Tweet | ||||||
Wednesday, October 29, 2014
வெண்டைக்காய் வறுவல்- Ladies Finger Stir Fry
வெண்டைக்காய் வறுவல்/பொரியல்/Ladies Finger Stir Fry
வெண்டைக்காய் மூளை வளர்சிக்கு ஏற்ற காய், வெரும் தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் ரொம்ப சிம்பில் பேச்சிலர்களும் ஈசியாக செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்.
வெண்டைக்காய்
– கால் கிலோ
சாம்பார் பொடி
– ஒரு தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை –இரண்டு
தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்
பருப்பு, கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது
வெங்காயம் பொடியாக
அரிந்தது – ஒரு மேசைகரண்டி
காஞ்ச மிளகாய்
– 3 எண்ணிக்கை
செய்முறை
வெண்டைக்காயை கழுவி
கொண்டையை யும் வாலையும் அரிந்து விட்டு நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற காடாயில்
எண்ணை விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெண்டைக்காயை
சேர்த்து நன்கு வதக்கி உப்பு தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறி சிறிது
தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
வேக வைக்கும் போது தீயின் தனலை மிகக்குறைவாக
வைக்கவும். 5 லிருந்து 7 நிமிடங்களுக்குள் வெந்துவிடும்.
பேச்சிலர்களுக்கும்
ஈசியாக செய்யக்கூடிய வெண்டைக்காய் வறுவல் ரெடி.
வெறும் மோர், ரசம்
தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்.
கவனிக்க : வெண்டைக்காயை
அரிந்து விட்டு கழுவக்கூடாது , கழுவிட்டு தான் அரியனும், இல்லை என்றால் கொழ கொழப்பாகிவிடும்.
சாம்பார் பொடிக்கு
பதில் மிளகாய் தூளும் போட்டு செய்யலாம்.
Labels:
சைவம்,
பக்க உணவு,
பேச்சுலர் சமையல்,
பொரியல்,
வறுவல்
Thursday, October 23, 2014
Free E Book - Indus Ladies 100 Kids Lunch Box Recipes
குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொண்டு செல்ல சுலபமாக செய்ய இண்டஸ் லேடிஸ்டாட் காமில் 100 வகையான லன்ச் பாக்ஸ் ரெசிபிகளில் என் ரெசிபியும் இது நான் புதுசாக முயற்சி செய்த ரெசிபி தந்தூரி டோஃபு , பால்க் மக்ரோனி
இது ஆங்கில பிலாக்கில் போட்டுள்ளேன். கூடிய விரைவில் இங்கு பதிவிடுகிறேன்.
( முக நூலில் மெசேஜ் மூலம் ரெசிபி அனுப்புமாறு கேட்டு கொண்டார்கள்)
இந்த அனைத்து சமையல் வகைகளும் கண்டிப்பாக அனைத்து தாய்மார்களுக்கும் , புதுசாக சமைப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்
Indus Ladies - Kids Lunch box recipes
தந்தூரி டோஃபு , பாலக் மக்ரோனி சுட்டியை சொடுகி பார்க்கவும்.
Click the link to see the recipe Tandoori Tofu with Spinach Macaroni - Step by Step
தீபாவளி கொண்டாடும் அனைத்து தோழ தோழியர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் புது ரெசிபி இனிப்பு வகைகள் செய்து வைத்தும் பதிவிட முடியவில்லை.
கீழே பழைய ரெசிபிகள் லின்க் கொடுத்துள்ளேன்.
Tweet | ||||||
Labels:
book,
kids lunch box recipe,
குழந்தை உணவு,
சந்தோஷம்,
டிபன் வகைகள்,
லன்ச் பாக்ஸ்
Sunday, October 12, 2014
தில் கீரை இந்தியன் டோனட் - Dill Leaves Vadai
தில் கீரை உளுந்து வடை
நோன்பு நேரத்தில் யாரும் காய்கறி வகைகளோ அல்லது கீரை வகைகளோ சேர்ர்த்து கொள்வதில்லை, கஞ்சி செய்யும் போது காய்கறிகளையும், உளுந்து வடை , பருப்பு வடை செய்யும் போது கீரை வகைகளையும் சேர்த்து கொண்டு ஆரோக்கியமான சிற்றுண்டியை தயாரிக்கலாம்.
Step by Step Dill Leaves Doughnut Click here
தேவையான பொருட்கள்.
