Saturday, February 12, 2011

தங்க நகை அணியும் போது





தங்க நகைகளை அணியும் போது ஓரிடத்தில் அமர்ந்து அணியவும்.கம்மல், மூக்குத்தி போன்றவை அணியும் போது பேசி கொண்டே அவசரமாக அணிய வேண்டாம்.அப்படி அணிபவர்கள் அது பத்து முறை தொலைந்து போய் விழுந்து விழுந்து பதற்றத்துடன் தேட வேண்டி வரும்.


விஷேஷங்களுக்கு செல்லும் போது நகைகளை பெட்டியோடு கொண்டு செல்ல வேண்டாம் அந்த காலத்து பாட்டிகளின் சுருக்கு பை (அ) துணி பர்ஸ்களில் வைத்து கொண்டு செல்லவும்.இதனால் நகை பெட்டி நகைபெட்டி என்று அந்த பெரிய பேக் களை பாதுகாக்க தேவையில்லை, கைக்கு அடக்கமா ஹேண்ட் பேக்கிலேயே வைத்து கொள்ளலாம்.

வெளியூருக்கு சென்று அணியும் நகைகளை, அதாவது கல்யாண சத்திரத்தில் போய் தங்கி அங்கு அணிய வேண்டி வந்தால். பெரிய பார்சலாக தூக்கி கொண்டு போகாமல் சின்ன இரண்டு முன்று பர்ஸ்கள் வைத்து கொள்ளவும்.அதில் கம்மல், மோதிரம், மாட்டல் ஒரு பர்ஸிலும், வளையல் ஒரு பர்ஸிலும், பெரிய ஹார்கள், மாலைகள் ஒரு பர்ஸிலும் வைத்து கொண்டால் எடுப்பது சுலபம் இலலை என்றால் ஒரு சிறிய, கம்மலோ (அ) மோதிரமோ காணமல் போக வாய்ப்பிருக்கு. கவரிங் நகைகள் செண்ட் போன்றவை தனித்தனியாக வைக்கவும்.





முக்கியமாக பிரேஸ்லேட் அணிவர்கள் கல்யாணவீடுகளில் தவறவிடுவதை நேரில் பார்த்தும் இருக்கிறேன், அதை கண்டு பிடித்து கொடுத்தும் இருக்கிறேன்.
ஆகையால் பிரேஸ்லேட் அணியும் போது சின்ன கோல்ட் கலர் சேஃப்டி பின்னை கொக்கி வளையத்தில் மாட்டி கொண்டால் டென்ஷன் இல்லாமல் இருக்காலாம்.

கல்யாண பெண்களுக்கு  கழுத்தில் நிறைய செயின் போடுபவர்கள் கூடவே மெல்லிய செயினும் போட்டு இருப்பார்கள்.
அதுவும் தொலைந்து போக சான்ஸ் இருக்கு அதற்கும் சேஃப்டி பின் தான் எல்லா செயின் வளையங்களிலும் சேர்த்தாற் போல் சின்ன கோல்ட் சேஃப்டி பின்னை குத்தி கொள்ள‌வும்.


கல்யாண பெண்களுக்கு, சின்ன குழந்தைகளுக்கு நெற்றி சுட்டி வைக்கும்போது அது தலையில் ஒரு இடத்தில் நிற்காது அதற்கும்சேஃப்டி பி ன் தான் நேர் வ்கிடு ஆரம்பிக்கும் இடத்தில் முடியோடு சேர்த்து ரிங்கில் குத்தி விடுங்கள் அது நீங்க சொன்ன பேச்சை கேட்கும்.


இப்ப தஙக் விற்கிற விலையில் யாரு கழுத்து நிறைய செயின போடுறதுன்னு கேட்கீறீங்களா? என்னதான் விலை ஏறினாலும் வாங்குகிறவர்கள் வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்,\



Monday, February 7, 2011

ஹையா லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழில் நானும்


முட்டை கோஸ்,கீமா முர்தபா




தேனக்கா மெயில் செய்து ஜலீலா உங்கள் ஆக்கங்கள் கதை கட்டுரை அப்படி அனுப்புங்க என்றதும் என்ன எழுது வது கதை தெரியும் இருந்தாலும் சரியான எழுத்து நடை வராது. கவிதை சுத்தம்,, சமையல தவிர என்ன எழுதலாம் என்று யோசித்த போது தான் கான்சர் , எங்க வீட்டில் ஒருவருக்கு இந்த கொடிய நோய் வந்ததில் இருந்து கடந்த ஐந்து வருடங்களாக என் காதில்  மாதம் இரண்டு பேருக்காவது கேன்சர் இருப்பது தெரியவந்தது, இன்னும் உலகத்தில் பல பேரை ஆட்டி படைத்து கொண்டு இருக்கு இந்த நோய்
.
நெட்டும் சரியா வொர்க் ஆகல, ஏன்னு நேற்று ஸாதிகா அக்கா மெசேஜில் சொன்னாங்க.உடனே பார்க்கவும் முடியல, உடம்புக்கும் முடியல ஹாஸ்பிடல் சென்றுவிட்டேன், இப்ப தான் பார்த்தேன்

.


