Sunday, August 14, 2011

சுதந்திர தின ஊத்தாப்பம்





தேவையானவை

தோசை மாவு - இரண்டு பெரிய குழிகரண்டி

கேரட் துருவியது - தேவைக்கு

வெங்காயம் - தேவைக்கு

கொத்துமல்லிகால் கப்,பச்சமிளகாய்-1 கொட மிளகாய் கால் கப்

எண்ணை + நெய் - சிறிது



//சுந்தந்திர தின ஊத்தாப்பம் அருசுவை மற்றும் தமிழ் குடும்ப , பிலாக் தோழி விஜி செய்தது பார்த்து முன்பு செய்தது.இப்ப தான் போஸ்ட் பண்ண முடிந்தது. என் முறைப்படி செய்துள்ளேன்.//



செய்முறை

தோசை தவ்வாவை காயவைத்து தோசைமாவை ஒரு குழிகரண்டி எடுத்து தடிமனாக ஊற்ற்வும், பாதி வேகும் போது துருவிய கேரட், அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள கொத்துமல்லி, பச்சமிளகாய், கொடமிளகாயை வரிசையாக தூவி  சுற்றிலும் எண்ணை + நெய் சிறிது ஊற்றி முடி போட்டு வேகவிடவும்.
வெந்ததும் தோசையை திருப்பி போட்டு இரண்டு நிமிடத்தில் எடுத்து விடவும், திருப்பி போடமலும் எடுக்கலாம்/.


சுதந்திர தின கடல் பாசி

பதிவுலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள். அகிம்சை முறையில் போராடிய காந்திஜீயை நினைவு கூறுங்கள்..



Thursday, August 11, 2011

டயட் நோன்பு கஞ்சி - Deit Ramadan Soup

டயட் நோன்பு கஞ்சி


நோன்பு கஞ்சி இல்லாத நோன்பே கிடையாது. வருட வருடம் நோன்பு வந்து விட்ட்து என்றால் மாலை இஃப்தாருக்கு அனைவரின் இல்லத்திலும் தயாரிப்பது நோன்பு கஞ்சியும் அதுக்கு துணையா பஜ்ஜி கட்லெட் சமோசா இதில் ஏதாவது ஒன்று. காலையில் இருந்து நோன்பு நோற்று மாலை நோன்பு திறக்கும் போது இந்த கஞ்சியை முதலில் குடிப்பதால் வயிறு குளிர்ந்து எந்த உபாதையும் இல்லாமல் இருப்ப்து நோன்பு கஞ்சி தான், இது ஊருக்கு ஊர் செய்முறைகள் மாறுபடும். நான் பல முறைகளில் செய்து பார்த்தாச்சு, இப்ப நேற்று செய்த்து எண்ணையில்லாமல் அதாவது தாளிப்பு இல்லாமல் செய்து பார்க்கலாம் என்று செய்தேன். குடிக்க பாகமாக அருமையாக இருந்த்து.



இதில் எனக்கு ரொம்ப பிடித்த்து சென்னையில் பள்ளி வாசல்களில் கொடுக்கும் நோன்புகஞ்சி சூப்பர் அது மொத்த்மாக பெரிய தேக்‌ஷாவில் செய்வதால் சுவை இன்னும் கூடும்.

கஞ்சி குடித்துவிட்டு கண்டிப்பாக லெமன் ஜூஸ் குடிக்க ரொம்ப பிடிக்கும்/



தேவையானவை

பொடித்த நொய் (அரிசி பொடித்த்து) – அரை டம்ளர்

கடலை பருப்பு – இரண்டு மேசைகரண்டி

கேரட் – ஒரு சிறிய துண்டு

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

பச்ச மிளகாய் – ஒன்று

உப்பு – தேவைக்கு

பொடியாக அரிந்த இஞ்சி - அரை ஸ்பூன்

பொடியாக அரிந்த பூண்டு - முன்று

கொத்துமல்லி தழை – சிறிது

புதினா – சிறிது



மட்டன் (அல்லது) சிக்கன் கீமா – 100 கிராம்

மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

உப்பு – கால் தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி (பட்டை,ஏலம்,கிராம்பு தூள்)



செய்முறை



அரிசியை பொடித்து நொய்யாக அரை டம்ளர் எடுத்து அத்துடன் கடலை பருப்பை ஊறவைக்கவும்.