உளுந்து பருப்பு - 200 கிராம்
பச்ச மிளகாய் - 3
உப்பு - முக்கால் தேக்கரண்டி ( தேவைக்கு)
தில் கீரை - ஒரு கட்டு பொடியாக நறுக்கியது
வெங்காயம் - இரண்டு பொடியாக நறுக்கியது
அலங்கரிக்க தில் கீரை சிறிது
எண்ணை - பொரிகக் தேவையான அளவு
செய்முறை
1. தில் கீரையை மண்ணில்லாமல் கழுவி அதை பொடியாக நறுக்கி தண்ணீரை வடிக்கவும்.
2.உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு வடிக்கட்டி , அத்துடன் பச்சமிளகாய் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
3.அரைத்த உளுத்தமாவில் வடிகட்டிய தில் கீரை, அரிந்த வெங்காயம் சேர்த்து நன்கு பிசறி வைக்கவும்.
4.ஒரு வாயகன்ற இரும்பு வானலியில் எண்ணையை காயவைத்து வடை மாவை கமலா பழ சைஸ் உருண்டைகளாக பிடிதது வட்ட வடிவமாக தட்டி கட்டை விரலால் நடுவில் ஓட்டை போட்டு தீயின் தனலை மிதமாக வைத்து கருகாமல் பொரித்து எடுக்கவும்.
சுவையான அயர்ன் சத்து மிகுந்த உளுந்து வடை தயார்.
Tweet | ||||||
Labels:
சைவம்,
நோன்பு கால சமையல்,
மாலை நேர சிற்றுண்டி,
வடை பஜ்ஜி
Saturday, October 11, 2014
கேழ்வரகு அடை - Ragi Adai
தினம் அரிசி மாவு தோசை சாப்பிடுவதற்கு பதில் இப்படி கேழ்வரகு அல்லது கோதுமை மாவில் தோசை சுட்டு சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
கேழ்வரகில் அயர்ன் சத்தும் நிறைய இருக்கிறது.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 150 கிராம்
கோதுமை மாவு - 50 கிராம்
ரவை - 1 மேசைகரண்டி
சிவப்பு பச்ச மிளகாய்
சின்ன வெங்காயம் - 10
கருவேப்பிலை - 5 இதழ் பொடியாக அரிந்தது
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசை கரண்டி
செய்முறை
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் அடை பதத்துக்கு கரைத்து 5 நிமிடம் ஊற்விடவும்.
ஒரு கரண்டி மாவு எடுத்து அடை போல ஊற்றவும்.
திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணை விட்டு சற்று மொருகவிட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான சத்தான கேழ்வரகு அடை ரெடி
Tweet | ||||||
Thursday, October 9, 2014
புற்றுநோய்க்கு (Blood Cancer) மருந்து கண்டுபிடிப்பு
புற்றுநோய் இன்னும் பெரிய உயிர்கொல்லியாய் பல பேரை தாக்கி கொண்டு தான் இருக்கிறது, நிறைய பேர் மறந்து போயிருப்பீர்கள்.
அடிக்கடி இது போன்ற பதிவுகள் போடுவதன் மூலம் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்
சரியான மருத்துவம் மூலம் சிலருக்கு சரியாகி நல்லபடியாக வாழ்ந்துகொண்டி இருக்கிறார்கள்.சிலருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இறந்து கொண்டும் இருக்கிறார்கள்.
உண்ணும் உணவை சரி படுத்தி கொண்டாலே பல நோய் களும் புற்று நோயும் வராமல் நம்மை பாதுகாத்துகொள்ளலாம்.
கண்டிப்பாக ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் வருடம் ஒரு முறை உடம்பை முழுவதும் பரிசோதனை செய்து கொளவது நல்லது.
நாள்பட உள்ள இருமல் தலை வலி போன்றவைகளை கண்டுக்காமல் விடாமல் உடனே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
ஏற்கனவே இந்த புற்றுநோய்க்கு பல பதிவுகள் போட்டுள்ளேன்.
இதற்காக கட்டுரை மற்றும் டிப்ஸ் எழுதி , டாக்டர்களால் தேர்வு செய்ய பட்டு பரிசும் பெற்றுள்ளேன்.
ஆறுதல் பரிசாக ருபாய் 1000 க்கு உரிய புத்தகங்களும் உடுமலை டாட் காம் முலமாக .கிடைக்க பெற்றேன்.
அந்த பதிவுகளை மீண்டும் உங்கள் அனைவருக்கும் நினை படுத்து கிறேன்.
- கேன்சர் நோயிக்கான உணவுவகைகள்.
- ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை
- புற்றைவெல்வோம் வருமுன் காப்போம். (பெண்களுக்கு மட்டும்)
- புற்றை கொள்ளும் செந்நிற பானம்
- கேன்சர் அபாயம் - லேடிஸ் ஸ்பெஷல் மாத பத்திரிக்கையில் என் பதிவு.