கேன்சர் உள்ளவர்களை நேரில் பார்த்து அவர்கள் சாப்பிட முடியாம கொடுரமான முறையில் தவிப்பதையும் நேரில் கண்டும், சில பேர் சொல்லியும் கேட்டதில் நாமா எந்த கை வைத்தியமும் பார்த்து கொள்ள முடியாது, மெயினான சரியான உணவு முறை. வலியில்லாத கட்டி, தாஙக் முடியாத வயிற்று வலி, ஆறாத புண் இருந்தால் கண்டிப்பாக உடனே மருத்துவரிடம் சென்று தரோவாக செக் பண்ணி சரிசெய்து கொள்வது நல்லது.

இப்ப கூட தெரிந்த தோழியின் மாமானாருக்கு குடலில் கேன்சர்,ஆப்ரேஷன் நல்ல படியாக ம்டுஇந்துதுள்ளது அவர் உடல் நலம் தேறி வரனும்.எல்லோருக்கும் உடம்பில் கேன்சர் செல்கள் இருக்கின்றன, அது சில பேரை தாக்கு கிறது, எனக்கு தெரிந்ததை எழுதி அனுப்பினேன்.
எல்லோரும் வருடமொரு முறையாவது ஒரு ஜெனரல் செக் அப் எடுத்து கொள்வது நல்லது
 இந்த மாதம் பிப்ரவரி லேடிஸ் ஸ்பெஷல்  இதழில் வெளி வந்துள்ளது,என்னை தேர்ந்தெடுத்த கிரிஜா மேடத்துக்கும், தேனக்காவுக்கும் என் நன்றிகள் .

இன்று கல்யாண நாள் அதுவுமா மாத இதழில் என் பதிவு ,இந்த மாதம் வலை தோழிமஹா விஜெய் அவார்டு, இரண்டும் மகிழ்சி.




மஹா விஜெய் கொடுத்த அன்பான அவார்டை .

இந்த அவார்டை கொடுத்த .

அஸ்மா
புதுகை தென்றல்
மனோ அக்காவின்முத்து குவியல்
லக்ஷ்மி அக்கா
கீதா 6


இவர்களுக்கு வழங்குகிறேன்

.எனக்கு விருது கொடுத்து மகிழ்வித்த மஹா விஜெய்க்கு மிக்க நன்றி+சந்தோஷம்
என் பதிவை லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழில் வெளிவர காரணமாக இருந்த தேனக்காவிற்கு மிக்க நன்றி
எனக்கும் பதிவு சரியா போட முடியல சில லின்குகள் தான் எடுக்க முடிந்தது.

Saturday, February 5, 2011

போட்டி (குடல்)கத்திரிக்காய் சால்னா



ஆட்டிறைச்சி வகைகளில் குடலும் ஒன்று இந்த சால்னா வயிற்றிற்கு ரொம்ப நல்லது, சூப் வைத்து குடித்தால் வயிற்று புண் ஆறும். இது எங்க பாட்டி எனக்கு சொல்லிக்கொடுத்தது

தேவையான பொருட்கள்
ஆட்டு குடல் சால்னா (போட்டி குர்மா ) - முழுசு ஒன்று
வெங்காயம் - ஐந்து (பெரியது)
தக்காளி - நான்கு (பெரியது)
பச்சமிளகய் - 4
இஞ்சி, போண்டு பேஸ்ட் - 5  மேசை கரண்டி
கொத்து மல்லி - கால் கட்டு
புதினா - கொஞ்சம்
மிளகாய் தூள் இரண்டரை தேக்கரண்டி
தனியா தூள் - இரண்டரை மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - அரை முறி
எண்ணை - 5 தேக்கரண்டி
பட்டை,லவங்கம், ஏலம் தலா - இரண்டிரண்டு
கத்திரிக்காய் - அரை கிலோ
கடலைப்பருப்பு - கால் கப்










