
//பாகற்காய் என்றாலே கசப்பு தான் அந்த கசப்பு தன்மை இல்லாமல் சமைக்க இந்த முறையில் செய்யலாம். இது குழந்தைகளுக்கு வயிற்றில்
உள்ள பூச்சியை அழிக்கும். சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் நல்ல டிஷ். மிளகாய் தூளுக்கு பதிலாக ரெட் சில்லி சாஸ் சேர்த்தும் செய்யலாம்.//
தேவையானவை

பாகற்காய் - 200 கிராம்
வெங்காயம் - 50 கிராம்எண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் - இரண்டு மேசைக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
செய்முறை
பாகற்காயை வில்லைகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின பாகற்காய் துண்டுகளை போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து இரண்டு மணி நேரம் ஊற
வைக்கவும்வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும்.
பாகற்காய் வில்லைகளை தண்ணீர் இல்லாமல் வடித்து இரண்டாக பிரித்து
வைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக போட்டு பொரிக்கவும்பொரித்த பாகற்காயை எண்ணெயை சுத்தமாக வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும்.
பாகற்காய், அரை தேக்கரண்டி உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பாகற்காயுடன் மசாலா சேர்ந்தவுடன் வினிகரை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விடவும்.
கடைசியில் டொமெட்டோ கெட்சப் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்
ஏழுகறி சாம்பார்

I am sending these recipes to nithubala's
vegetable marthon- bitter gourd event