்
Ø பச்சை மிளகாய் - நான்கு
Ø மிளகாய் தூள் - 1 1/4 தேக்கரண்டி
Ø எலுமிச்சை - பாதி பழம்
Ø பட்டை - ஒரு இன்ச் அளவு ஒன்று
Ø கிராம்பு - இரண்டு
Ø ஏலம் - ஒன்று
Ø எண்ணெய் - கால் டம்ளர்
Ø நெய் - ஒரு தேக்கரண்டி
Ø உப்பு - தேவைக்கு










செய்முறை

Ø முதலில் அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

Ø எலும்புடன் சேர்ந்த சிக்கனை (அரை கிலோ) கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

Ø எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும், வெங்காயத்தை போட்டு நல்ல கிளறி கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் ஐந்து நிமிடம் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி போடவும் பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.

Ø இரண்டு நிமிடம் கழித்து தக்காளியை போட்டு கிளறி, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.

Ø தக்காளி நல்ல வெந்து கூட்டாகட்டும். சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் சேர்க்கனும். இல்லை என்றால் பீஸ் எதுவும் கிடைக்காது. தூளாகி எலும்பு மட்டும் இருக்கும்.

Ø தக்காளி வதங்கியதும் சிக்கனை போட்டு கிளறி தயிரையும் சேர்த்து நல்ல வேக விடவும்.

Ø மூடி போட்டே இருந்தால் பிரியாணி நல்ல மணமாக இருக்கும்.Ø நல்ல வெந்து எண்ணெய் முழுவதும் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு அரிசி உலை கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் கொஞ்சமாக லெமென் ஜூஸ் பிழியவும், சிறிது உப்பும் சேர்க்கவும்.

(அப்ப தான் சாதம் உதிரியாக வரும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.)Ø ஒரு கண் வடிகட்டியில் வடித்து(கஞ்சியை கீழே கொட்ட வேண்டாம்)20 நிமிடம் தம்மில் விட்டு உடையாமல் கிளறி இரக்கவும்.




I sending this recipe to akila's event dish name Start with C



Saturday, October 23, 2010

கருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை


கருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது.




முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும், வெந்தயம் இரண்டு ஸ்பூனும் காயவைத்து பொடித்து வைத்து கொள்ளுங்கள். அதை தேங்காய் எண்ணை (அ) நல்லெண்ணையில் ஊறவைத்து தலையில் தேய்க்கவும்.

கருவேப்பிலை கொத்துமல்லி ரசம்




கருவேப்பிலையை நன்கு அரைத்து வடைகளாக தட்டி தேங்காய் எண்ணையிலும் போட்டு நன்கு ஊறவைத்து தலைக்கு தேய்க்கலாம்










கருவேப்பிலை பொடி


கருவேப்பிலை - ஒரு கப்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு மேசை கரண்டி
மிளகு - ஒரு ஸ்பூன்
பூண்டு = தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளுங்கள்


மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து வைத்து கொள்ளுங்கள்.




ஒல்லியாக உள்ளவர்கள் ஒரு மேசை கரண்டி கருவேப்பிலை பொடி, நெய் ஒரு ஸ்பூன், சாதம் கலந்து சாப்பிடுங்கள்.



டயட்டில் இருப்பவர்கள் ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணை கலந்து சாப்பிடவும்.


கருவேப்பிலை பொடி திரிப்பவர்கள் அத்துடன் சிறிது மிளகு, கடலை பருப்பு கூட வருத்து சேர்த்து பொடித்து கொள்ளலாம்.


இட்லி பொடி, ரசப்பொடி, சாம்பார் பொடி,பிஸிபேளா பாத் பொடி ,பாகற்காய் போன்ற பொடி வகைக தயாரிக்கும் போது ஒரு கைப்பிடி அளவிற்கு காயவைத்து அதையும் சேர்த்து திரித்து கொள்ளுங்கள்.


கீரீன் வெஜ் குருமாவில் கருவேப்பிலை, கொத்து மல்லி தழை, புதினா அரைத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.


வறுத்து பொடித்து செய்யும் எல்லா விதமான சமையலுக்கும் ஒரு கை பிடி கருவேப்பிலையை சேர்த்து கொள்ளுங்கள்.

தலை முடி கருகருவெனவளற கருவேப்பிலையை காயவைத்து தூளாக்கி நல்லெண்ணையுடன் காய்ச்சி நன்கு ஊறவைத்து வடிக்கட்டி அந்த எண்ணையை தினம் தேய்த்து வரலாம்.


வாரம் ஒரு முறை கருவேப்பிலை குழம்பு , கருவேப்பிலை சாதம், செய்து சாப்பிடுவதும் நல்லது.

கருவேப்பிலை, கொத்துமல்லி அரைத்து விட்டும் ரசம் செய்து சாப்பிடலாம்.


தாளிப்பில் போடும் கொசுறு கருவேப்பிலை, ரசம் குழம்பு சாப்பிடும் போது தூக்கி எறியாமல் அதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் அது முடி வளற உதவும்.


பகோடா செய்யும் போது நிறைய கருவேப்பிலையை பைனா சாப் செய்து போட்டு கொள்ளுங்கள்.