செய்முறை
குடலை மஞ்சள் தூள் கொஞ்சம் வினீகர் போட்டு, நன்றாக பத்து நிமிடம் ஊற வைத்து அதில் உள்ள அழுக்கை தேய்த்து கழுவவும்.
கிளீன் ஆன குடல் கிடைத்தால் பிரச்சனை இல்லை.
சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி சூடு வந்ததும் பட்டை,லவங்கம், ஏலம் போடவும், போட்டு அரிந்து வைத்துள்ள் வெங்காயத்தை வத்க்கவும்.
வதங்கியதும் இஞ்சி போண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் குடலையும் போட்டு நல்ல பெறட்டவும்.பிறட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு தக்காளி,பச்ச மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள்,மஞ்சள் தூள், உப்பு போட்ட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
அதற்கு ஏற்றார் போல தண்ணீர் ஆறு ஏழு கப் ஊற்றிஅரை மணி நேரம் குக்கரில் வேகவிடனும். கடலைப்பருப்பை அந்த குக்க்கரிலேயே ஐந்து நிமிடம் ஊற வைத்து ஒரு சிரிய டப்பியில் மூடி போட்டு மூடி போட்டு வெயிட்டையும் போட்டு வேகவிடவும்.
வெந்து குக்கர் சவுண்டு அடங்கியதும் அதில் உள்ளே வைத்திருக்கும் கடலைப்பருப்பை லேசாக நச்சு போடவும்.
போட்டு கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயையும் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு .கத்திரிக்காயை வெந்ததும் இறக்கிவிடவும்.


சாப்பிடும் அளவு: 8 நபர்கள்

Friday, February 4, 2011

சிரி சிரி சிரி சிரி


No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No: 2

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *


No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!??

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *



No : 5

நடிகர் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு
இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!



No : 1 ( ஹோட்டலில் )

" ஒரு காபி எவ்ளோ..? "

" அஞ்சு ரூபா.. "

" எதிர் கடையில 50 பைசான்னு
போட்டு இருக்கே..?!! "

" டேய் லூசு.., அது ஜெராக்ஸ் காப்பிடா..!! "

* * * * * * * * * * * * * * * * * *

No : 2

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

* * * * * * * * * * * * * * * * * *

No : 3 ( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"

* * * * * * * * * * * * * * * * * *

No : 4 ( Exam Question Paper... )

Sum :
Prove that LHS = RHS

( 2a+3b) X ( 10x+4y)=(9x+6)

ஒரு பையன் இதை எப்படி
Prove பண்ணினான்னா...

Ans :
( 2a+3b) X ( 10x+4y) = (9x+6)

(( 2a+3b) X ( 10x+4y)) X 0 = (9x+6) X 0

0 = 0

Hence Proved LHS = RHS

No: 1

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * *

No : 2 ( கட்சி ஆபீஸ்.. )

தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட
எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!

தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம்
தானே..!

தொண்டர் 1 : அட போப்பா..,
கட்சியை அவரோட மகனுக்கு
எழுதி வெச்சிட்டாரு..!!

* * * * * * * * * * * * * *

No : 3

நிருபர் : நடிக்க வரலைன்னா என்ன
பண்ணியிருப்பீங்க..?

நடிகை : Doctor ஆயிருப்பேன்..

நிருபர் : அதான் நடிக்கவே வரலைல்ல.,
போயி Doctor ஆக வேண்டியது தானே..?!

* * * * * * * * * * * * * *

No : 4

( Exam ஆரம்பிக்கும் முன்... )

மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,
இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?

* * * * * * * * * * * * * *
No: 5

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..

* * * * * * * * * * * * * *

No : 6

நண்பன் 1 : காலையில உங்க வீட்டுக்கு
வந்து இருந்தேன்.., உங்க அப்பாகிட்ட
நீ எங்கேன்னு கேட்டதுக்கு.,
" அந்த மாடு எங்கயாச்சும் ஊர் மேய
போயிருக்கும்னு " சொன்னார்டா..!

நண்பன் 2 : என்கிட்ட
" அந்த எருமை வந்துட்டு போச்சுன்னு "
சொன்னாரு.., அது உன்னைத் தானா..!!
--




--
BY

-Thanks & Regards-
K.veerakumar

Thursday, February 3, 2011

புல்ஜெய் ஆஃப் பாயில் - bull's eye





புல் ஜய்

ஆம்லேட் , ஆஃப் பாயில் 

ஆம்லேட் போடுவது எப்படி ஆஃப் பாயில் சில பேர் விரும்பி சாப்பிடுவாங்க,.
சத்திழந்தவங்க ,காலையில் இது போல் இரண்டு போட்டு சாப்ப்பிட ரொம்ப நல்லது, புது மண தம்பதிகளுக்கு செய்து கொடுப்பாங்க..