கீமா (மட்டன் (அ) சிக்கனை எடுத்து கழுவி சுத்தம் செய்து அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு , கரம் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க் வைத்து கொதி வரும் போது ஊறிய அரிசி + கடலை பருப்பை போடவும்.

தேவைக்கு (ஒரு ஸ்பூன் ) உப்பு சேர்த்து கேரட் துருவி போட்டு, இஞ்சி , பூண்டு, வெங்காயம் அரிந்து போட்டு, தக்காளியை நீளவாக்கில் நான்காக அரிந்து சேர்த்து , பச்சமிளகாயையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க விட்டு வேக விடவும்.

நன்கு வெந்து கொண்டு இருக்கும் போது வெந்து வைத்துள்ள கீமாவையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கடைசியாக கொத்துமல்லி தழை, புதினா, ஒரு ஸ்பூன் நெய் விட்டு இரக்கவும். தேவைபட்டால் சிறிது தேங்காய் பவுடர் கரைத்து ஊற்றிக்கொள்ளலாம்.



பிரஷர் , சுகர் உள்ளவ்ர்கள் பிரியாணி போல் தாளித்த கஞ்சி அதிகம் சாப்பிட முடியாது. எண்ணை இல்லாமல் இருப்பதால் இதைதாராளமாக நல்ல குடிக்கலாம்.தாளிப்பு சுவைதான் பிடிக்கும் என்பவர்கள் கடைசியாக சிறிது எண்ணை + நெய் கலந்து பட்டை சிறிய துண்டு போட்டு வெங்காயம், சிறிது இஞ்சி பூண்டு, கருவேப்பிலை போட்டு தாளித்து குடிக்கலாம்.

பேச்சிலர்களுக்கு இந்த முறை கொஞ்சம் ஈசியாக இருக்கும், குக்கர் இல்லாதவர்கள் இப்படி சட்டியில் வெளியில் கஞ்சியை வேகவைத்து செய்யலாம்.

Iftar Menu
கீமா கஞ்சி ,வாழக்காய் பஜ்ஜி , தர்பூஸ், லெமன் ஜூஸ், பேரிட்சை புதினா சட்னி,பழங்கள்



சிக்கன் சூப், ரோஸ் மில்க், உளுந்து வடை, கல்கண்டு வடை, வெங்காய பஜ்ஜி,கருப்பு கொண்டைகடலை சுண்டல், ஜவ்வரிசி கடல் பாசி, பழங்கள்


மேங்கோ  கடல் பாசி, சாக்லேட் கடல் பாசி, ரூ ஆப்ஷா கடல் பாசி
இப்படி கஞ்சியில் வடை பிச்சி போட்டு கூடவே புதினா சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பர் தான்..






டிஸ்கி: என்ன படிச்சாச்சா பயனுள்ளதா இருந்ததா? அப்படி காசா பணமா உங்கள் கருத்தையும் சொல்லிட்டு ஒரே ஒரு ஓட்டையும் போட்டுட்டு தான் போறது.

Tuesday, August 9, 2011

சாப்ரான் ஜின்ஜர் கிரேப் கூலர் - Saffron ,Ginger Grape Cooler



பித்தம்,சூடு, வயிற்று வலி, பெண்களுக்கு மாத விடாய் காலத்து வயிற்று வலிக்கு மிகவும் நல்லது. நோன்புகாலத்திற்கு ஏற்ப அருமையான பானம்.

தேவையான பொருட்கள்
  • கருப்பு திராட்சை - அரை கிலோ
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • சர்க்கரை - ஐந்து டேபுள் ஸ்பூன்
  • தண்ணீர் - இரண்டு கப்
  • இஞ்சி சாறு - மூன்று டேபுள் ஸ்பூன்
  • குங்மப்பூ - இரண்டு இதழ்
  • ஐஸ் கியுப்ஸ் - ஆறு



செய்முறை
  • திராட்ச்சையில் ஒரு பத்து பதினைந்து எடுத்து மேல் தோல் உரித்து கொட்டையை எடுத்து ஒவ்வொன்றையும் நான்காக அரிந்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • மீதி உள்ள திராட்சையில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு மிக்சியில் விப்பரில் ஒடவிட்டு, மிக்சியில் நல்ல பத்து நிமிடம் ஓட விட்டு வ்டிகட்டி பெரிய ஜுஸ் டம்ளரில் ஊற்றி கட் பண்ணி வைத்துள்ள திராட்சையை எல்லா டம்ளரில் போடவும்.