Friday, October 22, 2010

சிகப்பரிசி மாவு புட்டு -



தேவையானவை
சிகப்பரிசி புட்டு மாவு – 400 கிராம்
தேங்காய் துருவல் – அரை முறி (முழு தேங்காயில் பாதி)
சர்க்கரை – 150 கிராம்
நெய் – 25 கிராம்
செய்முறை
ஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டி யில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து எடுக்கவும்.
அவிந்து புட்டு மணம் வந்த்தும் அதை ஒரு வாயக்ன்ற பாத்திரத்தில் கொட்டி தேங்காய் துருவல்,சர்க்கரை சேர்த்து கிளறி நெய்யை உருக்கி ஊற்றவும்.

பால் பழம் சேர்த்து பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் கூடவே ஆஃப் பாயில் (அ)வெங்காய முட்டை சேர்த்து சாப்பிட நல்ல் இருக்கும்.
இதுக்கு சர்க்க்ரை சேர்க்காமல், சென்னா மசாலா, முழுபாசி பயறு மசாலா தொட்டும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வாழைபழம் சேர்த்து உருண்டையாக உருட்டி வைத்தால் சத்தமில்லாமல் காலி ஆகும்.




Thursday, October 21, 2010

பெண்கள் வீட்டில் தையல் துணிகளை கட்டிங் செய்யும் போது



துணிகளை ( சோளி மற்றும் சல்வார்) வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி அதன் செட்டுகளை ஒரு கவரில் போட்டு பத்திரமாக வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால் கை, பட்டி, கழுத்து துணி இதில் ஏதாவது ஒன்று காணாமல் போய் விடும்.


யாருடனும் சண்டை போட்டு விட்டு, பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் உஷார் உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.இல்லை என்றால் எப்படியும் ஒரு கையோ, பட்டி துணியோ காணாமல் போகும், இல்லை உங்கள் மேல் கோபமாக இருப்பவர்கள் அதை கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள்.





என‌க்கு என் த‌ங்கைக்கும் ஒன்றாக‌ க‌ல்யாண‌ம் ஆச்சு, எல்லா க‌ல்யாண‌ ச‌ட்டையும் ஆளுக்கு ஒரு ட‌ஜ‌ன் அவ‌ள் தான் தைத்தாள். நான் அத‌ற்கு கொக்கி தைப்ப‌து, ஹெம்மிங் செய்வ‌து அப்போது.நான் தையல் கிளாஸ் போகல, ந‌ல்ல‌ அழ‌கான‌ பொன் ம‌ஞ்ச‌ள் நிற‌ ச‌ட்டை ஹெம்மிங் ப‌ண்ணி முடித்த‌தை யாரோ கத்த்ரியால் க‌ட் ப‌ண்ணி விட்டார்க‌ள்.




ஆகையால் வீட்டில் தைப்ப‌வ‌ர்க‌ள், எல்லாவ‌ற்றிலும் க‌வ‌ன‌மாக‌வும் உஷாராக‌வும் தைக்க‌னும்.

அடுத்து முன்று வயதுக்குற்பட்ட குழந்தைகளை வைத்து கொண்டு தைக்காதீர்கள்.

நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள்.

( இது போல் நான் தைக்கும் போது சின்ன‌ பைய‌ன் மிஷினில் உள்ள‌ ஊசியில் கையை விட்டு விட்டான். அப்படியே பகீர் என்றாகி விட்டது. அப்ப‌டியே க‌ட்டை விர‌லில் உள்ளே போய் விட்ட‌து. ந‌ல்ல‌ வேலை ச‌ட்டுன்னு அவ‌ன் கைய‌ எடுக்க‌ல‌ அப்ப‌டியே ச‌க்க‌ர‌த்தை பின்புற‌மாக‌ திருப்பி விரலை எடுக்க‌ வைத்தேன்).பகீர் என்று ஆகிவிட்து. அதிலிருந்து தைக்குக்கும் போது ரொம்ப‌ க‌வ‌ன‌மாக‌ யாரும் இல்லாத‌ நேர‌ம் அல்ல‌து எல்லோரும் துங்கிய‌ பிற‌கு தைப்ப‌து.






க‌த்திரி கோலையும் உட‌னே ப‌த்திர‌ ப‌டுத்த‌னும் இல்லை என்றால் அதை எடுத்து விளையாடு கிறேன் என்று முடியை க‌ட் ப‌ண்ணி கொள்வார்க‌ள். உடனே ஊசியால் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கிறது





நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே போய் மாட்டிக்கொள்ளும்.
அது போல் இரண்டு பேர் தைக்கும் போது பேச்சு ஸ்வாரசியத்தில் பெருவிரலுல் மிஷினி ஊசி போய் மாட்டி கையுக்கு தையல் போட்டார்கள்.

அதே போல் கணவன் மனைவி இருவரும் டைலர். மனைவி வெட்டி கொடுப்பார் கணவன் கடையில் கொண்டுவந்து தைப்பார்.
ஒரு நாள் அப்பளம் பொரித்து விட்டு அந்த எண்ணைய கீழே வைத்து விட்டு , துணி வெட்ட ஆரம்பித்து இருக்கிறார், வீட்டில் இருந்த சின்ன குழந்தை கொதிக்கிற எண்னையில் கையை விட்டு விட்டது. சின்ன குழந்தைகள் உள்ள வீட்டில் தையலை வைத்து தான் பிழைப்பே என்றால் மிக கவனமாக தைக்க வேண்டும்.