=======================
புற்றுநோய்க்கு (Blood Cancer) மருந்து கண்டுபிடிப்பு!******Medicine has been found for blood cancer.
அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் நிலவட்டும்மாகுக.
இதுவரை கொடிய நோயாக
இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை
முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....
தேவையுள்ளவர்கள் தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள
அணுக வேண்டிய முகவரி :----
Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.
PHONE:---------
044 -24910754
044 -24911526
044 -22350241
மேலே உள்ள தகவல் எனக்கு மெயில் மூலம் வந்தது,
பலருக்கு இந்த அட்ரஸ் உதவும் என்று தான் பகிர்ந்துள்ளேன்.
இதில் சொல்லப்பட்டிருந்த மருந்தின் பெயரை மட்டும் நீக்கி விட்டேன்.
என்ன மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை படி கேட்டு சாப்பிடுங்கள்.
======================
கேன்சர் நோயாளிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவு.
1. அவித்த முட்டை வெள்ளை கரு மட்டும் மூன்று
2. ஆப்பில் அல்லது ஆப்பிள் ஜூஸ்
3. சிக்கன் எலும்பு சூப்
4. காய்கறி சூப்
5. ராகி கஞ்சி
Cancer Awareness
Tweet | ||||||
Labels:
Cancer Awareness,
கேன்சர்,
மருத்துவ குறிப்புகள்,
விழிப்புணர்வு
Monday, October 6, 2014
புனித தியாக திருநாள் வாழ்த்துக்கள்/ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
இந்தியாவில் இன்று பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் புனித தியாக திருநாள் வாழ்த்துக்க்ள், இந்த பெருநாள் அன்று இஸ்லாத்தின் 5 கடமைகளும் ஒன்றான ஹஜ்செல்வதை வசதி உள்ளவர்கள் ஹஜ் சென்று தங்கள் கடமையை நிறைவேற்றுவார்கள்.
ஹஜ் க்கு செல்லாதவர்கள் பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு நோன்பு வைக்கனும்.இந்த நோன்பு வைப்பதால் நாம் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்.
இந்த நோன்புக்கு பெயர் "அரஃபா நோன்பு" என்பதாகும்.
ஹஜ் க்கு சென்றவர்கள் அரஃபா என்ற மைதானத்தில் ஒன்று கூடுவார்கள்.
நானும் குடும்பத்துடன் ஹஜ் செல்லவேண்டும் என்று நாட்டம் வைத்துள்ளேன். அதை அல்லாஹ் சீக்கிரம் நிறைவேற்றி வைக்க எனக்காக துஆ செய்யுங்கள்.
நோன்பு பெருநாள் , ஹஜ் பெருநாள் தொழுகை என்பது , இறைவனுக்கு நன்றி செல்லுத்தும் பொருட்டு உலகில் உள்ள அனைத்து முஸ்லீம் களும் காலை சூரியன் உதமாகும் போது இரண்டு ரக் அத்தை கொண்ட தொழுகையை நிறைவேற்றுவதாகும்.
ஹஜ் பெருநாள் தொழுது முடித்து வந்து நாம் சமைத்து வைத்திருக்கும் இனிப்பு பண்டத்தை சாப்பிடவேண்டும்.
எப்போதும் வெளிநாடுகளில் ஒரு நாள் முன் பெருநாள், மறுநாள் இந்தியாவில் வரும். இந்த முறை இரண்டு நாள் தள்ளி வந்துள்ளது.
இங்கு துபாயில் சனிக்கிழமை - 04.10.14 அன்று பெருநாள் நல்லபடியாக முடிந்தது.
நாங்கள் இங்குள்ள ஈத்கா என்னும் தொழுகை திடலில் குடும்பத்துடன் சென்று தொழுது வந்தோம்.
இந்த தடவை 5 வருடமாக எங்க கூட இல்லாமல் இந்த முறை என் பெரிய பையன் எங்களுடன் வந்து சேர்ந்து பெருநாள் கொண்டாடியது மிக்க மகிழ்சி.
இந்த வருடம் ஹஜ் பெருநாளுக்கு நான் செய்தது.