குறிப்பு:
திராட்சை சிலது புளிக்கும் ஆகையால் இஞ்சி சாறு சேர்க்க வேண்டும். திராட்சை குளுமை சிலபேருக்கு தொண்டை பிடிக்கும் ஆகையால் குங்மப்பூ சேர்த்தால் இஞ்சி, குங்குமப்பூ சேர்ந்து சளியை கட்டு படுத்தும்.




Monday, August 8, 2011

பாலக் கீரை போண்டா,பேரிட்சை புதினா துவையல் - Palak Bonda,dates mint chutney




நோன்பு காலங்களில் கஞ்சிக்கு பகோடா, உளுந்து வடை, போண்டா, சமோசா இப்படி ஏதாவது கூட வைத்து சாப்பிட இது போல அயிட்டங்களில் ஏதாவது ஒன்றும் கூடவே சட்னியும் இருந்தால் தான் அது கஞ்சி சாப்பிட காம்பினேஷன் சரியாக இருக்கும், சட்னி அதிலும் 5 பேரிட்சையை புதினாவுடன்

Saturday, August 6, 2011

பெசரட் குழி பணியாரம், பாசி பயிறு இனிப்பு சுண்டல் - Pesarat kuzipaniyaram, sweet sundal



பெசரட் குழிபணியரம்

தேவையானவை

பச்சரிசி  அரை கப்
முழு பாசி பயிறு  - அரை கப்
இஞ்சி - அரை இன்ச் அளவு
பச்சமிளகாய் - இரண்டு

Wednesday, August 3, 2011

துபாயில் இஃப்தார் -பேச்சுலர்கள் பாகம் - 3




துபாயில் பேச்சிலர்களின் வாழ்க்கை பாகம் - 1

துபாயில் பேச்சிலர்களின் வாழ்க்கை பாகம் - 2


நோன்பு காலம் வந்துவிட்டால் துபாயில் வேலை நேரம் அரை நாள் தான்.
வேலை முடிந்ததும் பேச்சுலர்கள் ரூமில் நன்கு ஓய்வெடுத்து கொண்டு பிறகு மாலை இஃப்தாருக்கு ரெடி பண்ணுவார்கள். ஆனால் காலை சஹருக்கு தான் சில பேச்சிலருக்கு

Monday, August 1, 2011

நோன்பு கால சமையல் டிப்ஸ் = 2



நோன்புகால சமையல் டிப்ஸ் - 1


1. தினம் ஜூஸ் குடிப்பதால், பழங்கள் சாப்பிடுவதால் தொண்டை கட்டும், சிலருக்கு தொண்டை கர கரப்பு ஏற்படும், தராவீஹ் தொழும் போது கனைத்து கொண்டே இருப்பார்கள், அதற்கு சுக்கு, ஏலம், கிராம்பு, மிளகு தட்டி போட்டு டீ குடிக்கலாம். இல்லை இதை பொடித்தும் டீ தூளுடன் கலந்து கொள்ளலாம்





2.கடல் பாசி செய்து ஆறவைக்கும் போது காய்ச்சியதும் சின்ன தட்டில் ஊற்றி மேல கீழ கொட்டுவதை விட இப்படி ஒரு பெரிய சட்டியில் காய்ச்சி ஆறவத்து குளிர வைக்கலாம். ஆறி கட்டி ஆகி குளிர்ந்ததும் துண்டுகள் உடையாமல் தனித்தனியாக எடுக்க வரும்.









3. தினம் செய்யும் கஞ்சிக்கு அரிசியை பொடித்து வைத்து கொள்ள வேண்டும் அதன் அளவு ஒரு கிலோ அரிசியை மிக்சியில் நன்கு பொடித்து கால் கிலோ அளவிற்கு பச்ச பருப்பை கருகாமல் வருத்து , ஒரு மேசை கரண்டி அளவிற்கு வெந்தயம் சேர்த்து கலந்து வைக்கவும்.தினம் தேவைக்கு அரை டம்ளர் ஒரு டம்ளர் என்று எடுத்து செய்து கொள்ளலாம்.