தவ்வாவை காய வைத்து எண்ணை (அ) பட்டர்( நெய்) விட்டு முட்டைய ஊற்றியதும், தீயின் தனலை குறைத்து வைக்கனும். 
சில பேர் சரியாக வேகாம எடுப்பாங்க மேலே உள்ள வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவும் வெந்து இருக்கனும்,  ( மேலே மட்டும் மஞ்சள் கரு உடையாமல் நல்ல வெந்து வரனும் என்றால். தவ்வாவில் ஊற்றியதும், ஆப்பம் செய்வது போல் ஒரு மூடி போட்டு மூடி வைக்கனும்ம்) வெந்ததும்  மிளகு உப்பு தூவி இரக்கவும்.
பன் , பிரெட் , ரொட்டி சப்பாத்தி அனைத்திற்கும் பொருந்தும் 


மாலை நேரம் பசி எடுத்தால் அவசரத்துக்கு பசி எடுத்தால் முட்டை விரும்பிகள் இது போல் டபுள் ஆம்லெட், போட்டு சாப்பிடலாம்.,

டபுள் ஆம்லேட் என்பது இரண்டு முட்டையையும் ஒண்றாக ஊற்றி மஞ்சள் கரு உடையாமல் ஊற்றிய இடத்தை விட்டு நகராமல் வெந்து எடுக்கனும்.
இங்கு துபாயில் ஹாஸ்பிட்ட்டலில் குழந்தை பிறந்ததும் ,  காலை நேர சிற்றுண்டி ஓட்ஸ், இரண்டு ப்ரெட் ஸ்லைஸ், ஆஃப் பாயில் , ஒரு பழம் கண்டிப்பாக இருக்கும்.
 இதே போல் அவித்த முட்டையும் அரை வேகாடில் செய்து ப்ரெட் பன்னுடன் சாப்பிட்டால் எண்ணையில்லாத டயட் உணவாகவும் ஆகும்.
இது என் பிள்ளைகள் ஹஸுடைய பேவரிட், என் அம்மாவுக்கும் நான் செய்து கொடுக்கும் இந்த புல் ஜெய் ரொம்ப பிடிக்கும்.




இந்த படம் குட்டி முட்டை ஐந்து

ஒரு முட்டைய நல்ல அடித்து அதில் மிளகு தூள், உப்பு தூள் கலக்கி குட்டி குட்டியா ஐந்து முட்டை ஊற்றனும். குட்டி பன்னில் வைத்து ஆபிஸ் ,எடுத்து செல்ல , குழந்தைகளுக்கு கொடுத்தனுப்ப கியுட்டான சாண்ட் விச்.

இன்னொரு முறை ஒரு முட்டையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் தேவைக்கு சேர்த்து குட்டி குட்டியா ஐந்து ஊற்றனும்.


டிஸ்கி: சின்னதில் 7 வகுப்பு படிக்கும் போது அம்மா டெலிவரிக்கு போ ய் விட்ட போது அப்பாவுக்கும் தங்கை களுக்கும் நான் செய்து கொடுத்த என் முதல் சமையல் இந்த குட்டி முட்டை. குக்கரில் சாதம் வைத்து வெரும் ரசம் , அல்லது புளி குழம்பு இந்த முட்டை, துணைக்கு , கடையில் பொட்டலம் கட்டி வரும் பகோடாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Wednesday, February 2, 2011

My Red Balloon

















ரொம்ப பேன்னு கத்து ர குழந்தையும் பலூன கையில் கொடுத்தீங்கனன வாய கப்புன்னு பொத்திடும். பச்ச குழந்தைகள் உள்ள வீட்டில் அங்காங்கே பலூன கட்டி சுவரில் ஒட்டி வைத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் அதிகமா அழுகையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

நான் இது வரை குழந்தை வளர்பின் போது பார்த்து கொண்ட எல்லா குழந்தைகளுக்கும் இது போல் நிறைய பலூன் வாங்கி  கையில் கொடுத்து விட்டு வாயில் என் சுவையான சமையலை கொடுத்து விட்டால் எல்லா குட்டீசுக்கும் சந்தோஷம் தான் . என் குழந்தைகளுக்கும் பலூன் ரொம்ப பிடிகும்.
சரி பலூன் நிறைய வாங்கி கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவது.

இந்த ரைஸ்ம்ஸ் எங்க வீட்டு குழந்தையின் பேவரிட் இது உங்கள் வீட்டு குழந்தைக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்
ஒரே இனி மை ரெட் பலூன் தான் .. ஹாப்பியா பாடுவாங்க... 




தங்கை பையன் ஆகித் விரும்பி பார்க்கும் ரைம்ஸ், இது என் தம்பி பொண்ணு அசலீனாவுக்காகவும், என் ஹஸுடைய தம்பி பையன் ஹுசேனுக்காவும் போட்டது..




Tuesday, February 1, 2011

மேத்தி சப்பாத்தி (டயட்) - methi chappaathi



(டயட் பொடி - சுக்கு, மிளகு,வெந்தயம்,கருவேப்பிலை) எல்லாம் சேர்ந்தது ஒரு தேக்கரண்டி


///இந்த ரொட்டி பிரெஷர்,சுகர், கொலஸ்ராயில் ஹார்ட் பிராப்லம் மற்றும் டயட் செய்பவர்களுக்கு ஒரு நல்ல டிஷ் ஆகும்.