காலை டிபன்
- ஷீர் குருமா/Sheer Kurma
- மட்டன் சேமியா/Mutton Semiya
- ஊறுகாய் / Pickle
- இஞ்சி டீ/Ginger Tea
மதியம்
- மட்டன் பிரியாணி(Mutton Biriyani)
- எண்ணை கத்திரிக்காய்(ennai kaththirikkaay) (Bringal Curry)
- ஓமம் தயிர் பச்சடி (Ajwain Raita)
- பாதாம் ஹல்வா ( Badam /Almond Halwa)
- சாலட் ( Salad)
- லெமன் பிளாக் டீ ( Lemon Black Tea)
இரவு
- ப்ரட் புல்ஸ் ஐ ( Bread Bulls Eye)
- மசாலா டீ ( Masala Chai)
படங்கள் பிறகு இணைக்கிறேன்
ஹஜ் பெருநாளுக்கு எல்லாரும் ஆடு அறுத்து அதை உறவினர்களுக்கும் , தெரிந்தவர்களுக்கும் பண்டமாற்று போல் ஒருவருக்கு ஒருவர் பங்கிட்டு கொடுப்பார்கள், அப்படி எல்லாவீடுகளில் இருந்து வரும் கறிகளை பதப்படுத்துவார்கள். முன்றில் ஒரு பங்கை ஏழைகளுக்கும் கொடுப்போம்.
போன வருடம் ஹஜ் பெருநாள் அன்று ஊரில் இருந்தேன். அப்போது மாமியார் வீட்டில் , குர்பாணி கொடுத்தபோது கிட்னி, ஈரல், மட்டன் எல்லாவகைகளையும் தனித்தனியாக செட்டி நாடு மட்டன், மிளகு ஈரல், கிட்னி ஃப்ரை, என பலவகைகளை எல்லோருக்கும் செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தினேன், எல்லாரும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டது போல் இருக்கு என்றார்கள்.
அம்மாவீட்டில் கறி தக்குடி எல்லாரும் சேர்ந்து போட்டோம்.
மட்டன் தக்குடி குர்பாணி கறியில் செய்வதற்கு ஏற்ற சமையல் கறி தக்குடி.
முக்கியாமாக துண்டு கறிகளை உப்பு கண்டம் போடுவார்கள்.உப்பு கன்டம் கறி தயாரித்து வெளிநாடுகளில் உள்ளவர்கள் பேக்கிங் செய்து அனுப்புவார்கள்.
கறியை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அதில் அவரவர் விருப்ப மசாலாவை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் ஊறவைத்து சனல் கயிற்றை கோணி ஊசியில் கோர்த்து இந்தகறியை தூர தூரமாக கோர்த்து கொடுப்போல் காயவைக்கவேண்டும்.காய்ந்த கறியை ஈரமில்லாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து தேவைக்கு தட்டி பொரித்து சாப்பிடலாம்.
இதை தண்ணீர் படாமல் வைத்து தேவைக்கு எடுத்து தட்டி அப்பளம் பொரிப்பது போல் பொரித்து ரசம் சாதம், பருப்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.ஏற்கனவே 4 வருடம் முன் போட்ட பதிவு தான் மீண்டும் இப்போது லின்க் கொடுத்துள்ளேன்.
நிறைய பேருக்கு வந்து குமியும் கறியை வைத்து என்ன செய்வதென்று தெரியாது
இந்த குர்பாணி கறியை வைத்து
1. உப்பு கன்டம்
2.கறி தக்குடி
3. ஸ்பேர் பாட்ஸ் பிரியாணி
4. கட்லட் செய்தும் ஃப்ரீஜரில் ஸ்டோர் செய்யலாம்.
http://samaiyalattakaasam.blogspot.com/2010/11/uppu-kandam.html
இதில் மசாலாவகைகள் அவரவர் விருப்பத்துக்கு, சீரகதூள் , கரம்மசாலா தூள் சோம்பு தூள் வகைகளும் சேர்த்து கொள்வதாக இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம்.,
ஆட்டு ஈரல் பிரியாணி
இதை ஸ்பேர் பார்ட்ஸ் ரைஸ் என்று கீரையுடன் செய்வோம் , இந்த ஹஜ் பெருநாளில் செய்யசரியாக இருக்கும். ரெசிபி படங்கள் தான் சரியாக இல்லை.
அனைவருக்கும் புனித தியாக திருநாள் வாழ்த்துக்கள்
Tweet | ||||||
Labels:
குடும்பம்,
சந்தோஷம்,
பெருநாள் வாழ்த்துக்கள்,
வாழ்த்துக்கள்,
ஹஜ் பெருநாள்
Saturday, October 4, 2014
ஆட்டு ஈரல் பாலக் கீரை பிரியாணி (புலாவ்)
அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.
Mitta Khana மிட்டாகானா லின்கை சொடுகி பார்க்கவும்.
ஹஜ் பெருநாளுக்கு எல்லாரும் ஆடு அறுத்து அதை உறவினர்களுக்கும் , தெரிந்தவர்களுக்கும் பண்டமாற்று போல் ஒருவருக்கு ஒருவர் பங்கிட்டு கொடுப்பார்கள், அப்படி எல்லாவீடுகளில் இருந்து வரும் கறிகளை பதப்படுத்துவார்கள்.