4. சமோசா, ஸோமாஸி கட்லெட் போன்றவற்றை அதிகமாக செய்து பிரிட்ஜில் ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும், ஒரு மணி நேரம் கழித்து அது நல்ல பிரீஜ் ஆகி இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து ஒரு கவரில் அல்லது கண்டெயினரில் போட்டு வைத்து கொள்ளலாம். நோன்பிற்கு பொரிக்கும் சமையத்தில் அரை மணி நேரம் முன் எடுத்து ஒரு தட்டில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அடுக்கி வைத்து ஐஸ் விட்டதும் பொரித்து கொள்ளலாம்.




5. இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாவகையான அசைவ சமையலுக்கும் தேவைபடும், அது ஒரு கிலோ இஞ்சிக்கு, 600 கிராம் பூண்டு சேர்த்து அரைத்து லேசாக உப்பு தூவி ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளலாம். சில பேருக்கு இஞ்சி பூண்டு அரைத்து வைத்தால் பச்சையாகிவிடும் அது பூண்டு அதிகம் சேர்த்து இருந்தால் அப்படி ஆகும்.






6. தினம் ரொட்டி , சப்பாத்தி பரோட்டா சாப்பிடுபவர்கள், மாவு குழைத்து உருண்டைகள் போட்டு இப்படி மாவு தூவி டைட்டான கன்டெயினரில் போட்டு இப்படி வைத்து கொண்டால் சுடும் போது எடுத்து சுட்டு சாப்பிட்டு கொள்ளலாம். ரொம்ப ஈசியாக இருக்கும் தண்ணீர் விடாமல் இருக்கும்.








7.சிலர் சகருக்கு சாப்பிட சாதம் பிடிக்காது அவர்கள் இது போல் மொத்தமாக ரொட்டியை அடுக்கு போட்டு லேசாக எண்ணையில்லாமல் இரண்டு பக்கம் திருப்பி போட்டு ஆறவைத்து மொத்தமாக அடுக்கிவைத்து கொள்ளலாம். தேவைக்கு எடுத்து எண்ணை விட்டு சுட்டு சாப்பிடவும்.இது என் அண்ணி எனக்கு சொன்ன டிப்ஸ்

8. நோன்பில் சகரில் ஈசியாக சாப்பிட்டு முடிக்க கட்டு சாதம் (லெமென் ரைஸ், புளி சாதம், லைட் மசாலா கொடுத்து பிரியாணி, தக்காளிசாதம், தயிர் சாதம், மோர்குழம்பு, ரசம் வகைகள்
சேமியா ) இதுபோலும் செய்து சாப்பிடலாம்.



9. சிலர் மீதியான சாதத்தில் கஞ்சி செய்வார்கள் அது அந்த அளவிற்கு டேஸ்ட் வராது , அரிசி பொடித்து நொய்யில் போடுவது தான் நல்ல இருக்கும்.


10. தினம் ரசம் செய்ய, புளி குழம்பு செய்ய புளி பேஸ்ட் செய்து பிரீஜ் செய்து வைத்து கொள்ளுங்கள், தேவைக்கு உடனே இரண்டு முன்று கியுப்ஸ் எடுத்து போட்டு கொள்ளலாம்.புளி பேஸ்ட் செய்வது (கால் கிலோ அளவிற்கு புளி எடுத்து குக்கரில் முன்று நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இற‌க்குங்கள் ஆறியதும் கரைத்து வடிகட்டி ஐஸ்கியுப்கள் அல்லது சின்ன கவர்களில் ஒரு நாளைக்கு தேவையான அளவை கட்டி வைத்து கொள்ளலாம்.



11. குருமா, கஞ்சிக்கு தினம் தேங்காய் பால் தேவைபடும் அதற்கு தேங்காய், முந்திரி பாதம் சேர்த்து அரைத்து ஐஸ் கியுபுகளாக்கி பிரீஜரில் வைத்து கொண்டால் வேலை சுலபம். வெளி நாடு களில் தேங்காய் பொடி கிடைக்கிறது.
ஏற்கனவே முன்பு போட்ட பதிவுதான், இருந்தாலும் இப்ப எல்லோருக்கும் உதவும்.

டிஸ்கி 1.8.2011
இந்த தடவை நோன்பு நேரம் அதிகமாக உள்ளதாலும் சரியான வெயிலாக இருப்பதாலும் வாய் புண்கள் வயிற்று புண்கள் அதிகம் வரலாம், அதற்கு பானவகைகள், பழ சாறுகள், ஜவ்வரிசி கஞ்சி ,கீர், பாயாசம் என்று செய்து தினமும் சேர்த்து கொண்டால் நல்லது.