அதை உப்பு கண்டம் போடுவார்கள்.உப்பு கன்டம் கறி தயாரித்து வெளிநாடுகளில் உள்ளவர்கள் பேக்கிங் செய்து அனுப்புவார்கள்.இதை தண்ணீர் படாமல் வைத்து தேவைக்கு எடுத்து தட்டி அப்பளம் பொரிப்பது போல் பொரித்து ரசம் சாதம், பருப்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
மட்டன் தக்கடியும் போட்டு குடும்பத்தினருடன் சேர்ந்து விருந்து வைத்து சாப்பிடலாம்.
அதில் இருக்கும் ஈரல், மண்பத்தை போன்றவைகளை இப்படி புலாவ் பிரியாணி போல் செய்யலாம்.
ஆட்டு ஈரல் பாலக் கீரை பிரியாணி (புலாவ்)
தேவையான பொருட்கள்
தேங்காய் சாதம் தாளிக்க
1. தரமான பாசுமதி அரிசி – அரை படி (4டம்ளர்) 800 கிராம்
2. தேங்காய் – அரை மூடி
3. எண்ணை – 100 மில்லி
4. பட்டை - 1, ஒரு இன்ச் சைஸ்
5. கிராம்பு – 2
6. ஏலக்காய் – 2
7. வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
8. இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைகரண்டி
9. கொத்துமல்லி புதினாதழை
10. பாலக் கீரை – இரண்டு கட்டு
11. கடலைபருப்பு – 100 கிராம்
ஈரல் வேக வைக்க
1. ஈரல் – அரை கிலோ
2. எண்ணை – 50 மில்லி
3. வெங்காயம் – கால் கிலோ
4. தக்காளி – கால் கிலோ
5. இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைகரண்டி
6. பச்ச மிளகாய் - 2
7. மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
8. தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
9. உப்பு தூள் – தேவைக்கு
10. கரம் மசாலா தூள் – கால் தேக்க்ரண்டி
செய்முறை
1. முதலில் ஈரலை சுத்த படுத்தி தண்ணீரை வடிக்கவும்
2. கடலை பருப்பை 5 நிமிடம் ஊறவைத்து வேகவைத்து லேசாக மசித்து வைக்கவும்.அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
3. கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கிவைக்கவும்.
5. குக்கரில் எண்ணையை காயவைத்து பட்டை ஏலம் கிராம்பு போட்டு வெடிய விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாடைபோகும் வரை வதக்கி கொத்துமல்லி புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தக்காளிபொடியாக அரிந்து சேர்த்து பச்சமிளகாய் ஒடித்து போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.சேர்க்க வேண்டிய தூள்வகைகள் அனைத்தையும் சேர்த்து ஈரலையும் சேர்த்து குக்கரில் முன்று விசில் விட்டு இரக்கவும்.
6. பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் சேர்த்து வெடிய விட்டு வெங்காயம்,இஞ்சி பூண்டு , புதினா கொத்துமல்லி தழை சேர்த்து தாளிக்கவும்.
7. அடுத்து வெந்த ஈரலை சேர்த்து ஒரு டம்ளருக்கு ஒன்னறை டம்ளர் வீதம் அளந்து ஊற்றவும். 4 டம்ளர் அரிசிக்கு 6 டம்ளர் தேங்காய் பால் ஊற்றவேண்டும்.
8. லேசாக கொதிக்கும் போது அரிசியை களைந்து ஊற்றி உப்பு சரி பார்த்து சேர்க்கவும். அரை பதம் அரிசி வெந்த்தும் வேகவைத்த கடலை பருப்பு, அரிந்து வைத்துள்ள கீரை சேர்த்து முடிபோட்டு தீயின் தனலை சிம்மில் வைத்து20 நிமிடம் தம்மில் விடவும்.
9. சுவையான ஆரோக்கியமான சத்தான ஈரல் கீரை பிரியாணி ரெடி.
இது ஹிமோ குளோபின் அளவு கம்மியாக உள்ளவர்கள் இந்த ஈரல் கீரை பிரியாணியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் இரண்டு மாதத்திற்குள் ஹிமோ குளோபின் அளவு அதிகரிக்கும்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு
ஆயத்த நேரம் : 1 மணி நேரம்
சென்னை ப்ளாசா : https://www.facebook.com/
சமையல் அட்டகாசங்கள்: https://www.facebook.com/
அனைவருக்கும் இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்
Tweet | ||||||
Subscribe to:
Posts (Atom)